இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 22 ஆகஸ்ட், 2026

ஆகஸ்ட் 23 : நற்செய்தி வாசகம் உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-20

 ஆகஸ்ட் 23 : நற்செய்தி வாசகம்

உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-20

அக்காலத்தில்
இயேசு, பிலிப்புச் செசாரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள்.
“ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார்.
அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.
பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு

ஆகஸ்ட் 23 : இரண்டாம் வாசகம் அனைத்தும் கடவுளிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 33-36

 ஆகஸ்ட் 23 : இரண்டாம் வாசகம்

அனைத்தும் கடவுளிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 33-36
சகோதரர் சகோதரிகளே,

கடவுளின் அருள்செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! “ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்? தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?” அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 16: 18
அல்லேலூயா, அல்லேலூயா!
உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா.

ஆகஸ்ட் 23 : பதிலுரைப் பாடல் திபா 138: 1-2a. 2bc-3. 6,8bc (பல்லவி: 8bc) பல்லவி: ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு.

 ஆகஸ்ட் 23 : பதிலுரைப் பாடல்

திபா 138: 1-2a. 2bc-3. 6,8bc (பல்லவி: 8bc)
பல்லவி: ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு.

1
ஆண்டவரே! என் முழு மனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
2a
உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்; - பல்லவி
2bc
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.
3
நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். - பல்லவி
6
ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்; ஆனால், செருக்குற்றோரைத் தொலையில் இருந்தே அறிந்து கொள்கின்றீர்.
8bc
ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். - பல்லவி

ஆகஸ்ட் 23 : முதல் வாசகம் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 22: 19-23

 ஆகஸ்ட் 23 : முதல் வாசகம்

தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 22: 19-23

உன்னை உன் பதவியிலிருந்து இறக்கி விடுவேன்; உன் நிலையிலிருந்து கவிழ்த்து விடுவேன். அந்நாளில் இல்க்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து, உன் அங்கியை அவனுக்கு உடுத்தி, உன் கச்சையை அவன் இடுப்பில் கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்பேன். எருசலேமில் குடியிருப்போருக்கும் யூதா குடும்பத்தாருக்கும் அவன் தந்தையாவான்.
அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன். அவன் திறப்பான்; எவனும் பூட்ட மாட்டான். அவன் பூட்டுவான்; எவனும் திறக்க மாட்டான். உறுதியான இடத்தில் அவனை முளைபோல அடித்து வைப்பேன்; அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு மேன்மையுள்ள அரியணையாக இருப்பான்.
ஆண்டவரின் அருள்வாக்கு

August 23rd : Gospel A Reading from the Holy Gospel according to St.Matthew 16: 13–20

 August 23rd : Gospel

A Reading from the Holy Gospel according to St.Matthew 16: 13–20
At that time: When Jesus came into the district of Caesarea Philippi, he asked his disciples, “Who do people say that the Son of Man is?” And they said, “Some say John the Baptist, others say Elijah, and others Jeremiah or one of the prophets.” He said to them, “But who do you say that I am?” Simon Peter replied, “You are the Christ, the Son of the living God.” And Jesus answered him, “Blessed are you, Simon Bar-Jonah! For flesh and blood has not revealed this to you, but my Father who is in heaven. And I tell you, you are Peter, and on this rock I will build my church, and the gates of hell shall not prevail against it. I will give you the keys of the kingdom of heaven, and whatever you bind on earth shall be bound in heaven, and whatever you loose on earth shall be loosed in heaven.” Then he strictly charged the disciples to tell no one that he was the Christ.
The Gospel of the Lord

August 23rd : Second Reading A Reading from the letter of St.Paul to the Romans 11:33–36

 August 23rd : Second Reading

A Reading from the letter of St.Paul to the Romans 11:33–36

Oh, the depth of the riches and wisdom and knowledge of God! How unsearchable are his judgments and how inscrutable his ways! “For who has known the mind of the Lord, or who has been his counsellor?” “Or who has given a gift to him that he might be repaid?” For from him and through him and to him are all things. To him be glory for ever. Amen.

The Word of the Lord.

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. You are Peter, and on this rock I will build my church, and the gates of hell shall not prevail against it.

