Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, July 7, 2023

ஜூலை 8 : நற்செய்தி வாசகம்மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-17

ஜூலை 8 : நற்செய்தி வாசகம்

மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-17
அக்காலத்தில்

யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்பொழுது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.

மேலும் எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில் அந்த ஒட்டு ஆடையைக் கிழித்துவிடும்; கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் தோற்பைகள் வெடிக்கும்; மதுவும் சிந்திப்போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் வீணாய்ப் போகா” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 8 : பதிலுரைப் பாடல்திபா 135: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 3a)பல்லவி: ஆண்டவரைப் புகழுங்கள்! ஏனெனில், அவர் நல்லவர்.

ஜூலை 8 :  பதிலுரைப் பாடல்

திபா 135: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 3a)

பல்லவி: ஆண்டவரைப் புகழுங்கள்! ஏனெனில், அவர் நல்லவர்.
1
ஆண்டவரின் பெயரைப் புகழுங்கள்; ஆண்டவரின் ஊழியரே! அவரைப் புகழுங்கள்.
2
ஆண்டவரின் கோவிலுள் நிற்பவர்களே! நம் கடவுளின் கோவில் முற்றங்களில் உள்ளவர்களே! - பல்லவி

3
ஆண்டவரைப் புகழுங்கள்! ஏனெனில், அவர் நல்லவர்; அவரது பெயரைப் போற்றிப் பாடுங்கள்; ஏனெனில், அவர் இனியவர்.
4
ஆண்டவர் யாக்கோபைத் தமக்கென்று தேர்ந்துகொண்டார்; இஸ்ரயேலைத் தமக்குரிய தனிச் சொத்தாகத் தெரிந்தெடுத்தார். - பல்லவி

5
ஆண்டவர் மேன்மைமிக்கவர் என்பதை அறிவேன்; நம் ஆண்டவர் எல்லாத் தெய்வங்களுக்கும் மேலானவர் என்பதும் எனக்குத் தெரியும்.
6
விண்ணிலும் மண்ணிலும் கடல்களிலும் எல்லா ஆழ்பகுதிகளிலும், ஆண்டவர் தமக்கு விருப்பமான யாவற்றையும் செய்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா! 

என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

ஜூலை 8 : முதல் வாசகம்யாக்கோபு தன் சகோதரனை வஞ்சித்து, அவனுக்குரிய ஆசியைக் கவர்ந்து கொண்டான்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 27: 1-5, 15-29

ஜூலை 8 :   முதல் வாசகம்

யாக்கோபு தன் சகோதரனை வஞ்சித்து, அவனுக்குரிய ஆசியைக் கவர்ந்து கொண்டான்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 27: 1-5, 15-29
ஈசாக்கு முதிர்ந்த வயதை அடைந்தபோது அவர் கண்களின் பார்வை மங்கிப்போயிற்று. அவர் தம் மூத்த மகன் ஏசாவை அழைத்து, ‘என் மகனே’ என்றார்; ஏசா, ‘இதோ வந்து விட்டேன்’ என்றான். அவர் அவனை நோக்கி, “இதோ பார்; எனக்கு வயதாகிவிட்டது. சாவு எந்நாள் வருமோ என்று அறியேன். இப்பொழுது உன் கருவிகளான வில்லையும் அம்புக் கூட்டையும் எடுத்துக்கொள். காட்டுக்குப் போ. வேட்டையாடி, எனக்கு வேட்டைக் கறி கொண்டுவா. நான் விரும்பும் முறையில் சுவையான உணவு வகைகளைச் சமைத்து என்னிடம் கொண்டு வா. நான் அவற்றை உண்பேன். நான் சாகுமுன், உனக்கு மனமார ஆசி வழங்குவேன்” என்றார்.

