இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 20 ஜூலை, 2026

July 21st : Gospel My mother and my brothers are anyone who does the will of my Father in heaven A Reading from the Holy Gospel according to St.Matthew 12: 46-50

 July 21st : Gospel

My mother and my brothers are anyone who does the will of my Father in heaven
A Reading from the Holy Gospel according to St.Matthew 12: 46-50
At that time: While Jesus was speaking to the people, behold, his mother and his brothers stood outside, asking to speak to him. But he replied to the man who told him, “Who is my mother, and who are my brothers?” And stretching out his hand towards his disciples, he said, “Here are my mother and my brothers! For whoever does the will of my Father in heaven is my brother and sister and mother.”
The Gospel of the Lord.

July 21st : Responsorial Psalm Psalm 85:2–4, 5–6, 7–8 (R. 8a) Response : Let us see, O Lord, your mercy.

 July 21st : Responsorial Psalm

Psalm 85:2–4, 5–6, 7–8 (R. 8a)
Response : Let us see, O Lord, your mercy.
O Lord, you have favoured your land, and brought back the captives of Jacob. You forgave the guilt of your people, and covered all their sins. You averted all your rage; you turned back the heat of your anger.
R.: Let us see, O Lord, your mercy.
Bring us back, O God, our saviour! Put an end to your grievance against us. Will you be angry with us forever? Will your anger last from age to age?
R.: Let us see, O Lord, your mercy.
Will you not restore again our life, that your people may rejoice in you? Let us see, O Lord, your mercy, and grant us your salvation.
R.: Let us see, O Lord, your mercy.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. If anyone loves me, he will keep my word, says the Lord; and my Father will love him, and we will come to him.
R. Alleluia.

July 21st : First Reading Have pity on us one more time A Reading from the Book of the Prophet Micah 7: 14-15,18-20

 July 21st : First Reading

Have pity on us one more time
A Reading from the Book of the Prophet Micah 7: 14-15,18-20
Shepherd your people with your staff, the flock of your inheritance, who dwell alone in a forest in the midst of a garden land; let them graze in Bashan and Gilead as in the days of old. As in the days when you came out of the land of Egypt, I will show them marvellous things. Who is a God like you, pardoning iniquity and passing over transgression for the remnant of his inheritance? He does not retain his anger for ever, because he delights in steadfast love. He will again have compassion on us; he will tread our iniquities underfoot. You will cast all our sins into the depths of the sea. You will show faithfulness to Jacob and steadfast love to Abraham, as you have sworn to our fathers from the days of old.
The Word of the Lord

ஜூலை 21 : நற்செய்தி வாசகம் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, ``என் தாயும் சகோதரர்களும் இவர்களே'' என்றார் இயேசு. ✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 46-50

 ஜூலை 21 : நற்செய்தி வாசகம்

தம் சீடர் பக்கம் கையை நீட்டி, ``என் தாயும் சகோதரர்களும் இவர்களே'' என்றார் இயேசு.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 46-50

அக்காலத்தில்
மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவர் இயேசுவை நோக்கி, “அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கின்றார்கள்” என்றார்.
அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, “என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?” என்று கேட்டார். பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, “என் தாயும் சகோதரர்களும் இவர்களே. விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 21 : பதிலுரைப் பாடல் திபா 85: 1-3. 4-5. 6-7 (பல்லவி: 7a) பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்.

 ஜூலை 21 : பதிலுரைப் பாடல்

திபா 85: 1-3. 4-5. 6-7 (பல்லவி: 7a)
பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்.

1
ஆண்டவரே! உமது நாட்டின்மீது அருள் கூர்ந்தீர்; யாக்கோபினரை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தீர்.
2
உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்; அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மறைத்துவிட்டீர்.
3
உம் சினம் முழுவதையும் அடக்கிக் கொண்டீர். கடும் சீற்றம் கொள்வதை விலக்கிக் கொண்டீர். - பல்லவி
4
எம் மீட்பராம் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்; எங்கள்மீது உமக்குள்ள சினத்தை அகற்றிக் கொள்ளும்.
5
என்றென்றுமா எங்கள்மேல் நீர் சினம் கொள்வீர்? தலைமுறை தோறுமா உமது கோபம் நீடிக்கும்? - பல்லவி
6
உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு, எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ?
7
ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 14: 23
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.” அல்லேலூயா

ஜூலை 21 : முதல் வாசகம் நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார். இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15, 18-20

 ஜூலை 21 : முதல் வாசகம்

நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார்.
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15, 18-20

ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்! அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே! முற்காலத்தில் நடந்தது போல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்! எகிப்து நாட்டிலிருந்து நீங்கள் புறப்பட்டு வந்த நாளில் நடந்தது போல நான் அவர்களுக்கு வியத்தகு செயல்களைக் காண்பிப்பேன்.
உமக்கு நிகரான இறைவன் யார்? எஞ்சியிருப்போரின் குற்றத்தைப் பொறுத்து நீர் உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் தீச்செயலை மன்னிக்கின்றீர்; உமக்கு நிகரானவர் யார்? அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்; ஏனெனில், அவர் பேரன்பு கூர்வதில் விருப்பமுடையவர்; அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப் போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார். பண்டைய நாளில் எங்கள் மூதாதையருக்கு நீர் ஆணையிட்டுக் கூறியது போல யாக்கோபுக்கு வாக்குப் பிறழாமையையும் ஆபிரகாமுக்குப் பேரன்பையும் காட்டியருள்வீர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.