Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Wednesday, July 12, 2023

ஜூலை 13 : நற்செய்தி வாசகம்கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 7-15

ஜூலை 13 :  நற்செய்தி வாசகம்

கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 7-15
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: நீங்கள் சென்று ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள். பொன், வெள்ளி, செப்புக்காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக்கொள்ள வேண்டாம். பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே.

நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள். அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள். வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள் மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாய் இருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.

உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரை விட்டு வெளியேறும் பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப் பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 13 : பதிலுரைப் பாடல்திபா 105: 16-17. 18-19. 20-21 (பல்லவி: 5a)பல்லவி: ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!

ஜூலை 13 :  பதிலுரைப் பாடல்

திபா 105: 16-17. 18-19. 20-21 (பல்லவி: 5a)

பல்லவி: ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!
16
நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்; உணவெனும் ஊன்றுகோலை முறித்துவிட்டார்.
17
அவர்களுக்கு முன் ஒருவரை அனுப்பி வைத்தார்; யோசேப்பு என்பவர் அடிமையாக விற்கப்பட்டார். - பல்லவி

18
அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு அவரைத் துன்புறுத்தினர். அவர்தம் கழுத்தில் இரும்புப் பட்டையை மாட்டினர்.
19
காலம் வந்தது; அவர் உரைத்தது நிறைவேறிற்று; ஆண்டவரின் வார்த்தை அவர் உண்மையானவர் என மெய்ப்பித்தது. - பல்லவி

20
மன்னர் ஆள் அனுப்பி அவரை விடுதலை செய்தார்; மக்களினங்களின் தலைவர் அவருக்கு விடுதலை அளித்தார்;
21
அவர் அவரைத் தம் அரண்மனைக்குத் தலைவர் ஆக்கினார்; தம் உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாளராக ஏற்படுத்தினார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 1: 15
அல்லேலூயா, அல்லேலூயா!

 இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

ஜூலை 13 : முதல் வாசகம்உயிர்களைக் காக்கும் பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 44: 18-21, 23-29; 45: 1-5

ஜூலை 13 :  முதல் வாசகம்

உயிர்களைக் காக்கும் பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 44: 18-21, 23-29; 45: 1-5

அந்நாள்களில்

யூதா, யோசேப்பு அருகில் வந்து, “என் தலைவரே! அடியேன் ஒரு வார்த்தை கூற அனுமதி தாரும். என் தலைவரே! செவிசாய்த்தருளும். உம் அடியான் மீது சினம் கொள்ள வேண்டாம். நீர் பார்வோனுக்கு இணையானவர். என் தலைவராகிய தாங்கள் உம் பணியாளர்களாகிய எங்களிடம், ‘உங்களுக்குத் தந்தையோ சகோதரனோ உண்டா?’ என்று கேட்டீர்கள். அதற்கு நாங்கள், ‘எங்களுக்கு வயது முதிர்ந்த தந்தையும், முதிர்ந்த வயதில் அவருக்குப் பிறந்த ஓர் இளைய சகோதரனும் உள்ளனர். அவனுடைய சகோதரன் இறந்துவிட்டான். அவன் தாயின் பிள்ளைகளில் அவன் ஒருவனே இருப்பதால், தந்தை அவன் மேல் அதிக அன்புகொண்டிருக்கிறார்” என்று தலைவராகிய தங்களுக்குச் சொன்னோம். அப்பொழுது தாங்கள், ‘அவனை என்னிடம் அழைத்து வாருங்கள். நான் அவனை நேரில் பார்க்க வேண்டும்’ என்று உம் அடியார்களுக்குச் சொன்னீர்கள். அதற்குத் தாங்கள் ‘உங்கள் இளைய சகோதரன் உங்களோடு வராவிட்டால் என் முகத்தில் விழிக்க வேண்டாம்’ என்று உம் அடியார்களுக்குச் சொன்னீர்கள்.