ஈசாக்கு தம் மகன் ஏசாவிடம் பேசியதை ரெபேக்கா கேட்டுக் கொண்டிருந்தார். வேட்டையாடி வேட்டைக்கறி கொண்டு வருமாறு ஏசா காட்டிற்குப் புறப்பட்டவுடன் ரெபேக்கா தம்முடன் வீட்டில் வைத்திருந்த தம் மூத்த மகன் ஏசாவின் உடைகளில் சிறந்தவற்றைத் தம் இளைய மகன் யாக்கோபுக்கு உடுத்துவித்தார். அவன் கைகளையும் மிருதுவான கழுத்தையும் வெள்ளாட்டுக் குட்டிகளின் தோலால் மூடினார். அவர் சுவையான உணவு வகைகளையும், தாம் சுட்ட அப்பங்களையும் தம் மகன் யாக்கோபின் கையில் கொடுத்தார்.

அவனும் அவற்றைத் தன் தந்தையிடம் எடுத்துச்சென்று, ‘அப்பா’ என்று அழைத்தான். அவரும் மறுமொழியாக, ‘ஆம் மகனே, நீ எந்த மகன்?’ என்று கேட்க, யாக்கோபு தன் தந்தையிடம், “நான்தான் உங்கள் தலைப்பேறான ஏசா. நீங்கள் சொன்னவாறு செய்திருக்கிறேன். எழுந்து உட்கார்ந்து என் வேட்டைப் பதார்த்தங்களை உண்டு மனமார எனக்கு ஆசி வழங்குங்கள்” என்றான். ஈசாக்கு தன் மகனை நோக்கி, “மகனே! இது உனக்கு இவ்வளவு விரைவில் எப்படி அகப்பட்டது?” என்று கேட்க, அவன், “உம் கடவுளாகிய ஆண்டவரால்தான் எனக்கு இது நிகழ்ந்தது,” என்றான்.

ஈசாக்கு யாக்கோபிடம், “மகனே, அருகில் வா, நீ உண்மையிலேயே என் மகன் ஏசாதானா என்று நான் உன்னைத் தடவிப் பார்த்துத் தெரிந்துகொள்வேன்” என்றார். யாக்கோபு தன் தந்தை அருகில் வந்தான். ஈசாக்கு அவனைத் தடவிப் பார்த்து, ‘குரல் யாக்கோபின் குரல்; ஆனால் கைகளோ ஏசாவின் கைகள்’ என்றார். அவன் கைகள் அவன் சகோதரன் ஏசாவின் கைகளைப் போல் உரோமம் அடர்ந்தவையாய் இருந்ததால், அவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. எனவே அவனுக்கு ஆசி வழங்கினார். மீண்டும் அவர் ‘நீ உண்மையிலேயே என் மகன் ஏசாதானா?’ என்று வினவ, அவனும் ‘ஆம்’ என்றான்.

அப்பொழுது அவர், ‘மகனே, உண்பதற்கு வேட்டைப் பதார்த்தங்களைக் கொண்டு வா. மனமார நான் உனக்கு ஆசி வழங்குவேன்’ என்றார். அவ்வாறே யாக்கோபு கொண்டுவர, அவர் அதை உண்டார். பின், அவன் திராட்சை ரசம் கொண்டுவர, அவர் அதைக் குடித்தார். அப்பொழுது அவன் தந்தை ஈசாக்கு அவனை நோக்கி, ‘மகனே, அருகில் வந்து என்னை முத்தமிடு’ என்றார். அவனும் அருகில் போய் அவரை முத்தமிட, ஈசாக்கு அவன் அணிந்திருந்த ஆடைகளின் நறுமணத்தை முகர்ந்து ஆசி வழங்கி உரைத்தது இதுவே:

“இதோ, என் மகனிடமிருந்து எழும்பும் நறுமணம்! ஆண்டவரின் ஆசிபெற்ற விளை நிலத்தின் வாசனையாம்! வானின் பனித் துளியும், மண்ணின் செழுமையும், மிகுந்த தானியமும், திராட்சை இரசமும் கடவுள் உனக்கு வழங்குவாராக! நாடுகள் உனக்குப் பணி புரிந்திடுக! மக்கள் உனக்குப் பணிந்திடுக! உன்றன் சோதரர்க்குத் தலைவன் நீ ஆகிடுவாய்! உன் அன்னையின் மைந்தர் உன்னடி பணிந்திடுவர்! உன்னைச் சபிப்பார் சாபம் பெறுக! உன்னை வாழ்த்துவார் வளமுற வாழ்க!” என்று ஆசி வழங்கினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

