Monday, September 30, 2024
October 1st : Gospel Jesus sets out for JerusalemA Reading from the Holy Gospel according to St.Luke 9:51-56
October 1st : Responsorial PsalmPsalm 87(88):2-8 Let my prayer come into your presence, O Lord
October 1st : First ReadingWhy did I not perish on the day I was born?A Reading from the Book of Job 3:1-3,11-17,20-23
அக்டோபர் 1 : நற்செய்தி வாசகம்இயேசு எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்தார்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-56
அக்டோபர் 1 : பதிலுரைப் பாடல்திபா 88: 1-2. 3-4. 5. 6-7 (பல்லவி: 2a)
அக்டோபர் 1 : முதல் வாசகம்உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்?யோபு நூலிலிருந்து வாசகம் 3: 1-4a, 11-17, 20-23
Sunday, September 29, 2024
செப்டம்பர் 30 : நற்செய்தி வாசகம் உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார். ✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 46-50
செப்டம்பர் 30 : நற்செய்தி வாசகம்
உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 46-50
அக்காலத்தில்
தங்களுக்குள் பெரியவர் யார் என்ற விவாதம் சீடர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களின் எண்ணங்களை அறிந்து ஒரு சிறுபிள்ளையை எடுத்து, தம் அருகே நிறுத்தி, அவர்களிடம், “இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்” என்றார்.
யோவான் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, ஒருவர் உமது பெயரால் பேய் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப்பார்த்தோம்; ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” என்றார்.
இயேசு அவரை நோக்கி, “தடுக்க வேண்டாம்; ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.