July 7th : Gospel
திங்கள், 6 ஜூலை, 2026
July 7th : Gospel The harvest is rich but the labourers are few. A Reading from the Holy Gospel according to St.Matthew 9: 32-37
July 7th : Responsorial Psalm Psalm 115:3–4. 5–6, 7ab and 8, 9–10 (R. 9a) Response : House of Israel, trust in the Lord.
July 7th : Responsorial Psalm
July 7th : First Reading They have sown the wind; they will reap the whirlwind. A Reading from the Book of.the Prophet Hosea 8: 4-7,11-13
July 7th : First Reading
நற்செய்தி வாசகம் அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 32-38
நற்செய்தி வாசகம்
அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 32-38
அக்காலத்தில்
பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, “இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை” என்றனர். ஆனால் பரிசேயர், “இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என்றனர்.
இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய்நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்.
அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 115: 3-4. 5-6. 7-8. 9-10 (பல்லவி: 9a) பல்லவி: இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.
பதிலுரைப் பாடல்
பல்லவி: இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 10: 14அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அல்லேலூயா.
முதல் வாசகம் அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்; கடும்புயலை அறுப்பார்கள். இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 8: 4-7, 11-13
07 ஜூலை 2026, செவ்வாய்
பொதுக்காலம் 14ஆம் வாரம் - செவ்வாய்
முதல் வாசகம்
அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்; கடும்புயலை அறுப்பார்கள்.
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 8: 4-7, 11-13
ஆண்டவர் கூறுவது:
இஸ்ரயேல் மக்கள் தாங்களே அரசர்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்; அது என்னாலே அன்று; அவர்களே தலைவர்களை நியமித்துக் கொண்டார்கள்; அதைப் பற்றியும் நான் ஒன்றுமறியேன். தங்கள் வெள்ளியாலும் பொன்னாலும் தங்களுக்கு எனச் சிலைகளைச் செய்தார்கள்; தாங்கள் அழிந்து போகவே அவற்றைச் செய்தார்கள். சமாரியா மக்கள் வழிபடும் கன்றுக்குட்டியை நான் வெறுக்கின்றேன்; என் கோபத் தீ அவர்களுக்கு எதிராய் எரிகின்றது. இன்னும் எத்துணைக் காலம் அவர்கள் தூய்மை அடையாது இருப்பார்கள்? அந்தக் கன்றுக்குட்டி இஸ்ரயேலிடமிருந்து வந்ததன்றோ! அது கடவுளல்லவே! கைவினைஞன் ஒருவன்தானே அதைச் செய்தான்! சமாரியாவின் கன்றுக்குட்டி தவிடுபொடியாகும். அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்; கடும் புயலை அறுப்பார்கள். வளரும் பயிர் முற்றுவதில்லை; கோதுமை நன்றாக விளைவதில்லை; அப்படியே விளைந்தாலும், அன்னியரே அதை விழுங்குவர்.
எப்ராயிம் பாவம் செய்வதற்கென்றே பலிபீடங்கள் பல செய்து கொண்டான்; அப்பீடங்களே அவன் பாவம் செய்வதற்குக் காரணமாயின. ஆயிரக்கணக்கில் நான் திருச்சட்டங்களை எழுதிக் கொடுத்தாலும், அவை நமக்கில்லை என்றே அவர்கள் கருதுவார்கள். பலியை அவர்கள் விரும்புகின்றார்கள்; பலி கொடுத்து, அந்த இறைச்சியையும் உண்ணுகிறார்கள்; அவற்றின் மேல் ஆண்டவர் விருப்பம் கொள்ளவில்லை; அதற்கு மாறாக, அவர்கள் தீச்செயல்களை நினைவில் கொள்கின்றார்; அவர்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை வழங்குவார்; அவர்களோ எகிப்து நாட்டிற்குத் திரும்புவார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
ஞாயிறு, 5 ஜூலை, 2026
July 6th : Gospel 'Your faith has restored you to health'A Reading from the Holy Gospel according to St.Matthew 9: 18-26
July 6th : Responsorial PsalmPsalm 145:2–3, 4–5, 6–7, 8–9 (R. 8a)Response : The Lord is kind and full of compassion.
July 6th : First ReadingI will betroth you to myself and you will come to know the name of the LordA Reading from the Book of the Prophet Hosea 2:14, 15cd–16, 19–20
ஜூலை 6 : நற்செய்தி வாசகம்என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-26
ஜூலை 6 : பதிலுரைப் பாடல்திபா 145: 2-3. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.
ஜூலை 6 : முதல் வாசகம்முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மணஒப்பந்தம் செய்துகொள்வேன்.இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 2: 14-16, 19-20
சனி, 4 ஜூலை, 2026
ஜூலை 5 : நற்செய்தி வாசகம் நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-30
ஜூலை 5 : நற்செய்தி வாசகம்
ஜூலை 5 : இரண்டாம் வாசகம் தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 9, 11-13 சகோதரர் சகோதரிகளே,
ஜூலை 5 : இரண்டாம் வாசகம்
ஜூலை 5 : பதிலுரைப் பாடல் திபா 145: 1-2. 8-9. 10-11. 13ab-14 (பல்லவி: 1a) பல்லவி: என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்.
