Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Wednesday, January 13, 2021

GOSPEL When the leprosy left him, he was healed. A Reading from the Holy Gospel according to Mark 1:40-45

Daily Reading for Thursday January 14, 2021 

📖GOSPEL 

When the leprosy left him, he was healed. 

A Reading from the Holy Gospel according to Mark 1:40-45 
A man suffering from a virulent skin-disease came to him and pleaded on his knees saying, 'If you are willing, you can cleanse me.'
Feeling sorry for him, Jesus stretched out his hand, touched him and said to him, 'I am willing. Be cleansed.'
And at once the skin-disease left him and he was cleansed.
And at once Jesus sternly sent him away and said to him,
'Mind you tell no one anything, but go and show yourself to the priest, and make the offering for your cleansing prescribed by Moses as evidence to them.'
The man went away, but then started freely proclaiming and telling the story everywhere, so that Jesus could no longer go openly into any town, but stayed outside in deserted places. Even so, people from all around kept coming to him. 

The Gospel of the Lord 

I believe in God, /....

RESPONSORIAL Respons : Do not harden your heart; Hear the voice of the Lord. Psalms 95:6-7, 8-9, 10-11

Daily Reading for Thursday January 14, 2021 

🍁RESPONSORIAL 

Respons : Do not harden your heart; Hear the voice of the Lord. 

Psalms 95:6-7, 8-9, 10-11 
Come, let us bow low and do reverence; kneel before Yahweh who made us!
For he is our God, and we the people of his sheepfold, the flock of his hand. If only you would listen to him today! (Respons) 

Do not harden your hearts as at Meribah, as at the time of Massah in the desert,
when your ancestors challenged me, put me to the test, and saw what I could do! (Respons) 

For forty years that generation sickened me, and I said, 'Always fickle hearts; they cannot grasp my ways.'
Then in my anger I swore they would never enter my place of rest. (Respons) 

