Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, September 26, 2025

செப்டம்பர் 27 : முதல் வாசகம் இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன். இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 2: 1-5, 10-11a

 செப்டம்பர் 27 :  முதல் வாசகம்

இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன்.

இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 2: 1-5, 10-11a


நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இதோ, அளவு நூலைக் கையில் பிடித்திருந்த ஒருவரைக் கண்டேன். ‘எங்கே போகிறீர்?’ என்று நான் அவரை வினவினேன். அதற்கு அவர், ‘எருசலேமை அளந்து, அதன் அகலமும் நீளமும் எவ்வளவு என்பதைக் காணப்போகிறேன்’ என்றார்.

என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதர் திரும்பிச் செல்கையில் மற்றொரு தூதர் அவருக்கு எதிரே வந்தார். வந்தவர் முன்னவரிடம் இவ்வாறு சொன்னார்: ஓடிச் சென்று அந்த இளைஞனிடம் நீ சொல்ல வேண்டியது: ‘எருசலேமில் எண்ணிறந்த மனிதர்களும் திரளான கால்நடைகளும் இருப்பதால் அந்நகரம் மதில் இல்லாத ஊர்களைப் போல் இருக்கும்! ஏனெனில் அதைச் சுற்றிலும் நானே நெருப்புச் சுவராய் அமைவேன்; அதனுள் உறையும் மாட்சியாய் விளங்குவேன்', என்கிறார் ஆண்டவர்.

‘மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன்’ என்கிறார் ஆண்டவர். அந்நாளில், வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்; அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள். அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 27th : Gospel They were afraid to ask him what he meant A reading from the Holy Gospel according to St.Luke 9 : 43b-45

 September 27th :  Gospel 

They were afraid to ask him what he meant

A reading from the Holy Gospel according to St.Luke 9 : 43b-45 

At that time: While they were all marvelling at everything Jesus was doing, Jesus said to his disciples, “Let these words sink into your ears: The Son of Man is about to be delivered into the hands of men.” But they did not understand this saying, and it was concealed from them, so that they might not perceive it. And they were afraid to ask him about this saying.

The Gospel of the Lord.

September 27th : Responsorial Psalm Jeremiah 31:10, 11–12ab, 13 (R. see 10d) Response : The Lord will keep us, as a shepherd keeps his flock.

 September 27th : Responsorial Psalm

Jeremiah 31:10, 11–12ab, 13 (R. see 10d)

Response : The Lord will keep us, as a shepherd keeps his flock.

Hear the word of the Lord, O nations, and declare it in the coastlands far away; say, ‘He who scattered Israel will gather him, and will keep him as a shepherd keeps his flock.

Response : The Lord will keep us, as a shepherd keeps his flock.

For the Lord has ransomed Jacob and has redeemed him from hands too strong for him. They shall come and sing aloud on the height of Sion, and they shall be radiant over the goodness of the Lord.

Response : The Lord will keep us, as a shepherd keeps his flock.

Then shall the young women rejoice in the dance, and the young men and the old shall be merry. I will turn their mourning into joy; I will comfort them, and give them gladness for sorrow.

Response : The Lord will keep us, as a shepherd keeps his flock.

Gospel Acclamation

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. Our Saviour Christ Jesus abolished death and brought life and immortality to light through the gospel.

R. Alleluia.

September 27th : First reading 'I will be the glory of Jerusalem' A reading from the book of Zechariah 2:1-5, 10-11a

 September 27th :  First reading

'I will be the glory of Jerusalem'

A reading from the book of Zechariah 2:1-5, 10-11a

I, Zechariah, lifted my eyes and saw, and behold a man with a measuring line in his hand! Then I said, “Where are you going?” And he said to me, “To measure Jerusalem, to see what is its width and what is its length.” And behold, the angel who talked with me came forward, and another angel came forward to meet him and said to him, “Run, say to that young man, ‘Jerusalem shall be inhabited as villages without walls, because of the multitude of people and livestock in it. And I will be to her a wall of fire all round, declares the Lord, and I will be the glory in her midst.’ ” Sing and rejoice, O daughter of Sion, for behold, I come and I will dwell in your midst, declares the Lord. And many nations shall join themselves to the Lord in that day, and shall be my people. And I will dwell in your midst.

The word of the Lord.

