Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Wednesday, November 19, 2025

நவம்பர் 20 : நற்செய்தி வாசகம் அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா? ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 41-44

 நவம்பர் 20 :  நற்செய்தி வாசகம்

அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா?

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 41-44


அக்காலத்தில்

இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் கோவிலைப் பார்த்து அழுதார். “இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக் கூடாதா? ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது.

ஒரு காலம் வரும். அப்போது உன் பகைவர்கள் உன்னைச் சுற்றி அரண் எழுப்பி, உன்னை முற்றுகையிடுவார்கள்; உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி அழித்து உன்னைத் தரைமட்டமாக்குவார்கள்; மேலும் உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நவம்பர் 20 : பதிலுரைப் பாடல் திபா 50: 1-2. 5-6. 14-15 (பல்லவி: 23b)

 நவம்பர் 20 :  பதிலுரைப் பாடல்

திபா 50: 1-2. 5-6. 14-15 (பல்லவி: 23b)

பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் தரும் மீட்பைக் கண்டடைவர்.


1

தெய்வங்களுக்கெல்லாம் இறைவனாம் ஆண்டவர் பேசினார்; கதிரவன் எழும் முனையினின்று மறையும் முனைவரை பரந்துள்ள உலகைத் தீர்ப்புப் பெற அழைத்தார்.

2

எழிலின் நிறைவாம் சீயோனினின்று, ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள். - பல்லவி

5

‘பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்றுகூட்டுங்கள்.'

6

வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! - பல்லவி

14

கடவுளுக்கு நன்றிப் பலி செலுத்துங்கள்; உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்.

15

துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்; உங்களைக் காத்திடுவேன்; அப்போது, நீங்கள் என்னை மேன்மைப் படுத்துவீர்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 95: 8b, 7b

அல்லேலூயா, அல்லேலூயா!

 உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

நவம்பர் 20 : முதல் வாசகம் எங்கள் மூதாதையரின் உடன்படிக்கையின்படியே நடப்போம். மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 2: 15-29

 நவம்பர் 20 :  முதல் வாசகம்

எங்கள் மூதாதையரின் உடன்படிக்கையின்படியே நடப்போம்.

மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 2: 15-29


அந்நாள்களில்

கடவுளைப் புறக்கணிக்குமாறு யூதர்களைக் கட்டாயப்படுத்துவதற்காக மன்னன் ஏற்படுத்திய அலுவலர்கள், மக்களைப் பலிசெலுத்த வைக்கும்படி மோதயின் நகருக்குச் சென்றார்கள். இஸ்ரயேல் மக்களுள் பலர் அவர்களிடம் போய்ச் சேர்ந்தனர். மத்தத்தியாவும் அவருடைய மைந்தர்களும் தனியே கூடிவந்தார்கள்.

மன்னனின் அலுவலர்கள் மத்தத்தியாவை நோக்கி, “நீர் இந்த நகரத்தில் மதிப்பிற்குரிய பெருந்தலைவர். உம் மைந்தர்கள், சகோதரர்களுடைய ஆதரவு உமக்கு உண்டு. ஆதலால் இப்பொழுது நீர் முன்வாரும்; பிற இனத்தார், யூதேயா நாட்டு மக்கள், எருசலேமில் எஞ்சியிருப்போர் ஆகிய அனைவரும் செய்தவண்ணம் நீரும் மன்னரின் கட்டளையை நிறைவேற்றும். அப்படியானால் நீரும் உம் மைந்தர்களும் மன்னரின் நண்பர்கள் ஆவீர்கள்; பொன், வெள்ளிமற்றும் பல்வேறு பரிசுகளால் சிறப்பிக்கப் பெறுவீர்கள்” என்று கூறினார்கள்.

அதற்கு மறுமொழியாக மத்தத்தியா உரத்த குரலில், “மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லா மக்களினத்தாரும் அவருக்குக் கீழ்ப்படிந்து, தங்கள் மூதாதையரின் வழிபாட்டு முறைகளைக் கைவிட்டு, அவருடைய கட்டளைகளை நிறைவேற்ற இசைந்தாலும், நானும் என் மைந்தர்களும் சகோதரர்களும் எங்கள் மூதாதையரின் உடன்படிக்கையின்படியே நடப்போம். திருச்சட்டத்தையும் அதன் விதிமுறைகளையும் நாங்கள் கைவிட்டுவிடுவதைக் கடவுள் தடுத்தருள்வாராக! மன்னரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மாட்டோம்; எங்கள் வழிபாட்டு முறைகளினின்று சிறிதும் பிறழ மாட்டோம்” என்று கூறினார்.

