March 14th : Gospel
வெள்ளி, 13 மார்ச், 2026
March 14th : Gospel The tax collector, not the Pharisee, went home justified. A Reading from the Holy Gospel according to St.Luke 18: 9-14
March 14th : Responsorial Psalm Psalm 51:3–4, 18–19, 20–21ab (See Hosea 6:6) Response : I desire steadfast love, and not sacrifice.
March 14th : Responsorial Psalm
Psalm 51:3–4, 18–19, 20–21ab (See Hosea 6:6)
Response : I desire steadfast love, and not sacrifice.
Have mercy on me, O God, according to your merciful love; according to your great compassion, blot out my transgressions. Wash me completely from my iniquity, and cleanse me from my sin.
R.: I desire steadfast love, and not sacrifice.
For in sacrifice you take no delight; burnt offering from me would not please you. My sacrifice to God, a broken spirit: a broken and humbled heart, O God, you will not spurn.
R.: I desire steadfast love, and not sacrifice.
In your good pleasure, show favour to Sion; rebuild the walls of Jerusalem. Then you will delight in right sacrifice, burnt offerings wholly consumed.
R.: I desire steadfast love, and not sacrifice.
Verse before the Gospel
V. Glory and praise to you, O Christ.
R. Glory and praise to you, O Christ.
V. O that today you would listen to his voice! Harden not your hearts.
R. Glory and praise to you, O Christ.
March 14th : First Reading What I want is love, not sacrifice and holocausts A Reading from the Book of the Prophet Hosea 6: 1-6
March 14th : First Reading
What I want is love, not sacrifice and holocausts
A Reading from the Book of the Prophet Hosea 6: 1-6
“Come, let us return to the Lord; for he has torn us, that he may heal us; he has struck us down, and he will bind us up. After two days he will revive us; on the third day he will raise us up, that we may live before him. Let us know; let us press on to know the Lord; his going out is sure as the dawn; he will come to us as the showers, as the spring rains that water the earth.” What shall I do with you, O Ephraim? What shall I do with you, O Judah? Your love is like a morning cloud, like the dew that goes early away. Therefore I have hewn them by the prophets; I have slain them by the words of my mouth, and my judgment goes forth as the light. For I desire steadfast love and not sacrifice, the knowledge of God rather than burnt offerings.”
The Word of the Lord.
மார்ச் 14 : நற்செய்தி வாசகம் பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-14
மார்ச் 14 : நற்செய்தி வாசகம்
பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-14
அக்காலத்தில்
தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:
“இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.’
ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார்.”
இயேசு, “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மார்ச் 14 : பதிலுரைப் பாடல் திபா 51: 1-2. 16-17. 18-19ab (பல்லவி: ஓசே 6:6) பல்லவி: பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகின்றேன்
மார்ச் 14 : பதிலுரைப் பாடல்
திபா 51: 1-2. 16-17. 18-19ab (பல்லவி: ஓசே 6:6)
பல்லவி: பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகின்றேன்
1
கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2
என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி
16
ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
17
கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை. - பல்லவி
18
சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!
19ab
அப்பொழுது எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர். - பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
திபா 95: 7b, 8b காண்க
'உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக, அவரது குரலுக்குச் செவிகொடுங்கள்’ என்கிறார் ஆண்டவர்.
மார்ச் 14 : முதல் வாசகம் உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன். இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6
மார்ச் 14 : முதல் வாசகம்
உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்.
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6
“வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார். இரண்டு நாளுக்குப் பிறகு நமக்குப் புத்துயிர் அளிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்பிவிடுவார்; அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம். நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப் பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது; மழை போலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரி போலவும் அவர் நம்மிடம் வருவார்” என்கிறார்கள்.
எப்ராயிமே! உன்னை நான் என்ன செய்வேன்? யூதாவே! உன்னை நான் என்ன செய்வேன்? உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே! அதனால்தான் நான் இறைவாக்கினர் வழியாக அவர்களை வெட்டி வீழ்த்தினேன்; என் வாய்மொழிகளால் அவர்களைக் கொன்றுவிட்டேன்; எனது தண்டனைத் தீர்ப்பு ஒளிபோல வெளிப்படுகின்றது. உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்; எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.