Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Tuesday, August 12, 2025

நற்செய்தி வாசகம்அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20

நற்செய்தி வாசகம்

அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களிடம் கூறியது: “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் ‘இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்’ என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.

மண்ணுலகில் நீங்கள் தடை செய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடை செய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்திபா 66: 1-3a. 5,8. 16-17 (பல்லவி: 9a,20a காண்க)பல்லவி: நம்மை உயிர்வாழச் செய்த இறைவன் போற்றி!

பதிலுரைப் பாடல்

திபா 66: 1-3a. 5,8. 16-17 (பல்லவி: 9a,20a காண்க)
பல்லவி: நம்மை உயிர்வாழச் செய்த இறைவன் போற்றி!
1
அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்;
2
அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.
3a
கடவுளை நோக்கி உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை என்று போற்றுங்கள். - பல்லவி

5
வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை.
8
மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்; அவரைப் புகழ்ந்து பாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள். - பல்லவி

16
கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்.
17
அவரிடம் மன்றாட என் வாய் திறந்தது; அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 5: 19
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.

பொதுக்காலம் 19ஆம் வாரம் - புதன்முதல் வாசகம்மோசே மோவாபு நாட்டில் இறந்தார். அவரைப்போல், இறைவாக்கினர் வேறு எவரும் இஸ்ரயேலில் எழுந்ததில்லை.இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 34: 1-12

பொதுக்காலம் 19ஆம் வாரம் - புதன்
முதல் வாசகம்

மோசே மோவாபு நாட்டில் இறந்தார். அவரைப்போல், இறைவாக்கினர் வேறு எவரும் இஸ்ரயேலில் எழுந்ததில்லை.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 34: 1-12
அந்நாள்களில்

மோசே மோவாபுச் சமவெளியிலிருந்து எரிகோவுக்குக் கிழக்கே நெபோ மலையில் உள்ள பிஸ்காவின் உச்சிக்கு ஏறிச் சென்றார். ஆண்டவர் அவருக்குத் தாண் வரையில் உள்ள கிலயாது நாடு முழுவதையும் காட்டினார். மேலும் நப்தலி முழுவதையும் எப்ராயிம் நிலப்பகுதியையும், மனாசே நிலப்பகுதியையும் யூதாவின் நிலப்பகுதி முழுவதையும், மேற்கே மத்திய தரைக் கடல் வரையிலும் காட்டினார்; மற்றும் நெகேபையும் பேரீச்சை மாநகராகிய எரிகோ முதல் சோவார் வரையிலும் உள்ள நிலப் பரப்பையும் காட்டினார். அப்போது ஆண்டவர் மோசேக்கு உரைத்தது: ‘நான் உன் வழிமரபினருக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டுக் கூறிய நிலம் இதுவே. உன் கண்களால் நீ அதைப் பார்க்கும்படி செய்துவிட்டேன். ஆனால் நீ அங்கு போகமாட்டாய்'.

எனவே, ஆண்டவர் கூறியபடியே, அவர்தம் ஊழியர் மோசே மோவாபு நாட்டில் இறந்தார். மோவாபு நாட்டில் பெத்பகோருக்கு எதிரே உள்ள பள்ளத்தாக்கில் அவர் அவரை அடக்கம் செய்தார். ஆனால் இன்றுவரை எந்த மனிதருக்கும் அவரது கல்லறை இருக்குமிடம் தெரியாது. மோசே இறக்கும்போது அவருக்கு வயது நூற்றிருபது. அவரது கண்கள் மங்கினதுமில்லை; அவரது வலிமை குறைந்ததுமில்லை. மோவாபுச் சமவெளியில் இஸ்ரயேல் மக்கள் மோசேக்காக முப்பது நாள்கள் துக்கம் கொண்டாடினர். மோசேக்காக இஸ்ரயேல் மக்கள் அழுது துக்கம் கொண்டாடின நாள்கள் நிறைவுற்றன.

நூனின் மகனாகிய யோசுவாவின் மேல் மோசே தம் கைகளை வைத்ததால், அவர் ஞானத்தின் ஆவியால் நிரப்பப் பெற்றிருந்தார். இஸ்ரயேல் மக்கள் யோசுவாவுக்குச் செவி கொடுத்து, மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி நடந்தார்கள்.

