Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, August 10, 2025

ஆகஸ்ட் 11 : நற்செய்தி வாசகம்மானிட மகனைக் கொலை செய்வார்கள்; அவர் உயிருடன் எழுப்பப்படுவார்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 22-27

ஆகஸ்ட் 11 :  நற்செய்தி வாசகம்

மானிட மகனைக் கொலை செய்வார்கள்; அவர் உயிருடன் எழுப்பப்படுவார்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 22-27
அக்காலத்தில்

கலிலேயாவில் சீடர்கள் ஒன்றுதிரண்டிருக்கும் போது இயேசு அவர்களிடம், “மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார். அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்; ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்” என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் துயரடைந்தார்கள்.

அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தபோது கோவில் வரியாக இரண்டு திராக்மா தண்டுவோர் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா?” என்று கேட்டனர். அவர், “ஆம், செலுத்துகிறார்” என்றார்.

பின்பு வீட்டிற்குள் வந்து பேதுரு பேசத் தொடங்குவதற்கு முன்பே இயேசு, “சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது? இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள்? தங்களுடைய மக்களிடமிருந்தா? மற்றவரிடமிருந்தா?” என்று கேட்டார். “மற்றவரிடமிருந்துதான்” என்று பேதுரு பதிலளித்தார்.

இயேசு அவரிடம், “அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல. ஆயினும் நாம் அவர்களுக்குத் தடையாய் இருக்கக் கூடாது. எனவே நீ போய்க் கடலில் தூண்டில் போடு; முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 11 : பதிலுரைப் பாடல்திபா 147: 12-13. 14-15. 19-20 (பல்லவி: 12)பல்லவி: எருசலேமே! கடவுளாம் ஆண்டவரைப் புகழ்வாயாக

ஆகஸ்ட் 11 :  பதிலுரைப் பாடல்

திபா 147: 12-13. 14-15. 19-20 (பல்லவி: 12)

பல்லவி: எருசலேமே! கடவுளாம் ஆண்டவரைப் புகழ்வாயாக!
12
எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!
13
அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். - பல்லவி

14
அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.
15
அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. - பல்லவி

19
யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.
20
அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 தெச 2: 14
அல்லேலூயா, அல்லேலூயா! 

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா

ஆகஸ்ட் 11 : முதல் வாசகம்அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள்.இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 10: 12-22

ஆகஸ்ட் 11 :  முதல் வாசகம்

அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 10: 12-22
மோசே மக்களை நோக்கிக் கூறியது:

இஸ்ரயேலரே, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவர்தம் அனைத்து வழிகளிலும் நடந்து, அவர்மீது அன்புகூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் உங்கள் முழு உள்ளத்தோடும் அவருக்குப் பணிபுரிந்து, உங்களுக்கு எல்லாம் நலமாகும் பொருட்டு நான் இன்று கற்பிக்கின்ற அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்பதன்றி, அவர் உங்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கின்றார்?

விண்ணும் விண்ணின் வானங்களும், மண்ணும் அதில் உள்ள அனைத்தும் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியன. இருப்பினும், உங்கள் மூதாதையர்மீது பற்றுவைத்து அன்பு கூர்ந்தார். அவர்களுக்குப் பின் அவர்களுடைய வழிமரபினராகிய உங்களை எல்லா மக்கள் இனங்களினின்றும், இந்நாளில் இருப்பதுபோலத் தெரிந்து கொண்டார்.

ஆகவே, உங்கள் உள்ளத்தை விருத்தசேதனம் செய்யுங்கள். வணங்காக் கழுத்தினராய் இராதீர்கள். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், இறைவர்க்கெல்லாம் இறைவன். மாட்சியும் ஆற்றலும் உள்ள அஞ்சுதற்குரிய கடவுள் அவரே. அவர் ஓரவஞ்சனை செய்வதில்லை; கையூட்டு வாங்குவதும் இல்லை. அனாதைகளுக்கும் கைம்பெண்களுக்கும் நீதி வழங்குபவர் அவரே. அன்னியர்மேல் அன்புகூர்ந்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவர் அவரே. அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள்.

உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சுங்கள்; அவருக்கே பணி புரிந்து அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். அவர் பெயராலே ஆணையிடுங்கள். அவரே உங்கள் புகழ்ச்சி! அவரே உங்கள் கடவுள்! உங்கள் கண்கள் கண்ட ஆற்றல்மிகு அச்செயல்களை உங்களுக்காகச் செய்தவர் அவரே. உங்கள் மூதாதையர் எழுபது ஆள்களாய் எகிப்துக்குப் போனார்கள். இப்பொழுதோ உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வானத்து விண்மீன்கள் போல் பெருகச் செய்துள்ளார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 11th : Gospel'They will put the Son of Man to death'A reading from the Holy Gospel according to St.Matthew 17 : 22-27

August 11th : Gospel

'They will put the Son of Man to death'

A reading from the Holy Gospel according to St.Matthew 17 : 22-27

As they were gathering in Galilee, Jesus said to them, “The Son of man is to be delivered into the hands of men, and they will kill him, and he will be raised on the third day.” And they were greatly distressed. When they came to Caperʹna-um, the collectors of the half-shekel tax went up to Peter and said, “Does not your teacher pay the tax?” He said, “Yes.” And when he came home, Jesus spoke to him first, saying, “What do you think, Simon? From whom do kings of the earth take toll or tribute? From their sons or from others?” And when he said, “From others,” Jesus said to him, “Then the sons are free. However, not to give offense to them, go to the sea and cast a hook, and take the first fish that comes up, and when you open its mouth you will find a shekel; take that and give it to them for me and for yourself.”

The Word of the Lord.

August 11th : Responsorial PsalmPsalm 147:12-15,19-20

August 11th : Responsorial Psalm

Psalm 147:12-15,19-20

Response: O praise the Lord, Jerusalem!
(or) Alleluia!

Praise the LORD, O Jerusalem!
Praise your God, O Zion!

Response: O praise the Lord, Jerusalem!
(or) Alleluia!

For he strengthens the bars of your gates;
he blesses your sons within you.
He makes peace in your borders;
he fills you with the finest of the wheat.

Response: O praise the Lord, Jerusalem!
(or) Alleluia!

He sends forth his command to the earth;
his word runs swiftly.
He declares his word to Jacob,
his statutes and ordinances to Israel.

Response: O praise the Lord, Jerusalem!
(or) Alleluia!

He has not dealt thus with any other nation;
they do not know his ordinances.
Praise the LORD!

Response: O praise the Lord, Jerusalem!
(or) Alleluia!

Gospel Acclamation 

Alleluia, alleluia!

O praise the Lord, Jerusalem!
He sends out his word to the earth.
Alleluia!

August 11th : First readingThe Lord your God is God of gods and Lord of lordsA reading from the book of Deuteronomy 10:12-22

August 11th :  First reading

The Lord your God is God of gods and Lord of lords

A reading from the book of Deuteronomy 10:12-22

And now, Israel, what does the LORD your God require of you, but to fear the LORD your God, to walk in all his ways, to love him, to serve the LORD your God with all your heart and with all your soul, and to keep the commandments and statutes of the LORD, which I command you this day for your good? Behold, to the LORD your God belong heaven and the heaven of heavens, the earth with all that is in it; yet the LORD set his heart in love upon your fathers and chose their descendants after them, you above all peoples, as at this day. Circumcise therefore the foreskin of your heart, and be no longer stubborn. For the LORD your God is God of gods and Lord of lords, the great, the mighty, and the terrible God, who is not partial and takes no bribe. He executes justice for the fatherless and the widow, and loves the sojourner, giving him food and clothing. Love the sojourner therefore; for you were sojourners in the land of Egypt.
You shall fear the LORD your God; you shall serve him and cleave to him, and by his name you shall swear. He is your praise; he is your God, who has done for you these great and terrible things which your eyes have seen. Your fathers went down to Egypt seventy persons; and now the LORD your God has made you as the stars of heaven for multitude.

The Word of the Lord.

Saturday, August 9, 2025

ஆகஸ்ட் 10 : நற்செய்தி வாசகம் நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 32-48

 ஆகஸ்ட் 10 : நற்செய்தி வாசகம்

நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 32-48


அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.

உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

உங்கள் இடையை வரிந்து கட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக் கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.

எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.” அப்பொழுது பேதுரு, “ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?” என்று கேட்டார்.

அதற்கு ஆண்டவர் கூறியது: “தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.

தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்க வேண்டிய முறையில் செயல்படுபவன், அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப் பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப் படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.