இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

August 10th : Gospel If a grain of wheat falls on the ground and dies, it yields a rich harvestA Reading from the Holy Gospel according to St.John 12: 24-26

August 10th :  Gospel 

If a grain of wheat falls on the ground and dies, it yields a rich harvest

A Reading from the Holy Gospel according to St.John 12: 24-26 

At that time: Jesus said to his disciples, “Truly, truly, I say to you, unless a grain of wheat falls into the earth and dies, it remains alone; but if it dies, it bears much fruit. Whoever loves his life loses it, and whoever hates his life in this world will keep it for eternal life. If anyone serves me, he must follow me; and where I am, there will my servant be also. If anyone serves me, the Father will honour him.”

The Gospel of the Lord.

August 10th : Responsorial PsalmPsalm 112:1b–2, 5–6, 7–8, 9 (R. 5a)

August 10th :  Responsorial Psalm

Psalm 112:1b–2, 5–6, 7–8, 9 (R. 5a)

Response :  It goes well for the man who deals generously and lends.

Blessed the man who fears the Lord, who takes great delight in his commandments. His descendants shall be powerful on earth; the generation of the upright will be blest. 

R.:  It goes well for the man who deals generously and lends.

It goes well for the man who deals generously and lends, who conducts his affairs with justice. He will never be moved; forever shall the just be remembered. 

R.:  It goes well for the man who deals generously and lends.

He has no fear of evil news; with a firm heart, he trusts in the Lord. With a steadfast heart he will not fear; he will see the downfall of his foes. 

R.:  It goes well for the man who deals generously and lends.

Open-handed, he gives to the poor; his justice stands firm forever. His might shall be exalted in glory. 

R.:  It goes well for the man who deals generously and lends.

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. I am the light of the world, says the Lord; whoever follows me will have the light of life.

R. Alleluia.

August 10th : First ReadingGod loves a cheerful giverA Reading from the Second letter of St.Paul to the Corinthians 9: 6a-10

August 10th :  First Reading

God loves a cheerful giver

A Reading from the Second letter of St.Paul to the Corinthians 9: 6a-10 

Brethren: Whoever sows sparingly will also reap sparingly, and whoever sows bountifully will also reap bountifully. Each one must give as he has decided in his heart, not reluctantly or under compulsion, for God loves a cheerful giver. And God is able to make all grace abound to you, so that having all sufficiency in all things at all times, you may abound in every good work. As it is written, “He has distributed freely, he has given to the poor; his righteousness endures forever.” He who supplies seed to the sower and bread for food will supply and multiply your seed for sowing and increase the harvest of your righteousness.

The Word of the Lord.

ஆகஸ்ட் 10 : நற்செய்தி வாசகம்கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 24-26

ஆகஸ்ட் 10 : நற்செய்தி வாசகம்

கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 24-26
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.

எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 10 : பதிலுரைப் பாடல்திபா 112: 1-2. 5-6. 7-8. 9 (பல்லவி: 5a)

ஆகஸ்ட் 10 :  பதிலுரைப் பாடல்

திபா 112: 1-2. 5-6. 7-8. 9 (பல்லவி: 5a)

பல்லவி: மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்.
1
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
2
அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். - பல்லவி

5
மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.
6
எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். - பல்லவி

7
தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.
8
அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. - பல்லவி

9
அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12bc

அல்லேலூயா, அல்லேலூயா! என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஆகஸ்ட் 10 : புனித லாரன்ஸ் - திருத்தொண்டர், மறைச்சாட்சி விழாமுதல் வாசகம்முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 6-10

ஆகஸ்ட் 10 : புனித லாரன்ஸ் - திருத்தொண்டர், மறைச்சாட்சி விழா

முதல் வாசகம்

முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 6-10
சகோதரர் சகோதரிகளே,

குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர். கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்; அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானது எல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார். “ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும்போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!

விதைப்பவருக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் வழங்குபவர், விதைப்பதற்கு வேண்டிய விதைகளை வழங்கி அவை முளைத்து வளரச்செய்து அறச்செயல்களாகிய விளைச்சலை மிகுதியாகத் தருவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.