இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

August 7 : GospelMatthew 16:24–28

August 7 : Gospel

Matthew 16:24–28

At that time: Jesus told his disciples, “If anyone would come after me, let him deny himself and take up his cross and follow me. For whoever would save his life will lose it, but whoever loses his life for my sake will find it. For what will it profit a man if he gains the whole world and forfeits his soul? Or what shall a man give in return for his soul? For the Son of Man is going to come with his angels in the glory of his Father, and then he will repay each person according to what he has done. Truly, I say to you, there are some standing here who will not taste death until they see the Son of Man coming in his kingdom.”

The Gospel of the Lord.

August 7 : Responsorial PsalmDeuteronomy 32:35cd–36ab, 39abcd, 41 (R. 39c)

August 7 : Responsorial Psalm

Deuteronomy 32:35cd–36ab, 39abcd, 41 (R. 39c)

It is I who deal death and give life.

For the day of their calamity is at hand, and their doom comes swiftly.’ For the Lord will vindicate his people and have compassion on his servants. 

It is I who deal death and give life.

“See now that I, even I, am he, and there is no god beside me; I kill and I make alive; I wound and I heal.” 

It is I who deal death and give life.

If I sharpen my flashing sword and my hand takes hold on judgment, I will take vengeance on my adversaries and will repay those who hate me. 

It is I who deal death and give life.

Alleluia
V. Alleluia.  

R. Alleluia.

V. Blessed are those who are persecuted for righteousness’ sake, for theirs is the kingdom of heaven.

R. Alleluia.

August 7 : First ReadingNahum 1:15; 2:2; 3:1–3, 6–7Behold, upon the mountains, the feet of

August 7 : First Reading

Nahum 1:15; 2:2; 3:1–3, 6–7

Behold, upon the mountains, the feet of him who brings good news, who publishes peace! Keep your feasts, O Judah; fulfil your vows, for never again shall the worthless pass through you; he is utterly cut off. For the Lord is restoring the majesty of Jacob as the majesty of Israel, for plunderers have plundered them and ruined their branches. Woe to the bloody city, all full of lies and plunder—no end to the prey! The crack of the whip, and rumble of the wheel, galloping horse and bounding chariot! Horsemen charging, flashing sword and glittering spear, hosts of slain, heaps of corpses, dead bodies without end— they stumble over the bodies! I will throw filth at you and treat you with contempt and make you a spectacle. And all who look at you will shrink from you and say, “Wasted is Nineveh; who will grieve for her?” Where shall I seek comforters for you?

The word of the Lord.

நற்செய்தி வாசகம்ஒருவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 24-28

நற்செய்தி வாசகம்

ஒருவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 24-28
அக்காலத்தில்

இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவர். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பார். நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்இச 32: 35cd-36cd. 39a-d. 41 (பல்லவி: 39c)பல்லவி: கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே!

பதிலுரைப் பாடல்

இச 32: 35cd-36cd. 39a-d. 41 (பல்லவி: 39c)
பல்லவி: கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே!
35cd
அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது; அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன.
36cd
ஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார்; அவர்தம் ஊழியர்களுக்காக அவர் மனமிரங்கிடுவார். - பல்லவி

39a-d
நானே இருக்கிறவர்! என்னைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்பதை இப்பொழுது உணர்ந்து கொள்ளுங்கள்! கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே! காயப்படுத்துபவரும்நானே; குணமாக்குபவரும் நானே! - பல்லவி

41
மின்னும் என் வாளை நான் தீட்டி, நீதித் தீர்ப்பை என் கையில் எடுக்கும்போது என் பகைவரைப் பழிவாங்கி என்னைப் பகைப்பவருக்குப் பதிலடி கொடுப்பேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 10
அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

07 ஆகஸ்ட் 2026, வெள்ளிபொதுக்காலம் 18ஆம் வாரம் - வெள்ளிமுதல் வாசகம்இரத்தக் கறை படிந்த நகருக்கு ஐயோ கேடு!இறைவாக்கினர் நாகூம் நூலிலிருந்து வாசகம் 1: 15; 2: 2; 3: 1-3, 6-7

07 ஆகஸ்ட் 2026, வெள்ளி
பொதுக்காலம் 18ஆம் வாரம் - வெள்ளி
முதல் வாசகம்

இரத்தக் கறை படிந்த நகருக்கு ஐயோ கேடு!

இறைவாக்கினர் நாகூம் நூலிலிருந்து வாசகம் 1: 15; 2: 2; 3: 1-3, 6-7
‘வெற்றி! வெற்றி!’ என்று முழங்கி நற்செய்தி அறிவிப்பவனின் கால்கள் மலைகளின்மேல் தென்படுகின்றன! யூதாவே, உன் திருவிழாக்களைக் கொண்டாடு! உன் பொருத்தனைகளை நிறைவேற்று! ஏனெனில், தீயவன் உன் நடுவில் இனி வரவே மாட்டான்; அவன் முற்றிலும் அழிந்துவிட்டான்.

இஸ்ரயேலின் மேன்மை போலவே யாக்கோபின் மேன்மையை ஆண்டவர் மீண்டும் நிலைநாட்டுகின்றார்; கொள்ளைக்காரர்கள் அவர்களைக் கொள்ளையடித்தனர்; அவர்களின் திராட்சைக் கொடிகளையும் அழித்துப் போட்டனர்.

இரத்தக் கறை படிந்த நகருக்கு ஐயோ கேடு! அங்கு நிறைந்திருப்பது எல்லாம் பொய்களும் கொள்ளைப் பொருளுமே! சூறையாடலுக்கு முடிவே இல்லை! சாட்டையடிகளின் ஓசை! சக்கரங்களின் கிறிச்சிடும் ஒலி! தாவிப் பாயும் புரவிகள்! உருண்டோடும் தேர்கள்! குதிரை வீரர்கள் பாய்ந்து தாக்குகின்றனர்; வாள் மின்னுகின்றது; ஈட்டி பளபளக்கின்றது; வெட்டுண்டவர்கள் கூட்டமாய்க் கிடக்கின்றனர்; பிணங்கள் குவிந்து கிடக்கின்றன; செத்தவர்களுக்குக் கணக்கே இல்லை; அந்தப் பிணங்கள் மேல் மனிதர் இடறி விழுகின்றனர்.

அருவருப்பானவற்றை உன்மீது எறிவேன்; உன்னை இகழ்ச்சியுடன் நடத்திப் பகடிப் பொருள் ஆக்குவேன். உன்னை நோக்குவோர் எல்லாரும் உன்னிடமிருந்து பின்வாங்கி, ‘நினிவே பாழாய்ப் போனது; அவளுக்காகப் புலம்புவோர் யாரேனும் உண்டோ?’ என்று சொல்வார்கள்; உன்னைத் தேற்றுவோரை எங்கே தேடுவேன்?

ஆண்டவரின் அருள்வாக்கு.