நவம்பர் 22 : நற்செய்தி வாசகம்
Thursday, November 21, 2024
நவம்பர் 22 : நற்செய்தி வாசகம் நீங்கள் என் இல்லத்தைக் கள்வர் குகையாக்கினீர்கள். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 45-48
நவம்பர் 22 : பதிலுரைப் பாடல் திபா 119: 14,24. 72,103. 111,131 (பல்லவி: 103a)
நவம்பர் 22 : பதிலுரைப் பாடல்
நவம்பர் 22 : முதல் வாசகம் நான் சிற்றேட்டை எடுத்துத் தின்றேன். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 10: 8-11
நவம்பர் 22 : முதல் வாசகம்
நான் சிற்றேட்டை எடுத்துத் தின்றேன்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 10: 8-11
சகோதரர் சகோதரிகளே,
விண்ணகத்திலிருந்து நான் கேட்ட குரல் என்னிடம் மீண்டும் பேசி, “கடலின்மீதும் நிலத்தின்மீதும் நிற்கின்ற வானதூதரின் கையில் உள்ள பிரிக்கப்பட்ட சுருளேட்டை நீ போய் வாங்கிக்கொள்” என்றது.
நானும் அந்த வானதூதரிடம் சென்று, அந்தச் சிற்றேட்டை என்னிடம் தரும்படி கேட்டேன். அவரோ, “இதை எடுத்துத் தின்றுவிடு; இது உன் வயிற்றில் கசக்கும், ஆனால் வாயில் தேனைப் போல் இனிக்கும்” என்று என்னிடம் சொன்னார். உடனே வானதூதரின் கையிலிருந்து அந்தச் சிற்றேட்டை எடுத்துத் தின்றேன். அது என் வாயில் தேனைப் போல் இனித்தது; ஆனால் அதைத் தின்றபொழுது என் வயிற்றில் கசந்தது.
“பல்வேறு மக்களினத்தார், நாட்டினர், மொழியினர், மன்னர் பற்றி நீ மீண்டும் இறைவாக்கு உரைக்க வேண்டும்” என்று எனக்குச் சொல்லப்பட்டது.
ஆண்டவரின் அருள்வாக்கு.