Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, August 31, 2024

செப்டம்பர் 1 : இரண்டாம் வாசகம் இறைவார்த்தையின்படி நடக்கிறவர்களாய் இருங்கள். திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-18, 21b-22, 27 சகோதரர் சகோதரிகளே,

 செப்டம்பர் 1 : இரண்டாம் வாசகம்

இறைவார்த்தையின்படி நடக்கிறவர்களாய் இருங்கள்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-18, 21b-22, 27


சகோதரர் சகோதரிகளே,

நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.

உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்.

தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக் கொள்வதும் ஆகும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யாக் 1: 18

அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம் நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள். ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-8, 14-15, 21-23

 நற்செய்தி வாசகம்

நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-8, 14-15, 21-23

ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.
ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, “உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?” என்று கேட்டனர்.
அதற்கு அவர், “வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். ‘இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்’ என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.
இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, “நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்து கின்றன” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் திபா 15: 2-3a. 3bc-4ab. 5 (பல்லவி: 1a) பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

 பதிலுரைப் பாடல்

திபா 15: 2-3a. 3bc-4ab. 5 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
2. மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்;
3a. தம் நாவினால் புறங்கூறார். - பல்லவி
3bc. தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார்.
4ab. நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். - பல்லவி
5. தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; - இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். - பல்லவி
இரண்டாம் வாசகம்
இறைவார்த்தையின்படி நடக்கிறவர்களாய் இருங்கள்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-18, 21b-22, 27
சகோதரர் சகோதரிகளே,
நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.
உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்.
தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக் கொள்வதும் ஆகும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யாக் 1: 18
அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.

01 செப்டம்பர் 2024, ஞாயிறு பொதுக்காலம் 22ஆம் வாரம் - வாசகங்கள். முதல் வாசகம் நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1-2, 6-8

 01 செப்டம்பர் 2024, ஞாயிறு

பொதுக்காலம் 22ஆம் வாரம் - வாசகங்கள்.
முதல் வாசகம்
நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1-2, 6-8

இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன்; அவற்றைப் பின்பற்றுங்கள்.
நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும் உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர். நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?
ஆண்டவரின் அருள்வாக்கு.

 

முன்னுரை

 

 

விவிலிய மாதமாம் செப்டம்பர் மாதத்தில் விவிலியத்தின் வழியாக கடவுள் நம்மோடு உரையாடுவதை உறவாடுவதை கொண்டாட அழைக்கின்றார் நம் திருத்தந்தை பிரான்சிஸ் திருவிவிலியத்தின் கருவூலங்களை நாம் அறிந்து ஞானத்திலும் அறிவிலும் சிறந்து விளங்கிடவும் நற்கருணை கொண்டாட்டத்தில் பொருள் உணர்ந்து பங்கேற்கவும் அழைக்கின்றார் ஆண்டவர் இறைவார்த்தை வழியாக தனிமனித மற்றும் சமூக விழுமியங்களை நடைமுறைப்படுத்தி மாண்புக்குரிய மக்களினமாக மனிதர்களை உருவாக்கவே ஆண்டவர் விரும்புகின்றார் இதனையே ஒவ்வொரு திருப்பலியிலும் விவிலிய விருந்தின் வழியாக நமக்கு படைக்கின்றார் கடவுள் நம் மூதாதையரோடு உரையாடி உறவாடி உடனிருந்து வலிமைப்படுத்தியதை விவிலியம் விளக்கமாகக் கூறுகின்றது அதே வேளையில் நமது தமிழக ஆயர் பேரவையும் விவிலியம் கூறும் செய்திகளை சமூக சமய பார்வையில் தனிமனித மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக திரு அவையின் பாரம்பரிய வழியில் பல்வேறு தலைப்புகளில் இம்மாதத்தில் ஞாயிறுதோறும் கொண்டாட அழைக்கின்றது நாம் கடவுள் மனித உறவில் நிலைத்திருக்க உதவும் இறை வார்த்தையை பணிவோடு ஏற்று நமது வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்துவது நமது கடமையாகும் இதை மனதில் இருத்தி இன்றைய திருப்பதியில் முழுமையாக பங்கேற்போம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 முதல் வாசக முன்னுரை

 

