Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Thursday, December 9, 2021

டிசம்பர் 10 : நற்செய்தி வாசகம்மக்கள் திருமுழுக்கு யோவானுக்கும் செவிசாய்க்கவில்லை, மானிடமகனுக்கும் செவிசாய்க்கவில்லை.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 16-19.

டிசம்பர் 10 :  நற்செய்தி வாசகம்

மக்கள் திருமுழுக்கு யோவானுக்கும் செவிசாய்க்கவில்லை, மானிடமகனுக்கும் செவிசாய்க்கவில்லை.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 16-19.
அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: “இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, ‘நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை’ என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ ‘அவன் பேய்பிடித்தவன்’ என்கிறார்கள். மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ‘இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
------------------------------------------------
பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவர் நானே!

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை

I எசாயா 48: 17-19
II மத்தேயு 48: 17-19

பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவர் நானே!

ஆசிரியரால் கொலைகாரனான மாணவன்:

இங்கிலாந்தில் பெரிய கொலைகாரனாகவும் கொள்ளைக்காரனாகவும் இருந்தவன் ஸ்டார் டெய்லி. இவன் ஏன் இப்படிக் கொலைகாரனாகவும் கொள்ளைக்காரனாகவும் ஆனான் என்பதற்குச் சொல்லப்படுகின்ற நிகழ்வு இது.

ஸ்டார் டெய்லி இயல்பிலேயே கூசச் சுபாவம் உடையவன், தவிர, எதையும் சரியாக வாசிக்கத் தெரியாது; திக்கித் திக்கித்தான் வாசிப்பான். ஒருநாள் அவனுடைய வகுப்பாசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, அவனை எழுந்து வாசிக்கச் சொன்னார். அவன் சரியாக வாசிக்காமல் திக்கித் திக்கி வாசித்தான். இதனால் அவனுடைய வகுப்பறையில் இருந்த எல்லா மாணவர்களும், அவன் உடன் பிறந்த தங்கை உட்பட அவனைப் பார்த்துச் சிரித்தார்கள்.

இதையெல்லாம் வகுப்பாசிரியர் பார்த்தார். அவர் நினைத்திருந்தால், ஸ்டார் டெய்லியைப் தொடர்ந்து வாசிக்கவிடாமல் நிறுத்தி இருக்கலாம். ஆனால், அவர் மாணவர்கள் இன்னும் நன்றாகச் சிரிக்கட்டும் என்று, ஸ்டார் டெய்லியை மேலும் வாசிக்கச் சொன்னார். அவனும் அவ்வாறு செய்ய, மாணவர்களின் சிரிப்புச் சத்தத்தால் வகுப்பறையே அதிர்ந்தது. இதனால் அவமானத்திற்கு உள்ளான ஸ்டார் டெய்லி தன் வகுப்பாசிரியரிடம், “இதுதான் நீங்கள் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கும் கடைசிச் சிரிப்பு. ஒருநாள் வரும். அப்பொழுது நீங்கள் என்னைப் பார்த்து அஞ்சுவீர்கள்” என்று சொல்லிவிட்டு வகுப்பறையை விட்டு வெளியேறினான். இதன்பிறகு அவன் எல்லாரும் அஞ்சி நடுங்கக்கூடிய அளவில் பெரிய கொலைகாரனாகவும் கொள்ளைக்காரனாகவும் ஆனான்.

ஸ்டார் டெய்லியின் வகுப்பாசிரியர் அவனிடம் இருந்த குறைபாட்டை அறிந்த பிறகு, அவனுக்கு முறையான பயிற்சி கொடுத்து, நல்லவற்றைக் கற்றுக்கொண்டு, அவனை நல்ல மாணவனாய் உருவாக்கி இருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு நடந்துகொள்ளாதது மிகக் கொடிய விளைவுகளை ஏற்படுத்தியது. இதற்கு முற்றிலும் மாறாக, இன்றைய முதல் வாசகத்தில், “பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்ல வேண்டிய வழியில் உன்னை வழிநடத்துபவரும் நானே! என்கிறார் ஆண்டவர். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தளவில் ஆண்டவராகிய கடவுள் அவர்களுக்கு ஓர் ஆயராக இருந்தது மட்டுமல்லாமல், ஓர் ஆசிரியராகவும் இருந்தார். அதனால்தான் “அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்” (எசா 54:13) என்ற நம்பிக்கை அவர்கள் நடுவில் இருந்தது. ஆண்டவர் கற்றுத்தருவார் எனில், மனிதரைப் போன்று தீயனவற்றைக் கற்றுத்தருபவர் அல்லர்; பயனுள்ளவற்றையே கற்றுத்தருபவர். ஆகையால், அப்படிப்பட்டவருடைய போதனைக்கு ஒருவர் செவிமடுக்கின்றார் எனில், அவர் நிறைவாழ்வு அடைவார். ஆனால், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் கற்றுத் தந்ததற்குச் செவி மடுக்கவில்லை. அதனால் அவர்கள் அழிவிற்கு மேல் அழிவினைச் சந்தித்தார்கள்.

நற்செய்தியில் திருமுழுக்கு யோவானுடைய போதனைக்கும், இயேசுவின் போதனைக்கும் செவிமடுக்காமல், யூதர்கள் அவர்களைப் பேய்பிடித்தவன் என்றும், பெருந்தீனிக்காரன் என்றும் விமர்சிக்கின்றார்கள். இவ்வாறு அவர்கள் யாருக்கும் செவிமடுக்காமல், கடவுள்மீது நம்பிக்கை இல்லாமலேயே வாழ்ந்து வந்தார்கள். அறிவிக்கப்பட்டதைக் கேட்டால்தானே நம்பிக்கை ஏற்படும் (உரோ 10:17). யூதர்கள் கடவுள் கற்றுக்கொடுத்ததற்கும் செவி மடுக்கவில்லை; அவருடைய திருமகன் இயேசு கற்றுக் கொடுத்தற்கும் செவி மடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் தங்கள் முடிவினைத் தாங்களே தேடிக்கொண்டார்கள்.