R. Alleluia

August 23rd : Responsorial Psalm Psalm 138:1–2a, 2bcd–3, 6 and 8bc (R. 8bc)

 August 23rd : Responsorial Psalm

Psalm 138:1–2a, 2bcd–3, 6 and 8bc (R. 8bc)
Response : O Lord, your merciful love is eternal; discard not the work of your hands.
I thank you, Lord, with all my heart; you have heard the words of my mouth. In the presence of the angels I praise you. I bow down toward your holy temple.
R.: O Lord, your merciful love is eternal; discard not the work of your hands.
I give thanks to your name for your merciful love and your faithfulness. You have exalted your name over all. On the day I called, you answered me; you increased the strength of my soul.
R.: O Lord, your merciful love is eternal; discard not the work of your hands.
The Lord is high, yet he looks on the lowly, and the haughty he knows from afar. O Lord, your merciful love is eternal; discard not the work of your hands.
R.: O Lord, your merciful love is eternal; discard not the work of your hands.

August 23rd : First Reading A Reading from the book of the Prophet Isaiah 22: 19–23

 August 23rd : First Reading

A Reading from the book of the Prophet Isaiah 22: 19–23
Thus says the Lord to Shebna, who is over the household: “I will thrust you from your office, and you will be pulled down from your station. In that day I will call my servant Eliakim the son of Hilkiah, and I will clothe him with your robe, and will bind your sash on him, and will commit your authority to his hand. And he shall be a father to the inhabitants of Jerusalem and to the house of Judah. And I will place on his shoulder the key of the house of David. He shall open, and none shall shut; and he shall shut, and none shall open. And I will fasten him like a peg in a secure place, and he will become a throne of honour to his father’s house.
The Word of the Lord.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

August 22nd : GospelA Reading from the Holy Gospel according to St.Luke 1:26–38

August 22nd :  Gospel

A Reading from the Holy Gospel according to St.Luke 1:26–38

At that time: The angel Gabriel was sent from God to a city of Galilee named Nazareth, to a virgin betrothed to a man whose name was Joseph, of the house of David. And the virgin’s name was Mary. And he came to her and said, “Hail, full of grace, the Lord is with you!” But she was greatly troubled at the saying, and tried to discern what sort of greeting this might be. And the angel said to her, “Do not be afraid, Mary, for you have found favour with God. And behold, you will conceive in your womb and bear a son, and you shall call his name Jesus. He will be great and will be called the Son of the Most High. And the Lord God will give to him the throne of his father David, and he will reign over the house of Jacob for ever, and of his kingdom there will be no end.” And Mary said to the angel, “How will this be, since I am a virgin?” And the angel answered her, “The Holy Spirit will come upon you, and the power of the Most High will overshadow you; therefore the child to be born will be called holy the Son of God. And behold, your relative Elizabeth in her old age has also conceived a son, and this is the sixth month with her who was called barren. For nothing will be impossible with God.” And Mary said, “Behold, I am the servant of the Lord; let it be to me according to your word.” And the angel departed from her.

The Gospel of the Lord.

August 22nd : Responsorial PsalmPsalm 113:1b–2, 3–4, 5–6, 7–8 (R. see 2)

August 22nd :  Responsorial Psalm

Psalm 113:1b–2, 3–4, 5–6, 7–8 (R. see 2)

Response : May the name of the Lord be blest forevermore.

Praise, O servants of the Lord, praise the name of the Lord! May the name of the Lord be blest both now and forevermore! 

R. : May the name of the Lord be blest forevermore.

From the rising of the sun to its setting, praised be the name of the Lord! High above all nations is the Lord, above the heavens his glory. 

R.: May the name of the Lord be blest forevermore.

Who is like the Lord, our God, who dwells on high, who lowers himself to look down upon heaven and earth? 

R.: May the name of the Lord be blest forevermore.

From the dust he lifts up the lowly, from the ash heap he raises the poor, to set them in the company of princes, yes, with the princes of his people. 

R.: May the name of the Lord be blest forevermore.

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

(Lent: Glory and praise to you, O Christ.)

V. Hail, Mary, full of grace, the Lord is with you. Blessed are you among women.

R. Alleluia.