July 8th : Gospel When the bridegroom is taken from them, then they will fastA Reading from the Holy Gospel according to St.Matthew 9:14-17

July 8th :  Gospel 

When the bridegroom is taken from them, then they will fast

A Reading from the Holy Gospel according to St.Matthew 9:14-17 
John’s disciples came to him and said, ‘Why is it that we and the Pharisees fast, but your disciples do not?’ Jesus replied, ‘Surely the bridegroom’s attendants would never think of mourning as long as the bridegroom is still with them? But the time will come for the bridegroom to be taken away from them, and then they will fast. No one puts a piece of unshrunken cloth on to an old cloak, because the patch pulls away from the cloak and the tear gets worse. Nor do people put new wine into old wineskins; if they do, the skins burst, the wine runs out, and the skins are lost. No; they put new wine into fresh skins and both are preserved.’

The Word of the Lord.

July 8th : Responsorial PsalmPsalm 134(135):1-6 Praise the Lord, for the Lord is good.orAlleluia!

July 8th :  Responsorial Psalm

Psalm 134(135):1-6 

Praise the Lord, for the Lord is good.
or
Alleluia!
Praise the name of the Lord,
  praise him, servants of the Lord,
who stand in the house of the Lord
  in the courts of the house of our God.

Praise the Lord, for the Lord is good.
or
Alleluia!

Praise the Lord for the Lord is good.
  Sing a psalm to his name for he is loving.
For the Lord has chosen Jacob for himself
  and Israel for his own possession.

Praise the Lord, for the Lord is good.
or
Alleluia!

For I know the Lord is great,
  that our Lord is high above all gods.
The Lord does whatever he wills,
  in heaven, on earth, in the seas.

Praise the Lord, for the Lord is good.
or
Alleluia!

Gospel Acclamation Ps118:135

Alleluia, alleluia!

Let your face shine on your servant,
and teach me your decrees.
Alleluia!

July 8th : First readingJacob obtains Isaac's blessing by fraudA Reading from the book of Genesis 27:1-5,15-29

July 8th :  First reading

Jacob obtains Isaac's blessing by fraud

A Reading from the book of Genesis 27:1-5,15-29 
Isaac had grown old, and his eyes were so weak that he could no longer see. He summoned his elder son Esau. ‘My
 son!’ he said to him, and the latter answered, ‘I am here.’ Then he said, ‘See, I am old and do not know when I may die. Now take your weapons, your quiver and bow; go out into the country and hunt me some game. Make me the kind of savoury I like and bring it to me, so that I may eat, and give you my blessing before I die.’
  Rebekah happened to be listening while Isaac was talking to his son Esau. So when Esau went into the country to hunt game for his father, Rebekah took her elder son Esau’s best clothes, which she had in the house, and dressed her younger son Jacob in them, covering his arms and the smooth part of his neck with the skins of the kids. Then she handed the savoury and the bread she had made to her son Jacob.
  He presented himself before his father and said, ‘Father.’ ‘I am here;’ was the reply ‘who are you, my son?’ Jacob said to his father, ‘I am Esau your first-born; I have done as you told me. Please get up and take your place and eat the game I have brought and then give me your blessing.’ Isaac said to his son, ‘How quickly you found it, my son!’ ‘It was the Lord your God’ he answered ‘who put it in my path.’ Isaac said to Jacob, ‘Come here, then, and let me touch you, my son, to know if you are my son Esau or not.’ Jacob came close to his father Isaac, who touched him and said, ‘The voice is Jacob’s voice but the arms are the arms of Esau!’ He did not recognise him, for his arms were hairy like his brother Esau’s, and so he blessed him. He said, ‘Are you really my son Esau?’ And he replied, ‘I am.’ Isaac said, ‘Bring it here that I may eat the game my son has brought, and so may give you my blessing.’ He brought it to him and he ate; he offered him wine, and he drank. His father Isaac said to him, ‘Come closer, and kiss me, my son.’ He went closer and kissed his father, who smelled the smell of his clothes.
  He blessed him, saying:
‘Yes, the smell of my son
is like the smell of a fertile field blessed by the Lord.
May God give you
dew from heaven,
and the richness of the earth,
abundance of grain and wine!
May nations serve you
and peoples bow down before you!
Be master of your brothers;
may the sons of your mother bow down before you!
Cursed be he who curses you;
blessed be he who blesses you!’

