Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Wednesday, January 13, 2021

பதிலுரைப் பாடல்கள் (1)📖திபா 67: 1-2. 4. 6-7 (பல்லவி: 6) பல்லவி: நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.

14/01/2021
பொங்கல் விழா வாசகங்கள் 🎈

பதிலுரைப் பாடல்கள் 

(1)📖

திபா 67: 1-2. 4. 6-7 (பல்லவி: 6) 

பல்லவி: நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள் நமக்கு ஆசி வழங்கினார். 
அல்லது: (3a): கடவுளே! மக்களினத்தார் அனைவரும் உம்மைப் போற்றுவர். 

1 கடவுளே! எம் மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
உம் திருமுக ஒளியை எம் மீது வீசுவீராக!
2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்;
பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். -பல்லவி 

4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக!
ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்;
உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். -பல்லவி 

6 நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள்,
நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.
7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக!
உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! -பல்லவி 

(2)📖

திபா 126: 2b-3. 4-5. 6 (பல்லவி: 3a) 

பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார். 

2b "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்”
என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்;
அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். -பல்லவி 

4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவது போல,
எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.
} 5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். -பல்லவி 

6 விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்;
அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். -பல்லவி 

🌿நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

திபா 126: 5 

அல்லேலூயா, அல்லேலூயா! கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். அல்லேலூயா.

14/01/2021பொங்கல் விழா வாசகங்கள் 🎈முதல் வாசகம் பழைய ஏற்பாட்டிலிருந்து (1)📖ஆற்றலை உங்களுக்கு அளித்த,உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 8: 7-18

14/01/2021
பொங்கல் விழா வாசகங்கள் 🎈

முதல் வாசகம் 

பழைய ஏற்பாட்டிலிருந்து 

(1)📖

ஆற்றலை உங்களுக்கு அளித்த,
உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள். 

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 8: 7-18 
அந்நாள்களில் 

மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வளமிகு நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த நாடு பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்கின்ற ஆறுகளையும் ஊற்றுகளையும் ஏரிகளையும் கொண்டது. கோதுமை, திராட்சை, அத்தி, மாதுளை, பார்லி ஆகியவை நிறைந்த நாடு. அது ஒலிவ எண்ணெயும் தேனும் நிறைந்த நாடு. அந்த நாட்டில் பஞ்சமின்றி நீங்கள் அப்பங்களை உண்பீர்கள். அங்கு உங்களுக்கு எந்தக் குறையும் இராது. அந்த நாட்டின் பாறைகள் அனைத்தும் இரும்பு. அதன் மலைகளிலிருந்து செம்பு வெட்டி எடுக்கலாம். நீங்கள் உண்டு நிறைவு கொள்வீர்கள். அப்போது, வளமிகு நாட்டை உங்களுக்குக் கொடுத்ததற்காக உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவீர்கள். 

இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்ற கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றினின்று வழுவியதன் மூலம் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து போகாதபடி கவனமாய் இருங்கள். 

நீங்கள் உண்டு நிறைவுகொள்ளும்போதும், அழகிய வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருக்கும்போதும், உங்கள் ஆடுமாடுகள் பலுகும்போதும், வெள்ளியும் பொன்னும் உங்களுக்கு மிகுதியாகும் போதும், உங்களுக்கு உள்ளதெல்லாம் பெருகும்போதும், நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம். அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலை நிலத்தில் உங்களை வழிநடத்தியவர்; இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலை நிலத்தில் உங்களை உண்பித்தவர்; இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக உங்களை எளியவராக்கிச் சிறுமைப்படுத்திச் சோதித்தவரும் அவரே. 

எனவே, எங்கள் ஆற்றலும் எங்கள் கைகளின் வலிமையுமே இந்தச் செல்வங்களை எங்களுக்கு ஈட்டித் தந்தன என்று உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி கவனமாய் இருங்கள். உங்கள் மூதாதையருடன் ஆணையிட்டுச் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துமாறு, இந்நாளில் இருப்பது போன்ற செல்வங்களை ஈட்ட வல்ல ஆற்றலை உங்களுக்கு அளித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள். 

