ஞாயிறு, 31 மே, 2026
June 1st : Gospel They seized the beloved son, killed him and threw him out of the vineyardA Reading from the Holy Gospel according to St.Mark 12: 1-12
June 1st : Responsorial PsalmPsalm 91:1–2, 14–15ab, 15c–16 (R. see 2b)Response : O my God, I trust in you.
June 1st : First reading You will be able to share the divine nature if you add goodness to your faithA Reading from the Second letter of St.Peter 1:2-7
ஜூன் 1 : நற்செய்தி வாசகம்அன்பு மகனைப் பிடித்துக் கொன்று, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-12
ஜூன் 1 : பதிலுரைப் பாடல்திபா 91: 1-2. 14-15ab. 15c-16 (பல்லவி: 2b)பல்லவி: ஆண்டவரே, நீரே நான் நம்பியிருக்கும் இறைவன்.
ஜூன் 1 : முதல் வாசகம்இறைப்பற்றுடன் வாழத் தேவையான எல்லாவற்றையும் நமக்கு அருளியுள்ளார்.திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-7
சனி, 30 மே, 2026
மே 31 : நற்செய்தி வாசகம் உலகை மீட்கவே கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பினார். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-18
மே 31 : நற்செய்தி வாசகம்
மே 31 : இரண்டாம் வாசகம் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக! திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 13: 11-13
மே 31 : இரண்டாம் வாசகம்
இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 13: 11-13
சகோதரர் சகோதரிகளே,
இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வது: மகிழ்ச்சியாய் இருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்; என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.
தூய முத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். இங்குள்ள இறைமக்கள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திவெ 1: 8 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா!
இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா.
மே 31 : பதிலுரைப் பாடல் தானி (இ) 1: 29ac. 30,31. 32,33 (பல்லவி: 29b)
மே 31 : பதிலுரைப் பாடல்
தானி (இ) 1: 29ac. 30,31. 32,33 (பல்லவி: 29b)
பல்லவி: என்றென்றும் நீர் புகழப் பெறவும் ஏத்திப் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர்.
29a
எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக;
29c
மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. - பல்லவி
30
உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப் பெறுவீராக;
31
கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. - பல்லவி
32
உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப் பெறுவீராக;
33
உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக. - பல்லவி
மே 31 : மூவொரு கடவுள் பெருவிழா முதல் வாசகம் இரக்கமும் பரிவும் உள்ளவர் இறைவன். விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 34: 4b-6, 8-9
மே 31 : மூவொரு கடவுள் பெருவிழா
May 31st : Gospel God sent his Son so that through him the world might be saved A Reading from the Holy Gospel according to St.John 3:16-18
May 31st : Gospel
May 31st : Second Reading The grace of Jesus Christ, the love of God, and the fellowship of the Holy Spirit A Reading from the Second Letter of St.Paul to the Corinthians 13:11-14
May 31st : Second Reading
May 31st : Responsorial Psalm Daniel 3:52, 53, 54, 55, 56 (R. see 52b) Response : You are to be praised and highly exalted forever!
May 31st : Responsorial Psalm
May 31st : First Reading 'Lord, Lord, a God of tenderness and compassion' A Reading from the Book of Exodus 34:4-6,8-9
May 31st : First Reading
வெள்ளி, 29 மே, 2026
மே 30 : நற்செய்தி வாசகம் எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-33
மே 30 : நற்செய்தி வாசகம்
எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-33
அக்காலத்தில்
இயேசுவும் அவருடைய சீடர்களும் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்துகொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து, “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?” என்று கேட்டனர். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன். திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்” என்றார். அவர்கள், “ ‘விண்ணகத்திலிருந்து வந்தது’ என்போமானால், ‘பின் ஏன் அவரை நம்பவில்லை’ எனக் கேட்பார். எனவே ‘மனிதரிடமிருந்து வந்தது’ என்போமா?” என்று தங்களிடையே பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள். எனவே, அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், “எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மே 30 : பதிலுரைப் பாடல் திபா 63: 1. 2-3. 4-5 (பல்லவி: 1b) பல்லவி: ஆண்டவரே, என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.
மே 30 : பதிலுரைப் பாடல்
திபா 63: 1. 2-3. 4-5 (பல்லவி: 1b)
பல்லவி: ஆண்டவரே, என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.
1
கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. - பல்லவி
2
உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.
3
ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. - பல்லவி
4
என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.
5
அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
கொலோ 3: 16a, 17c
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அல்லேலூயா
மே 30 : முதல் வாசகம் வழுவாதபடி உங்களைக் காக்கவும் மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லவர் கடவுளே. திருத்தூதர் யூதா எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 17, 20-25
மே 30 : முதல் வாசகம்
வழுவாதபடி உங்களைக் காக்கவும் மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லவர் கடவுளே.
திருத்தூதர் யூதா எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 17, 20-25
அன்பார்ந்தவர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்கள் முன்னுரைத்த வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்.
தூய்மைமிகு விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புங்கள்; தூய ஆவியின் துணையுடன் வேண்டுதல் செய்யுங்கள்.
