Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Monday, September 29, 2025

30 செப்டம்பர் 2025, செவ்வாய் பொதுக்காலம் 26ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள். இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 8: 20-23

 30 செப்டம்பர் 2025, செவ்வாய்

பொதுக்காலம் 26ஆம் வாரம் - செவ்வாய்

முதல் வாசகம்


வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.


இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 8: 20-23



படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: மக்களினங்களுள் பல நகர்களில் குடியிருப்போரும் கூட வருவார்கள். ஒரு நகரில் குடியிருப்போர் மற்றொரு நகரினரிடம் சென்று, “நாம் ஆண்டவரது அருளை மன்றாடவும் படைகளின் ஆண்டவரை வழிபடவும், தேடவும், நாடவும் விரைந்து செல்வோம், வாருங்கள்; நாங்களும் வருகிறோம்” என்று சொல்வார்கள். மக்களினங்கள் பலவும் வலிமை வாய்ந்த வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.


படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “அந்நாள்களில் ஒவ்வொரு மொழி பேசும் வேற்றினத்தாரிலும் பத்துப் பேர் மேலாடையைப் பற்றிக் கொண்டு, ‘கடவுள் உங்களோடு இருக்கின்றார்’ என்று நாங்கள் கேள்விப்பட்டதால் நாங்களும் உங்களோடு வருகிறோம் என்பார்கள்.”


ஆண்டவரின் அருள்வாக்கு.

Sunday, September 28, 2025

நற்செய்தி வாசகம்கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 47-51

நற்செய்தி வாசகம்


கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்.


✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 47-51


அக்காலத்தில்


நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார். நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.


அதற்கு இயேசு, “உம்மை அத்தி மரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார். மேலும் “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.


ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்திபா 138: 1-2a. 2b-3. 4-5 (பல்லவி: 1c)பல்லவி: ஆண்டவரே! தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

பதிலுரைப் பாடல்

திபா 138: 1-2a. 2b-3. 4-5 (பல்லவி: 1c)

பல்லவி: ஆண்டவரே! தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

1
ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
2a
உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள்பணிவேன். - பல்லவி

2b
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.
3
நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். - பல்லவி

4
ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர்.
5
ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 103: 21

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள். அல்லேலூயா.

செப்டம்பர் 29 : தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் - அதிதூதர்கள் விழாமுதல் வாசகம்பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்.இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10, 13-14

செப்டம்பர் 29 :  தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் - அதிதூதர்கள் விழா

முதல் வாசகம்

பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10, 13-14
நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன.

இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டுவரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 29th : Gospel You will see heaven laid open, and the Son of ManA reading from the Holy Gospel according to St.John 1:47-51

September 29th :  Gospel 

You will see heaven laid open, and the Son of Man

A reading from the Holy Gospel according to St.John 1:47-51 

When Jesus saw Nathanael coming he said of him, ‘There is an Israelite who deserves the name, incapable of deceit.’ ‘How do you know me?’ said Nathanael. ‘Before Philip came to call you,’ said Jesus ‘I saw you under the fig tree.’ Nathanael answered, ‘Rabbi, you are the Son of God, you are the King of Israel.’ Jesus replied, ‘You believe that just because I said: I saw you under the fig tree. You will see greater things than that.’ And then he added ‘I tell you most solemnly, you will see heaven laid open and, above the Son of Man, the angels of God ascending and descending.’

The Word of the Lord.

September 29th : Responsorial PsalmPsalm 138:1–2a, 2bcd–3, 4–5 (R. 1c)Respinse : In the presence of the angels I praise you, O Lord.

September 29th : Responsorial Psalm

Psalm 138:1–2a, 2bcd–3, 4–5 (R. 1c)

Respinse : In the presence of the angels I praise you, O Lord.

I thank you, Lord, with all my heart; you have heard the words of my mouth. In the presence of the angels I praise you. I bow down toward your holy temple.

Respinse : In the presence of the angels I praise you, O Lord.

I give thanks to your name for your merciful love and your faithfulness. You have exalted your name over all. On the day I called, you answered me; you increased the strength of my soul.

Respinse : In the presence of the angels I praise you, O Lord.

All earth’s kings shall thank you, O Lord when they hear the words of your mouth. They shall sing of the ways of the Lord, “How great is the glory of the Lord!”

Respinse : In the presence of the angels I praise you, O Lord.

Gospel Acclamation 

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. Bless the Lord, all his hosts, his servants, who do his will.

R. Alleluia.

September 29th : First ReadingHis robe was white as snowA reading from the book of Daniel 7:9-10,13-14

September 29th : First Reading

His robe was white as snow

A reading from the book of Daniel 7:9-10,13-14 

“As I looked, thrones were placed, and the Ancient of Days took his seat; his clothing was white as snow, and the hair of his head like pure wool; his throne was fiery flames; its wheels were burning fire. A stream of fire issued and came out from before him; a thousand thousands served him, and ten thousand times ten thousand stood before him; the court sat in judgment, and the books were opened. I saw in the night visions, and behold, with the clouds of heaven there came one like a son of man, and he came to the Ancient of Days and was presented before him. And to him was given dominion and glory and a kingdom, that all peoples, nations, and languages should serve him; his dominion is an everlasting dominion, which shall not pass away, and his kingdom one that shall not be destroyed.”

The word of the Lord.