Tuesday, August 12, 2025
நற்செய்தி வாசகம்அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20
பதிலுரைப் பாடல்திபா 66: 1-3a. 5,8. 16-17 (பல்லவி: 9a,20a காண்க)பல்லவி: நம்மை உயிர்வாழச் செய்த இறைவன் போற்றி!
பொதுக்காலம் 19ஆம் வாரம் - புதன்முதல் வாசகம்மோசே மோவாபு நாட்டில் இறந்தார். அவரைப்போல், இறைவாக்கினர் வேறு எவரும் இஸ்ரயேலில் எழுந்ததில்லை.இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 34: 1-12
August 13th : GospelIf your brother listens to you, you have won back your brotherA reading from the Holy Gospel according to St.Matthew 18: 15-20
August 13th : Responsorial PsalmPsalm 65(66):1-3,5,16-17
August 13th : First readingMoses dies and is buriedA reading from the book of Deuteronomy 34:1-12
Monday, August 11, 2025
நற்செய்தி வாசகம் மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10-14
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10-14
அக்காலத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில் மானிடமகன் நெறி தவறியோரை மீட்கவே வந்தார். இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப் பகுதியில் விட்டுவிட்டு, வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா? அவர் அதைக் கண்டுபிடித்தால், வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதை விட, வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக் கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.”
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.