Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Monday, September 29, 2025

September 30th : Gospel Jesus sets out for Jerusalem A reading from the Holy Gospel according to St.Luke 9: 51-56

 September 30th :  Gospel 

Jesus sets out for Jerusalem

A reading from the Holy Gospel according to St.Luke 9: 51-56 


When the days drew near for Jesus to be taken up, he set his face to go to Jerusalem. And he sent messengers ahead of him, who went and entered a village of the Samaritans, to make preparations for him. But other people did not receive him, because his face was set towards Jerusalem. And when his disciples James and John saw it, they said, “Lord, do you want us to tell fire to come down from heaven and consume them?” But he turned and rebuked them. And they went on to another village.

The Gospel of the Lord.

September 30th : Responsorial Psalm Psalm 87:1–3, 4–5, 6–7 (R. Zechariah 8:23) Response : God is with us.

 September 30th :  Responsorial Psalm

Psalm 87:1–3, 4–5, 6–7 (R. Zechariah 8:23)


Response :  God is with us.

Founded by him on the holy mountain, the Lord loves the gates of Sion, more than all the dwellings of Jacob. Of you are told glorious things, you, O city of God!

Response :  God is with us.

“Rahab and Babylon I will count among those who know me; of Tyre, Philistia, Ethiopia, it is told, ‘There was this one born.’ But of Sion it shall be said, “Each one was born in her.” He, the Most High, established it.

Response :  God is with us.

In his register of peoples the Lord writes, “Here was this one born.” The singers cry out in chorus, “In you, all find their home.

Response :  God is with us.

Gospel Acclamation 

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. The Son of Man came not to be served but to serve, and to give his life as a ransom for many.


September 30th : First reading Many peoples and great nations will come to seek the Lord of Hosts. A reading from the book of Zechariah 8: 20-23

 September 30th :  First reading

Many peoples and great nations will come to seek the Lord of Hosts.

A reading from the book of Zechariah 8: 20-23 


“Thus says the Lord of hosts: Peoples shall yet come, even the inhabitants of many cities. The inhabitants of one city shall go to another, saying, ‘Let us go at once to entreat the favour of the Lord, and to seek the Lord of hosts; I myself am going.’ Many peoples and strong nations shall come to seek the Lord of hosts in Jerusalem and to entreat the favour of the Lord. Thus says the Lord of hosts: In those days ten men from the nations of every tongue shall take hold of the robe of a Jew, saying, ‘Let us go with you, for we have heard that God is with you.’”

The word of the Lord.

நற்செய்தி வாசகம் இயேசு எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்தார். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-56

 நற்செய்தி வாசகம்


இயேசு எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்தார்.


✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-56



இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.


அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு அவர்கள் வேறு ஓர் ஊருக்குச் சென்றார்கள்.


ஆண்டவரின் அருள்வாக்கு.

பொதுக்காலம் 26ஆம் வாரம் - செவ்வாய் பதிலுரைப் பாடல் திபா 87: 1-3. 4-5. 6-7 (பல்லவி: செக் 8: 23) பல்லவி: கடவுள் நம்மோடு இருக்கின்றார்.

 பொதுக்காலம் 26ஆம் வாரம் - செவ்வாய்

பதிலுரைப் பாடல்


திபா 87: 1-3. 4-5. 6-7 (பல்லவி: செக் 8: 23)

பல்லவி: கடவுள் நம்மோடு இருக்கின்றார்.



1

நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது.

2

யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும்விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார்.

3

கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. - பல்லவி


4

எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, ‘இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்’ என்று கூறப்படும்.

5

‘இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!’ என்று சீயோனைப் பற்றிச் சொல்லப்படும். - பல்லவி


6

மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, ‘இவர் இங்கேதான் பிறந்தார்’ என ஆண்டவர் எழுதுவார்.

7

ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து ‘எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது; எல்லாரின் உறைவிடமும் உன்னிடமே உள்ளது’ என்பர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 10: 45

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.


30 செப்டம்பர் 2025, செவ்வாய் பொதுக்காலம் 26ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள். இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 8: 20-23

 30 செப்டம்பர் 2025, செவ்வாய்

பொதுக்காலம் 26ஆம் வாரம் - செவ்வாய்

முதல் வாசகம்


வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.


இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 8: 20-23



படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: மக்களினங்களுள் பல நகர்களில் குடியிருப்போரும் கூட வருவார்கள். ஒரு நகரில் குடியிருப்போர் மற்றொரு நகரினரிடம் சென்று, “நாம் ஆண்டவரது அருளை மன்றாடவும் படைகளின் ஆண்டவரை வழிபடவும், தேடவும், நாடவும் விரைந்து செல்வோம், வாருங்கள்; நாங்களும் வருகிறோம்” என்று சொல்வார்கள். மக்களினங்கள் பலவும் வலிமை வாய்ந்த வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.


படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “அந்நாள்களில் ஒவ்வொரு மொழி பேசும் வேற்றினத்தாரிலும் பத்துப் பேர் மேலாடையைப் பற்றிக் கொண்டு, ‘கடவுள் உங்களோடு இருக்கின்றார்’ என்று நாங்கள் கேள்விப்பட்டதால் நாங்களும் உங்களோடு வருகிறோம் என்பார்கள்.”


ஆண்டவரின் அருள்வாக்கு.

Sunday, September 28, 2025

நற்செய்தி வாசகம்கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 47-51

நற்செய்தி வாசகம்


கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்.


✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 47-51


அக்காலத்தில்


நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார். நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.


அதற்கு இயேசு, “உம்மை அத்தி மரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார். மேலும் “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.


ஆண்டவரின் அருள்வாக்கு.