செப்டம்பர் 9 : பதிலுரைப் பாடல்
திபா 150: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 6)
பல்லவி: அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்திடுக!
அல்லது: அல்லேலூயா.
1
தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்! வலிமைமிகு விண்விரிவில் அவரைப் போற்றுங்கள்!
2
அவர்தம் வல்ல செயல்களுக்காய் அவரைப் போற்றுங்கள்! அவர்தம் எல்லையிலா மாண்பினைக் குறித்து அவரைப் போற்றுங்கள்! - பல்லவி
3
எக்காளம் முழங்கியே அவரைப் போற்றுங்கள்! வீணையுடன் யாழிசைத்து அவரைப் போற்றுங்கள்.
4
மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து அவரைப் போற்றுங்கள்! யாழினை மீட்டி, குழலினை ஊதி அவரைப் போற்றுங்கள்! - பல்லவி
5
சிலம்பிடும் சதங்கையுடன் அவரைப் போற்றுங்கள்! ‘கலீர்’ எனும் தாளத்துடன் அவரைப் போற்றுங்கள்!
6
அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்திடுக! - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
1 யோவா 4: 12
அல்லேலூயா, அல்லேலூயா!
நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். அல்லேலூயா
No comments:
Post a Comment