இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 20 செப்டம்பர், 2026

செப்டம்பர் 21 : நற்செய்தி வாசகம் இயேசு “என்னைப் பின்பற்றி வா” என்றார். மத்தேயுவும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13

 செப்டம்பர் 21 : நற்செய்தி வாசகம்

இயேசு “என்னைப் பின்பற்றி வா” என்றார். மத்தேயுவும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13

அக்காலத்தில்
மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததை இயேசு கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்த போது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர்.
இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், “உங்கள் போதகர் வரி தண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?” என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன், “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. ‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 21 : பதிலுரைப் பாடல் திபா 19: 1-2. 3-4 (பல்லவி: 4a) பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.

 செப்டம்பர் 21 : பதிலுரைப் பாடல்

திபா 19: 1-2. 3-4 (பல்லவி: 4a)
பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.

1
வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
2
ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது. - பல்லவி
3
அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
4
ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா!
இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம். திருத்தூதர்களின் அருளணியும் ஆண்டவரே, உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா

செப்டம்பர் 21 : புனித மத்தேயு - திருத்தூதர், நற்செய்தியாளர் விழா முதல் வாசகம் இறைமக்களை ஆயத்தப்படுத்தவும் தம் மறையுடலைக் கட்டியெழுப்பவுமே கிறிஸ்து எங்களை ஏற்படுத்தினார். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-7, 11-13

 செப்டம்பர் 21 : புனித மத்தேயு - திருத்தூதர், நற்செய்தியாளர் விழா

முதல் வாசகம்
இறைமக்களை ஆயத்தப்படுத்தவும் தம் மறையுடலைக் கட்டியெழுப்பவுமே கிறிஸ்து எங்களை ஏற்படுத்தினார்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-7, 11-13

சகோதரர் சகோதரிகளே,
ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.
கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார். அதனால் நாம் எல்லாரும் இறைமகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சி அடைவோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

September 21st : Gospel A Reading from the Holy Gospel according to St.Matthew 9: 9–13

 September 21st : Gospel

A Reading from the Holy Gospel according to St.Matthew 9: 9–13
As Jesus passed by, he saw a man called Matthew sitting at the tax booth; and he said to him, “Follow me.” And he rose and followed him. And as Jesus reclined at table in the house, behold, many tax collectors and sinners came and were reclining with Jesus and his disciples. And when the Pharisees saw this, they said to his disciples, “Why does your teacher eat with tax collectors and sinners?” But when he heard it, he said, “Those who are well have no need of a physician, but those who are sick. Go and learn what this means: ‘I desire mercy, and not sacrifice.’ For I came not to call the righteous, but sinners.”
The Gospel of the Lord

September 21st : Responsorial Psalm Psalm 19:2–3, 4–5 (R. 5a) Response : Their sound goes forth through all the earth.

 September 21st : Responsorial Psalm

Psalm 19:2–3, 4–5 (R. 5a)
Response : Their sound goes forth through all the earth.
The heavens declare the glory of God, and the firmament proclaims the work of his hands. Day unto day conveys the message, and night unto night imparts the knowledge.
R.: Their sound goes forth through all the earth.
No speech, no word, whose voice goes unheeded; their sound goes forth through all the earth, their message to the utmost bounds of the world.
R.: Their sound goes forth through all the earth.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. We praise you, O God; we acclaim you as Lord; the glorious company of Apostles praise you.
R. Alleluia.

September 21st : First Reading A Reading from the letter of St.Paul to the Ephesians 4: 1–7, 11–13

 September 21st : First Reading

A Reading from the letter of St.Paul to the Ephesians 4: 1–7, 11–13
Brethren: I, a prisoner for the Lord, urge you to walk in a manner worthy of the calling to which you have been called, with all humility and gentleness, with patience, bearing with one another in love, eager to maintain the unity of the Spirit in the bond of peace. There is one body and one Spirit _ just as you were called to the one hope that belongs to your call _ one Lord, one faith, one baptism, one God and Father of all, who is over all and through all and in all. But grace was given to each one of us according to the measure of Christ’s gift. And he gave the apostles, the prophets, the evangelists, the shepherds and teachers, to equip the saints for the work of ministry, for building up the body of Christ, until we all attain to the unity of the faith and of the knowledge of the Son of God, to mature manhood, to the measure of the stature of the fullness of Christ.
The Word of the Lord

சனி, 19 செப்டம்பர், 2026

September 20th : GospelA Reading from the Holy Gospel according to St.Matthew 20: 1–16

September 20th :  Gospel

A Reading from the Holy Gospel according to St.Matthew 20: 1–16

At that time: Jesus told his disciples this parable: “The kingdom of heaven is like a master of a house who went out early in the morning to hire labourers for his vineyard. After agreeing with the labourers for a denarius a day, he sent them into his vineyard. And going out about the third hour he saw others standing idle in the market-place, and to them he said, ‘You go into the vineyard too, and whatever is right I will give you.’ So they went. Going out again about the sixth hour and the ninth hour, he did the same. And about the eleventh hour he went out and found others standing. And he said to them, ‘Why do you stand here idle all day?’ They said to him, ‘Because no one has hired us.’ He said them, ‘You go into the vineyard too.’ And when evening came, the owner of the vineyard said to his foreman, ‘Call the labourers and pay them their wages, beginning with the last, up to the first.’ And when those hired about the eleventh hour came, each of them received a denarius. Now when those hired first came, they thought they would receive more, but each of them also received a denarius. And on receiving it they grumbled at the master of the house, saying, ‘These last worked only one hour, and you have made them equal to us who have borne the burden of the day and the scorching heat.’ But he replied to one of them, ‘Friend, I am doing you no wrong. Did you not agree with me for a denarius? Take what belongs to you and go. I choose to give to this last worker as I give to you. Am I not allowed to do what I choose with what belongs to me? Or do you begrudge my generosity?’ So the last will be first, and the first last.”

The Gospel of the Lord.
----------------------------------------------------------------------
Arul Ootru - Fr.Sengol

"Today's Gospel and Me"
Luke 7:37

"Today's Gospel and Me"
Matthew 20:1-16

Theme:
“Business with God...?”

1. “Deposit Policy” / Dealing Spirituality!

Many times, we deal with God like a businessman in our daily life:

"I prayed the 9-day novena, Lord, please give me that job."
"I offered so many Masses, please don't let any trouble come in my family."
These are some of the deposit / dealing spiritualities we have. Early in the morning, the workers went to the owner and spoke to him, "One denarium" and went to work. We too live a transactional life with God, "I give this, you give me that."

But, God is not a businessman; He is our Father. Spirituality is not a 'deal of give and take'; it is a 'bond of love'.

 "Don't be like the early workers; learn to live with God not as a trader, but as a loving child."

2. Comparison / ‘Overtime’ Mindset!

In the corporate world and in our daily work life, we see a big problem: comparison.
Even if our salary is fair, when someone who works less than us gets a special privilege or a bonus from the boss, or a promotion, we get angry immediately. "I have worked for four years, and he just came yesterday? Promotion too?"
In the vineyard, the same thing happened. Those who came early received their agreed wage fully. The jealousy of the others, who looked at what the others got, ruined their joy. In daily life, your blessings are blocked when you compare yourself with others.

 Stop comparing: Don't compare your family, children, finances with others and murmur against God. Let go of comparison and rejoice in what you have.

3. ‘Credit’ Expectation-Free Service!

When we do any good deed in our home or outside, if we expect "recognition", "appreciation" and praise, we are still in the mindset of the early workers — 'transactional' thinking.
The latecomers went with only the owner's goodwill. They did not put any conditions. The good deeds we do without any self-interest or expectation make us the first in the eyes of God.
Practical Challenge Today:

 * Stop Comparison:
   Do not compare your family, children, finances with others and murmur against God.

 * Help Without Expectation:
   Even if you do not get an immediate return, trust that God will give you what is right.

 * Give Thanks:
   Realise that "I am not worthy; I live by the grace of God" and thank Him every day.

Amen.

Fr. A. Sengol CSsR
Redemptorist Congregation, Arulagam, Madurai.

September 20th : Second ReadingA Reading from the letter of St.Paul to the Philippians 1:20c–24, 27a

September 20th : Second Reading

A Reading from the letter of St.Paul to the Philippians 1:20c–24, 27a

Brethren: Christ will be honoured in my body, whether by life or by death. For to me to live is Christ, and to die is gain. If I am to live in the flesh, that means fruitful labour for me. Yet which I shall choose I cannot tell. I am hard pressed between the two. My desire is to depart and be with Christ, for that is far better. But to remain in the flesh is more necessary on your account. Let your manner of life be worthy of the gospel of Christ.

The Word of the Lord.

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. Open our heart, O Lord, that we may listen to the words of your Son.

R. Alleluia.

September 20th : Responsorial PsalmPsalm 145:2–3, 8–9, 17–18 (R. 18a)Response : The Lord is close to all who call him.

September 20th : Responsorial Psalm

Psalm 145:2–3, 8–9, 17–18 (R. 18a)

Response : The Lord is close to all who call him.

I will bless you day after day, and praise your name forever and ever. The Lord is great and highly to be praised; his greatness cannot be measured. 

R.: The Lord is close to all who call him.

The Lord is kind and full of compassion, slow to anger, abounding in mercy. How good is the Lord to all, compassionate to all his creatures. 

R.: The Lord is close to all who call him.

The Lord is just in all his ways, and holy in all his deeds. The Lord is close to all who call him, who call on him in truth. 

R.: The Lord is close to all who call him.

September 20th : First ReadingA Reading from the book of the Prophet Isaiah 55: 6–9

September 20th : First Reading

A Reading from the book of the Prophet Isaiah 55: 6–9

“Seek the Lord while he may be found; call upon him while he is near; let the wicked forsake his way, and the unrighteous man his thoughts; let him return to the Lord, that he may have compassion on him, and to our God, for he will abundantly pardon. For my thoughts are not your thoughts, neither are your ways my ways, declares the Lord. For as the heavens are higher than the earth, so are my ways higher than your ways and my thoughts than your thoughts.

The Word of the Lord.

நற்செய்தி வாசகம் நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா? ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16a

நற்செய்தி வாசகம்


நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?


✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16a


அக்காலத்தில்



இயேசு தம் சீடருக்குக் கூறிய உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.


ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, ‘எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ என்றார்கள்.


அவர் அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்’ என்றார். மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர் வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள்.


அவர்கள் அதைப் பெற்றுக்கொண்ட போது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே’ என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார்.


இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்” என்று இயேசு கூறினார்.


ஆண்டவரின் அருள்வாக்கு.

இரண்டாம் வாசகம் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே. திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 20c-24, 27a சகோதரர் சகோதரிகளே,

 இரண்டாம் வாசகம்

நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 20c-24, 27a

சகோதரர் சகோதரிகளே,



வாழ்விலும் சாவிலும் முழுத் துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப்படுத்துவேன். இதுவே என் பேராவல், இதுவே என் எதிர் நோக்கு. ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும். எனவே நான் எதைத் தேர்ந்து கொள்வதென எனக்குத் தெரியவில்லை.


இந்த இரண்டுக்கும் இடையே ஓர் இழுபறி நிலையில் உள்ளேன். உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்கவேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம். - இதுவே மிகச் சிறந்தது. - ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம். - இது உங்கள் பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது.


ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள்: கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுங்கள்.


ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


திப 16: 14b

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தை திறந்தருளும். அல்லேலூயா.

பதிலுரைப் பாடல் திபா 145: 2-3. 8-9. 17-18 (பல்லவி: 18a) பல்லவி: தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.

 பதிலுரைப் பாடல்

திபா 145: 2-3. 8-9. 17-18 (பல்லவி: 18a)

பல்லவி: தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.


2
நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.
3
ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. - பல்லவி

8
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.
9
ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். - பல்லவி

17
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
18
தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். - பல்லவி

20 செப்டம்பர் 2026, ஞாயிறு பொதுக்காலம் 25ஆம் வாரம் - ஞாயிறு முதல் வாசகம் என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 6-9

 20 செப்டம்பர் 2026, ஞாயிறு


பொதுக்காலம் 25ஆம் வாரம் - ஞாயிறு

முதல் வாசகம்

என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 6-9


ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ள போதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும் போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர்அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்.

என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 19th : Gospel A Reading from the Holy Gospel according to St.Luke 8: 4–15

 September 19th : Gospel

A Reading from the Holy Gospel according to St.Luke 8: 4–15
At that time: When a great crowd was gathering and people from town after town came to Jesus, he said in a parable, “A sower went out to sow his seed. And as he sowed, some fell along the path and was trampled underfoot, and the birds of the air devoured it. And some fell on the rock, and as it grew up, it withered away, because it had no moisture. And some fell among thorns, and the thorns grew up with it and choked it. And some fell into good soil and grew and yielded a hundredfold.” As he said these things, he called out, “He who has ears to hear, let him hear.” And when his disciples asked him what this parable meant, he said, “To you it has been given to know the secrets of the kingdom of God, but for others they are in parables, so that ‘seeing they may not see, and hearing they may not understand’. Now the parable is this: The seed is the word of God. The ones along the path are those who have heard; then the devil comes and takes away the word from their hearts, so that they may not believe and be saved. And the ones on the rock are those who, when they hear the word, receive it with joy. But these have no root; they believe for a while, and in time of testing fall away. And as for what fell among the thorns, they are those who hear, but as they go on their way they are choked by the cares and riches and pleasures of life, and their fruit does not mature. As for that in the good soil, they are those who, hearing the word, hold it fast in an honest and good heart, and bear fruit with patience.
The Gospel of the Lord.

September 19th : Responsorial Psalm Psalm 56:10, 11–12, 13–14 (R. see 14cd)

 September 19th : Responsorial Psalm

Psalm 56:10, 11–12, 13–14 (R. see 14cd)
Response : I will walk in the presence of God, in the light of the living.
Then my foes will turn back on the day when I call to you. This I know, that God is on my side.
R.: I will walk in the presence of God, in the light of the living.
In God, whose word I praise, in the Lord whose word I praise, in God I trust; I shall not fear. What can man do to me?
R.: I will walk in the presence of God, in the light of the living.
I am bound by the vows I have made you. O God, I will offer you praise, for you have rescued my soul from death; you kept my feet from stumbling, that I may walk in the presence of God, in the light of the living.
R.: I will walk in the presence of God, in the light of the living.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. Blessed are those who, hearing the word, hold it fast in an honest and good heart, and bear fruit with patience.
R. Alleluia

September 19th : First Reading A Reading from the first letter of St.Paul to the Corinthians 15: 35–37, 42–49

 September 19th : First Reading

A Reading from the first letter of St.Paul to the Corinthians 15: 35–37, 42–49
Brethren: Someone will ask, “How are the dead raised? With what kind of body do they come?” You foolish person! What you sow does not come to life unless it dies. And what you sow is not the body that is to be, but a bare seed, perhaps of wheat or of some other grain. So is it with the resurrection of the dead. What is sown is perishable; what is raised is imperishable. It is sown in dishonour; it is raised in glory. It is sown in weakness; it is raised in power. It is sown a natural body; it is raised a spiritual body. If there is a natural body, there is also a spiritual body. Thus it is written, “The first man Adam became a living being”; the last Adam became a life-giving spirit. But it is not the spiritual that is first but the natural, and then the spiritual. The first man was from the earth, a man of dust; the second man is from heaven. As was the man of dust, so also are those who are of the dust, and as is the man of heaven, so also are those who are of heaven. Just as we have borne the image of the man of dust, we shall also bear the image of the man of heaven.
The Word of the Lord.

வெள்ளி, 18 செப்டம்பர், 2026

நற்செய்தி வாசகம் நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, பலன் தருகிறவர்களைக் குறிக்கும். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 4-15

 நற்செய்தி வாசகம்

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 4-15


அக்காலத்தில்

பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் இயேசுவிடம் கூடி வந்தபோது அவர் உவமை வாயிலாகக் கூறியது: “விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன; அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன; கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கி விட்டன. இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன.” இவ்வாறு சொன்னபின், “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்று உரக்கக் கூறினார்.

இந்த உவமையின் பொருள் என்ன என்று அவருடைய சீடர் அவரிடம் கேட்டனர். அதற்கு இயேசு கூறியது: “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு எல்லாம் உவமைகள் வாயிலாகவே கூறப்படுகின்றன. எனவே ‘அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் புரிந்து கொள்வதில்லை.’

இந்த உவமையின் பொருள் இதுவே: விதை, இறைவார்த்தை. வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது. பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள்: சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள். முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும்.

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் திபா 56: 9. 10-11. 12-13 (பல்லவி: 13b) பல்லவி: உமது முன்னிலையில் நான் நடக்க, என் அடிகள் சறுக்காமல் காத்தீர் அன்றோ!

 பதிலுரைப் பாடல்

திபா 56: 9. 10-11. 12-13 (பல்லவி: 13b)

பல்லவி: உமது முன்னிலையில் நான் நடக்க, என் அடிகள் சறுக்காமல் காத்தீர் அன்றோ!


9
நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில் என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்; அப்போது, கடவுள் என் பக்கம் இருக்கின்றார் என்பதை நான் உறுதியாய் அறிவேன். - பல்லவி

10
கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்; ஆண்டவரின் வாக்கை நான் புகழ்கின்றேன்.
11
கடவுளையே நம்பியிருக்கின்றேன்; எதற்கும் அஞ்சேன்; மானிடர் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும்? - பல்லவி

12
கடவுளே, நான் உமக்குச் செய்த பொருத்தனைகளை மறக்கவில்லை; உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.
13
ஏனெனில், சாவினின்று என் உயிரை நீர் மீட்டருளினீர்; வாழ்வோரின் ஒளியில், கடவுளின் முன்னிலையில் நான் நடக்கும் பொருட்டு என் அடிகள் சறுக்காதபடி காத்தீர் அன்றோ! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 8: 15

அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்கள் பேறுபெற்றோர். அல்லேலூயா.

பொதுக்காலம் 24ஆம் வாரம் - சனி முதல் வாசகம் அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர் பெற்று எழுகிறது. திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 35-37, 42-49 சகோதரர் சகோதரிகளே,

 19 செப்டம்பர் 2026, சனி


பொதுக்காலம் 24ஆம் வாரம் - சனி

முதல் வாசகம்

அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர் பெற்று எழுகிறது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 35-37, 42-49

சகோதரர் சகோதரிகளே,


“இறந்தோர் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? எத்தகைய உடலோடு வருவார்கள்?” என ஒருவர் கேட்கலாம். அறிவிலியே, நீ விதைக்கும் விதை மடிந்தாலொழிய உயிர் பெறாது. முளைத்த பயிராக நீ அதை விதைக்கவில்லை; மாறாக வெறும் கோதுமை மணியையோ மற்றெந்த விதையையோதான் விதைக்கிறாய்.

இறந்தோர் உயிர்த்தெழும்போதும் இவ்வாறே இருக்கும். அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர் பெற்று எழுகிறது. மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர் பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர் பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர் பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டு என்றால், ஆவிக்குரிய உடலும் உண்டு. மறைநூலில் எழுதியுள்ளபடி, முதல் மனிதராகிய ஆதாம் உயிர் பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார்; கடைசி ஆதாமோ உயிர் தரும் தூய ஆவியானார்.

தூய ஆவிக்குரியது முந்தியது அல்ல; மனித இயல்புக்குரியதே முந்தியது. தூய ஆவிக்குரியது பிந்தியது. முதல் மனிதர் களிமண்ணால் ஆனவர்; அவர் மண்ணிலிருந்து வந்தவர். இரண்டாம் மனிதரோ விண்ணிலிருந்து வந்தவர். மண்ணைச் சார்ந்த மனிதர் போலவே மண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். விண்ணைச் சார்ந்த மனிதர் போலவே விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர்.

எனவே நாம் மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பது போல விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.