இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 10 செப்டம்பர், 2026

September 11th : Gospel A Reading from the Holy Gospel according to St.Luke 6: 39–42

 September 11th : Gospel

A Reading from the Holy Gospel according to St.Luke 6: 39–42
At that time: Jesus told them a parable: “Can a blind man lead a blind man? Will they not both fall into a pit? A disciple is not above his teacher, but everyone when he is fully trained will be like his teacher. Why do you see the speck that is in your brother’s eye, but do not notice the log that is in your own eye? How can you say to your brother, ‘Brother, let me take out the speck that is in your eye’, when you yourself do not see the log that is in your own eye? You hypocrite, first take the log out of your own eye, and then you will see clearly to take out the speck that is in your brother’s eye.”
The Gospel of the Lord.

September 11th : Responsorial Psalm Psalm 84:3, 4, 5–6, 12 (R. 2)

 September 11th : Responsorial Psalm

Psalm 84:3, 4, 5–6, 12 (R. 2)
Response : How lovely is your dwelling place, O Lord of hosts!
My soul is longing and yearning for the courts of the Lord. My heart and my flesh cry out to the living God.
R.: How lovely is your dwelling place, O Lord of hosts!
Even the sparrow finds a home, and the swallow a nest for herself in which she sets her young, at your altars, O Lord of hosts, my king and my God.
R.: How lovely is your dwelling place, O Lord of hosts!
Blessed are they who dwell in your house, forever singing your praise. Blessed the people whose strength is in you, whose heart is set on pilgrim ways.
R.: How lovely is your dwelling place, O Lord of hosts!
For the Lord God is a sun, a shield; the Lord will give us his favour and glory. he will not withhold any good to those who walk without blame.
R.: How lovely is your dwelling place, O Lord of hosts!
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. Your word, O Lord, is truth; sanctify us in the truth.
R. Alleluia.

September 11th : First Reading A Reading from the first letter of St.Paul to the Corinthians 9: 16–19, 22b–27

 September 11th : First Reading

A Reading from the first letter of St.Paul to the Corinthians 9: 16–19, 22b–27
Brethren: If I preach the gospel, that gives me no ground for boasting. For necessity is laid upon me. Woe to me if I do not preach the gospel! For if I do this of my own will, I have a reward, but if not of my own will, I am still entrusted with a stewardship. What then is my reward? That in my preaching I may present the gospel free of charge, so as not to make full use of my right in the gospel. For though I am free from all, I have made myself a servant to all, that I might win more of them. I have become all things to all people, that by all means I might save some. I do it all for the sake of the gospel, that I may share with them in its blessings. Do you not know that in a race all the runners run, but only one receives the prize? So run that you may obtain it. Every athlete exercises self-control in all things. They do it to receive a perishable wreath, but we an imperishable. So I do not run aimlessly; I do not box as one beating the air. But I discipline my body and keep it under control, lest after preaching to others I myself should be disqualified.
The Word of the Lord

செப்டம்பர் 11 : நற்செய்தி வாசகம் பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 39-42

 செப்டம்பர் 11 : நற்செய்தி வாசகம்

பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா?
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 39-42

அக்காலத்தில்
இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது: “பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா? சீடர் குருவை விட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போல் இருப்பர்.
நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்துகொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ‘உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்க முடியும்?
வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 11 : பதிலுரைப் பாடல் திபா 84: 2. 3. 4-5. 11 (பல்லவி: 1)

செப்டம்பர் 11 : பதிலுரைப் பாடல்
திபா 84: 2. 3. 4-5. 11 (பல்லவி: 1)
பல்லவி: படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!

2
என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. - பல்லவி
3
படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. - பல்லவி
4
உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
5
உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர். அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது. - பல்லவி
11
கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்; மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 17: 17b, 17a

அல்லேலூயா, அல்லேலூயா! உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா. 

