ஜூலை 19 : நற்செய்தி வாசகம்
சனி, 18 ஜூலை, 2026
ஜூலை 19 : நற்செய்தி வாசகம் அறுவடை வரை, இரண்டையும் வளர விடுங்கள். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-43
ஜூலை 19 : இரண்டாம் வாசகம் தூய ஆவியார் தாமே நமக்காகப் பரிந்து பேசுகிறார். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 26-27 சகோதரர் சகோதரிகளே,
ஜூலை 19 : இரண்டாம் வாசகம்
ஜூலை 19 : பதிலுரைப் பாடல் திபா 86: 5-6. 9-10. 15-16 (பல்லவி: 5a) பல்லவி: ஆண்டவரே, நீர் நல்லவர்; மன்னிப்பவர்.
ஜூலை 19 : பதிலுரைப் பாடல்
ஜூலை 19 : முதல் வாசகம் எம் பாவங்களிலிருந்து மனமாற்றம் அருள்கிறீர். சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 12: 13, 16-19
ஜூலை 19 : முதல் வாசகம்
July 19th : Gospel Let them both grow till the harvest A Reading from the Holy Gospel according to St.Matthew 13: 24-43
July 19th : Gospel
July 19th : Second reading The Spirit himself expresses our plea in a way that could never be put into words A Reading from the letter of St.Paul to the Romans 8:26-27
July 19th : Second reading
July 19th : Responsorial Psalm Psalm 86:5–6, 9–10, 15–16a (R. 5a) Response : O Lord, you are good and forgiving.
July 19th : Responsorial Psalm
July 19th : First reading You will grant repentance after sin A Reading from the Book of Wisdom 12:13,16-19
July 19th : First reading
நற்செய்தி வாசகம் இறைவாக்கினர் கூறியது நிறைவேறும்படி, தம்மை வெளிப்படுத்த வேண்டாம் என்று அவர்களுக்குக் கற்பித்தார். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 14-21
நற்செய்தி வாசகம்
இறைவாக்கினர் கூறியது நிறைவேறும்படி, தம்மை வெளிப்படுத்த வேண்டாம் என்று அவர்களுக்குக் கற்பித்தார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 14-21
அக்காலத்தில்
பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.
இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பலர் அவருக்குப்பின் சென்றனர். அவர்கள் எல்லாரையும் அவர் குணமாக்கினார். தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டாம் என அவர்களிடம் அவர் கண்டிப்பாகச் சொன்னார். இறைவாக்கினராகிய எசாயா உரைத்த பின்வரும் வாக்குகள் இவ்வாறு நிறைவேறின:
“இதோ என் ஊழியர்; இவர் நான் தேர்ந்து கொண்டவர். இவரே என் அன்பர்; இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது; இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; இவர் மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார். இவர் சண்டை சச்சரவு செய்ய மாட்டார்; கூக்குரலிட மாட்டார்; தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார்; நீதியை வெற்றிபெறச் செய்யும்வரை, நெரிந்த நாணலை முறியார்; புகையும் திரியை அணையார். எல்லா மக்களினங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 10: 1-2. 3-4. 7-8. 14 (பல்லவி: 12b) பல்லவி: ஆண்டவரே, எளியோரை மறந்துவிடாதேயும்.
பதிலுரைப் பாடல்
திபா 10: 1-2. 3-4. 7-8. 14 (பல்லவி: 12b)
பல்லவி: ஆண்டவரே, எளியோரை மறந்துவிடாதேயும்.
1
ஆண்டவரே, ஏன் தொலையில் நிற்கின்றீர்? தொல்லைமிகு நேரங்களில் ஏன் மறைந்து கொள்கின்றீர்?
2
பொல்லார் தம் இறுமாப்பினால் எளியோரைக் கொடுமைப் படுத்துகின்றனர்; அவர்கள் வகுத்த சதித் திட்டங்களில் அவர்களே அகப்பட்டுக் கொள்வார்களாக. - பல்லவி
3
பொல்லார் தம் தீய நாட்டங்களில் தற்பெருமை கொள்கின்றனர்; பேராசையுடையோர் ஆண்டவரைப் பழித்துப் புறக்கணிக்கின்றனர்.