ஆண்டவரின் அருள்வாக்கு. 

  
_____

(2)📖

போரடிக்கும் களங்களில் கோதுமை நிறைந்திருக்கும். 

இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 21-24, 26-27 

நிலமே நீ அஞ்சாதே; மகிழ்ந்து களிகூரு; ஏனெனில், ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்தார். காட்டு விலங்குகளே, அஞ்சாதிருங்கள்; ஏனெனில் பாலை நிலப் புல்வெளிகள் பசுமையாய் இருக்கின்றன; மரங்கள் கனி தருகின்றன; அத்தி மரமும் திராட்சைக் கொடியும் மிகுந்த கனி கொடுக்கின்றன. 

சீயோனின் பிள்ளைகளே, அகமகிழுங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவரை முன்னிட்டுக் களிப்படையுங்கள்; ஏனெனில், அவர் தமது நீதியை நிலைநாட்ட உங்களுக்கு முன்மாரியைத் தந்தார்; முன் போலவே உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் நிறைவாகத் தந்தருளினார். 

போரடிக்கும் களங்களில் கோதுமை நிறைந்திருக்கும்; ஆலைகளில் திராட்சை இரசமும் எண்ணெயும் வழிந்தோடும். நீங்கள் வேண்டியமட்டும் உண்டு நிறைவடைவீர்கள்; உங்களை வியத்தகு முறையில் நடத்தி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைப் போற்றுவீர்கள்; இனி மேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள். 

இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கிறேன் என்றும், ஆண்டவராகிய நானே உங்கள் கடவுள் என்றும் என்னையன்றி வேறு எவரும் இல்லை என்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; இனி மேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள். 

ஆண்டவரின் அருள்வாக்கு. 

  _______

புதிய ஏற்பாட்டிலிருந்து வாசகங்கள் 📖

(3)📖

கடவுளே விளையச் செய்தார். 

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 6-10 

சகோதரர் சகோதரிகளே, 

நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை. நடுகிறவரானாலும் நீர் பாய்ச்சுகிறவரானாலும் ஒன்றுதான். தாம் செய்த வேலைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தம் கூலியைப் பெறுவர். நாங்கள் கடவுளின் உடன் உழைப்பாளர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம். 

கடவுள் எனக்கு அளித்த அருளின்படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன் மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். 

ஆண்டவரின் அருள்வாக்கு. 

  _______

(4)📖

செல்வர்களாய் இருப்பவர்கள் நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைத்தலாகாது. 

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 6-11, 17-19 

அன்பிற்குரியவரே, 

இறைப்பற்று பெரும் ஆதாயம் தருவதுதான்; ஆனால் மனநிறைவு உள்ளவர்களுக்கே தரும். உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்தது இல்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம். 

செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை. பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள் மேல் வருவித்துக்கொள்கிறார்கள். 

கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு. 

இவ்வுலகில் செல்வர்களாய் இருப்பவர்களுக்கு இவ்வாறு கட்டளையிடு: அவர்கள் மேட்டிமை உணர்வு கொள்ளலாகாது. நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல், நம்முடைய இன்பத்திற்காகவே எல்லாவற்றையும் நிறைவாக அளிக்கும் கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்க வேண்டும். அவர்கள் நல்லதைச் செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தைச் சேர்ப்பார்களாக; தங்களுக்கு உள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்தளிப்பார்களாக. இவ்வாறு அவர்கள் தங்களது வருங்காலத்திற்கு என்று நல்லதோர் அடித்தளமாக இச்செல்வத்தைச் சேமித்து வைப்பதால் உண்மையான வாழ்வை அடைய முடியும். 

ஆண்டவரின் அருள்வாக்கு.

Tuesday, January 12, 2021

GOSPEL* Jesus healed a man suffering from various ailments. A Reading from the Holy Gospel according to Mark 1:29-39

Daily Reading for Wednesday January 13, 2021 

*📖GOSPEL* 

Jesus healed a man suffering from various ailments. 

