இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 27 ஆகஸ்ட், 2026

ஆகஸ்ட் 28 : நற்செய்தி வாசகம் இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13

 ஆகஸ்ட் 28 :  நற்செய்தி வாசகம்

இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13


அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது: “விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள கன்னித் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.


நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’ என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ‘எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்றார்கள். முன்மதியுடையவர்கள் மறுமொழியாக, ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது’ என்றார்கள்.


அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள். அவர் மறுமொழியாக, ‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.”


ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 28 : பதிலுரைப் பாடல் திபா 33: 1-2. 4-5. 10-11 (பல்லவி: 5b) பல்லவி: ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.

 ஆகஸ்ட் 28 :  பதிலுரைப் பாடல்

திபா 33: 1-2. 4-5. 10-11 (பல்லவி: 5b)

பல்லவி: ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.


1

நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.

2

யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். - பல்லவி


4

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.

5

அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. - பல்லவி


10

வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்துவிடுகின்றார்.

11

ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


லூக் 21: 36

அல்லேலூயா, அல்லேலூயா! 


மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.

ஆகஸ்ட் 28 : முதல் வாசகம் கிறிஸ்துவின் சிலுவை பிற இனத்தாருக்கு மடமையாகவும் அழைக்கப்பட்டவர்களுக்கு கடவுளின் வல்லமையும் ஞானமுமாக உள்ளது. திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-25

 ஆகஸ்ட் 28 :  முதல் வாசகம்


கிறிஸ்துவின் சிலுவை பிற இனத்தாருக்கு மடமையாகவும் அழைக்கப்பட்டவர்களுக்கு கடவுளின் வல்லமையும் ஞானமுமாக உள்ளது.


திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-25  


சகோதரர் சகோதரிகளே,


திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும். சிலுவை பற்றிய செய்தி அழிந்துபோகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை.


ஏனெனில், “ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன், அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. இவ்வுலகைச் சார்ந்த ஞானி எங்கே? அறிவாளி எங்கே? வாதிடுவோர் எங்கே? இவ்வுலக ஞானம் மடமை எனக் கடவுள் காட்டிவிட்டார் அல்லவா? கடவுளுடைய ஞானத்தால் அவரை அறிந்துகொள்ள முடியும். ஆனால் உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்துகொள்ளவில்லை. எனவே மடமை என்று கருதப்பட்ட நற்சய்தியைப் பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார். யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக் கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார். ஏனெனில் மனித ஞானத்தை விடக் கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையை விட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.


ஆண்டவரின் அருள்வாக்கு.

August 28th : Gospel A Reading from the Holy Gospel according to St.Matthew 25:1–13

 August 28th : Gospel

A Reading from the Holy Gospel according to St.Matthew 25:1–13

At that time: Jesus told his disciples this parable: “Then the kingdom of heaven will be like ten virgins who took their lamps and went to meet the bridegroom. Five of them were foolish, and five were wise. For when the foolish took their lamps, they took no oil with them, but the wise took flasks of oil with their lamps. As the bridegroom was delayed, they all became drowsy and slept. But at midnight there was a cry, ‘Here is the bridegroom! Come out to meet him.’ Then all those virgins rose and trimmed their lamps. And the foolish said to the wise, ‘Give us some of your oil, for our lamps are going out.’ But the wise answered, saying, ‘Since there will not be enough for us and for you, go rather to the dealers and buy for yourselves.’ And while they were going to buy, the bridegroom came, and those who were ready went in with him to the marriage feast, and the door was shut. Afterwards the other virgins came also, saying, ‘Lord, lord, open to us.’ But he answered, ‘Truly, I say to you, I do not know you.’ Watch therefore, for you know neither the day nor the hour.”

The Gospel of the Lord.

August 28th : Responsorial Psalm Psalm 33:1–2, 4–5, 10–11 (R. 5b)

 August 28th : Responsorial Psalm

Psalm 33:1–2, 4–5, 10–11 (R. 5b)

Response : The Lord’s merciful love fills the earth.

Ring out your joy to the Lord, O you just; for praise is fitting for the upright. Give thanks to the Lord upon the harp; with a ten-stringed lute sing him songs. 

R.: The Lord’s merciful love fills the earth.

For the word of the Lord is faithful, and all his works to be trusted. The Lord loves justice and right, and his merciful love fills the earth. 

R.: The Lord’s merciful love fills the earth.

The Lord frustrates the designs of the nations; he defeats the plans of the peoples. The designs of the Lord stand forever, the plans of his heart from age to age. 


R.: The Lord’s merciful love fills the earth.


