Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, October 14, 2022

அக்டோபர் 15 : நற்செய்தி வாசகம்நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12

அக்டோபர் 15 :  நற்செய்தி வாசகம்

நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார்.

மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார்.

தொழுகைக்கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதில் அளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

அக்டோபர் 15 : பதிலுரைப் பாடல்திபா 8: 1-2a. 3-4. 5-6 (பல்லவி: 6a)பல்லவி: உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்.

அக்டோபர் 15 :  பதிலுரைப் பாடல்

திபா 8: 1-2a. 3-4. 5-6 (பல்லவி: 6a)

பல்லவி: உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்.
1
ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது.
2a
பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் வலிமையை உறுதிப்படுத்தினீர். - பல்லவி

3
உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது,
4
மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? - பல்லவி

5
ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
6
உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 26b, 27a

அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். அல்லேலூயா.

அக்டோபர் 15 : முதல் வாசகம்கிறிஸ்துவைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல்.திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-23

அக்டோபர் 15 :  முதல் வாசகம்

கிறிஸ்துவைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-23
சகோதரர் சகோதரிகளே,

ஆண்டவராகிய இயேசுவின் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை பற்றியும் இறைமக்கள் அனைவரிடமும் நீங்கள் செலுத்தும் அன்பு பற்றியும் கேள்வியுற்று, நான் இறைவனிடம் வேண்டும்போது உங்களை நினைவு கூர்ந்து உங்களுக்காக நன்றி செலுத்தத் தவறுவதில்லை.

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர், அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு, ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்பவர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு, உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! கடவுள் வலிமைமிக்க தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்த்தினார். அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்; இவ்வுலகில் மட்டும் அல்ல; வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்.

அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச் செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

October 15th : Gospel If you declare yourselves for me, I will declare myself for youA Reading from the Holy Gospel according to St.Luke 12:8-12

October 15th :  Gospel 

If you declare yourselves for me, I will declare myself for you

A Reading from the Holy Gospel according to St.Luke 12:8-12 
Jesus said to his disciples:
  ‘I tell you, if anyone openly declares himself for me in the presence of men, the Son of Man will declare himself for him in the presence of the angels. But the man who disowns me in the presence of men will be disowned in the presence of God’s angels.
  ‘Everyone who says a word against the Son of Man will be forgiven, but he who blasphemes against the Holy Spirit will not be forgiven.
  ‘When they take you before synagogues and magistrates and authorities, do not worry about how to defend yourselves or what to say, because when the time comes, the Holy Spirit will teach you what you must say.’

The Word of the Lord.

October 15th : Responsorial Psalm Psalm 8:2-7 You gave your Son power over the works of your hand.

October 15th :  Responsorial Psalm 

Psalm 8:2-7 

You gave your Son power over the works of your hand.
How great is your name, O Lord our God,
  through all the earth!
Your majesty is praised above the heavens;
  on the lips of children and of babes
you have found praise to foil your enemy,
  to silence the foe and the rebel.

You gave your Son power over the works of your hand.

When I see the heavens, the work of your hands,
  the moon and the stars which you arranged,
what is man that you should keep him in mind,
  mortal man that you care for him?

You gave your Son power over the works of your hand.

Yet you have made him little less than a god;
  with glory and honour you crowned him,
gave him power over the works of your hand,
  put all things under his feet.

You gave your Son power over the works of your hand.

Gospel Acclamation 1S3:9,Jn6:68

Alleluia, alleluia!
Speak, Lord, your servant is listening:
you have the message of eternal life.
Alleluia!

October 15th : First ReadingPaul’s prayer for the enlightenment of the faithfulEphesians 1:15-23

October 15th : First Reading

Paul’s prayer for the enlightenment of the faithful

Ephesians 1:15-23 
I, having once heard about your faith in the Lord Jesus, and the love that you show towards all the saints, have never failed to remember you in my prayers and to thank God for you. May the God of our Lord Jesus Christ, the Father of glory, give you a spirit of wisdom and perception of what is revealed, to bring you to full knowledge of him. May he enlighten the eyes of your mind so that you can see what hope his call holds for you, what rich glories he has promised the saints will inherit and how infinitely great is the power that he has exercised for us believers. This you can tell from the strength of his power at work in Christ, when he used it to raise him from the dead and to make him sit at his right hand, in heaven, far above every Sovereignty, Authority, Power, or Domination, or any other name that can be named not only in this age but also in the age to come. He has put all things under his feet and made him, as the ruler of everything, the head of the Church; which is his body, the fullness of him who fills the whole creation.

The Word of the Lord.

அக்டோபர் 14 : நற்செய்தி வாசகம்உங்கள் தலைமுடி எல்லாம்கூட எண்ணப்பட்டிருக்கின்றன.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-7

அக்டோபர் 14 :  நற்செய்தி வாசகம்

உங்கள் தலைமுடி எல்லாம்கூட எண்ணப்பட்டிருக்கின்றன.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-7
அக்காலத்தில்

ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது இயேசு முதலில் தம் சீடரோடு பேசத் தொடங்கினார். அவர் அவர்களிடம் கூறியது: “பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியப்படாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. ஆகவே நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும். நீங்கள் உள்ளறைகளில் காதோடு காதாய்ப் பேசியவை வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும்.

என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன்: உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம். நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன். கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகாரம் உள்ளவருக்கே அஞ்சுங்கள்; ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே. உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.