இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 26 ஜூலை, 2026

ஜூலை 27 : நற்செய்தி வாசகம்கடுகு விதை வளர்ந்து வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும்.மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35.

ஜூலை 27 :  நற்செய்தி வாசகம்

கடுகு விதை வளர்ந்து வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35.

அக்காலத்தில்

இயேசு மக்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்."

அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: “பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்."

இவற்றை எல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. “நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்” என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.
-

ஜூலை 27 : பதிலுரைப் பாடல்இச 32: 18-19, 20-21 . (பல்லவி: 18a)பல்லவி: உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்.

ஜூலை 27 :  பதிலுரைப் பாடல்

இச 32: 18-19, 20-21 . (பல்லவி: 18a)

பல்லவி: உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்.
18.‘உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்; உன்னை உருவாக்கிய கடவுளை மறந்துவிட்டாய்'.
19.தம் மைந்தரும் தம் மகளிரும் தமக்குச் சினமூட்டியதை, ஆண்டவர் கண்டு அவர்களை இகழ்ந்து ஒதுக்கினார். - பல்லவி

20.அவர் உரைத்தார்: எனது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வேன்; அவர்களது முடிவு என்னவென்று நான் கவனித்துக் கொள்வேன்; ஏனெனில், அவர்கள் கேடுகெட்ட தலைமுறையினர்; நேர்மை அறவே அற்ற பிள்ளைகள். - பல்லவி

21.இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்; அவர்களின் சிலைகளால் எனக்கு சினமூட்டினர்; ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்; மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யாக் 1: 18

அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.

ஜூலை 27 : முதல் வாசகம்தீய மக்கள், எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள்.இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 13: 1-11

ஜூலை 27 :  முதல் வாசகம்

தீய மக்கள், எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 13: 1-11
ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: “நீ உனக்காக நார்ப் பட்டாலான ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக்கொள். அதைத் தண்ணீரில் நனைக்காதே.” ஆண்டவர் சொற்படி நான் கச்சையை வாங்கி அதை என் இடையில் கட்டிக்கொண்டேன்.

எனக்கு ஆண்டவர் வாக்கு இரண்டாம் முறை அருளப்பட்டது: “நீ வாங்கி உன் இடையில் கட்டிக்கொண்டுள்ள கச்சையை எடுத்துக்கொள்: எழுந்து பேராத்து ஆற்றுக்குச் செல். அங்கு அதனைப் பாறை இடுக்கில் மறைத்து வை.” ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி நான் சென்று பேராத்தில் அதனை மறைத்து வைத்தேன்.

பல நாள்களுக்குப் பின்னர் ஆண்டவர் என்னிடம் கூறியது: “எழுந்து பேராத்துக்குச் சென்று நான் உன்னிடம் மறைத்து வைக்கக் கட்டளையிட்ட கச்சையை அங்கிருந்து எடுத்துவா.” அவ்வாறே நான் பேராத்திற்குச் சென்று, அங்கு மறைத்து வைத்திருந்த இடத்திலிருந்து கச்சையைத் தோண்டி எடுத்தேன். அந்தக் கச்சையோ எதற்கும் பயன்படாத அளவில் இற்றுப் போயிருந்தது.

அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: “ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே யூதா, எருசலேமின் ஆணவத்தை அழிப்பேன். என் சொற்களுக்குச் செவிகொடுக்க மறுத்து, தங்கள் இதயப் பிடிவாதத்தின்படி நடந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் செய்து வழிபட்டுவரும் இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள். கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல இஸ்ரயேல், யூதா வீட்டார் யாவரும் என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன். அவர்கள் எனக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மாட்சியாகவும் இருக்கச் செய்தேன். அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை” என்கிறார் ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

July 27th : GospelThe smallest of all seeds grows into the biggest shrub of all.A Reading from the Holy Gospel according to St.Matthew 13: 31-35

July 27th : Gospel

The smallest of all seeds grows into the biggest shrub of all.

A Reading from the Holy Gospel according to St.Matthew 13: 31-35 

At that time: Jesus put another parable before them, saying, “The kingdom of heaven is like a grain of mustard seed that a man took and sowed in his field. It is the smallest of all seeds, but when it has grown it is larger than all the garden plants and becomes a tree, so that the birds of the air come and make nests in its branches.” He told them another parable. “The kingdom of heaven is like leaven that a woman took and hid in three measures of flour, till it was all leavened.” All these things Jesus said to the crowds in parables; indeed, he said nothing to them without a parable. This was to fulfil what was spoken by the prophet: “I will open my mouth in parables; I will utter what has been hidden since the foundation of the world.”

The Gospel of the Lord.

July 27th : Responsorial PsalmDeuteronomy 32:18–19, 20, 21 (R. see 18b)Response : You forgot the God who gave you birth.

July 27th : Responsorial Psalm

Deuteronomy 32:18–19, 20, 21 (R. see 18b)

Response :  You forgot the God who gave you birth.

You were unmindful of the Rock that bore you, and you forgot the God who gave you birth. “The Lord saw it and spurned them, because of the provocation of his sons and his daughters. 

R.:  You forgot the God who gave you birth.

And he said, ‘I will hide my face from them; I will see what their end will be, for they are a perverse generation, children in whom is no faithfulness.’ 

R.:  You forgot the God who gave you birth.

They have made me jealous with what is no god; they have provoked me to anger with their idols. So I will make them jealous with those who are no people; 

I will provoke them to anger with a foolish nation. 

R.:  You forgot the God who gave you birth.

Alleluia
V. Alleluia.  

R. Alleluia.

V. Of his own will he brought us forth by the word of truth, that we should be a kind of firstfruits of his creatures.

R. Alleluia.

July 27th : First readingLet this evil people become good for nothing.A Reading from the Book of Jeremiah 13:1-11.

July 27th :  First reading

Let this evil people become good for nothing.

A Reading from the Book of Jeremiah 13:1-11.

Thus said the Lord to me, “Go and buy a linen loincloth and put it round your waist, and do not dip it in water.” So I bought a loincloth according to the word of the Lord, and put it round my waist. And the word of the Lord came to me a second time, “Take the loincloth that you have bought, which is round your waist, and arise, go to the Euphrates and hide it there in a cleft of the rock.” So I went and hid it by the Euphrates, as the Lord commanded me. And after many days the Lord said to me, “Arise, go to the Euphrates, and take from there the loincloth that I commanded you to hide there.” Then I went to the Euphrates, and dug, and I took the loincloth from the place where I had hidden it. And behold, the loincloth was spoiled; it was good for nothing. Then the word of the Lord came to me: “Thus says the Lord: Even so will I spoil the pride of Judah and the great pride of Jerusalem. This evil people, who refuse to hear my words, who stubbornly follow their own heart and have gone after other gods to serve them and worship them, shall be like this loincloth, which is good for nothing. For as the loincloth clings to the waist of a man, so I made the whole house of Israel and the whole house of Judah cling to me, declares the Lord, that they might be for me a people, a name, a praise, and a glory, but they would not listen.

The Word of the Lord.