Alleluia

V. Alleluia.


R. Alleluia.


V. Stay awake at all times, praying that you may have strength to stand before the Son of Man.”


R. Alleluia.

August 28th : First Reading A Reading from the First letter of St.Paul to the Corinthians 1:17–25

 August 28th :  First Reading


A Reading from the First letter of St.Paul to the Corinthians 1:17–25


Brethren: Christ did not send me to baptize but to preach the gospel, and not with words of eloquent wisdom, lest the cross of Christ be emptied of its power. For the word of the cross is folly to those who are perishing, but to us who are being saved it is the power of God. For it is written, “I will destroy the wisdom of the wise, and the discernment of the discerning I will thwart.” Where is the one who is wise? Where is the scribe? Where is the debater of this age? Has not God made foolish the wisdom of the world? For since, in the wisdom of God, the world did not know God through wisdom, it pleased God through the folly of what we preach to save those who believe. For Jews demand signs and Greeks seek wisdom, but we preach Christ crucified, a stumbling block to Jews and folly to Gentiles, but to those who are called, both Jews and Greeks, Christ the power of God and the wisdom of God. For the foolishness of God is wiser than men, and the weakness of God is stronger than men.


The Word of the Lord.

புதன், 26 ஆகஸ்ட், 2026

August 27th : Gospel A Reading from the Holy Gospel according to St.Matthew 24: 42–51

 August 27th : Gospel

A Reading from the Holy Gospel according to St.Matthew 24: 42–51
At that time: Jesus said to his disciples, “Stay awake, for you do not know on what day your Lord is coming. But know this, that if the master of the house had known in what part of the night the thief was coming, he would have stayed awake and would not have let his house be broken into. Therefore you also must be ready, for the Son of Man is coming at an hour you do not expect. Who then is the faithful and wise servant, whom his master has set over his household, to give them their food at the proper time? Blessed is that servant whom his master will find so doing when he comes. Truly, I say to you, he will set him over all his possessions. But if that wicked servant says to himself, ‘My master is delayed’, and begins to beat his fellow servants and eats and drinks with drunkards, the master of that servant will come on a day when he does not expect him and at an hour he does not know, and will cut him in pieces and put him with the hypocrites. In that place there will be weeping and gnashing of teeth.”
The Gospel of the Lord.

August 27th : Responsorial Psalm Psalm 145:2–3, 4–5, 6–7 (R. see 1b) Response : I will bless your name, O Lord, forever.

 August 27th : Responsorial Psalm

Psalm 145:2–3, 4–5, 6–7 (R. see 1b)
Response : I will bless your name, O Lord, forever.
I will bless you day after day, and praise your name forever and ever. The Lord is great and highly to be praised; his greatness cannot be measured.
R.: I will bless your name, O Lord, forever.
Age to age shall proclaim your works, shall declare your mighty deeds. They will tell of your great glory and splendour, and recount your wonderful works.
R.: I will bless your name, O Lord, forever.
They will speak of your awesome deeds, recount your greatness and might. They will recall your abundant goodness, and sing of your just deeds with joy.
R.: I will bless your name, O Lord, forever.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. Stay awake, be ready; the Son of Man is coming at an hour you do not expect.
R. Alleluia.

August 27th : First Reading A Reading from the first letter of St.Paul to the Corinthians 1: 1–9

 August 27th :  First Reading

A Reading from the first letter of St.Paul to the  Corinthians 1: 1–9

Paul, called by the will of God to be an apostle of Christ Jesus, and our brother Sosthenes, To the church of God that is in Corinth, to those sanctified in Christ Jesus, called to be saints together with all those who in every place call upon the name of our Lord Jesus Christ, both their Lord and ours: Grace to you and peace from God our Father and the Lord Jesus Christ. I give thanks to my God always for you because of the grace of God that was given you in Christ Jesus, that in every way you were enriched in him in all speech and all knowledge— even as the testimony about Christ was confirmed among you— so that you are not lacking in any gift, as you wait for the revealing of our Lord Jesus Christ, who will sustain you to the end, guiltless in the day of our Lord Jesus Christ. God is faithful, by whom you were called into the fellowship of his Son, Jesus Christ our Lord.

The Word of the Lord

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

நற்செய்தி வாசகம்ஆயத்தமாய் இருங்கள். நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 42-51

நற்செய்தி வாசகம்

ஆயத்தமாய் இருங்கள். நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 42-51
அக்காலத்தில்

இயேசு தம் சீடரிடம் கூறியது: “விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.

தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தம் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு, தன் உடன்பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான். அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார். அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளிவேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.