4
பொல்லார் செருக்கு உள்ளவராதலால் அவரைத் தேடார்; அவர்கள் எண்ணமெல்லாம் ‘கடவுள் இல்லை’ என்பதே. - பல்லவி
7
அவர்களது வாய் சாபமும் கபடும் கொடுமையும் நிறைந்தது; அவர்களது நாவினடியில் கேடும் தீங்கும் இருக்கின்றன.
8
ஊர்களில் அவர்கள் ஒளிந்து காத்திருக்கின்றனர்; சூதறியாதவர்களை மறைவான இடங்களில் கொலை செய்கின்றனர்; திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே அவர்கள் கண்ணாயிருக்கின்றனர். - பல்லவி
14
ஆனால், உண்மையில் நீர் கவனிக்கின்றீர்; கேட்டையும் துயரத்தையும் பார்த்து, உதவி செய்யக் காத்திருக்கின்றீர்; திக்கற்றவர் தம்மை உம்மிடம் ஒப்படைக்கின்றனர்; அனாதைக்கு நீரே துணை. - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 கொரி 5: 19
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அவரே அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.
பொதுக்காலம் 15ஆம் வாரம் - சனி முதல் வாசகம் வயல்வெளிகள்மீது ஆசை கொண்டு, அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள். இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 2: 1-5
பொதுக்காலம் 15ஆம் வாரம் - சனி
முதல் வாசகம்
வயல்வெளிகள்மீது ஆசை கொண்டு, அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்.
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 2: 1-5
தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து தீச்செயல் புரியத் திட்டமிட்டுக் கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு ஐயோ கேடு! பொழுது புலர்ந்தவுடன் தங்கள் கை வலிமையினால் அவர்கள் அதைச் செய்து முடிக்கின்றார்கள். வயல்வெளிகள்மீது ஆசை கொண்டு, அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்; வீடுகள்மேல் இச்சை கொண்டு அவற்றைக் கைப்பற்றிக் கொள்கின்றார்கள்; ஆண்களை ஒடுக்கி, அவர்கள் வீட்டையும் உரிமைச் சொத்தையும் பறிமுதல் செய்கின்றார்கள்.
ஆதலால் ஆண்டவர் கூறுவது இதுவே: இந்த இனத்தாருக்கு எதிராகத் தீமை செய்யத் திட்டமிடுகிறேன்; அதனின்று உங்கள் தலையை விடுவிக்க உங்களால் இயலாது; நீங்கள் ஆணவம் கொண்டு நடக்க மாட்டீர்கள்; ஏனெனில் காலம் தீயதாய் இருக்கும். அந்நாளில் மக்கள் உங்களைப் பற்றி இரங்கற்பா இயற்றி, ‘அந்தோ! நாங்கள் அழிந்து ஒழிந்தோமே; ஆண்டவருடைய மக்களின் உரிமைச் சொத்து கைமாறி விட்டதே! நம்முடைய நிலங்களைப் பிடுங்கிக் கொள்ளைக்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றாரே!’ என்று ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள்.
ஆதலால், நூல் பிடித்துப் பாகம் பிரித்து உங்களுக்குத் தருபவன் எவனும் ஆண்டவரின் சபையில் இரான்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
July 18th : Gospel He cured them all but warned them not to make him known A Reading from the Holy Gospel according to St.Matthew 12:14-21
July 18th : Gospel
July 18th : Responsorial Psalm Psalm 10:1–2, 3–4, 7–8b, 14 (R. 12b) Response : Do not forget the poor, O Lord!
July 18th : Responsorial Psalm
July 18th : First Reading The plotters of evil will not escape A Reading from the Book of the Prophet Micah 2: 1-5
July 18th : First Reading