Thursday, September 25, 2025

செப்டம்பர் 26 : நற்செய்தி வாசகம் நீர் கடவுளின் மெசியா. மானிட மகன் பலவாறு துன்பப்பட வேண்டும். ✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-22

 செப்டம்பர் 26 : நற்செய்தி வாசகம்

நீர் கடவுளின் மெசியா. மானிட மகன் பலவாறு துன்பப்பட வேண்டும்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-22


அக்காலத்தில்

இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம் “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று அவர் கேட்டார்.

அவர்கள் மறு மொழியாக, “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள்.

“ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, “நீர் கடவுளின் மெசியா” என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

மேலும் இயேசு, “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” என்று சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 26 : பதிலுரைப் பாடல் திபா 43: 1. 2. 3. 4 (பல்லவி: 5bc) பல்லவி: கடவுளின் மீட்புச் செயல்களுக்காக அவருக்கு நன்றி செலுத்துவேன்.

 செப்டம்பர் 26 : பதிலுரைப் பாடல்

திபா 43: 1. 2. 3. 4 (பல்லவி: 5bc)

பல்லவி: கடவுளின் மீட்புச் செயல்களுக்காக அவருக்கு நன்றி செலுத்துவேன்.


1

கடவுளே, என் நேர்மையை நிலைநாட்டும்; இறைப் பற்றில்லா இனத்தோடு என் வழக்குக்காக வாதிடும்; வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த மனிதர் கையினின்று என்னை விடுவித்தருளும். - பல்லவி

2

கடவுளே! நீரே என் ஆற்றல்; ஏன் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துயருடன் நடமாட வேண்டும்? - பல்லவி

3

உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும். அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். - பல்லவி

4

அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 10: 45

அல்லேலூயா, அல்லேலூயா!

 மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

செப்டம்பர் 26 : முதல் வாசகம் இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்புவேன். இறைவாக்கினர் ஆகாய் நூலிலிருந்து வாசகம் 2: 1-9

 செப்டம்பர் 26 : முதல் வாசகம்

இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்புவேன்.

இறைவாக்கினர் ஆகாய் நூலிலிருந்து வாசகம் 2: 1-9


தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஏழாம் மாதத்தின் இருபத்தோராம் நாளன்று, ஆண்டவரின் வாக்கு இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக அருளப்பட்டது: “யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமாகிய செருபாபேலிடமும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவிடமும் மக்களுள் எஞ்சியிருப்போர் அனைவரிடமும் இப்பொழுது நீ போய் இவ்வாறு சொல்: ‘இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைக் கண்டவர் எவராகிலும் உங்களிடையே இன்னும் இருக்கின்றனரா? இப்போது இது உங்களுக்கு எக்கோலத்தில் தோன்றுகிறது? இது உங்கள் பார்வையில் ஒன்றும் இல்லாதது போல் தோன்றுகிறது அல்லவா? ஆயினும் செருபாபேலே! மன உறுதியோடு இரு,’ என்கிறார் ஆண்டவர். ‘தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவே! மன உறுதியோடு இரு; நாட்டிலுள்ள அனைத்து மக்களே, ஊக்கம் கொள்ளுங்கள்; பணியைத் தொடருங்கள்; ஏனெனில் நான் உங்களோடு இருக்கிறேன்’ என்கிறார் படைகளின் ஆண்டவர்.” “நீங்கள் எகிப்தினின்று புறப்பட்டு வந்த போது உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதியின்படி, உங்கள் நடுவில் எனது ஆவி நிலைகொண்டிருக்கிறது; அஞ்சாதீர்கள்.

ஏனெனில் படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ‘இன்னும் சிறிது காலத்தில் நான் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும் பாலை நிலத்தையும் நடுக்கமுறச் செய்வேன். வேற்றினத்தார் அனைவரையும் நிலைகுலையச் செய்வேன். அப்போது வேற்றினத்தார் அனைவரின் விருப்பத்திற்குரியவைகளும் இங்கு வந்து சேரும்; இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்புவேன்’ என்கிறார் படைகளின் ஆண்டவர். ‘வெள்ளி எனக்கு உரியது, பொன்னும் எனக்கு உரியது', என்கிறார் படைகளின் ஆண்டவர். ‘இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியை விடப் பின்னைய மாட்சி மிகுதியாய் இருக்கும்', என்கிறார் படைகளின் ஆண்டவர். ‘இந்த இடத்தில் நான் நலம் நல்குவேன்’ என்கிறார் படைகளின் ஆண்டவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.