Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Thursday, February 6, 2025

பிப்ரவரி 7 : பதிலுரைப் பாடல் திபா 27: 1. 3. 5. 8b-9 (பல்லவி: 1a) பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

 பிப்ரவரி 7 :  பதிலுரைப் பாடல்

திபா 27: 1. 3. 5. 8b-9 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.


1

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? - பல்லவி

3

எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது; எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடு இருப்பேன். - பல்லவி

5

ஏனெனில், கேடுவரும் நாளில் அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்; தம் கூடாரத்தினுள்ளே என்னை ஒளித்து வைப்பார்; குன்றின்மேல் என்னைப் பாதுகாப்பாய் வைப்பார். - பல்லவி

8b

ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன்.

9

உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதிரும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 8: 15

அல்லேலூயா, அல்லேலூயா! 

சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்கள் பேறுபெற்றோர். அல்லேலூயா.

பிப்ரவரி 7 : முதல் வாசகம் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 13: 1-8

 பிப்ரவரி 7 :   முதல் வாசகம்

இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 13: 1-8


சகோதரர் சகோதரிகளே,

சகோதர அன்பில் நிலைத்திருங்கள். அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வானதூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு. சிறைப் பட்டவர்களோடு நீங்களும் சிறைப்பட்டிருப்பதாக எண்ணி அவர்களை நினைத்துக் கொள்ளுங்கள். துன்புறக்கூடிய உடல் உங்களுக்கும் உள்ளதால், துன்புறுத்தப்படுபவர்களை மறவாதீர்கள். திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள். மணவறைப் படுக்கை மாசுறாமல் இருக்கட்டும். காமுகரும் விபசாரத்தில் ஈடுபடுவோரும் கடவுளின் தீர்ப்புக்கு ஆளாவர். பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்று இருங்கள். ஏனெனில், “நான் ஒருபோதும் உன்னைக் கைவிட மாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கடவுளே கூறியிருக்கிறார். இதனால், நாம் துணி வோடு, “ஆண்டவரே எனக்குத் துணை, நான் அஞ்ச மாட்டேன்; மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்?” என்று கூறலாம்.

உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப்போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

Wednesday, February 5, 2025

பிப்ரவரி 6 : நற்செய்தி வாசகம் இயேசு பன்னிருவரையும் அனுப்பினார். மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-13

 பிப்ரவரி 6 : நற்செய்தி வாசகம்

இயேசு பன்னிருவரையும் அனுப்பினார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-13


அக்காலத்தில்

இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார்.

மேலும், “பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக்கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

மேலும் அவர், “நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும்பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்று அவர்களுக்குக் கூறினார்.

அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாறவேண்டும் என்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 6 : பதிலுரைப் பாடல் திபா 48: 1-2a. 2b-3. 8. 9-10 (பல்லவி: 9 காண்க) பல்லவி: உமது கோவிலில் ஆண்டவரே, உம் பேரன்பை நினைந்து உருகினோம்.

 பிப்ரவரி 6 : பதிலுரைப் பாடல்

திபா 48: 1-2a. 2b-3. 8. 9-10 (பல்லவி: 9 காண்க)


பல்லவி: உமது கோவிலில் ஆண்டவரே, உம் பேரன்பை நினைந்து உருகினோம்.

1

ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர்.

2a

தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியாய் இலங்குகின்றது. - பல்லவி

2b

மாவேந்தரின் நகரும் அதுவே.

3

அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார். - பல்லவி

8

கேள்விப்பட்டவாறே நேரில் யாம் கண்டோம்; படைகளின் ஆண்டவரது நகரில், ஆம், கடவுளின் நகரினில் கண்டோம்; கடவுள் அந்நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார். - பல்லவி

9

கடவுளே! உமது கோவிலின் நடுவில் உம் பேரன்பை நினைந்து உருகினோம்.

10

கடவுளே! உமது பெயரைப்போலவே, உமது புகழும் பூவுலகின் கடை எல்லை வரை எட்டுகின்றது; உமது வலக்கை நீதியை நிலை நாட்டுகின்றது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 1: 15

அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

பிப்ரவரி 6 : முதல் வாசகம் நீங்கள் வந்திருப்பதோ சீயோன் மலை, வாழும் கடவுளின் நகர். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 18-19, 21-24

 பிப்ரவரி 6 :  முதல் வாசகம்

நீங்கள் வந்திருப்பதோ சீயோன் மலை, வாழும் கடவுளின் நகர்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 18-19, 21-24


சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் வந்து சேர்ந்திருப்பது தொட்டு உணரக்கூடிய, தீப்பற்றி எரிகின்ற, இருள் சூழ்ந்த, மந்தாரமான, சுழல் காற்று வீசுகின்ற சீனாய் மலை அல்ல. அங்கு எக்காளம் முழங்கிற்று; பேசும் குரலொன்று கேட்டது. அக்குரலைக் கேட்டவர்கள் அதற்குமேல் தங்களோடு அது ஒரு வார்த்தை கூடப் பேசவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். “நான் அஞ்சி நடுங்குகிறேன்” என்று மோசேயே சொல்லும் அளவுக்கு அக்காட்சி அச்சம் விளைவித்தது.

ஆனால் நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை, வாழும் கடவுளின் நகர்; விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக்கணக்கான வானதூதர் சூழ்ந்துள்ளனர். விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப் பேறானவர்களின் திருச்சபை விழாக் கூட்டமென அங்கே கூடியுள்ளது. நிறைவு பெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து, அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும், புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள். ஆபேலின் இரத்தத்தைப் போலன்றிச் சிறந்த முறையில் குரலெழுப்பும் இயேசுவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டிருக்கிறீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 6th : Gospel 'Take nothing with you' A Reading from the Holy Gospel accrding to St.Mark 6:7-13

 February 6th :   Gospel 

'Take nothing with you'

A Reading from the Holy Gospel accrding to St.Mark 6:7-13 


Jesus made a tour round the villages, teaching. Then he summoned the Twelve and began to send them out in pairs giving them authority over the unclean spirits. And he instructed them to take nothing for the journey except a staff – no bread, no haversack, no coppers for their purses. They were to wear sandals but, he added, ‘Do not take a spare tunic.’ And he said to them, ‘If you enter a house anywhere, stay there until you leave the district. And if any place does not welcome you and people refuse to listen to you, as you walk away shake off the dust from under your feet as a sign to them.’ So they set off to preach repentance; and they cast out many devils, and anointed many sick people with oil and cured them.

The Gospel of the Lord.


February 6th : Responsorial Psalm Psalm 47(48):2-4,9-11

 February 6th :  Responsorial Psalm

Psalm 47(48):2-4,9-11 


O God, we ponder your love within your temple.

The Lord is great and worthy to be praised

  in the city of our God.

His holy mountain rises in beauty,

  the joy of all the earth.

O God, we ponder your love within your temple.

Mount Zion, true pole of the earth,

  the Great King’s city!

God, in the midst of its citadels,

  has shown himself its stronghold.

O God, we ponder your love within your temple.

As we have heard, so we have seen

  in the city of our God,

in the city of the Lord of hosts

  which God upholds for ever.

O God, we ponder your love within your temple.

O God, we ponder your love

  within your temple.

Your praise, O God, like your name

  reaches the ends of the earth.

With justice your right hand is filled.

O God, we ponder your love within your temple.

Gospel Acclamation Jn15:15

Alleluia, alleluia!

I call you friends, says the Lord,

because I have made known to you

everything I have learnt from my Father.

Alleluia!