உம் பணியாளராகிய எங்கள் தந்தையிடம் திரும்பியவுடன் என் தலைவராகிய தாங்கள் சொல்லியவற்றை அவரிடம் எடுத்துரைத்தோம். பிறகு எங்கள் தந்தை, ‘நீங்கள் திரும்பிப்போய் நமக்குக் கொஞ்சம் உணவுப் பொருள் வாங்கி வாருங்கள்’ என்றார். நாங்கள் ‘எங்களால், போக இயலாது, எங்கள் இளைய சகோதரன் எங்களோடு சேர்ந்து வந்தால் மட்டுமே புறப்படுவோம். வராவிட்டால், இவன் இல்லாமல் நாங்கள் அவர் முகத்தில் விழிக்க மாட்டோம்’ என்றோம். உம் பணியாளராகிய எங்கள் தந்தை எங்களிடம் ‘என் மனைவி, எனக்கு இரு பிள்ளைகளையே பெற்றெடுத்தாள் என்று உங்களுக்குத் தெரியும். ஒருவன் என்னைப் பிரிந்து வெளியே சென்றான். அவன் ஒரு கொடிய விலங்கால் பீறிக் கிழிக்கப்பட்டான் என்று நினைத்துக்கொண்டேன். ஏனெனில், இதுவரை அவனைக் காணவில்லை. இப்பொழுது நீங்கள் இவனையும் என்னிடமிருந்து பிரிக்கிறீர்கள். இவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால், நரைத்த முடியுள்ள என்னைத் துயருக்குள்ளாக்கிப் பாதாளத்திற்குள் இறங்கச் செய்வீர்கள்’ என்றார்.

அப்பொழுது யோசேப்பு தம் பணியாளர் அனைவர் முன்னிலையிலும் இதற்குமேல் தம்மை அடக்கிக் கொள்ள முடியாமல், ‘எல்லாரும் என்னைவிட்டு வெளியே போங்கள்’ என்று உரத்த குரலில் சொன்னார். யோசேப்பு தம் சகோதரருக்குத் தம்மைத் தெரியப்படுத்தும்பொழுது வேற்று மனிதர் எவரும் அவரோடு இல்லை. உடனே அவர் கூக்குரலிட்டு அழுதார். எகிப்தியர் அதைக் கேட்டனர். பார்வோன் வீட்டாரும் அதைப் பற்றிக் கேள்விப்பட்டனர்.

பின்பு, அவர் தம் சகோதரர்களை நோக்கி, “நான்தான் யோசேப்பு! என் தந்தை இன்னும் உயிரோடு இருக்கிறாரா?” என்று கேட்டார். ஆனால் அவரைப் பார்த்து அவர் சகோதரர்கள் திகில் அடைந்ததால், அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் யோசேப்பு தம் சகோதரர்களை நோக்கி, “என் அருகில் வாருங்கள்” என்றார். அவர்கள் அருகில் வந்தவுடன் அவர், “நீங்கள் எகிப்திற்குச் செல்லுமாறு விற்ற உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்! நான் இங்குச் செல்லுமாறு நீங்கள் என்னை விற்றுவிட்டது குறித்து மனம் கலங்க வேண்டாம். உங்கள்மீதே சினம் கொள்ளவேண்டாம். ஏனெனில், உயிர்களைக் காக்கும் பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
அந்நாள்களில்

யூதா, யோசேப்பு அருகில் வந்து, “என் தலைவரே! அடியேன் ஒரு வார்த்தை கூற அனுமதி தாரும். என் தலைவரே! செவிசாய்த்தருளும். உம் அடியான் மீது சினம் கொள்ள வேண்டாம். நீர் பார்வோனுக்கு இணையானவர். என் தலைவராகிய தாங்கள் உம் பணியாளர்களாகிய எங்களிடம், ‘உங்களுக்குத் தந்தையோ சகோதரனோ உண்டா?’ என்று கேட்டீர்கள். அதற்கு நாங்கள், ‘எங்களுக்கு வயது முதிர்ந்த தந்தையும், முதிர்ந்த வயதில் அவருக்குப் பிறந்த ஓர் இளைய சகோதரனும் உள்ளனர். அவனுடைய சகோதரன் இறந்துவிட்டான். அவன் தாயின் பிள்ளைகளில் அவன் ஒருவனே இருப்பதால், தந்தை அவன் மேல் அதிக அன்புகொண்டிருக்கிறார்” என்று தலைவராகிய தங்களுக்குச் சொன்னோம். அப்பொழுது தாங்கள், ‘அவனை என்னிடம் அழைத்து வாருங்கள். நான் அவனை நேரில் பார்க்க வேண்டும்’ என்று உம் அடியார்களுக்குச் சொன்னீர்கள். அதற்குத் தாங்கள் ‘உங்கள் இளைய சகோதரன் உங்களோடு வராவிட்டால் என் முகத்தில் விழிக்க வேண்டாம்’ என்று உம் அடியார்களுக்குச் சொன்னீர்கள்.