A Reading from the Holy Gospel according to Mark 1:29-39 
And at once on leaving the synagogue, he went with James and John straight to the house of Simon and Andrew.
Now Simon's mother-in-law was in bed and feverish, and at once they told him about her.
He went in to her, took her by the hand and helped her up. And the fever left her and she began to serve them.
That evening, after sunset, they brought to him all who were sick and those who were possessed by devils.
The whole town came crowding round the door,
and he cured many who were sick with diseases of one kind or another; he also drove out many devils, but he would not allow them to speak, because they knew who he was.
In the morning, long before dawn, he got up and left the house and went off to a lonely place and prayed there.
Simon and his companions set out in search of him,
and when they found him they said, 'Everybody is looking for you.'
He answered, 'Let us go elsewhere, to the neighbouring country towns, so that I can proclaim the message there too, because that is why I came.'
And he went all through Galilee, preaching in their synagogues and driving out devils. 

*The Gospel of the Lord* 

I believe in God, /...

RESPONSORIALRespons : The Lord always remembers His covenant. Or: Alleluia ! Psalms 105:1-2, 3-4, 6-7, 8-9

Daily Reading for Wednesday January 13, 2021 

*🍁RESPONSORIAL* 
Respons : The Lord always remembers His covenant. 

Or: Alleluia ! 

Psalms 105:1-2, 3-4, 6-7, 8-9 

Alleluia! Give thanks to Yahweh, call on his name, proclaim his deeds to the peoples!
Sing to him, make music for him, recount all his wonders! (Respons) 

Glory in his holy name, let the hearts that seek Yahweh rejoice!
Seek Yahweh and his strength, tirelessly seek his presence! (Respons) 

Stock of Abraham, his servant, children of Jacob whom he chose!
He is Yahweh our God, his judgements touch the whole world. (Respons) 

He remembers his covenant for ever, the promise he laid down for a thousand generations,
which he concluded with Abraham, the oath he swore to Isaac. (Respons) 

__ 

*🌿Gospel Acclamation* 

```Alleluia, alleluia!  "My sheep hear my voice, and I know them, and they follow me," says the Lord. Alleluia!``` 

__

FIRST READING* Jesus had to become like everyone else in everything so that people could be cleansed from their sins A Reading from the Book of Hebrews 2:14-18

Daily Reading for Wednesday January 13, 2021 

*FIRST READING* 

Jesus had to become like everyone else in everything so that people could be cleansed from their sins 

A Reading from the Book of Hebrews 2:14-18 
Since all the children share the same human nature, he too shared equally in it, so that by his death he could set aside him who held the power of death, namely the devil,
and set free all those who had been held in slavery all their lives by the fear of death.
For it was not the angels that he took to himself; he took to himself the line of Abraham.
It was essential that he should in this way be made completely like his brothers so that he could become a compassionate and trustworthy high priest for their relationship to God, able to expiate the sins of the people.
For the suffering he himself passed through while being put to the test enables him to help others when they are being put to the test. 

*The Word of the Lord* 

____

நற்செய்தி வாசகம் இயேசு பல்வேறு பிணிகளால் வருந்தியவரைக் குணப்படுத்தினார். மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39

13 சனவரி 2021, பொதுக்காலம் முதல் வாரம் - புதன் 

நற்செய்தி வாசகம் 

இயேசு பல்வேறு பிணிகளால் வருந்தியவரைக் குணப்படுத்தினார். 

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39 
இயேசுவும் சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார். மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை. இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், ``எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்கள். அதற்கு அவர், ``நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்'' என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடு முழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிப் பேய்களை ஓட்டி வந்தார். 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பதிலுரைப் பாடல் திபா 105: 1-2. 3-4. 6-7. 8-9 பல்லவி: ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றும்

13 சனவரி 2021, பொதுக்காலம் முதல் வாரம் - புதன் 

பதிலுரைப் பாடல் 

திபா 105: 1-2. 3-4. 6-7. 8-9 

பல்லவி: ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார். 

அல்லது: அல்லேலூயா. 
1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்!
அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.
2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்!
அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! பல்லவி 

3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்;
ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!
4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்!
அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! பல்லவி 

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே!
அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!
7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்!
அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி 

8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்;
ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.
9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும்
ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். பல்லவி 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! ``என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன,'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.