நாம், கடவுள் நமக்குப் பயனுள்ளவற்றைக் கற்பிக்கின்றபோது, அதற்குச் செவிமடுக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனைக்கு:

 நல்லார் சொல் கேட்பது நன்றே; நல்லார் வழி நடப்பதும் நன்றே

 ஆண்டவர் நல்ல ஆயர் மட்டுமல்ல; நல்ல ஆசிரியரும் கூட.

 ஒருவருடைய உயர்வும் தாழ்வும், அவர் ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்பதைப் பொறுத்து உள்ளது.

இறைவாக்கு:

‘நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின் படி ஒழுகுங்கள்’ (இச 4:1) என்பார் ஆண்டவர். எனவே, நாம் ஆண்டவர் கற்றுத் தரும் முறைமைகளின்படி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

டிசம்பர் 10 : பதிலுரைப் பாடல்திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி: யோவா 8: 12)பல்லவி: ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.

டிசம்பர் 10 :  பதிலுரைப் பாடல்

திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி: யோவா 8: 12)

பல்லவி: ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.
1
நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
2
ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். - பல்லவி

3
அவர் நீரோடை ஓரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். - பல்லவி

4
பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர்.
6
நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவர் வரவிருக்கிறார். அவரை எதிர்கொள்ளுங்கள்; ஏனெனில், அமைதியின் அரசர் அவரே. அல்லேலூயா.

டிசம்பர் 10 : முதல் வாசகம்என் கட்டளைகளுக்குச் செவிசாய்த்திரு.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 48: 17-19

டிசம்பர் 10 :  முதல் வாசகம்

என் கட்டளைகளுக்குச் செவிசாய்த்திரு.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 48: 17-19
இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே! என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப் போலும், உன் வெற்றி கடல் அலை போலும், பாய்ந்து வந்திருக்கும். உன் வழிமரபினர் மணல் அளவாயும், உன் வழித்தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்; அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்; அவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப்பட்டிராது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 10th : GospelThey heed neither John nor the Son of Man.A Reading from the Holy Gospel according to St.Matthew 11: 16-19

December 10th : Gospel

They heed neither John nor the Son of Man.

A Reading from the Holy Gospel according to St.Matthew 11: 16-19. 
Jesus spoke to the crowds: ‘What description can I find for this generation? It is like children shouting to each other as they sit in the market place:
“We played the pipes for you,
and you wouldn’t dance;
we sang dirges,
and you wouldn’t be mourners.”
‘For John came, neither eating nor drinking, and they say, “He is possessed.” The Son of Man came, eating and drinking, and they say, “Look, a glutton and a drunkard, a friend of tax collectors and sinners.” Yet wisdom has been proved right by her actions.’

The Word of the Lord.

December 10th : Responsorial Psalm Psalm 1:1-4,6 Anyone who follows you, O Lord, will have the light of life.

December 10th :  Responsorial Psalm 

Psalm 1:1-4,6 

Anyone who follows you, O Lord, will have the light of life.
Happy indeed is the man
  who follows not the counsel of the wicked;
nor lingers in the way of sinners
  nor sits in the company of scorners,
but whose delight is the law of the Lord
  and who ponders his law day and night.

Anyone who follows you, O Lord, will have the light of life.

He is like a tree that is planted
  beside the flowing waters,
that yields its fruit in due season
  and whose leaves shall never fade;
  and all that he does shall prosper.

Anyone who follows you, O Lord, will have the light of life.

Not so are the wicked, not so!
For they like winnowed chaff
  shall be driven away by the wind:
for the Lord guards the way of the just
  but the way of the wicked leads to doom.

Anyone who follows you, O Lord, will have the light of life.

Gospel Acclamation 
Alleluia, alleluia!
See, the king, the Lord of the world, will come.
He will free us from the yoke of our bondage.
Alleluia!

டிசம்பர் 9 : நற்செய்தி வாசகம்திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 11-15

டிசம்பர் 9  : நற்செய்தி வாசகம்

திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 11-15
அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: “மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன. உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 9 : பதிலுரைப் பாடல்திபா 145: 1,9. 10-11. 12-13a (பல்லவி: 8)பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.

டிசம்பர் 9  :  பதிலுரைப் பாடல்

திபா 145: 1,9. 10-11. 12-13a (பல்லவி: 8)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.
1
என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.
9
ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். - பல்லவி

10
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11
அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். - பல்லவி

12
மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
13a
உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எசா 45: 8

அல்லேலூயா, அல்லேலூயா! 

வானங்கள் பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும். மண்ணுலகம் வாய் திறந்து விடுதலைக் கனி வழங்கட்டும். அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும். அல்லேலூயா.

December 10th : First Reading If you had been alert to my commandments, your happiness would have been like a river.A Reading from the Book of Isaiah 48: 17-19

December 10th :  First Reading 

If you had been alert to my commandments, your happiness would have been like a river.

A Reading from the Book of Isaiah 48: 17-19

Thus says the Lord, your redeemer, the Holy One of Israel:
I, the Lord, your God, teach you what is good for you,
I lead you in the way that you must go.
If only you had been alert to my commandments,
your happiness would have been like a river,
your integrity like the waves of the sea.
Your children would have been numbered like the sand,
your descendants as many as its grains.
Never would your name have been cut off or blotted out before me.

The Word of the Lord.