 இன்றைய முதல் வாசகம் இணைச்சட்ட நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது இஸ்ரேல்  மக்கள் கடவுளுக்கு கீழ்ப்படிந்து வாழ மோசே அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார் அவ்வாறு வாழ்ந்தால் வாக்களிக்கப்பட்ட நாட்டையும் இறை ஆசியையும்  தொடர்ந்து பெறுவார்கள் என்றும் இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்ட இஸ்ரேல்  மக்கள் இறைவன் அளிக்கும்  நியமங்களை இதயத்தில் காத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார் இறைமொழிகளை கவனமுடன் கேட்போம். முதல் வாசகம் இணச்சட்டம் 4 அதிகாரம் 1 முதல் 2 மற்றும் 6 முதல் 8 வரை உள்ள இறை வார்த்தைகள்

 

 

 

இரண்டாம்  வாசக முன்னுரை

 

 

 

இன்றைய இரண்டாம் வாசகம் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது இறை வார்த்தையை கேட்கிறவர்களாக மட்டுமில்லாமல் அதன்படி வாழ்கிறவர்களாக நாம் இருத்தல் வேண்டும். உலகின் தீமைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும் இறை வார்த்தையை உள்ளத்தில் இருத்தி செயல்களில் அதை வெளிப்படுத்தி இறையாசீர் பெற அழைக்கும் இறை மொழிகளை கவனமுடன் கேட்போம். இரண்டாம் வாசகம் யாக்கோபு ஒன்றாம் அதிகாரம் 17 முதல் 18   21 முதல் 22 மற்றும் 27 ஆம் இறை வார்த்தைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1

 

உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க என்ற  இறை வார்த்தைக்கு ஏற்ப தங்கள் பணி வாழ்வால் இறை மக்களை அன்பின் பாதையில் வழிநடத்துகின்ற திருத்தந்தை ஆயர்கள் அருட்தந்தையர்கள் அருட் சகோதரிகள் இறை வல்லமையை நிறைவாக பெற்றிட வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்

 

 

2

 

 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறு பெற்றோர் என்று றைவார்த்தைக்கேற்ப எம் பங்கின் அனைத்து குடும்பங்களிலும் தெய்வ பயம் இறை நம்பிக்கை மிகுதியாகவும் அன்பு நம்பிக்கை மன்னிப்பு பகிர்வு போன்ற நற்குணங்களால் அனைவரும் நிரம்பி மகிழ்வுடன் வாழ வரமருள வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

 

 

3

 

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநாட்டுகின்றார் என்ற இறைவார்த்தைக்கேற்ப  நாட்டை ஆள்வோர்  மக்கள் நலனுக்காக அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்காக தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக நல்ல திட்டங்களை செயல்படுத்த உதவி புரிய வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

 

 

 

4

 

 

ஆண்டவர் என் கற்பாறை எனக்கு மீட்பளிக்கும்  வல்லமை என்ற இறைவார்த்தைக்கேற்ப கடன் நோய் முதுமையால் தவிப்போர் உம் பேரிக்கத்தால் மீட்க பெறவும் நோயால் வருந்துவோர் விரைவில் நல்ல சுகம் பெறவும் உதவி புரிய வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்

 

 

 

 

 

 


 

 

நன்றி மன்றாட்டு

 

நீதியின் தெய்வமே எம் இறைவா எம் பெற்றோர் குடும்ப உறவுகள் ஆன்மீக வழிகாட்டிகள் வாயிலாக நன்னெறியில் வளர பயிற்சி அளிப்பதற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்

 

 

 கருணையின் தெய்வமே திருப்பலியில்  பங்கேற்கவும் இறை வார்த்தைகளை வாசிக்கவும் தியானிக்கவும்  தன் வழியாக இறை நம்பிக்கையை வலுப்படுத்துவதற்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றோம்

 

 

அன்பே உருவான இறைவா ! நீர் திரு விவிலியம் வழியாக எம்மோடு உறவாடுகின்ற மேலான செயலுக்காக இறைவா உமக்கு நன்றி.

 

 

 

Gospel “You have set aside the commandment of God and held to the tradition of men” (Mk 7:1-8.14-15.21-23)

 Gospel

“You have set aside the commandment of God and held to the tradition of men” (Mk 7:1-8.14-15.21-23)

Alleluia. Alleluia.


The Father has willed to beget us by his word of truth,

to make us like the firstfruits of all his creatures.

Alleluia. (Jas 1:18)

Gospel of Jesus Christ according to Saint Mark

At that time,

    the Pharisees and some scribes who had come from Jerusalem 

gathered around Jesus, 

    and saw some of his disciples eating their meals 

with impure hands, that is, unwashed hands. 