உம் பணியாளராகிய எங்கள் தந்தையிடம் திரும்பியவுடன் என் தலைவராகிய தாங்கள் சொல்லியவற்றை அவரிடம் எடுத்துரைத்தோம். பிறகு எங்கள் தந்தை, ‘நீங்கள் திரும்பிப்போய் நமக்குக் கொஞ்சம் உணவுப் பொருள் வாங்கி வாருங்கள்’ என்றார். நாங்கள் ‘எங்களால், போக இயலாது, எங்கள் இளைய சகோதரன் எங்களோடு சேர்ந்து வந்தால் மட்டுமே புறப்படுவோம். வராவிட்டால், இவன் இல்லாமல் நாங்கள் அவர் முகத்தில் விழிக்க மாட்டோம்’ என்றோம். உம் பணியாளராகிய எங்கள் தந்தை எங்களிடம் ‘என் மனைவி, எனக்கு இரு பிள்ளைகளையே பெற்றெடுத்தாள் என்று உங்களுக்குத் தெரியும். ஒருவன் என்னைப் பிரிந்து வெளியே சென்றான். அவன் ஒரு கொடிய விலங்கால் பீறிக் கிழிக்கப்பட்டான் என்று நினைத்துக்கொண்டேன். ஏனெனில், இதுவரை அவனைக் காணவில்லை. இப்பொழுது நீங்கள் இவனையும் என்னிடமிருந்து பிரிக்கிறீர்கள். இவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால், நரைத்த முடியுள்ள என்னைத் துயருக்குள்ளாக்கிப் பாதாளத்திற்குள் இறங்கச் செய்வீர்கள்’ என்றார்.

அப்பொழுது யோசேப்பு தம் பணியாளர் அனைவர் முன்னிலையிலும் இதற்குமேல் தம்மை அடக்கிக் கொள்ள முடியாமல், ‘எல்லாரும் என்னைவிட்டு வெளியே போங்கள்’ என்று உரத்த குரலில் சொன்னார். யோசேப்பு தம் சகோதரருக்குத் தம்மைத் தெரியப்படுத்தும்பொழுது வேற்று மனிதர் எவரும் அவரோடு இல்லை. உடனே அவர் கூக்குரலிட்டு அழுதார். எகிப்தியர் அதைக் கேட்டனர். பார்வோன் வீட்டாரும் அதைப் பற்றிக் கேள்விப்பட்டனர்.

பின்பு, அவர் தம் சகோதரர்களை நோக்கி, “நான்தான் யோசேப்பு! என் தந்தை இன்னும் உயிரோடு இருக்கிறாரா?” என்று கேட்டார். ஆனால் அவரைப் பார்த்து அவர் சகோதரர்கள் திகில் அடைந்ததால், அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் யோசேப்பு தம் சகோதரர்களை நோக்கி, “என் அருகில் வாருங்கள்” என்றார். அவர்கள் அருகில் வந்தவுடன் அவர், “நீங்கள் எகிப்திற்குச் செல்லுமாறு விற்ற உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்! நான் இங்குச் செல்லுமாறு நீங்கள் என்னை விற்றுவிட்டது குறித்து மனம் கலங்க வேண்டாம். உங்கள்மீதே சினம் கொள்ளவேண்டாம். ஏனெனில், உயிர்களைக் காக்கும் பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