கடவுளது அன்பில் நிலைத்திருங்கள். என்றுமுள்ள நிலைவாழ்வைப் பெற நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை எதிர்பார்த்திருங்கள். நம்பத் தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள். வேறு சிலரை அழிவுத் தீயிலிருந்து பிடித்திழுத்துக் காப்பாற்றுங்கள். மற்றும் சிலருக்கு இரக்கம் காட்டும்போது எச்சரிக்கையாய் இருங்கள்; ஊனியல்பால் கறைப்பட்ட அவர்களது ஆடையையும் வெறுத்துத் தள்ளுங்கள்.
வழுவாதபடி உங்களைக் காக்கவும் தமது மாட்சித் திருமுன் மகிழ்ச்சியோடு உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்ல நம் மீட்பராகிய ஒரே கடவுளுக்கு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய், மாட்சியும் மாண்பும் ஆற்றலும் ஆட்சியும் ஊழிக் காலந்தொட்டு இன்றும் என்றென்றும் உரியன. ஆமென்!
ஆண்டவரின் அருள்வாக்கு
May 30th : Gospel I will not tell you my authority for acting like this A Reading from the Holy Gospel according to St.Mark 11:27-33
May 30th : Gospel
I will not tell you my authority for acting like this
A Reading from the Holy Gospel according to St.Mark 11:27-33
At that time : Jesus and the disciples came again to Jerusalem. And as he was walking in the temple, the chief priests and the scribes and the elders came to him, and they said to him, “By what authority are you doing these things, or who gave you this authority to do them?” Jesus said to them, “I will ask you one question; answer me, and I will tell you by what authority I do these things. Was the baptism of John from heaven or from man? Answer me.” And they discussed it with one another, saying, “If we say, ‘From heaven’, he will say, ‘Why then did you not believe him?’ But shall we say, ‘From man’?” they were afraid of the people, for they all held that John really was a prophet. So they answered Jesus, “We do not know.” And Jesus said to them, “Neither will I tell you by what authority I do these things.”
The Gospel of the Lord
May 30th : Responsorial Psalm Psalm 63:2, 3–4, 5–6 (R. see 2b) Response : For you my soul is thirsting, O Lord, my God.
May 30th : Responsorial Psalm
Psalm 63:2, 3–4, 5–6 (R. see 2b)
Response : For you my soul is thirsting, O Lord, my God.
O God, you are my God; at dawn I seek you; for you my soul is thirsting. For you my flesh is pining, like a dry, weary land without water.
R.: For you my soul is thirsting, O Lord, my God.
I have come before you in the sanctuary, to behold your strength and your glory. Your loving mercy is better than life; my lips will speak your praise.
R.: For you my soul is thirsting, O Lord, my God.
I will bless you all my life; in your name I will lift up my hands. My soul shall be filled as with a banquet; with joyful lips, my mouth shall praise you.
R.: For you my soul is thirsting, O Lord, my God.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. Let the word of Christ dwell in you richly, giving thanks to God the Father through him.
R. Alleluia.
May 30th : First reading Use your most holy faith as your foundation A Reading from the letter of St.Jude 1:17,20-25
May 30th : First reading
Use your most holy faith as your foundation
A Reading from the letter of St.Jude 1:17,20-25
You must remember, beloved, the predictions of the apostles of our Lord Jesus Christ. Building yourselves up in your most holy faith and praying in the Holy Spirit, keep yourselves in the love of God, waiting for the mercy of our Lord Jesus Christ that leads to eternal life. And have mercy on those who doubt; save others by snatching them out of the fire; to others show mercy with fear, hating even the garment stained by the flesh. Now to him who is able to keep you from stumbling and to present you blameless before the presence of his glory with great joy, to the only God, our Saviour, through Jesus Christ our Lord, be glory, majesty, dominion, and authority, before all time and now and for ever. Amen.
The Word of the Lord
வியாழன், 28 மே, 2026
மே 29 : நற்செய்தி வாசகம் என் இல்லம் மக்கள் அனைவர்க்கும் உரிய இறைவேண்டலின் வீடு. ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 11-26
மே 29 : நற்செய்தி வாசகம்
என் இல்லம் மக்கள் அனைவர்க்கும் உரிய இறைவேண்டலின் வீடு.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 11-26
அக்காலத்தில்
இயேசு எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார். அவர் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ஏற்கெனவே மாலை வேளையாகி விட்டதால், பன்னிருவருடன் பெத்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பியபொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று. இலையடர்ந்த ஓர் அத்தி மரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத் தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக்காலம் அல்ல. அவர் அதைப் பார்த்து, “இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது” என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். கோவிலுக்குள் சென்றதும் இயேசு அங்கு விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார்; நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார். கோவில் வழியாக எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல அவர் விடவில்லை. “ ‘என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று அவர்களுக்குக் கற்பித்தார்; “ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்” என்றார்.
தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இதைக் கேட்டு, அவரை எப்படி ஒழித்து விடலாம் என்று வழி தேடினார்கள். எனினும் கூட்டத்தினர் அனைவரும் அவரது போதனையில் ஆழ்ந்து வியந்திருந்ததால் அவர்கள் அவருக்கு அஞ்சினார்கள்.