    – The Pharisees in fact, like all the Jews, 

always wash their hands carefully before eating, 

by attachment to the tradition of the elders; 

    and when returning from the market, 

they do not eat without having sprinkled themselves with water, 

and they are attached by tradition 

to many other practices: 

washing cups, pitchers and dishes. 

    Then the Pharisees and the scribes asked Jesus, 

“Why do your disciples not follow 

the tradition of the elders? 

They eat their meals with impure hands?” 

    Jesus answered them, 

“Well did Isaiah prophesy about you hypocrites, 

as it is written:

This people honors me with their lips,

but their heart is far from me.

    In vain do they worship me; 

teaching 

only the commandments of men.

    You also have set aside the commandment of God and 

held to the tradition of men.

    Calling the crowd together again, he said, 

“Listen to me, all of you, and understand. 

    Nothing from outside a person 

that enters into him 

can defile him. 

But what comes out of a person, 

this defiles a person.”

    He also said to his disciples, standing apart from the crowd:

“From within, out of the human heart, 

come evil thoughts: 

sexual immorality, theft, murder, 

    adultery, greed, wickedness, 

deceit, debauchery, envy, slander 

, pride and excess. 

    All these evils come from within 

and make a person unclean.”

    – Let us acclaim the Word of God.

Second reading “Put the word into practice” (Jas 1:17-18.21b-22.27)

 Second reading

“Put the word into practice” (Jas 1:17-18.21b-22.27)


Reading of the letter of Saint James

My beloved brothers,

    the best gifts and the perfect gifts

are all from above, 

coming down from the Father of lights, 

who, like the stars, is not

subject to periodic movement or eclipses. 

    He chose to beget us through the word of truth, 

to make us the firstfruits of all his creatures. 

    Accept with meekness the word sown in you, 

for it is able to save your souls. 

    Do what you say, 

and do not just hear it, 

for that would be deceiving yourselves. Pure and undefiled religious conduct 

    before God our Father  is this: to visit orphans and widows in their distress  and to keep oneself without blemish in the midst of the world.

    – Word of the Lord.

Psalm (Ps 14 (15), 2-3a, 3bc-4ab, 4d-5) R/ Lord, who will dwell in your tent? (Ps 14:1a)

 Psalm

(Ps 14 (15), 2-3a, 3bc-4ab, 4d-5)

R/ Lord, who will dwell in your tent? (Ps 14:1a)


He who walks blamelessly, 

acts justly

and speaks the truth in his heart.

He bridles his tongue.

He does not wrong his brother

or insult his neighbor.

In his eyes, the reprobate is contemptible

, but he honors the faithful of the Lord.

He does not take back his word.

He lends his money without interest, 

accepts nothing that harms the innocent.

Who does so remains steadfast.

September 1, 2024 22nd Sunday in Ordinary Time (week II of the Psalter) — Year B Readings of the Mass First reading “You shall not add anything to what I command you… you shall keep the commandments of the Lord” (Dt 4, 1-2.6-8)

 September 1, 2024

 22nd Sunday in Ordinary Time (week II of the Psalter) — Year B

Readings of the Mass

First reading

“You shall not add anything to what I command you… you shall keep the commandments of the Lord” (Dt 4, 1-2.6-8)


Reading from the Book of Deuteronomy

Moses said to the people:

    “Now, Israel, listen to the statutes and the ordinances 

that I am teaching you, so that you may do them.

So you will live and go in to possess 

the land that the Lord, the God of your fathers, is giving you. 

    You will not add to what I command you 

or take away from it, 

but you will keep the commandments of the Lord your God 

, as I command you.

    You will keep them and do them; 

they will be your wisdom and your understanding 

in the eyes of all the peoples. 

When they hear about all these decrees, 

they will say, 

‘There is no wise and understanding people 

like this great nation!’ 

    For what great nation is there 

whose gods are as near 

as the Lord our God is near to us 

whenever we call on him? 

    And what great nation is there 

whose statutes and ordinances are as righteous 

as all this Law that I am giving you today?”

    – Word of the Lord.

Friday, August 30, 2024

ஆகஸ்ட் 31 : நற்செய்தி வாசகம் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும். ✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30.

 ஆகஸ்ட் 31 : நற்செய்தி வாசகம்

சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30.

அக்காலத்தில்
இயேசு தம் சீடருக்குக் கூறிய உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்; நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும் இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.
நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.
ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ‘ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்’ என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.
இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ‘ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்’ என்றார். அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.
ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, ‘ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது’ என்றார்.
அதற்கு அவருடைய தலைவர், ‘சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்’ என்று கூறினார். ‘எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்று அவர் கூறினார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.