மத்தத்தியா இச்சொற்களைக் கூறி முடித்ததும், மன்னரின் கட்டளைப்படி மோதயின் நகரத்துப் பீடத்தின் மேல் பலியிட யூதன் ஒருவன் எல்லாருக்கும் முன்பாக வந்தான். மத்தத்தியா அதைப் பார்த்ததும் திருச்சட்டத்தின்பால் கொண்ட பேரார்வத்தால் உள்ளம் கொதித்தெழுந்தார்; முறையாகச் சினத்தை வெளிக்காட்டி அவன்மீது பாய்ந்து பலிபீடத்தின்மீதே அவனைக் கொன்றார். அதே நேரத்தில், பலியிடும்படி மக்களை வற்புறுத்திய மன்னனின் அலுவலனைக் கொன்று பலிபீடத்தையும் இடித்துத் தள்ளினார். இவ்வாறு சாலூவின் மகன் சிம்ரிக்குப் பினகாசு செய்ததுபோல், திருச்சட்டத்தின்பால் தாம் கொண்டிருந்த பேரார்வத்தை மத்தத்தியா வெளிப்படுத்தினார்.

பின்னர் மத்தத்தியா நகரெங்கும் சென்று, “திருச்சட்டத்தின்பால் பேரார்வமும் உடன்படிக்கை மீது பற்றுறுதியும் கொண்ட எல்லாரும் என் பின்னால் வரட்டும்” என்று உரத்த குரலில் கத்தினார். அவரும் அவருடைய மைந்தர்களும் நகரில் இருந்த தங்கள் உடைமைகளையெல்லாம் விட்டுவிட்டு மலைகளுக்குத் தப்பியோடினார்கள்.

அப்போது நீதி நேர்மையைத் தேடிய பலர் பாலைநிலத்தில் தங்கி வாழச் சென்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

November 20th : Gospel Jesus sheds tears over the coming fate of Jerusalem A reading from the Holy Gospel according to St.Luke 19:41-44

 November 20th :  Gospel 

Jesus sheds tears over the coming fate of Jerusalem

A reading from the Holy Gospel according to St.Luke 19:41-44 

At that time: When Jesus drew near and saw the city, he wept over it, saying, “Would that you, even you, had known on this day the things that make for peace! But now they are hidden from your eyes. For the days will come upon you, when your enemies will set up a barricade round you and surround you and hem you in on every side and tear you down to the ground, you and your children within you. And they will not leave one stone upon another in you, because you did not know the time of your visitation.”

The Gospel of the Lord.

November 20th : Responsorial Psalm Psalm 50:1-2, 5-6, 14-15 (R. 23bc) Response : To one whose way is blameless, I will show the salvation of God.

 November 20th : Responsorial Psalm

Psalm 50:1-2, 5-6, 14-15 (R. 23bc)

Response : To one whose way is blameless, I will show the salvation of God.

The God of gods, the Lord, has spoken and summoned the earth, from the rising of the sun to its setting. Out of Sion, the perfection of beauty, God is shining forth. 

R.: To one whose way is blameless, I will show the salvation of God.

“Gather my holy ones to me, who made covenant with me by sacrifice.” The heavens proclaim his justice, for he, God, is the judge. 

R.: To one whose way is blameless, I will show the salvation of God.

Give your praise as a sacrifice to God, and fulfil your vows to the Most High. Then call on me in the day of distress. I will deliver you and you shall honour me.

R.: To one whose way is blameless, I will show the salvation of God.

