Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, January 1, 2021

நற்செய்தி வாசகம்* _நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்._ *🕯️யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 19-28*

*📖நற்செய்தி வாசகம்* 

_நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்._ 

*🕯️யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 19-28* 
அக்காலத்தில் எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, “நீர் யார்?'' என்று கேட்டபோது அவர், “நான் மெசியா அல்ல'' என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?'' என்று அவர்கள் கேட்க, அவர், “நானல்ல'' என்றார். “நீர்தாம் வரவேண்டிய இறைவாக்கினரா?'' என்று கேட்டபோதும், அவர், “இல்லை'' என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், " `ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலை நிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது' என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப் பற்றியே" என்றார். பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் அவரிடம், “நீர் மெசியாவோ எலியாவோ வரவேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால், ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?'' என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை'' என்றார். இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். 

*இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.*

No comments:

Post a Comment