The Word of the Lord.

ஜூலை 7 : நற்செய்தி வாசகம்பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13

ஜூலை 7 :  நற்செய்தி வாசகம்

பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13
அக்காலத்தில்

மத்தேயு என்பவர் சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததை இயேசு கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.

பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், “உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?” என்று கேட்டனர்.

இயேசு இதைக் கேட்டவுடன், “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. ‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு

ஜூலை 7 : பதிலுரைப் பாடல்திபா 106: 1-2. 3-4a. 4b-5 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்!

ஜூலை 7 :  பதிலுரைப் பாடல்

திபா 106: 1-2. 3-4a. 4b-5 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்!
1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்! என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு!
2
ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை யாரால் இயம்ப இயலும்? அவர்தம் புகழை யாரால் விளம்பக் கூடும்? - பல்லவி

3
நீதிநெறி காப்போர் பேறுபெற்றோர்! எப்போதும் நேரியதே செய்வோர் பேறுபெற்றோர்!
4a
ஆண்டவரே! நீர் உம் மக்கள்மீது இரக்கம் காட்டும்போது என்னை நினைவுகூரும்! - பல்லவி

4b
அவர்களை நீர் விடுவிக்கும்போது எனக்கும் துணை செய்யும்!
5
நீர் தேர்ந்தெடுத்த மக்களின் நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்; உம்முடைய மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்ளும்படிச் செய்யும்! அப்போது, உமது உரிமைச் சொத்தான மக்களோடு உம்மைப் போற்றிட இயலும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 28
அல்லேலூயா, அல்லேலூயா!

 பெருஞ்சுமை சுமந்து சோர்ந்து இருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஜூலை 7 : முதல் வாசகம்ஈசாக்கு ரெபேக்கா மீது அன்பு வைத்திருந்தார்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 23: 1-4, 19; 24: 1-8, 62-67

ஜூலை 7 :  முதல் வாசகம்

ஈசாக்கு ரெபேக்கா மீது அன்பு வைத்திருந்தார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 23: 1-4, 19; 24: 1-8, 62-67
அந்நாள்களில்

சாரா நூற்றிருபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தார். சாராவின் வயது இதுவே. கானான் நாட்டிலுள்ள எபிரோன் என்ற கிரியத்து அர்பா நகரில் சாரா இறந்தார். அவருக்காகப் புலம்பி அழுவதற்காக ஆபிரகாம் சென்றார்.

பிறகு சடலம் இருந்த இடத்தைவிட்டு அவர் எழுந்து இத்தியரிடம் சென்று சொன்னது: “நான் உங்களிடையே அன்னியனும் அகதியுமாய் இருக்கிறேன். என் வீட்டில் இறந்தாரை நான் அடக்கம் செய்வதற்கான கல்லறை நிலத்தை உங்களுக்குரிய சொத்திலிருந்து எனக்கு விற்றுவிடுங்கள்” என்று கேட்டார். இவ்வாறு மம்ரே அருகில் மக்பேலா நிலத்தின் கல்லறையில் ஆபிரகாம் தம் மனைவி சாராவை அடக்கம் செய்தார். இதுவே கானான் நாட்டில் இருக்கும் எபிரோன்.

ஆபிரகாம் வயது மிகுந்தவராய் முதுமை அடைந்தார். ஆண்டவர் அவருக்கு அனைத்திலும் ஆசி வழங்கியிருந்தார்.

