இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

August 4th : GospelA Reading from the Holy Gospel according to St.Matthew 15:1-2, 10-14

August 4th : Gospel

A Reading from the Holy Gospel according to St.Matthew 15:1-2, 10-14

At that time: Pharisees and scribes came to Jesus from Jerusalem and said, “Why do your disciples break the tradition of the elders? For they do not wash their hands when they eat.” And he called the people to him and said to them, “Hear and understand: it is not what goes into the mouth that defiles a person, but what comes out of the mouth; this defiles a person.” Then the disciples came and said to him, “Do you know that the Pharisees were offended when they heard this saying?” He answered, “Every plant that my heavenly Father has not planted will be rooted up. Let them alone; they are blind guides. And if the blind lead the blind, both will fall into a pit.”

The Gospel of the Lord.

August 4th : Responsorial PsalmPsalm 102:16–18, 19–21, 29 and 22–23 (R. 17)Response : The Lord shall build up Sion, he will appear in all his glory.

August 4th :  Responsorial Psalm

Psalm 102:16–18, 19–21, 29 and 22–23 (R. 17)

Response : The Lord shall build up Sion, he will appear in all his glory.

The nations shall fear the name of the Lord, and all the earth’s kings your glory. When the Lord shall build up Sion, he will appear in all his glory. Then he will turn to the prayers of the helpless; he will not despise their prayers. 

R.: The Lord shall build up Sion, he will appear in all his glory.

Let this be written for ages to come, that a people yet unborn may praise the Lord; The Lord looked down from his holy place on high, looked down from heaven to the earth, to hear the groans of the prisoners, and free those condemned to die. 

R.: The Lord shall build up Sion, he will appear in all his glory.

The children of your servants shall dwell untroubled, and their descendants established before you. May the name of the Lord be proclaimed in Sion, and his praise in Jerusalem, when peoples and kingdoms are gathered as one to offer their worship to the Lord. 

R.: The Lord shall build up Sion, he will appear in all his glory.

Alleluia
V. Alleluia.  

R. Alleluia.

V. Rabbi, you are the Son of God! You are the King of Israel!

R. Alleluia.

August 4th : First ReadingYour wound is incurable but I will heal youA Reading from the Book of the Prophet Jeremiah 30: 1-2,12-15,18-22

August 4th : First Reading

Your wound is incurable but I will heal you

A Reading from the Book of the Prophet Jeremiah 30: 1-2,12-15,18-22 

The word that came to Jeremiah from the Lord: “Thus says the Lord, the God of Israel: Write in a book all the words that I have spoken to you. For thus says the Lord: Your hurt is incurable, and your wound is grievous. There is none to uphold your cause, no medicine for your wound, no healing for you. All your lovers have forgotten you; they care nothing for you; for I have dealt you the blow of an enemy, the punishment of a merciless foe, because your guilt is great, because your sins are flagrant. Why do you cry out over your hurt? Your pain is incurable. Because your guilt is great, because your sins are flagrant, I have done these things to you. Thus says the Lord: Behold, I will restore the fortunes of the tents of Jacob and have compassion on his dwellings; the city shall be rebuilt on its mound, and the palace shall stand where it used to be. Out of them shall come songs of thanksgiving, and the voices of those who celebrate. I will multiply them, and they shall not be few; I will make them honoured, and they shall not be small. Their children shall be as they were of old, and their congregation shall be established before me, and I will punish all who oppress them. Their prince shall be one of themselves; their ruler shall come out from their midst; I will make him draw near, and he shall approach me, for who would dare of himself to approach me? declares the Lord. And you shall be my people, and I will be your God.”

The Word of the Lord.

ஆகஸ்ட் 4 : நற்செய்தி வாசகம்என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-2, 10-14

ஆகஸ்ட் 4 :  நற்செய்தி வாசகம்

என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-2, 10-14
அக்காலத்தில்

பரிசேயரும் மறைநூல் அறிஞரும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து, “உம் சீடர் மூதாதையரின் மரபை மீறுவதேன்? உணவு அருந்துமுன் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே” என்றனர்.

மேலும் இயேசு மக்கள் கூட்டத்தைத் தம்மிடம் வரவழைத்து அவர்களை நோக்கி, “நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது; மாறாக வாயிலிருந்து வெளி வருவதே மனிதரைத் தீட்டுப்படுத்தும்” என்றார்.

பின்பு சீடர் அவரை அணுகி, “பரிசேயர் உம் வார்த்தையைக் கேட்டு மனவேதனை அடைந்தனர் என்பது உமக்குத் தெரியுமா?” என்றனர். இயேசு மறுமொழியாக, “என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும். அவர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 4 : பதிலுரைப் பாடல்திபா 102: 15-17. 18-20. 28,21-22 (பல்லவி: 16)பல்லவி: ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்பி, மாட்சியுடன் திகழ்ந்திடுவார்.

