இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 21 ஜனவரி, 2021

நற்செய்தி வாசகம் தம்மிடம் இருக்கும்படி தாம் விரும்பியவர்களை அழைத்தார். மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-19

22 சனவரி 2021, பொதுக்காலம், வாரம் 2 வெள்ளி 

நற்செய்தி வாசகம் 

தம்மிடம் இருக்கும்படி தாம் விரும்பியவர்களை அழைத்தார். 

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-19 
இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.
அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் - இவ்விருவருக்கும் `இடியைப் போன்றோர்' எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார் - அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர். 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி. 

--------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக