இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 19 ஆகஸ்ட், 2026

August 20th : GospelA Reading from the Holy Gospel according to St.Matthew 22:1–14

August 20th : Gospel

A Reading from the Holy Gospel according to St.Matthew 22:1–14

At that time: Again Jesus spoke to chief priests and elders of the people, in parables, saying, “The kingdom of heaven may be compared to a king who gave a wedding feast for his son, and sent his servants to call those who were invited to the wedding feast, but they would not come. Again he sent other servants, saying, ‘Tell those who are invited, “See, I have prepared my dinner, my oxen and my fat calves have been slaughtered, and everything is ready. Come to the wedding feast.” ’ But they paid no attention and went off, one to his farm, another to his business, while the rest seized his servants, treated them shamefully, and killed them. The king was angry, and he sent his troops and destroyed those murderers and burned their city. Then he said to his servants, ‘The wedding feast is ready, but those invited were not worthy. Go therefore to the main roads and invite to the wedding feast as many as you find.’ And those servants went out into the roads and gathered all whom they found, both bad and good. So the wedding hall was filled with guests. “But when the king came in to look at the guests, he saw there a man who had no wedding garment. And he said to him, ‘Friend, how did you get in here without a wedding garment?’ And he was speechless. Then the king said to the attendants, ‘Bind him hand and foot and cast him into the outer darkness. In that place there will be weeping and gnashing of teeth.’ For many are called, but few are chosen.”

The Gospel of the Lord.

August 20th : Responsorial PsalmPsalm 51:12–13, 14–15, 18–19 (R. Ezekiel 36:25)Response : I will sprinkle clean water on you, and you shall be clean from all your uncleannesses.

August 20th : Responsorial Psalm

Psalm 51:12–13, 14–15, 18–19 (R. Ezekiel 36:25)

Response :  I will sprinkle clean water on you, and you shall be clean from all your uncleannesses.

Create a pure heart for me, O God; renew a steadfast spirit within me. Do not cast me away from your presence; take not your holy spirit from me. 

R.:  I will sprinkle clean water on you, and you shall be clean from all your uncleannesses

Restore in me the joy of your salvation; sustain in me a willing spirit. I will teach transgressors your ways, that sinners may return to you. 

R.:  I will sprinkle clean water on you, and you shall be clean from all your uncleannesses

For in sacrifice you take no delight; burnt offering from me would not please you. My sacrifice to God, a broken spirit: a broken and humbled heart, O God, you will not spurn. 

R.:  I will sprinkle clean water on you, and you shall be clean from all your uncleannesses

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. Today, harden not your hearts, but listen to the voice of the Lord.

R. Alleluia.

August 20th : First ReadingA Reading from the Book of the Prophet Ezekiel 36: 23–28

August 20th :  First Reading

A Reading from the Book of the Prophet Ezekiel 36: 23–28

Thus says the Lord: I will vindicate the holiness of my great name, which has been profaned among the nations, and which you have profaned among them. And the nations will know that I am the Lord, declares the Lord God, when through you I vindicate my holiness before their eyes. I will take you from the nations and gather you from all the countries and bring you into your own land. I will sprinkle clean water on you, and you shall be clean from all your uncleannesses, and from all your idols I will cleanse you. And I will give you a new heart, and a new spirit I will put within you. And I will remove the heart of stone from your flesh and give you a heart of flesh. And I will put my Spirit within you, and cause you to walk in my statutes and be careful to obey my rules. You shall dwell in the land that I gave to your fathers, and you shall be my people, and I will be your God.

The Word of the Lord.

ஆகஸ்ட் 20 : நற்செய்தி வாசகம்எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 1-14

ஆகஸ்ட் 20 :  நற்செய்தி வாசகம்

எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 1-14
அக்காலத்தில்

இயேசு மீண்டும் உவமைகள் வாயிலாகப் பேசியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.

மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ‘நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராய் உள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்’ என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்.

அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.

பின்னர் தம் பணியாளர்களிடம், ‘திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. அரசர் விருந்தினரைப் பார்க்க வந்தபோது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார்.

அரசர் அவனைப் பார்த்து, ‘தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?’ என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ‘அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்றார்.

இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 20 : பதிலுரைப் பாடல்திபா 51: 10-11. 12-13. 16-17 (பல்லவி: எசே 36: 25)பல்லவி: தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் அனைவரும் தூய்மையாவீர்கள்.

ஆகஸ்ட் 20 :  பதிலுரைப் பாடல்

திபா 51: 10-11. 12-13. 16-17 (பல்லவி: எசே 36: 25)

பல்லவி: தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் அனைவரும் தூய்மையாவீர்கள்.
10
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.
11
உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். - பல்லவி

12
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
13
அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். - பல்லவி

16
ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
17
கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 95: 8b, 7b

அல்லேலூயா, அல்லேலூயா! 

இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக, நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

ஆகஸ்ட் 20 : முதல் வாசகம்நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்.இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 36: 23-28

ஆகஸ்ட் 20 :  முதல் வாசகம்

நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 36: 23-28
இறைவன் கூறுவது:

நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் தூய்மையாவீர்கள்; உங்கள் எல்லாச் சிலை வழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைக் கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன். நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

August 19th : GospelA Reading from the Holy Gospel according to St.Matthew 20:1-16a

August 19th :  Gospel

A Reading from the Holy Gospel according to St.Matthew 20:1-16a

At that time: Jesus told his disciples this parable: “For the kingdom of heaven is like a master of a house who went out early in the morning to hire labourers for his vineyard. After agreeing with the labourers for a denarius a day, he sent them into his vineyard. And going out about the third hour he saw others standing idle in the market-place, and to them he said, ‘You go into the vineyard too, and whatever is right I will give you.’ So they went. Going out again about the sixth hour and the ninth hour, he did the same. And about the eleventh hour he went out and found others standing. And he said to them, ‘Why do you stand here idle all day?’ They said to him, ‘Because no one has hired us.’ He said to them, ‘You go into the vineyard too.’ And when evening came, the owner of the vineyard said to his foreman, ‘Call the labourers and pay them their wages, beginning with the last, up to the first.’ And when those hired about the eleventh hour came, each of them received a denarius. Now when those hired first came, they thought they would receive more, but each of them also received a denarius. And on receiving it they grumbled at the master of the house, saying, ‘These last worked only one hour, and you have made them equal to us who have borne the burden of the day and the scorching heat.’ But he replied to one of them, ‘Friend, I am doing you no wrong. Did you not agree with me for a denarius? Take what belongs to you and go. I choose to give to this last worker as I give to you. Am I not allowed to do what I choose with what belongs to me? Or do you begrudge my generosity?’ So the last will be first.”

The Gospel of the Lord.

August 19th : Responsorial PsalmPsalm 23:1–3a, 3b–4, 5, 6 (R. 1)

August 19th :  Responsorial Psalm

Psalm 23:1–3a, 3b–4, 5, 6 (R. 1)

Response : The Lord is my shepherd; there is nothing I shall want.

The Lord is my shepherd; there is nothing I shall want. Fresh and green are the pastures where he gives me repose. Near restful waters he leads me; he revives my soul. 

R.: The Lord is my shepherd; there is nothing I shall want.

He guides me along the right path, for the sake of his name. Though I should walk in the valley of the shadow of death, no evil would I fear, for you are with me. Your crook and your staff will give me comfort. 

R.: The Lord is my shepherd; there is nothing I shall want.

You have prepared a table before me in the sight of my foes. My head you have anointed with oil; my cup is overflowing. 

R.: The Lord is my shepherd; there is nothing I shall want.

Surely goodness and mercy shall follow me all the days of my life. In the Lord’s own house shall I dwell for length of days unending. 

R.: The Lord is my shepherd; there is nothing I shall want.

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. The word of God is living and active, discerning the thoughts and intentions of the heart.

R.  Alleluia.

August 19th : First ReadingA Reading from the Book of the Prophet Ezekiel 34:1–11

August 19th :  First Reading

A Reading from the Book of the Prophet Ezekiel 34:1–11

The word of the Lord came to me: “Son of man, prophesy against the shepherds of Israel; prophesy, and say to them, even to the shepherds, Thus says the Lord God: Ah, shepherds of Israel who have been feeding yourselves! Should not shepherds feed the sheep? You eat the fat, you clothe yourselves with the wool, you slaughter the fat ones, but you do not feed the sheep. The weak you have not strengthened, the sick you have not healed, the injured you have not bound up, the strayed you have not brought back, the lost you have not sought, and with force and harshness you have ruled them. So they were scattered, because there was no shepherd, and they became food for all the wild beasts. My sheep were scattered; they wandered over all the mountains and on every high hill. My sheep were scattered over all the face of the earth, with none to search or seek for them. “Therefore, you shepherds, hear the word of the Lord: As I live, declares the Lord God, surely because my sheep have become a prey, and my sheep have become food for all the wild beasts, since there was no shepherd, and because my shepherds have not searched for my sheep, but the shepherds have fed themselves, and have not fed my sheep, therefore, you shepherds, hear the word of the Lord: Thus says the Lord God, Behold, I am against the shepherds, and I will require my sheep at their hand and put a stop to their feeding the sheep. No longer shall the shepherds feed themselves. I will rescue my sheep from their mouths, that they may not be food for them. “For thus says the Lord God: Behold, I, I myself will search for my sheep and will seek them out.

The Word of the Lord.

ஆகஸ்ட் 19 : நற்செய்தி வாசகம்நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16

ஆகஸ்ட் 19 :  நற்செய்தி வாசகம்

நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16
அக்காலத்தில்

இயேசு கூறியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.

ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.

ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, ‘எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ என்றார்கள். அவர் அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்’ என்றார்.

மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள்.

அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே’ என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார்.

இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.