Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, May 14, 2023

மே 15 : நற்செய்தி வாசகம்உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 26- 16: 4

மே 15 :  நற்செய்தி வாசகம்

உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 26- 16: 4
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள்.

நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இவற்றையெல்லாம் உங்களிடம் சொன்னேன். உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப் பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது. தந்தையையும் என்னையும் அவர்கள் அறியாமல் இருப்பதால்தான் இவ்வாறு செய்வார்கள். இவை நிகழும் நேரம் வரும்போது நான் உங்களுக்கு இவை பற்றி முன்பே சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதற்காகவே இவற்றை உங்களிடம் கூறினேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 15th : Gospel The Spirit of truth will be my witnessA Reading from the Holy Gospel according to St.John 15:26-16:4

May 15th : Gospel 

The Spirit of truth will be my witness

A Reading from the Holy Gospel according to St.John 15:26-16:4
Jesus said to his disciples:
‘When the Advocate comes,
whom I shall send to you from the Father,
the Spirit of truth who issues from the Father,
he will be my witness.
And you too will be witnesses,
because you have been with me from the outset.
‘I have told you all this that your faith may not be shaken.
They will expel you from the synagogues,
and indeed the hour is coming
when anyone who kills you
will think he is doing a holy duty for God.
They will do these things
because they have never known
either the Father or myself.
But I have told you all this,
so that when the time for it comes
you may remember that I told you.’

The Word of the Lord.

May 15th : Responsorial PsalmPsalm 149:1-6,9 The Lord takes delight in his people.orAlleluia!

May 15th :  Responsorial Psalm

Psalm 149:1-6,9 

The Lord takes delight in his people.
or
Alleluia!
Sing a new song to the Lord,
  his praise in the assembly of the faithful.
Let Israel rejoice in its Maker,
  let Zion’s sons exult in their king.

The Lord takes delight in his people.
or
Alleluia!

Let them praise his name with dancing
  and make music with timbrel and harp.
For the Lord takes delight in his people.
  He crowns the poor with salvation.

The Lord takes delight in his people.
or
Alleluia!

Let the faithful rejoice in their glory,
  shout for joy and take their rest.
Let the praise of God be on their lips:
  this honour is for all his faithful.

The Lord takes delight in his people.
or
Alleluia!

Gospel Acclamation cf.Lk24:46,26

Alleluia, alleluia!

It was ordained that the Christ should suffer
and rise from the dead,
and so enter into his glory.
Alleluia!

May 15th : First Reading The Lord opened Lydia's heart to accept what Paul was sayingA Reading from the Acts of Apostles 16:11-15

May 15th :  First Reading 

The Lord opened Lydia's heart to accept what Paul was saying

A Reading from the Acts of Apostles 16:11-15 
Sailing from Troas we made a straight run for Samothrace; the next day for Neapolis, and from there for Philippi, a Roman colony and the principal city of that particular district of Macedonia. After a few days in this city we went along the river outside the gates as it was the sabbath and this was a customary place for prayer. We sat down and preached to the women who had come to the meeting. One of these women was called Lydia, a devout woman from the town of Thyatira who was in the purple-dye trade. She listened to us, and the Lord opened her heart to accept what Paul was saying. After she and her household had been baptised she sent us an invitation: ‘If you really think me a true believer in the Lord,’ she said ‘come and stay with us’; and she would take no refusal.

The Word of the Lord.

மே 14 : நற்செய்தி வாசகம்மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 15-21

மே 14 :  நற்செய்தி வாசகம்

மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 15-21
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்.

நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன். இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள். நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர்மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 14 : இரண்டாம் வாசகம்மனித இயல்போடு இருந்த கிறிஸ்து இறந்தார் எனினும் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 15-18

மே 14 :  இரண்டாம் வாசகம்

மனித இயல்போடு இருந்த கிறிஸ்து இறந்தார் எனினும் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 15-18
அன்பிற்குரியவர்களே,

உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள். ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடை அளியுங்கள். உங்கள் மனச்சான்றும் குற்றமற்றதாய் இருக்கட்டும். அப்பொழுது உங்கள் கிறிஸ்தவ நன்னடத்தையைப் பழிக்கிறவர்கள் உங்களை இழிவாகப் பேசியதைக் குறித்து வெட்கப்படுவார்கள். ஏனெனில், தீமை செய்து துன்புறுவதைவிட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல்.

கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடு இருந்த அவர் இறந்தார் எனினும் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 23
அல்லேலூயா, அல்லேலூயா! 

என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

மே 14 : பதிலுரைப் பாடல்திபா 66: 1-3a. 4-5. 6-7a. 16,20 (பல்லவி: 1)பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!அல்லது: அல்லேலூயா.

மே 14 :  பதிலுரைப் பாடல்

திபா 66: 1-3a. 4-5. 6-7a. 16,20 (பல்லவி: 1)

பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!

அல்லது: அல்லேலூயா.
1
அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்;
2
அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.
3a
கடவுளை நோக்கி, ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை’ என்று சொல்லுங்கள். - பல்லவி

4
‘அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள்.
5
வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. - பல்லவி

6
கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.
7a
அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! - பல்லவி

16
கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்.
20
என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! - பல்லவி

மே 14 : முதல் வாசகம்சமாரியர் மீது கைகளை வைக்கவே, அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8: 5-8, 14-17

மே 14 : முதல் வாசகம்

சமாரியர் மீது கைகளை வைக்கவே, அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8: 5-8, 14-17
அந்நாள்களில்

பிலிப்பு, சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார். பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒருமனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர். ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்த குரலுடன் கூச்சலிட்டுக்கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர். இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று.

சமாரியர் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டனர் என்பதை எருசலேமிலுள்ள திருத்தூதர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்று சமாரியர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள்; ஏனெனில் அதுவரை அவர்களுள் யாருக்கும் தூய ஆவி அருளப்படவில்லை. ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் அவர்கள் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள். பின்பு பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே, அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 14th : Gospel I shall ask the Father and he will give you another AdvocateA Reading from the Holy Gospel according to St.John 14: 15-21

May 14th : Gospel 

I shall ask the Father and he will give you another Advocate

A Reading from the Holy Gospel according to St.John 14: 15-21
Jesus said to his disciples:
‘If you love me you will keep my commandments.
I shall ask the Father,
and he will give you another Advocate
to be with you for ever,
that Spirit of truth
whom the world can never receive
since it neither sees nor knows him;
but you know him,
because he is with you, he is in you.
I will not leave you orphans;
I will come back to you.
In a short time the world will no longer see me;
but you will see me,
because I live and you will live.
On that day you will understand that I am in my Father
and you in me and I in you.
Anybody who receives my commandments and keeps them
will be one who loves me;
and anybody who loves me will be loved by my Father,
and I shall love him and show myself to him.’

The Word of the Lord.