செப்டம்பர் 11 : முதல் வாசகம் எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-27

 செப்டம்பர் 11 : முதல் வாசகம்

எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-27

சகோதரர் சகோதரிகளே,
நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன்.
வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவன் ஆனேன். எப்படியாவது ஒருசிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்குபெற வேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.
பந்தயத் திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே. இது உங்களுக்குத் தெரியாதா? எனவே, பரிசு பெறுவதற்காகவே நீங்களும் ஓடுங்கள். பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றி வாகை சூடுவதற்காகத் தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர். நாமோ அழிவற்ற வெற்றிவாகை சூடுவதற்காக இப்படிச் செய்கிறோம். நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப் போல ஓடமாட்டேன். காற்றைக் குத்துபவரைப் போலக் குத்துச்சண்டை இடமாட்டேன். பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு

புதன், 9 செப்டம்பர், 2026

September 10th : Gospel A Reading from the Holy Gospel according to St.Luke 6: 27–38

 September 10th : Gospel

A Reading from the Holy Gospel according to St.Luke 6: 27–38
At that time: Jesus said to his disciples, “I say to you who hear, Love your enemies, do good to those who hate you, bless those who curse you, pray for those who abuse you. To one who strikes you on the cheek, offer the other also, and from one who takes away your cloak do not withhold your tunic either. Give to everyone who begs from you, and from one who takes away your goods do not demand them back. And as you wish that others would do to you, do so to them. If you love those who love you, what benefit is that to you? For even sinners love those who love them. And if you do good to those who do good to you, what benefit is that to you? For even sinners do the same. And if you lend to those from whom you expect to receive, what credit is that to you? Even sinners lend to sinners, to get back the same amount. But love your enemies, and do good, and lend, expecting nothing in return, and your reward will be great, and you will be sons of the Most High, for he is kind to the ungrateful and the evil. Be merciful, even as your Father is merciful. Judge not, and you will not be judged; condemn not, and you will not be condemned; forgive, and you will be forgiven; give, and it will be given to you. Good measure, pressed down, shaken together, running over, will be put into your lap. For with the measure you use it will be measured back to you.”
The Gospel of the Lord.

September 10th : Responsorial Psalm Psalm 139:1–3, 13–14ab, 23–24 (R. 24b) Response : Lead me, Lord, in the way everlasting.

 September 10th : Responsorial Psalm

Psalm 139:1–3, 13–14ab, 23–24 (R. 24b)
Response : Lead me, Lord, in the way everlasting.
O Lord, you search me and you know me. You yourself know my resting and my rising; you discern my thoughts from afar. You mark when I walk or lie down; you know all my ways through and through.
R.: Lead me, Lord, in the way everlasting.
For it was you who formed my inmost being, knit me together in my mother’s womb. I thank you who wonderfully made me; how wonderful are your works.
R.: Lead me, Lord, in the way everlasting.
O search me, God, and know my heart. O test me, and know my thoughts. See that my path is not wicked, and lead me in the way everlasting.
R.: Lead me, Lord, in the way everlasting.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. If we love one another, God abides in us and his love is perfected in us.
R. Alleluia

September 10th : First Reading A Reading from the first letter of St.Paul to the Corinthians 8: 1b–7, 11–13

 September 10th : First Reading

A Reading from the first letter of St.Paul to the Corinthians 8: 1b–7, 11–13
Brethren: “Knowledge” puffs up, but love builds up. If anyone imagines that he knows something, he does not yet know as he ought to know. But if anyone loves God, he is known by God. Therefore, as to the eating of food offered to idols, we know that “an idol has no real existence”, and that “there is no God but one.” For although there may be so-called gods in heaven or on earth— as indeed there are many “gods” and many “lords”— yet for us there is one God, the Father, from whom are all things and for whom we exist, and one Lord, Jesus Christ, through whom are all things and through whom we exist. However, not all possess this knowledge. But some, through former association with idols, eat food as really offered to an idol, and their conscience, being weak, is defiled. And so by your knowledge this weak person is destroyed, the brother for whom Christ died. Thus, sinning against your brothers and wounding their conscience when it is weak, you sin against Christ. Therefore, if food makes my brother stumble, I will never eat meat, lest I make my brother stumble.
The Word of the Lord.

செப்டம்பர் 10 : நற்செய்தி வாசகம் உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 27-38

 செப்டம்பர் 10 : நற்செய்தி வாசகம்

உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 27-38

அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்: உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.
உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்.
உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள். பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே. உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே. திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.
நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றிகெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார்.
உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.
பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.