Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Wednesday, October 27, 2021

அக்டோபர் 28 : நற்செய்தி வாசகம்பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 12-19

அக்டோபர் 28 :  நற்செய்தி வாசகம்

பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 12-19
அக்காலத்தில்

இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்.

விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார். அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே.

இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள். அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு
.

அக்டோபர் 28 : பதிலுரைப் பாடல்திபா 19: 1-2. 3-4 (பல்லவி: 4a)பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.

அக்டோபர் 28 : பதிலுரைப் பாடல்

திபா 19: 1-2. 3-4 (பல்லவி: 4a)

பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
1
வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
2
ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. - பல்லவி

3
அவற்றிற்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
4
ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம். திருத்தூதர்களின் அருளணியும் ஆண்டவரே, உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.

அக்டோபர் 28 : முதல் வாசகம்திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்.திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-22

அக்டோபர் 28 : முதல் வாசகம்

திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-22
சகோதரர் சகோதரிகளே,

இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி, ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெறுகிறது. நீங்களும் அவரோடு இணைந்து தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

October 28th : Gospel Jesus chooses his twelve apostles.A Reading from the Holy Gospel according to St. Luke 6: 12-16

October 28th : Gospel 

Jesus chooses his twelve apostles.

A Reading from the Holy Gospel according to St. Luke 6: 12-16 
Jesus went out into the hills to pray; and he spent the whole night in prayer to God. When day came he summoned his disciples and picked out twelve of them; he called them ‘apostles’: Simon whom he called Peter, and his brother Andrew; James, John, Philip, Bartholomew, Matthew, Thomas, James son of Alphaeus, Simon called the Zealot, Judas son of James, and Judas Iscariot who became a traitor.

The Word of the Lord.

October 28th : Responsorial PsalmPsalm 18(19):2-5 Their word goes forth through all the earth.

October 28th : Responsorial Psalm

Psalm 18(19):2-5 

Their word goes forth through all the earth.
The heavens proclaim the glory of God,
  and the firmament shows forth the work of his hands.
Day unto day takes up the story
  and night unto night makes known the message.

Their word goes forth through all the earth.

No speech, no word, no voice is heard
  yet their span extends through all the earth,
  their words to the utmost bounds of the world.

Their word goes forth through all the earth.

Gospel Acclamation cf.Te Deum

Alleluia, alleluia!
We praise you, O God,
we acknowledge you to be the Lord.
The glorious company of the apostles praise you, O Lord.
Alleluia!

October 28th : First ReadingIn Christ you are no longer aliens, but citizens like us.

October 28th : First Reading

In Christ you are no longer aliens, but citizens like us.
Ephesians 2: 19-22 

You are no longer aliens or foreign visitors: you are citizens like all the saints, and part of God’s household. You are part of a building that has the apostles and prophets for its foundations, and Christ Jesus himself for its main cornerstone. As every structure is aligned on him, all grow into one holy temple in the Lord; and you too, in him, are being built into a house where God lives, in the Spirit.

The Word of the Lord.