ஆகஸ்ட் 4 :  பதிலுரைப் பாடல்

திபா 102: 15-17. 18-20. 28,21-22 (பல்லவி: 16)

பல்லவி: ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்பி, மாட்சியுடன் திகழ்ந்திடுவார்.
15
வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.
16
ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.
17
திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். - பல்லவி

18
இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும்.
19
ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார்.
20
அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார். - பல்லவி

28
உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்; அவர்களின் வழிமரபினர் உமது திருமுன் நிலைத்திருப்பர்!
21
சீயோனில் ஆண்டவரின் பெயர் போற்றப்படும். எருசலேமில் அவர்தம் புகழ் அறிவிக்கப்படும்.
22
அப்போது, மக்களினங்களும் அரசுகளும் ஒன்றுதிரண்டு ஆண்டவரை வழிபடுவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 1: 49b
அல்லேலூயா, அல்லேலூயா! "ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்.” அல்லேலூயா.

ஆகஸ்ட் 4 : முதல் வாசகம்உன் பாவங்களோ எண்ணற்றவை; எனவே இவற்றை நான் செய்தேன். நான் யாக்கோபின் கூடாரங்களைத் திரும்பக் கொணர்வேன்.இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 30: 1-2, 12-15, 18-22

ஆகஸ்ட் 4 :  முதல் வாசகம்

உன் பாவங்களோ எண்ணற்றவை; எனவே இவற்றை நான் செய்தேன். நான் யாக்கோபின் கூடாரங்களைத் திரும்பக் கொணர்வேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 30: 1-2, 12-15, 18-22
ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு மீண்டும் அருளப்பட்டது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உனக்குச் சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவை.

ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: உனது காயத்தைக் குணப்படுத்த முடியாது; உனது புண் புரையோடிப்போனது. உனக்காக வாதிட எவனும் இல்லை; உனது காயத்தை ஆற்ற மருந்தே இல்லை; உன்னைக் குணப்படுத்தவே முடியாது. உன் காதலர் அனைவரும் உன்னை மறந்துவிட்டனர்; உன்னை அவர்கள் தேடுவதே இல்லை; மாற்றான் தாக்குவது போல நான் உன்னைத் தாக்கினேன்; கொடியோன் தண்டிப்பது போல நான் உன்னைத் தண்டித்தேன்; ஏனெனில் உனது குற்றம் பெரிது; உன் பாவங்களோ எண்ணற்றவை. நீ நொறுக்கப்பட்டதை எண்ணி ஏன் அழுகின்றாய்? உனது வேதனையைத் தணிக்க முடியாது; ஏனெனில் உனது குற்றமோ பெரிது; உன் பாவங்களோ எண்ணற்றவை; எனவே இவற்றை எல்லாம் நான் உனக்குச் செய்தேன்.

ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: அடிமைத்தனத்தினின்று நான் யாக்கோபின் கூடாரங்களைத் திரும்பக் கொணர்வேன்; அவனுடைய உறைவிடங்கள் மீது நான் இரக்கம் காட்டுவேன்; அவற்றின் இடிபாடுகள் மேலேயே நகர் மீண்டும் கட்டி எழுப்பப்படும்; அரண்மனையும் அதற்குரிய இடத்திலேயே அமைக்கப்படும். அவர்களிடமிருந்து நன்றிப் பாக்கள் எழும்பிவரும்; மகிழ்ச்சியுறுவோரின் ஆரவாரம் கேட்கும். அவர்களை நான் பல்கிப் பெருகச் செய்வேன்; அவர்கள் எண்ணிக்கையில் குறைய மாட்டார்கள். நான் அவர்களைப் பெருமைப்படுத்துவேன்; இனி அவர்கள் சிறுமையுறமாட்டார்கள். அவர்களுடைய பிள்ளைகள் முன்புபோல் இருப்பர்; அவர்களது கூட்டமைப்பு என் திருமுன் நிலைநாட்டப்படும்; அவர்களை ஒடுக்குவோர் அனைவரையும் தண்டிப்பேன். அவர்களின் தலைவன் அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்; அவர்களை ஆள்பவன் அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்; அவன் என்னை நெருங்கிவரச் செய்வேன்; அவனும் என்னை அணுகி வருவான்; ஏனெனில், என்னை அணுகி வர வேறு யாருக்குத் துணிவு உண்டு?, என்கிறார் ஆண்டவர். நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.