மாலை வேளை ஆனதும் இயேசுவும் சீடர்களும் நகரத்திலிருந்து வெளியேறினார்கள். காலையில் அவர்கள் அவ்வழியே சென்றபோது அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைக் கண்டார்கள். அப்போது பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து அவரை நோக்கி, “ரபி, அதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று” என்றார்.
அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: எவராவது இந்த மலையைப் பார்த்து, ‘பெயர்ந்து கடலில் விழு’ எனத் தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால், அவர் சொன்னவாறே நடக்கும். ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும். நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள். அப்போது உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார். நீங்கள் மன்னிக்காவிட்டால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்” என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு
மே 29 : பதிலுரைப் பாடல் திபா 96: 10. 11-12. 13 (பல்லவி: 13a)
மே 29 : பதிலுரைப் பாடல்
மே 29 : முதல் வாசகம் நீங்கள் கடவுளுடைய அருள்கொடைகளின் சீரிய பொறுப்பாளர்கள். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-13 அன்புக்குரியவர்களே,
மே 29 : முதல் வாசகம்
May 29th : Gospel A Reading from the Holy Gospel according to St.Mark 11:11–25
May 29th : Gospel
May 29th : Responsorial Psalm Psalm 96:10, 11–12, 13 (R. 13b)
May 29th : Responsorial Psalm
May 29th : First Reading A Reading from the First Letter of St.Peter 4:7–13
May 29th : First Reading
புதன், 27 மே, 2026
மே 28 : நற்செய்தி வாசகம் ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும். ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 46-52
மே 28 : நற்செய்தி வாசகம்
மே 28 : பதிலுரைப் பாடல் திபா 100: 1-2. 3. 4. 5 (பல்லவி: 2b) பல்லவி: மகிழ்ச்சி நிறை பாடலுடன் ஆண்டவர் திருமுன் வாருங்கள்! 1
மே 28 : பதிலுரைப் பாடல்
மே 28 : முதல் வாசகம் நீங்கள் அரச குருக்கள், தூய மக்கள், உங்கள் அழைப்புக்கேற்ப ஒழுகுங்கள். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 2-5, 9-12 அன்பிற்குரியவர்களே,
மே 28 : முதல் வாசகம்
May 28th : Gospel Go; your faith has saved you A Reading from the Holy Gospel according to St.Mark 10:46-52
May 28th : Gospel
May 28th : Responsorial Psalm Psalm 100:1–2, 3, 4, 5 (R. 2b)
May 28th : Responsorial Psalm
May 28th : First Reading You are a royal priesthood, a people set apart A Reading from the first letter of St.Peter 2:2-5, 9-12
May 28th : First Reading
You are a royal priesthood, a people set apart
A Reading from the first letter of St.Peter 2:2-5, 9-12
Beloved: Like newborn infants, long for the pure spiritual milk, that by it you may grow up into salvation — if indeed you have tasted that the Lord is good. As you come to him, a living stone rejected by men but in the sight of God chosen and precious, you yourselves like living stones are being built upas a spiritual house, to be a holy priesthood, to offer spiritual sacrifices acceptable to God through Jesus Christ. But you are a chosen race, a royal priesthood, a holy nation, a people for his own possession, that you may proclaim the excellencies of him who called you out of darkness into his marvellous light. Once you were not a people, but now you are God’s people; once you had not received mercy, but now you have received mercy. Beloved, I urge you as sojourners and exiles to abstain from the passions of the flesh, which wage war against your soul. Keep your conduct among the Gentiles honourable, so that when they speak against you as evildoers, they may see your good deed sand glorify God on the day of visitation.
The Word of the Lord.
செவ்வாய், 26 மே, 2026
மே 27 : நற்செய்தி வாசகம் எருசலேமில் மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார். ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 32-45
மே 27 : நற்செய்தி வாசகம்
எருசலேமில் மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 32-45
அக்காலத்தில்
சீடர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார். சீடர் திகைப்புற்றிருக்க, அவரைப் பின்பற்றிய ஏனையோர் அச்சம் கொண்டிருந்தனர். அவர் மீண்டும் பன்னிருவரை அழைத்துத் தமக்கு நிகழ இருப்பவற்றைக் குறித்துப் பேசத் தொடங்கினார்.
அவர், “இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து அவரைப் பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்; அவர்கள் ஏளனம் செய்து, அவர்மீது துப்பி, சாட்டையால் அடித்து அவரைக் கொலை செய்வார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று அவர்களிடம் கூறினார்.
செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்கள். அவர் அவர்களிடம், “நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, “நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்” என்று வேண்டினர்.
இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?” என்று கேட்டார்.
அவர்கள் அவரிடம், “இயலும்” என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, “நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப் புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்” என்று கூறினார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், “பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர், உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மே 27 : பதிலுரைப் பாடல் திபா 147: 12-13. 14-15. 19-20 (பல்லவி: 12a) பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!
மே 27 : பதிலுரைப் பாடல்