ஆண்டவர் நேருக்குநேர் சந்தித்த மோசேயைப்போல், இறைவாக்கினர் வேறெவரும் இஸ்ரயேலில் இதுகாறும் எழுந்ததில்லை. ஏனெனில், எகிப்து நாட்டில் பார்வோனுக்கும், அவன் அலுவலருக்கும், அவன் நாடு முழுவதற்கும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்யும்படி ஆண்டவர் மோசேயை அனுப்பினார். இஸ்ரயேலர் அனைவரின் கண்கள் காணுமாறு அவர் ஆற்றிய அனைத்து ஆற்றல்மிகு செயல்களும் அச்சுறுத்தும் மாபெரும் செயல்களுமே இதற்குச் சான்றாகும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 13th : GospelIf your brother listens to you, you have won back your brotherA reading from the Holy Gospel according to St.Matthew 18: 15-20

August 13th :  Gospel

If your brother listens to you, you have won back your brother

A reading from the Holy Gospel according to St.Matthew 18: 15-20

“If your brother sins against you, go and tell him his fault, between you and him alone. If he listens to you, you have gained your brother.
But if he does not listen, take one or two others along with you, that every word may be confirmed by the evidence of two or three witnesses. If he refuses to listen to them, tell it to the church; and if he refuses to listen even to the church, let him be to you as a Gentile and a tax collector. Truly, I say to you, whatever you bind on earth shall be bound in heaven, and whatever you loose on earth shall be loosed in heaven. Again I say to you, if two of you agree on earth about anything they ask, it will be done for them by my Father in heaven. For where two or three are gathered in my name, there am I in the midst of them.”

The Word of the Lord.

August 13th : Responsorial PsalmPsalm 65(66):1-3,5,16-17

August 13th :  Responsorial Psalm

Psalm 65(66):1-3,5,16-17 

Blessed be God, who gave life to my soul.

Cry out with joy to God all the earth,
  O sing to the glory of his name.
O render him glorious praise.
  Say to God: ‘How tremendous your deeds!’

Blessed be God, who gave life to my soul.

Come and see the works of God,
  tremendous his deeds among men.
Come and hear, all who fear God.
  I will tell what he did for my soul:
to him I cried aloud,
  with high praise ready on my tongue.

Blessed be God, who gave life to my soul.

Gospel Acclamation Ps110:7,8

Alleluia, alleluia!

Your precepts, O Lord, are all of them sure;
they stand firm for ever and ever.
Alleluia!

August 13th : First readingMoses dies and is buriedA reading from the book of Deuteronomy 34:1-12

August 13th :  First reading

Moses dies and is buried

A reading from the book of Deuteronomy 34:1-12 

And Moses went up from the plains of Moab to Mount Nebo, to the top of Pisgah, which is opposite Jericho. And the LORD showed him all the land, Gilead as far as Dan, all Naphʹtali, the land of Eʹphraim and Manasʹseh, all the land of Judah as far as the western sea, the Negeb, and the Plain, that is, the valley of Jericho the city of palm trees, as far as Zoʹar. And the LORD said to him, “This is the land of which I swore to Abraham, to Isaac, and to Jacob, ‘I will give it to your descendants.’ I have let you see it with your eyes, but you shall not go over there.” So Moses the servant of the LORD died there in the land of Moab, according to the word of the LORD, and he buried him in the valley in the land of Moab opposite Beth-peʹor; but no man knows the place of his burial to this day. Moses was a hundred and twenty years old when he died; his eye was not dim, nor his natural force abated.
And the people of Israel wept for Moses in the plains of Moab thirty days; then the days of weeping and mourning for Moses were ended. And Joshua the son of Nun was full of the spirit of wisdom, for Moses had laid his hands upon him; so the people of Israel obeyed him, and did as the LORD had commanded Moses. And there has not arisen a prophet since in Israel like Moses, whom the LORD knew face to face, none like him for all the signs and the wonders which the LORD sent him to do in the land of Egypt, to Pharaoh and to all his servants and to all his land, and for all the mighty power and all the great and terrible deeds which Moses wrought in the sight of all Israel.

The Word of the Lord.

Monday, August 11, 2025

நற்செய்தி வாசகம் மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10-14

 நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10-14


அக்காலத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில் மானிடமகன் நெறி தவறியோரை மீட்கவே வந்தார். இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப் பகுதியில் விட்டுவிட்டு, வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா? அவர் அதைக் கண்டுபிடித்தால், வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதை விட, வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக் கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.”


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.