Gospel Acclamation

Alleluia

V. Alleluia. R. Alleluia.

V. Today harden not your hearts, but listen to the voice of the Lord.

R. Alleluia.

November 20th : First reading 'Heaven preserve us from forsaking the Law and its ordinances' A reading from the first book of Maccabees 2: 15-29

 November 20th : First reading

'Heaven preserve us from forsaking the Law and its ordinances'

A reading from the first book of Maccabees 2: 15-29 

In those days: The king’s officers who were enforcing the apostasy came to the city of Modein to make them offer sacrifice. Many from Israel came to them; and Mattathias and his sons were assembled. Then the king’s officers spoke to Mattathias as follows: “You are a leader, honoured and great in this city, and supported by sons and brothers. Now be the first to come and do what the king commands, as all the Gentiles and the men of Judah and those who are left in Jerusalem have done.

Then you and your sons will be numbered among the friends of the king, and you and your sons will be honoured with silver and gold and many gifts.” But Mattathias answered and said in a loud voice: “Even if all the nations which live under the rule of the king obey him and have chosen to do his commandments, departing each one from the religion of his fathers, yet I and my sons and my brothers will live by the covenant of our fathers. Far be it from us to desert the law and the ordinances.

We will not obey the king’s words by turning aside from our religion to the right hand or to the left.” When he had finished speaking these words, a Jew came forward in the sight of all to offer sacrifice upon the altar in Modein, according to the king’s command. When Mattathias saw it, he burned with zeal and his heart was stirred. He gave vent to righteous anger;

he ran and slaughtered him upon the altar. At the same time he killed the king’s officer who was forcing them to sacrifice, and he tore down the altar. Thus he burned with zeal for the law, as Phinehas did against Zimri son of Salom. Then Mattathias cried out in the city with a loud voice, saying: “Let everyone who is zealous for the law and supports the covenant come out with me!” And he and his sons fled to the hills and left all that they had in the city. Then many who were seeking righteousness and justice went down to the wilderness to dwell there.

The Word of the Lord.

Tuesday, November 18, 2025

நவம்பர் 19 : நற்செய்தி வாசகம் ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை? ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 11-28

 நவம்பர் 19 :  நற்செய்தி வாசகம்

ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை?

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 11-28


அக்காலத்தில்

இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தார்கள். அப்போது இயேசு மேலும் ஓர் உவமையைச் சொன்னார்:

“உயர் குடிமகன் ஒருவர் ஆட்சியுரிமை பெற்றுவரத் தொலை நாட்டிற்குப் போகப் புறப்பட்டார். அப்போது அவர் தம் பணியாளர்கள் பத்துப் பேரை அழைத்து, பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி, ‘நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்’ என்று சொன்னார்.

அவருடைய குடிமக்களோ, அவரை வெறுத்தனர். எனவே, ‘இவர் அரசராக இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை’ என்று சொல்லித் தூது அனுப்பினர்.

இருப்பினும் அவர் ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தார். பின்னர் தம்மிடம் பணம் வாங்கியிருந்த பணியாளர் ஒவ்வொருவரும் ஈட்டியது எவ்வளவு என்று அறிய அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார்.

முதலாம் பணியாளர் வந்து, ‘ஐயா, உமது மினாவைக் கொண்டு பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்’ என்றார். அதற்கு அவர் அவரிடம், ‘நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்றார். இரண்டாம் பணியாளர் வந்து, ‘ஐயா உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களை ஈட்டியுள்ளேன்’ என்றார். அவர், ‘எனவே நீர் ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்று அவரிடமும் சொன்னார்.

வேறொருவர் வந்து, ‘ஐயா, இதோ உமது மினா. ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன். ஏனெனில் நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவர்; நீர் விதைக்காததை அறுக்கிறவர்’ என்றார். அதற்கு அவர் அவரிடம், ‘பொல்லாத பணியாளே, உன் வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்பானவன்; வைக்காததை எடுக்கிறவன்; விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா? அப்படியானால் ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே’ என்றார்.

பின்பு அருகில் நின்றவர்களிடம், ‘அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள்’ என்றார். அதற்கு அவர்கள், ‘ஐயா, அவரிடம் பத்து மினாக்கள் இருக்கின்றனவே’ என்றார்கள்.

அவரோ, ‘உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிட மிருந்து உள்ளதும் எடுக்கப்படும்’ என உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார். மேலும் அவர், ‘நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்குக் கொண்டு வந்து என்முன் படுகொலை செய்யுங்கள்’ என்று சொன்னார்."

இவற்றைச் சொன்ன பின்பு இயேசு அவர்களுக்கு முன்பாக எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.