Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, November 8, 2020

பதிலுரைப் பாடல்*திபா 46: 1-2,3உ. 4-5. 7-8 (பல்லவி: 4) _பல்லவி: ஆற்றின் கால்வாய்கள் ஆண்டவரின் நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன._

*பதிலுரைப் பாடல்*

திபா 46: 1-2,3உ. 4-5. 7-8 (பல்லவி: 4) 

_பல்லவி: ஆற்றின் கால்வாய்கள் ஆண்டவரின் நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன._
1 கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்;
இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே.
2 ஆகையால், நிலவுலகம் நிலை குலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும்,
3 எங்களுக்கு அச்சம் என்பதே இல்லை. -பல்லவி 

4 ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான
கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.
5 அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்;
அது ஒருபோதும் நிலைகுலையாது;
வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. -பல்லவி 

7 படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்;
யாக்கோபின் கடவுளே நமக்கு அரண்.
8 வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்!
அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! -பல்லவி

No comments:

Post a Comment