ஒரு நாள் அவர் தம் வீட்டின் வேலைக்காரர்களில் மூத்தவரும், தமக்குரிய அனைத்திற்கும் அதிகாரியுமானவரை நோக்கி, “உன் கையை என் தொடையின் கீழ் வைத்து, விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணையிட்டுச் சொல்: நான் வாழ்ந்துவரும் இக்கானான் நாட்டுப் பெண்களிடையே என் மகனுக்குப் பெண் கொள்ளமாட்டாய் என்றும் என் சொந்த நாட்டிற்குப் போய், என் உறவினரிடம் என் மகன் ஈசாக்கிற்குப் பெண் கொள்வாய் என்றும் சொல்” என்றார்.

அதற்கு அவர், “ஒருவேளை பெண் என்னோடு இந்நாட்டிற்கு வர மறுத்துவிட்டால் தாங்கள் விட்டுவந்த அந்நாட்டிற்குத் தங்கள் மகனைக் கூட்டிக் கொண்டு போகலாமா?” என்று கேட்டார். அதற்கு ஆபிரகாம், “அங்கே என் மகனை ஒருக்காலும் கூட்டிக்கொண்டு போகாதே. கவனமாயிரு. என் தந்தை வீட்டினின்றும் நான் பிறந்த நாட்டினின்றும் என்னை அழைத்து வந்து, என்னோடு பேசி, ‘இந்த நாட்டை உன் வழிமரபினருக்குத் தருவேன்’ என்றுஆணையிட்டுக் கூறிய அந்த விண்ணுலகின் கடவுளாகிய ஆண்டவரே உனக்கு முன் தம் தூதரை அனுப்பி வைப்பார். நீ போய், அங்கே என் மகனுக்குப் பெண்கொள். உன்னோடு வர அப்பெண் விரும்பாவிடில் எனக்கு நீ அளித்த வாக்குறுதியினின்று விடுதலை பெறுவாய். என் மகனை மட்டும் அங்கே கூட்டிக்கொண்டு போகாதே” என்றார்.

இதற்கிடையில், பெயேர்லகாய்ரோயி என்ற இடத்திலிருந்து ஈசாக்கு புறப்பட்டு நெகேபு பகுதியில் வாழ்ந்து வந்தார். மாலையில் வெளியே வயல்புறம் சென்றபோது, அவர் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வருவதைக் கண்டார். ரெபேக்காவும் கண்களை உயர்த்தி ஈசாக்கைப் பார்த்தார். உடனே அவர் ஒட்டகத்தை விட்டு இறங்கினார். அவர் அந்த வேலைக்காரரிடம், “வயலில் நம்மைச் சந்திக்க வந்து கொண்டிருக்கும் அவர் யார்?” என்று கேட்டார். அவ்வேலைக்காரரும், “அவர்தாம் என் தலைவர்” என்றார். உடனே ரெபேக்கா தம் முக்காட்டை எடுத்து தம்மை மூடிக்கொண்டார்.

அப்பொழுது அவ்வேலைக்காரர் ஈசாக்கிடம் தாம் செய்தது அனைத்தையும் பற்றிக் கூறினார். ஈசாக்கு தம் தாயார் சாராவின் கூடாரத்துக்குள் ரெபேக்காவை அழைத்துச் சென்று மணந்து கொண்டார். அவரும் ஈசாக்குக்கு மனைவியானார். அவர் ரெபேக்கா மீது அன்பு வைத்திருந்தார். இவ்வாறு தம் தாயின் மறைவுக்குப் பிறகு ஈசாக்கு ஆறுதல் அடைந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

July 7th : Gospel It is not the healthy who need the doctor, but the sickA Reading from the Holy Gospel according to St.Matthew 9:9-13

July 7th :  Gospel 

It is not the healthy who need the doctor, but the sick

A Reading from the Holy Gospel according to St.Matthew 9:9-13 
As Jesus was walking on, he saw a man named Matthew sitting by the customs house, and he said to him, ‘Follow me.’ And he got up and followed him.
  While he was at dinner in the house it happened that a number of tax collectors and sinners came to sit at the table with Jesus and his disciples. When the Pharisees saw this, they said to his disciples, ‘Why does your master eat with tax collectors and sinners?’ When he heard this he replied, ‘It is not the healthy who need the doctor, but the sick. Go and learn the meaning of the words: What I want is mercy, not sacrifice. And indeed I did not come to call the virtuous, but sinners.’

The Word of the Lord.