ஜூலை 5 : பதிலுரைப் பாடல்
ஜூலை 5 : முதல் வாசகம் இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 9: 9-10
ஜூலை 5 : முதல் வாசகம்
July 5th : Gospel You have hidden these things from the wise and revealed them to little children A Reading from the Holy Gospel according to St.Matthew 11: 25-30
July 5th : Gospel
July 5th : Second Reading If by the Spirit you put an end to the misdeeds of the body, you will live A Reading from the letter of St.Paul to the Romans 8: 9,11-13
July 5th : Second Reading
July 5th : Responsorial Psalm Psalm 145:1–2, 8–9, 10–11, 13cd–14 (R. see 1)
July 5th : Responsorial Psalm
July 5th : First Reading See now, your king comes humbly to you A Reading from the book of the Prophet Zechariah 9: 9-10
July 5th : First Reading
வெள்ளி, 3 ஜூலை, 2026
நற்செய்தி வாசகம் மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-17
நற்செய்தி வாசகம்
மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-17
அக்காலத்தில்
யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்பொழுது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.
மேலும் எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில் அந்த ஒட்டு ஆடையைக் கிழித்துவிடும்; கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் தோற்பைகள் வெடிக்கும்; மதுவும் சிந்திப்போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் வீணாய்ப் போகா” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 85: 8ab,10-11. 12-13 (பல்லவி: 8 காண்க) பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு நிறைவாழ்வை வாக்களிக்கின்றார்.
பதிலுரைப் பாடல்
திபா 85: 8ab,10-11. 12-13 (பல்லவி: 8 காண்க)
பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு நிறைவாழ்வை வாக்களிக்கின்றார்.
8ab
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார். - பல்லவி
10
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். - பல்லவி
12
நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.
13
நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.
பொதுக்காலம் 13ஆம் வாரம் - சனி முதல் வாசகம் என் மக்களாகிய இஸ்ரயேலை முன்னைய நன்னிலைக்குக் கொண்டு வருவேன். இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 9: 11-15
பொதுக்காலம் 13ஆம் வாரம் - சனி
முதல் வாசகம்
என் மக்களாகிய இஸ்ரயேலை முன்னைய நன்னிலைக்குக் கொண்டு வருவேன்.
இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 9: 11-15
ஆண்டவர் கூறுவது:
“அந்நாள்களில் விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் உயர்த்துவேன். அதிலுள்ள கிழிசல்களைப் பழுதுபார்த்துச் சிதைந்தவற்றைச் சீர்படுத்திப் பண்டை நாளில் இருந்தது போல் மீண்டும் கட்டி எழுப்புவேன். அப்பொழுது, ஏதோமில் எஞ்சியிருப்போரையும் எனது பெயரைத் தாங்கியிருக்கும் பிற இனத்தார் அனைவரையும் அவர்கள் தங்கள் உடைமை ஆக்கிக் கொள்வார்கள்,” என்கிறார் இதைச் செயல்படுத்தும் ஆண்டவர்.
“இதோ! நாள்கள் வரப் போகின்றன; அப்போது, அறுவடை செய்வோரை உழுவோரும், கனி பிழிவோரை விதைப்போரும் தொடர்ந்து முன்னேறுவர்; மலைகள் இனிய இரசத்தைப் பொழியும்; குன்றுகள்தோறும் அது வழிந்தோடும்” என்கிறார் ஆண்டவர். “என் மக்களாகிய இஸ்ரயேலை முன்னைய நன்னிலைக்குக் கொண்டு வருவேன்; அவர்கள் பாழடைந்த நகர்களைத் திரும்பக் கட்டி அவற்றில் குடியேறுவார்கள்; திராட்சைத் தோட்டங்களை அமைத்து அவற்றின் கனிரசத்தை அருந்துவார்கள். பழத் தோட்டங்கள் அமைத்து அவற்றின் கனிகளை உண்பார்கள். அவர்களைத் தங்கள் நாட்டில் மீண்டும் நான் வேரூன்றச் செய்வேன்; நான் அவர்களுக்கு அளித்திருக்கும் நாட்டிலிருந்து இனி ஒருபோதும் அவர்கள் பிடுங்கப்பட மாட்டார்கள்” என்கிறார் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
July 4th : Gospel When the bridegroom is taken from them, then they will fast A Reading from the Holy Gospel according to St.Matthew 9: 14-17
July 4th : Gospel
July 4th : Responsorial Psalm Psalm 85:9, 11–12, 13–14 (R. see 9b)
July 4th : Responsorial Psalm
July 4th : First Reading I will restore the fortunes of my people Israel A Reading from the Book of the Prophet Amos 9: 11-15
July 4th : First Reading
வியாழன், 2 ஜூலை, 2026
ஜூலை 3 : நற்செய்தி வாசகம் நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 24-29
ஜூலை 3 : நற்செய்தி வாசகம்
ஜூலை 3 : இரண்டாம் வாசகம் திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-22 சகோதரர் சகோதரிகளே,
ஜூலை 3 : இரண்டாம் வாசகம்
ஜூலை 3 : பதிலுரைப் பாடல் திபா 117: 1. 2 (பல்லவி: மாற் 16: 15) பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
ஜூலை 3 : பதிலுரைப் பாடல்
ஜூலை 3 : புனித தோமா - இந்தியாவின் திருத்தூதர் விழா முதல் வாசகம் மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52: 7-10
ஜூலை 3 : புனித தோமா - இந்தியாவின் திருத்தூதர் விழா
July 3rd : Gospel 'My Lord and my God!' A Reading from the Holy Gospel according to St.John 20: 24-29
July 3rd : Gospel