ஆகஸ்ட் 29 : நற்செய்தி வாசகம்
Wednesday, August 28, 2024
ஆகஸ்ட் 29 : நற்செய்தி வாசகம் திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும். ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 17-29
ஆகஸ்ட் 29 : பதிலுரைப் பாடல் திபா 71: 1-2. 3-4a. 5-6. 15ab,17 (பல்லவி: 15a) பல்லவி: என் வாய் உமது நீதியையும் மீட்பையும் எடுத்துரைக்கும்.
ஆகஸ்ட் 29 : பதிலுரைப் பாடல்
ஆகஸ்ட் 29 : புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு முதல் வாசகம் நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 17-19
ஆகஸ்ட் 29 : புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு
August 29th : Gospel The beheading of John the Baptist A reading from the Holy Gospel according to St.Mark 6:17-29
August 29th : Gospel
August 29th. : Responsorial Psalm Psalm 70(71):1-6,15,17
August 29th. : Responsorial Psalm
August 29th : First reading Stand up and tell them all I command you; do not be dismayed at their presence. A reading from the book of Jeremiah 1:17-19
August 29th : First reading
Tuesday, August 27, 2024
ஆகஸ்ட் 28 : நற்செய்தி வாசகம் நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர். மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 27-32
ஆகஸ்ட் 28 : நற்செய்தி வாசகம்
நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 27-32
அக்காலத்தில்
இயேசு கூறியது: “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லா வகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.
வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினர்களின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்; நேர்மையாளரின் நினைவுச் சின்னங்களை அழகுபடுத்துகிறீர்கள்; ‘எங்கள் மூதாதையர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் இறைவாக்கினர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்’ என்கிறீர்கள். இவ்வாறு நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர் என்பதற்கு நீங்களே சாட்சிகள். உங்கள் மூதாதையர் செய்த கொடுமையின் அளவுக்கு நீங்களும் செய்து முடியுங்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.