__ 

🌿Gospel Acclamation 

```Alleluia, alleluia! Jesus preached the gospel of the kingdom of heaven; He healed all the sick seconds that were among the people. Alleluia!``` 

__

FIRST READING Encourage each other every day. A Reading from the Book of Hebrews 3:7-14

14/01/2021 Daily Reading for Thursday January 

FIRST READING 

Encourage each other every day. 

A Reading from the Book of Hebrews 3:7-14 
That is why, as the Holy Spirit says: If only you would listen to him today!
Do not harden your hearts, as at the rebellion, as at the time of testing in the desert,
when your ancestors challenged me, and put me to the test, and saw what I could do
for forty years. That was why that generation sickened me and I said, 'Always fickle hearts, that cannot grasp my ways!'
And then in my anger I swore that they would never enter my place of rest.
Take care, brothers, that none of you ever has a wicked heart, so unbelieving as to turn away from the living God.
Every day, as long as this today lasts, keep encouraging one another so that none of you is hardened by the lure of sin,
because we have been granted a share with Christ only if we keep the grasp of our first confidence firm to the end. 

The Word of the Lord

நற்செய்தி வாசகம் தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார். மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45

14 சனவரி 2021, பொதுக்காலம் முதல் வாரம் வியாழன் 

நற்செய்தி வாசகம் 

தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார். 

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45 
ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, ``நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்'' என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், ``நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!'' என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். பிறகு அவரிடம், ``இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்'' என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பிவிட்டார். ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கி வந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்துகொண்டிருந்தார்கள். 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பதிலுரைப் பாடல் பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாயுங்கள். திபா 95: 6-7. 7-9. 10-11

14 சனவரி 2021, பொதுக்காலம் முதல் வாரம் வியாழன் 

பதிலுரைப் பாடல் 

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாயுங்கள். 

திபா 95: 6-7. 7-9. 10-11 
6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்;
நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.
7ய அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;
நாம் அவர் பேணிக் காக்கும் ஆடுகள். பல்லவி 

7b இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!
8 அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல்,
உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்;
என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். பல்லவி 

10 நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை எனக்கு வெறுப்பூட்டியதால்,
நான் உரைத்தது: `அவர்கள் உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்;
என் வழிகளை அறியாதவர்கள்'.
11 எனவே, நான் சினமுற்று, `நான் அளிக்கும் இளைப்பாற்றியின்
நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்' என்று ஆணையிட்டுக் கூறினேன். பல்லவி 

___ 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

முதல் வாசகம் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-14

14 சனவரி 2021, பொதுக்காலம் முதல் வாரம் வியாழன் 

முதல் வாசகம் 

ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள். 

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-14 
சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியார் கூறுவது: ``இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களென்றால், பாலை நிலத்தில் சோதனை நாளன்று கிளர்ச்சியின் போது இருந்ததுபோல, உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் நாற்பது ஆண்டுகள் என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். எனவே, அத்தலைமுறையினர் மீது வெறுப்புக்கொண்டு, `எப்போதும் இவர்களது உள்ளம் தவறுகிறது; என் வழிகளை இவர்கள் அறியாதவர்கள்; எனவே நான் சினமுற்று, ``நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்'' என்று ஆணையிட்டுக் கூறினேன்' என்றார் கடவுள். '' அன்பர்களே, நம்பிக்கை கொள்ளாத தீய உள்ளம், வாழும் கடவுளை விட்டு விலகும். இத்தகைய தீய உள்ளம் உங்களுள் எவருக்கும் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு, கடின உள்ளத்தினர் ஆகாதவாறு, ஒவ்வொரு நாளும் ``இன்றே'' என எண்ணி, நாள்தோறும்k ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள். தொடக்கத்தில் நாம் கொண்டிருந்த திட நம்பிக்கையை இறுதிவரை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் நாமும் கிறிஸ்துவின் பங்காளிகளாவோம். 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்தி வாசகங்கள் (1)📖மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால்ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது. † லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 15-21

14/01/2021
பொங்கல் விழா வாசகங்கள் 🎈

நற்செய்தி வாசகங்கள் 

(1)📖

மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால்
ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது. 

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 15-21 

அக்காலத்தில் 
இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றார். 

அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: “செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!’ என்று எண்ணினான். ‘ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன். பின்பு, “என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு” எனச் சொல்வேன்’ என்று தனக்குள் கூறிக் கொண்டான். 

ஆனால் கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவை ஆகும்?’ என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.” 

ஆண்டவரின் அருள்வாக்கு. 

  

(2)📖

காலில் முகங்குப்புற விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினார். 

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19 

அக்காலத்தில் 

இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்த போது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்த பொழுது, பத்துத் தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய் நீங்கிற்று. 

அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார். 

பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார். 

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்கள் (1)📖திபா 67: 1-2. 4. 6-7 (பல்லவி: 6) பல்லவி: நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.

14/01/2021
பொங்கல் விழா வாசகங்கள் 🎈

பதிலுரைப் பாடல்கள் 

(1)📖

திபா 67: 1-2. 4. 6-7 (பல்லவி: 6) 

பல்லவி: நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள் நமக்கு ஆசி வழங்கினார். 
அல்லது: (3a): கடவுளே! மக்களினத்தார் அனைவரும் உம்மைப் போற்றுவர். 

1 கடவுளே! எம் மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
உம் திருமுக ஒளியை எம் மீது வீசுவீராக!
2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்;
பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். -பல்லவி 

4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக!
ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்;
உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். -பல்லவி 

6 நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள்,
நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.
7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக!
உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! -பல்லவி 

(2)📖

திபா 126: 2b-3. 4-5. 6 (பல்லவி: 3a) 

பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார். 

2b "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்”
என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்;
அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். -பல்லவி 

4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவது போல,
எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.
} 5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். -பல்லவி 

6 விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்;
அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். -பல்லவி 

🌿நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

திபா 126: 5 

அல்லேலூயா, அல்லேலூயா! கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். அல்லேலூயா.

14/01/2021பொங்கல் விழா வாசகங்கள் 🎈முதல் வாசகம் பழைய ஏற்பாட்டிலிருந்து (1)📖ஆற்றலை உங்களுக்கு அளித்த,உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 8: 7-18

14/01/2021
பொங்கல் விழா வாசகங்கள் 🎈

முதல் வாசகம் 

பழைய ஏற்பாட்டிலிருந்து 

(1)📖

ஆற்றலை உங்களுக்கு அளித்த,
உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள். 

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 8: 7-18 
அந்நாள்களில் 

மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வளமிகு நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த நாடு பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்கின்ற ஆறுகளையும் ஊற்றுகளையும் ஏரிகளையும் கொண்டது. கோதுமை, திராட்சை, அத்தி, மாதுளை, பார்லி ஆகியவை நிறைந்த நாடு. அது ஒலிவ எண்ணெயும் தேனும் நிறைந்த நாடு. அந்த நாட்டில் பஞ்சமின்றி நீங்கள் அப்பங்களை உண்பீர்கள். அங்கு உங்களுக்கு எந்தக் குறையும் இராது. அந்த நாட்டின் பாறைகள் அனைத்தும் இரும்பு. அதன் மலைகளிலிருந்து செம்பு வெட்டி எடுக்கலாம். நீங்கள் உண்டு நிறைவு கொள்வீர்கள். அப்போது, வளமிகு நாட்டை உங்களுக்குக் கொடுத்ததற்காக உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவீர்கள். 

இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்ற கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றினின்று வழுவியதன் மூலம் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து போகாதபடி கவனமாய் இருங்கள். 

நீங்கள் உண்டு நிறைவுகொள்ளும்போதும், அழகிய வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருக்கும்போதும், உங்கள் ஆடுமாடுகள் பலுகும்போதும், வெள்ளியும் பொன்னும் உங்களுக்கு மிகுதியாகும் போதும், உங்களுக்கு உள்ளதெல்லாம் பெருகும்போதும், நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம். அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலை நிலத்தில் உங்களை வழிநடத்தியவர்; இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலை நிலத்தில் உங்களை உண்பித்தவர்; இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக உங்களை எளியவராக்கிச் சிறுமைப்படுத்திச் சோதித்தவரும் அவரே. 

எனவே, எங்கள் ஆற்றலும் எங்கள் கைகளின் வலிமையுமே இந்தச் செல்வங்களை எங்களுக்கு ஈட்டித் தந்தன என்று உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி கவனமாய் இருங்கள். உங்கள் மூதாதையருடன் ஆணையிட்டுச் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துமாறு, இந்நாளில் இருப்பது போன்ற செல்வங்களை ஈட்ட வல்ல ஆற்றலை உங்களுக்கு அளித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள். 

ஆண்டவரின் அருள்வாக்கு. 

  
_____

(2)📖

போரடிக்கும் களங்களில் கோதுமை நிறைந்திருக்கும். 

இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 21-24, 26-27 

நிலமே நீ அஞ்சாதே; மகிழ்ந்து களிகூரு; ஏனெனில், ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்தார். காட்டு விலங்குகளே, அஞ்சாதிருங்கள்; ஏனெனில் பாலை நிலப் புல்வெளிகள் பசுமையாய் இருக்கின்றன; மரங்கள் கனி தருகின்றன; அத்தி மரமும் திராட்சைக் கொடியும் மிகுந்த கனி கொடுக்கின்றன. 

சீயோனின் பிள்ளைகளே, அகமகிழுங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவரை முன்னிட்டுக் களிப்படையுங்கள்; ஏனெனில், அவர் தமது நீதியை நிலைநாட்ட உங்களுக்கு முன்மாரியைத் தந்தார்; முன் போலவே உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் நிறைவாகத் தந்தருளினார். 

போரடிக்கும் களங்களில் கோதுமை நிறைந்திருக்கும்; ஆலைகளில் திராட்சை இரசமும் எண்ணெயும் வழிந்தோடும். நீங்கள் வேண்டியமட்டும் உண்டு நிறைவடைவீர்கள்; உங்களை வியத்தகு முறையில் நடத்தி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைப் போற்றுவீர்கள்; இனி மேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள். 

இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கிறேன் என்றும், ஆண்டவராகிய நானே உங்கள் கடவுள் என்றும் என்னையன்றி வேறு எவரும் இல்லை என்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; இனி மேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள். 

ஆண்டவரின் அருள்வாக்கு. 

  _______

புதிய ஏற்பாட்டிலிருந்து வாசகங்கள் 📖

(3)📖

கடவுளே விளையச் செய்தார். 

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 6-10 

சகோதரர் சகோதரிகளே, 

நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை. நடுகிறவரானாலும் நீர் பாய்ச்சுகிறவரானாலும் ஒன்றுதான். தாம் செய்த வேலைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தம் கூலியைப் பெறுவர். நாங்கள் கடவுளின் உடன் உழைப்பாளர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம். 

கடவுள் எனக்கு அளித்த அருளின்படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன் மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். 

ஆண்டவரின் அருள்வாக்கு. 

  _______

(4)📖

செல்வர்களாய் இருப்பவர்கள் நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைத்தலாகாது. 

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 6-11, 17-19 

அன்பிற்குரியவரே, 

இறைப்பற்று பெரும் ஆதாயம் தருவதுதான்; ஆனால் மனநிறைவு உள்ளவர்களுக்கே தரும். உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்தது இல்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம். 

செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை. பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள் மேல் வருவித்துக்கொள்கிறார்கள். 

கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு. 

இவ்வுலகில் செல்வர்களாய் இருப்பவர்களுக்கு இவ்வாறு கட்டளையிடு: அவர்கள் மேட்டிமை உணர்வு கொள்ளலாகாது. நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல், நம்முடைய இன்பத்திற்காகவே எல்லாவற்றையும் நிறைவாக அளிக்கும் கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்க வேண்டும். அவர்கள் நல்லதைச் செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தைச் சேர்ப்பார்களாக; தங்களுக்கு உள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்தளிப்பார்களாக. இவ்வாறு அவர்கள் தங்களது வருங்காலத்திற்கு என்று நல்லதோர் அடித்தளமாக இச்செல்வத்தைச் சேமித்து வைப்பதால் உண்மையான வாழ்வை அடைய முடியும். 

ஆண்டவரின் அருள்வாக்கு.