July 13th : Gospel You received without charge: give without chargeA Reading from the Holy Gospel according to St.Matthew 10:7-15

July 13th :  Gospel 

You received without charge: give without charge

A Reading from the Holy Gospel according to St.Matthew 10:7-15 
Jesus instructed the Twelve as follows: ‘As you go, proclaim that the kingdom of heaven is close at hand. Cure the sick, raise the dead, cleanse the lepers, cast out devils. You received without charge, give without charge. Provide yourselves with no gold or silver, not even with a few coppers for your purses, with no haversack for the journey or spare tunic or footwear or a staff, for the workman deserves his keep.
  ‘Whatever town or village you go into, ask for someone trustworthy and stay with him until you leave. As you enter his house, salute it, and if the house deserves it, let your peace descend upon it; if it does not, let your peace come back to you. And if anyone does not welcome you or listen to what you have to say, as you walk out of the house or town shake the dust from your feet. I tell you solemnly, on the day of Judgement it will not go as hard with the land of Sodom and Gomorrah as with that town.’

The Word of the Lord.

July 13th : Responsorial PsalmPsalm 104(105):16-21 Remember the wonders the Lord has done.orAlleluia!

July 13th :  Responsorial Psalm

Psalm 104(105):16-21 

Remember the wonders the Lord has done.
or
Alleluia!
The Lord called down a famine on the land;
  he broke the staff that supported them.
He had sent a man before them,
  Joseph, sold as a slave.

Remember the wonders the Lord has done.
or
Alleluia!

His feet were put in chains,
  his neck was bound with iron,
until what he said came to pass
  and the word of the Lord proved him true.

Remember the wonders the Lord has done.
or
Alleluia!

Then the king sent and released him
  the ruler of the people set him free,
making him master of his house
  and ruler of all he possessed.

Remember the wonders the Lord has done.
or
Alleluia!

Gospel Acclamation Ps94:8

Alleluia, alleluia!

Harden not your hearts today,
but listen to the voice of the Lord.
Alleluia!

July 13th : First readingJoseph reveals himself to his brothersA Reading from the book of Genesis 44:18-21,23-29,45:1-5

July 13th :  First reading

Joseph reveals himself to his brothers

A Reading from the book of Genesis 44:18-21,23-29,45:1-5 
Judah went up to Joseph and said, ‘May it please my lord, let your servant have a word privately with my lord. Do not be angry with your servant, for you are like Pharaoh himself. My lord questioned his servants, “Have you father or brother?” And we said to my lord, “We have an old father, and a younger brother born of his old age. His brother is dead, so he is the only one left of his mother, and his father loves him.” Then you said to your servants, “Bring him down to me that my eyes may look on him.” But you said to your servants, “If your youngest brother does not come down with you, you will not be admitted to my presence again.” When we went back to your servant my father, we repeated to him what my lord had said. So when our father said, “Go back and buy us a little food,” we said, “We cannot go down. If our youngest brother is with us, we will go down, for we cannot be admitted to the man’s presence unless our youngest brother is with us.” So your servant our father said to us, “You know that my wife bore me two children. When one left me, I said that he must have been torn to pieces. And I have not seen him to this day. If you take this one from me too and any harm comes to him, you will send me down to Sheol with my white head bowed in misery.” If I go to your servant my father now, and we have not the boy with us, he will die as soon as he sees the boy is not with us, for his heart is bound up with him. Then your servants will have sent your servant our father down to Sheol with his white head bowed in grief.’
  Then Joseph could not control his feelings in front of all his retainers, and he exclaimed, ‘Let everyone leave me.’ No one therefore was present with him while Joseph made himself known to his brothers, but he wept so loudly that all the Egyptians heard, and the news reached Pharaoh’s palace.
  Joseph said to his brothers, ‘I am Joseph. Is my father really still alive?’ His brothers could not answer him, they were so dismayed at the sight of him. Then Joseph said to his brothers, ‘Come closer to me.’ When they had come closer to him he said, ‘I am your brother Joseph whom you sold into Egypt. But now, do not grieve, do not reproach yourselves for having sold me here, since God sent me before you to preserve your lives.’

The Word of the Lord.