Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, May 31, 2024

ஜூன் 1 : முதல் வாசகம்வழுவாதபடி உங்களைக் காக்கவும் மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லவர் கடவுளே.திருத்தூதர் யூதா எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 17, 20-25

ஜூன் 1 :  முதல் வாசகம்

வழுவாதபடி உங்களைக் காக்கவும் மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லவர் கடவுளே.

திருத்தூதர் யூதா எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 17, 20-25
அன்பார்ந்தவர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்கள் முன்னுரைத்த வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்.

தூய்மைமிகு விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புங்கள்; தூய ஆவியின் துணையுடன் வேண்டுதல் செய்யுங்கள்.

கடவுளது அன்பில் நிலைத்திருங்கள். என்றுமுள்ள நிலைவாழ்வைப் பெற நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை எதிர்பார்த்திருங்கள். நம்பத் தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள். வேறு சிலரை அழிவுத் தீயிலிருந்து பிடித்திழுத்துக் காப்பாற்றுங்கள். மற்றும் சிலருக்கு இரக்கம் காட்டும்போது எச்சரிக்கையாய் இருங்கள்; ஊனியல்பால் கறைப்பட்ட அவர்களது ஆடையையும் வெறுத்துத் தள்ளுங்கள்.

வழுவாதபடி உங்களைக் காக்கவும் தமது மாட்சித் திருமுன் மகிழ்ச்சியோடு உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்ல நம் மீட்பராகிய ஒரே கடவுளுக்கு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய், மாட்சியும் மாண்பும் ஆற்றலும் ஆட்சியும் ஊழிக் காலந்தொட்டு இன்றும் என்றென்றும் உரியன. ஆமென்!

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 1st : Gospel I will not tell you my authority for acting like thisA reading from the Holy Gospel according to St.Mark 11:27-33

June 1st :  Gospel 

I will not tell you my authority for acting like this

A reading from the Holy Gospel according to St.Mark 11:27-33 
Jesus and his disciples came to Jerusalem, and as Jesus was walking in the Temple, the chief priests and the scribes and the elders came to him, and they said to him, ‘What authority have you for acting like this? Or who gave you authority to do these things?’ Jesus said to them, ‘I will ask you a question, only one; answer me and I will tell you my authority for acting like this. John’s baptism: did it come from heaven, or from man? Answer me that.’ And they argued it out this way among themselves: ‘If we say from heaven, he will say, “Then why did you refuse to believe him?” But dare we say from man?’ – they had the people to fear, for everyone held that John was a real prophet. So their reply to Jesus was, ‘We do not know.’ And Jesus said to them, ‘Nor will I tell you my authority for acting like this.’

The Word of the Lord.

June 1st : Responsorial PsalmPsalm 62(63):2-6 For you my soul is thirsting, O Lord, my God.

June 1st :  Responsorial Psalm

Psalm 62(63):2-6 

For you my soul is thirsting, O Lord, my God.
O God, you are my God, for you I long;
  for you my soul is thirsting.
My body pines for you
  like a dry, weary land without water.

For you my soul is thirsting, O Lord, my God.

So I gaze on you in the sanctuary
  to see your strength and your glory.
For your love is better than life,
  my lips will speak your praise.

For you my soul is thirsting, O Lord, my God.

So I will bless you all my life,
  in your name I will lift up my hands.
My soul shall be filled as with a banquet,
  my mouth shall praise you with joy.

For you my soul is thirsting, O Lord, my God.

Gospel Acclamation 1P1:25

Alleluia, alleluia!

The word of the Lord remains for ever:
What is this word?
It is the Good News that has been brought to you.
Alleluia!

June 1st : First reading Use your most holy faith as your foundationA reading from the letter of St.Jude 1:17,20-25

June 1st :  First reading 

Use your most holy faith as your foundation

A reading from the letter of St.Jude 1:17,20-25 
Remember, my dear friends, what the apostles of our Lord Jesus Christ told you to expect. You must use your most holy faith as your foundation and build on that, praying in the Holy Spirit; keep yourselves within the love of God and wait for the mercy of our Lord Jesus Christ to give you eternal life. When there are some who have doubts reassure them; when there are some to be saved from the fire, pull them out; but there are others to whom you must be kind with great caution, keeping your distance even from outside clothing which is contaminated by vice.
  Glory be to him who can keep you from falling and bring you safe to his glorious presence, innocent and happy. To God, the only God, who saves us through Jesus Christ our Lord, be the glory, majesty, authority and power, which he had before time began, now and for ever. Amen.

The Word of the Lord.

Thursday, May 30, 2024

மே 31 : நற்செய்தி வாசகம்என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56

மே 31 : நற்செய்தி வாசகம்

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56
அக்காலத்தில்

மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.

மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில்,

“பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.

அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்:

“ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.

அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்."

மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

மே 31 : பதிலுரைப் பாடல்எசா 12: 2-3. 4bcd. 5-6 (பல்லவி: 6b)பல்லவி: இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.

மே 31 :  பதிலுரைப் பாடல்

எசா 12: 2-3. 4bcd. 5-6 (பல்லவி: 6b)

பல்லவி: இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.
2
இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்ச மாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.
3
மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். - பல்லவி

4bcd
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். - பல்லவி

5
ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக.
6
சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 1: 45
அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய மரியே, நீர் பேறுபெற்றவர். அல்லேலூயா.

மே 31 : தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் விழாமுதல் வாசகம்இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்.இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-18

மே 31 :  தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் விழா

முதல் வாசகம்

இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்.

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-18
மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.

அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: “சீயோனே, அஞ்ச வேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார். அது திருவிழாக் காலம் போல் இருக்கும்.

உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்; ஆகவே, இனி நீ இழிவடைய மாட்டாய்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.