இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

ஆகஸ்ட் 11 : நற்செய்தி வாசகம்இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10-14

ஆகஸ்ட் 11 :  நற்செய்தி வாசகம்

இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10-14
அக்காலத்தில்

சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்:

“நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.

இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில் மானிடமகன் நெறி தவறியோரை மீட்கவே வந்தார்.

இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப் பகுதியில் விட்டுவிட்டு, வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா? அவர் அதைக் கண்டுபிடித்தால், வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதை விட, வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக் கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 11 : பதிலுரைப் பாடல்திபா 119: 14,24. 72,103. 111,131 (பல்லவி: 103a)பல்லவி: உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை!

ஆகஸ்ட் 11 : பதிலுரைப் பாடல்

திபா 119: 14,24. 72,103. 111,131 (பல்லவி: 103a)

பல்லவி: உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை!
14
பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.
24
ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே எனக்கு அறிவுரையாளர். - பல்லவி

72
நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளைவிட எனக்கு மேலானது.
103
உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை. - பல்லவி

111
உம் ஒழுங்குமுறைகளை என்றும் என் உரிமைச் சொத்தாய்க் கொண்டுள்ளேன். ஆகவே, அவை என் இதயத்தை மகிழ்விக்கின்றன.
131
வாயை ‘ஆ'வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்; ஏனெனில், உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 29ab
அல்லேலூயா, அல்லேலூயா! என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். அல்லேலூயா

ஆகஸ்ட் 11 : முதல் வாசகம்“நான் உனக்குத் தருகின்ற இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை நிரப்பு” என்றார். அச்சுருளேடு என் வாயில் தேன்போல் இனித்தது.இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 2: 8- 3: 4

ஆகஸ்ட் 11 :  முதல் வாசகம்

“நான் உனக்குத் தருகின்ற இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை நிரப்பு” என்றார். அச்சுருளேடு என் வாயில் தேன்போல் இனித்தது.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 2: 8- 3: 4
ஆண்டவர் கூறுவது: “நீயோ மானிடா! நான் உனக்குச் சொல்வதைக் கேள். அந்தக் கலக வீட்டாரைப் போல் நீயும் கலகக்காரனாய் இருந்து விடாதே. உன் வாயைத் திறந்து நான் உனக்குத் தருவதைத் தின்றுவிடு” என்றார். அப்போது என்னை நோக்கி ஒரு கை நீள்வதைக் கண்டேன். அதில் சுருளேடு ஒன்று இருந்தது. அவர் அச்சுருளேட்டை என் முன் விரித்தார். உள்ளும் புறமும் எழுதப்பட்டிருந்த அதில் கதறல்களும் புலம்பல்களும் கேடுகளும் எழுதப்பட்டிருந்தன.

அவர் என்னை நோக்கி, “மானிடா! நீ காண்பதைத் தின்றுவிடு. இச்சுருளேட்டைத் தின்றபின் இஸ்ரயேல் வீட்டாரிடம் போய்ப் பேசு” என்றார். நானும் என் வாயைத் திறக்க, அவர் அச்சுருளேட்டை எனக்குத் தின்னக் கொடுத்தார். மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா! நான் உனக்குத் தருகின்ற இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை நிரப்பு” என்றார். நானும் தின்றேன். அது என் வாயில் தேன் போல் இனித்தது. மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா! புறப்படு. இஸ்ரயேல் வீட்டாரிடம் போய் என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக் கூறு” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 11th : GospelAnyone who welcomes a little child in my name welcomes meA Reading from the Holy Gospel according to St. Matthew 18: 1-5,10,12-14

August 11th : Gospel

Anyone who welcomes a little child in my name welcomes me

A Reading from the Holy Gospel according to St. Matthew 18: 1-5,10,12-14 

.At that time the disciples came to Jesus saying, “Who is the greatest in the kingdom of heaven?” And calling to him a child, he put him in the midst of them and said, “Truly, I say to you, unless you turn and become like children, you will never enter the kingdom of heaven. Whoever humbles himself like this child is the greatest in the kingdom of heaven. “Whoever receives one such child in my name receives me. See that you do not despise one of these little ones. For I tell you that in heaven their angels always see the face of my Father who is in heaven. What do you think? If a man has a hundred sheep, and one of them has gone astray, does he not leave the ninety-nine on the mountains and go in search of the one that went astray? And if he finds it, truly, I say to you, he rejoices over it more than over the ninety-nine that never went astray. So it is not the will of my Father who is in heaven that one of these little ones should perish.”

The Gospel of the Lord.

August 11th : Responsorial PsalmPsalm 119:14, 24, 72, 103, 111, 131 (R. 103a)

August 11th : Responsorial Psalm

Psalm 119:14, 24, 72, 103, 111, 131 (R. 103a)

Response : How sweet is your promise to my tongue, O Lord!

I rejoice in the way of your precepts, as though all riches were mine. 

R.: How sweet is your promise to my tongue, O Lord!

See, your decrees are my delight; your statutes are my counsellors. 

R.: How sweet is your promise to my tongue, O Lord!

The law from your mouth means more to me than large quantities of silver and gold. 

R.: How sweet is your promise to my tongue, O Lord!

How sweet is your promise to my tongue, more than honey in the mouth. 

R.: How sweet is your promise to my tongue, O Lord!

Your decrees are my heritage forever, the joy of my heart. 

R.: How sweet is your promise to my tongue, O Lord!

I have opened my mouth and I sigh, for I yearn for your commands. 

R.: How sweet is your promise to my tongue, O Lord!

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. Take my yoke upon you, says the Lord; and learn from me, for I am gentle and lowly in heart. 

R. Alleluia.

August 11th : First Reading He gave me the scroll to eat and it was as sweet as honeyA Reading from the Book of the Prophet Ezekiel 2: 8-3:4

August 11th :  First Reading 

He gave me the scroll to eat and it was as sweet as honey

A Reading from the Book of the Prophet Ezekiel 2: 8-3:4 

Thus says the Lord: “You, son of man, hear what I say to you. Be not rebellious like that rebellious house; Open your mouth and eat what I give you.” And when I looked, behold, a hand was stretched out to me, and behold, a scroll of a book was in it. And he spread it before me. And it had writing on the front and on the back, and there were written on it words of lamentation and mourning and woe. And he said to me, “Son of man, eat whatever you find here. Eat this scroll, and go, speak to the house of Israel.” So I opened my mouth, and he gave me this scroll to eat. And he said to me, “Son of man, feed your belly with this scroll that I give you and fill your stomach with it.” Then I ate it, and it was in my mouth as sweet as honey. And he said to me, “Son of man, go to the house of Israel, and speak with my words to them.”

The Word of the Lord.