Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, May 17, 2025

மே 18 : நற்செய்தி வாசகம் ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். ✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-33a, 34-35

 மே 18 :  நற்செய்தி வாசகம்

‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-33a, 34-35


யூதாசு இறுதி இராவுணவின் அறையை விட்டு வெளியே போனபின் இயேசு, “இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்.

‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 18 : இரண்டாம் வாசகம் கடவுள் அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 1-5

 மே 18 :  இரண்டாம் வாசகம்

கடவுள் அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 1-5


யோவான் நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற்போயிற்று.

அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்துகொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது. பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, “இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள் தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன” என்றது.

அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறினார். மேலும், “ ‘இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை’ என எழுது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா!

 ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

மே 18 : பதிலுரைப் பாடல் திபா 145: 8-9. 10-11. 12-13ab (பல்லவி: 1) பல்லவி: என் கடவுளே, உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்.

 மே 18 :  பதிலுரைப் பாடல்

திபா 145: 8-9. 10-11. 12-13ab (பல்லவி: 1)


பல்லவி: என் கடவுளே, உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்.

அல்லது: அல்லேலூயா.

8

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.

9

ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். - பல்லவி

10

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.

11

அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். - பல்லவி

12

மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.

13ab

உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. - பல்லவி

மே 18 : முதல் வாசகம் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அறிவித்தார்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 21b-27

 மே 18 :  முதல் வாசகம்

திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அறிவித்தார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 21b-27


அந்நாள்களில்

பவுலும் பர்னபாவும் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, “நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்” என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள். அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள்.

அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 18th : Gospel In the Son of Man, God has been glorified A Reading from the Holy Gospel according to St.John 13: 31-33, 34-35

 May 18th :  Gospel

In the Son of Man, God has been glorified

A Reading from the Holy Gospel according to St.John 13: 31-33, 34-35 

When Judas had gone Jesus said:

‘Now has the Son of Man been glorified,

and in him God has been glorified.

If God has been glorified in him,

God will in turn glorify him in himself,

and will glorify him very soon.

‘My little children,

I shall not be with you much longer.

I give you a new commandment:

love one another;

just as I have loved you,

you also must love one another.

By this love you have for one another,

everyone will know that you are my disciples.’

The Word of the Lord.

May 18th : Second Reading A vision of the heavenly Jerusalem, the bride of the Lamb A reading from the book of Apocalypse 21: 1-5

 May 18th :  Second Reading

A vision of the heavenly Jerusalem, the bride of the Lamb

A reading from the book of Apocalypse 21: 1-5 

I, John, saw a new heaven and a new earth; the first heaven and the first earth had disappeared now, and there was no longer any sea. I saw the holy city, and the new Jerusalem, coming down from God out of heaven, as beautiful as a bride all dressed for her husband. Then I heard a loud voice call from the throne, ‘You see this city? Here God lives among men. He will make his home among them; they shall be his people, and he will be their God; his name is God-with-them. He will wipe away all tears from their eyes; there will be no more death, and no more mourning or sadness. The world of the past has gone.’

  Then the One sitting on the throne spoke: ‘Now I am making the whole of creation new.’

The Word of the Lord.

Gospel Acclamation Jn13:34

Alleluia, alleluia!

I give you a new commandment:

love one another just as I have loved you,

says the Lord.

Alleluia!

May 18th : Responsorial Psalm Psalm 144(145):8-13a I will bless your name for ever, O God my King.

 May 18th :  Responsorial Psalm

Psalm 144(145):8-13a 

I will bless your name for ever, O God my King.

or Alleluia!

The Lord is kind and full of compassion,

  slow to anger, abounding in love.

How good is the Lord to all,

  compassionate to all his creatures.

I will bless your name for ever, O God my King.

or Alleluia!

All your creatures shall thank you, O Lord,

  and your friends shall repeat their blessing.

They shall speak of the glory of your reign

  and declare your might, O God,

to make known to men your mighty deeds

  and the glorious splendour of your reign.

I will bless your name for ever, O God my King.

or Alleluia!

Yours is an everlasting kingdom;

  your rule lasts from age to age.

I will bless your name for ever, O God my King.

or Alleluia!