Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, May 14, 2023

மே 14 : நற்செய்தி வாசகம்மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 15-21

மே 14 :  நற்செய்தி வாசகம்

மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 15-21
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்.

நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன். இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள். நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர்மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 14 : இரண்டாம் வாசகம்மனித இயல்போடு இருந்த கிறிஸ்து இறந்தார் எனினும் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 15-18

மே 14 :  இரண்டாம் வாசகம்

மனித இயல்போடு இருந்த கிறிஸ்து இறந்தார் எனினும் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 15-18
அன்பிற்குரியவர்களே,

உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள். ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடை அளியுங்கள். உங்கள் மனச்சான்றும் குற்றமற்றதாய் இருக்கட்டும். அப்பொழுது உங்கள் கிறிஸ்தவ நன்னடத்தையைப் பழிக்கிறவர்கள் உங்களை இழிவாகப் பேசியதைக் குறித்து வெட்கப்படுவார்கள். ஏனெனில், தீமை செய்து துன்புறுவதைவிட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல்.

கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடு இருந்த அவர் இறந்தார் எனினும் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 23
அல்லேலூயா, அல்லேலூயா! 

என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

மே 14 : பதிலுரைப் பாடல்திபா 66: 1-3a. 4-5. 6-7a. 16,20 (பல்லவி: 1)பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!அல்லது: அல்லேலூயா.

மே 14 :  பதிலுரைப் பாடல்

திபா 66: 1-3a. 4-5. 6-7a. 16,20 (பல்லவி: 1)

பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!

அல்லது: அல்லேலூயா.
1
அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்;
2
அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.
3a
கடவுளை நோக்கி, ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை’ என்று சொல்லுங்கள். - பல்லவி

4
‘அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள்.
5
வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. - பல்லவி

6
கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.
7a
அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! - பல்லவி

16
கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்.
20
என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! - பல்லவி

மே 14 : முதல் வாசகம்சமாரியர் மீது கைகளை வைக்கவே, அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8: 5-8, 14-17

மே 14 : முதல் வாசகம்

சமாரியர் மீது கைகளை வைக்கவே, அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8: 5-8, 14-17
அந்நாள்களில்

பிலிப்பு, சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார். பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒருமனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர். ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்த குரலுடன் கூச்சலிட்டுக்கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர். இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று.

சமாரியர் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டனர் என்பதை எருசலேமிலுள்ள திருத்தூதர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்று சமாரியர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள்; ஏனெனில் அதுவரை அவர்களுள் யாருக்கும் தூய ஆவி அருளப்படவில்லை. ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் அவர்கள் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள். பின்பு பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே, அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 14th : Gospel I shall ask the Father and he will give you another AdvocateA Reading from the Holy Gospel according to St.John 14: 15-21

May 14th : Gospel 

I shall ask the Father and he will give you another Advocate

A Reading from the Holy Gospel according to St.John 14: 15-21
Jesus said to his disciples:
‘If you love me you will keep my commandments.
I shall ask the Father,
and he will give you another Advocate
to be with you for ever,
that Spirit of truth
whom the world can never receive
since it neither sees nor knows him;
but you know him,
because he is with you, he is in you.
I will not leave you orphans;
I will come back to you.
In a short time the world will no longer see me;
but you will see me,
because I live and you will live.
On that day you will understand that I am in my Father
and you in me and I in you.
Anybody who receives my commandments and keeps them
will be one who loves me;
and anybody who loves me will be loved by my Father,
and I shall love him and show myself to him.’

The Word of the Lord.

Saturday, May 13, 2023

May 14th : Second Reading In the body he was put to death, in the spirit he was raised to life1 Peter 3:15-18

May 14th :  Second Reading 

In the body he was put to death, in the spirit he was raised to life

1 Peter 3:15-18 
Reverence the Lord Christ in your hearts, and always have your answer ready for people who ask you the reason for the hope that you all have. But give it with courtesy and respect and with a clear conscience, so that those who slander you when you are living a good life in Christ may be proved wrong in the accusations that they bring. And if it is the will of God that you should suffer, it is better to suffer for doing right than for doing wrong.
  Why, Christ himself, innocent though he was, had died once for sins, died for the guilty, to lead us to God. In the body he was put to death, in the spirit he was raised to life.

The Word of the Lord.

Gospel Acclamation Jn14:23

Alleluia, alleluia!

Jesus said: ‘If anyone loves me he will keep my word,
and my Father will love him,
and we shall come to him.’
Alleluia!

May 14th : Responsorial PsalmPsalm 65(66):1-7,16,20 Cry out with joy to God, all the earth.orAlleluia!

May 14th :  Responsorial Psalm

Psalm 65(66):1-7,16,20 

Cry out with joy to God, all the earth.
or
Alleluia!
Cry out with joy to God all the earth,
  O sing to the glory of his name.
O render him glorious praise.
  Say to God: ‘How tremendous your deeds!

Cry out with joy to God, all the earth.
or
Alleluia!

‘Before you all the earth shall bow;
  shall sing to you, sing to your name!’
Come and see the works of God,
  tremendous his deeds among men.

Cry out with joy to God, all the earth.
or
Alleluia!

He turned the sea into dry land,
  they passed through the river dry-shod.
Let our joy then be in him;
  he rules for ever by his might.

Cry out with joy to God, all the earth.
or
Alleluia!

Come and hear, all who fear God.
  I will tell what he did for my soul:
Blessed be God who did not reject my prayer
  nor withhold his love from me.

Cry out with joy to God, all the earth.
or
Alleluia!