ஞாயிறு, 26 ஜூலை, 2026
ஜூலை 27 : நற்செய்தி வாசகம்கடுகு விதை வளர்ந்து வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும்.மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35.
ஜூலை 27 : பதிலுரைப் பாடல்இச 32: 18-19, 20-21 . (பல்லவி: 18a)பல்லவி: உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்.
ஜூலை 27 : முதல் வாசகம்தீய மக்கள், எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள்.இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 13: 1-11
July 27th : GospelThe smallest of all seeds grows into the biggest shrub of all.A Reading from the Holy Gospel according to St.Matthew 13: 31-35
July 27th : Responsorial PsalmDeuteronomy 32:18–19, 20, 21 (R. see 18b)Response : You forgot the God who gave you birth.
July 27th : First readingLet this evil people become good for nothing.A Reading from the Book of Jeremiah 13:1-11.
சனி, 25 ஜூலை, 2026
நற்செய்தி வாசகம் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-52
நற்செய்தி வாசகம்
தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-52
அக்காலத்தில்
இயேசு மக்களை நோக்கிக் கூறியது: “ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு, மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.
வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று, அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.
விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.
இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?” என்று இயேசு கேட்க, அவர்கள் “ஆம்” என்றார்கள். பின்பு அவர், “ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்” என்று அவர்களிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது குறுகிய வாசகம்
தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-46
அக்காலத்தில்
இயேசு மக்களை நோக்கிக் கூறியது: “ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு, மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.
வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
இரண்டாம் வாசகம் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்கவேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 28-30
இரண்டாம் வாசகம்
தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்கவேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 28-30
சகோதரர் சகோதரிகளே,
கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும். தம்மால் முன்பே தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார்; அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டுமென்றே இப்படிச் செய்தார்.
தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோர் ஆனோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 25 காண்கஅல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
பதிலுரைப் பாடல் திபா 119: 57,72. 76-77. 127-128. 129-130 (பல்லவி: 97a) பல்லவி: உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!
பதிலுரைப் பாடல்
திபா 119: 57,72. 76-77. 127-128. 129-130 (பல்லவி: 97a)
பல்லவி: உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!
57
ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு; உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன்.
72
நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளை விட எனக்கு மேலானது. - பல்லவி
76
எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ!
77
நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம். - பல்லவி
127
பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன்.
128
உம் நியமங்களை எல்லாம் நீதியானவை என்று ஏற்றுக் கொண்டேன்; பொய்யான வழி அனைத்தையும் வெறுக்கின்றேன். - பல்லவி
129
உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை; ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன்.
130
உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. - பல்லவி
26 ஜூலை 2026, ஞாயிறு பொதுக்காலம் 17ஆம் வாரம் - ஞாயிறு முதல் வாசகம் நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 5, 7-12
26 ஜூலை 2026, ஞாயிறு
பொதுக்காலம் 17ஆம் வாரம் - ஞாயிறு
முதல் வாசகம்
நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 5, 7-12
அந்நாள்களில்
கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். “உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!” என்று கடவுள் கேட்டார்.
என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரசனாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை. இதோ! உமக்கென நீர் தெரிந்துகொண்ட திரளான மக்களிடையே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர். எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும். இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்களினத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?” என்று கேட்டார்.
சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. கடவுள் அவரிடம், “நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதும் இல்லை.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
வெள்ளி, 24 ஜூலை, 2026
ஜூலை 25 : நற்செய்தி வாசகம் என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 20-28 அக்காலத்தில்
ஜூலை 25 : நற்செய்தி வாசகம்
ஜூலை 25 : பதிலுரைப் பாடல் திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 5) பல்லவி: கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.
ஜூலை 25 : பதிலுரைப் பாடல்
ஜூலை 25 : புனித யாக்கோபு - திருத்தூதர் விழா முதல் வாசகம் இயேசுவின் சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-15
ஜூலை 25 : புனித யாக்கோபு - திருத்தூதர் விழா
July 25th : Gospel 'Can you drink the cup that I am going to drink?' A Reading from the Holy Gospel according to St.Matthew 20: 20-28
July 25th : Gospel
July 25th : Responsorial Psalm Psalm 126:1–2ab, 2cd–3, 4–5, 6 (R. see 5)
July 25th : Responsorial Psalm
July 25th : First reading Such an overwhelming power comes from God and not from us. A Reading from the Second Letter of St.Paul to the Corinthians 4: 7-15
July 25th : First reading
வியாழன், 23 ஜூலை, 2026
July 24th : Gospel The man who hears the word and understands it yields a rich harvest. A Reading from the Holy Gospel according to St.Matthew 13:18-23
July 24th : Gospel
July 24th : Responsorial Psalm Jeremiah 31:10, 11–12ab, 13 (R. see 10d) Response : The Lord will keep us, as a shepherd keeps his flock.
July 24th : Responsorial Psalm
July 24th : First reading Come back, my disloyal children. A Reading frim the book of the Prophet Jeremiah 3:14-17
July 24th : First reading
ஜூலை 24 : நற்செய்தி வாசகம் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்பவர்கள் பயன் அளிப்பர். மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-23
ஜூலை 24 : நற்செய்தி வாசகம்
ஜூலை 24 : பதிலுரைப் பாடல் எரே 31: 10. 11-12ab. 13 . (பல்லவி: 10d) பல்லவி: ஆயர் தம் மந்தையைக் காப்பது போல் ஆண்டவர் நம்மைக் காத்திடுவார்.
ஜூலை 24 : பதிலுரைப் பாடல்
ஜூலை 24 : முதல் வாசகம் என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 3: 14-17
ஜூலை 24 : முதல் வாசகம்
புதன், 22 ஜூலை, 2026
ஜூலை 23 : நற்செய்தி வாசகம் விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. ✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 10-17
ஜூலை 23 : நற்செய்தி வாசகம்
ஜூலை 23 : பதிலுரைப் பாடல் திபா 36: 5-6ab. 7-8. 9-10 (பல்லவி: 9a) பல்லவி: ஆண்டவரே, வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது.
ஜூலை 23 : பதிலுரைப் பாடல்
ஜூலை 23 : முதல் வாசகம் பொங்கிவழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 2: 1-3, 7-8, 12-13
ஜூலை 23 : முதல் வாசகம்
July 23rd : Gospel A Reading from the Holy Gospel according to St.Matthew 13:10–17
July 23rd : Gospel
July 23rd : Responsorial Psalm Psalm 36:6–7ab, 8–9, 10–11, (R. 10a) Response : With you, O Lord, is the fountain of life.
July 23rd : Responsorial Psalm