Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, May 8, 2021

மே 9 : முதல் வாசகம்தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டது.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 25-26, 34-35, 44-48

மே 9 :  முதல் வாசகம்

தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டது.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 25-26, 34-35, 44-48
அந்நாள்களில்

கொர்னேலியு பேதுருவை எதிர்கொண்டு போய் அவர் காலில் விழுந்து வணங்கினார். பேதுரு, “எழுந்திடும்; நானும் ஒரு மனிதன்தான்” என்று கூறி அவரை எழுப்பினார். அப்போது பேதுரு பேசத் தொடங்கி, “கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்” என்றார்.

பேதுரு தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது அவருடைய சொற்களைக் கேட்ட அனைவர்மீதும் தூய ஆவி இறங்கிவந்தது. பேதுருவோடு வந்திருந்த விருத்தசேதனத்தில் நம்பிக்கையுடையோர் தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டதைக் கண்டு மலைத்துப் போயினர்; ஏனென்றால் அவர்கள் பரவசப் பேச்சுப் பேசிக் கடவுளைப் போற்றிப் பெருமைப்படுத்தியதைக் கண்டார்கள். பேதுரு, “நம்மைப் போலத் தூய ஆவியைப் பெற்றுக்கொண்ட இவர்கள் தண்ணீரால் திருமுழுக்குப் பெறுவதை யார் தடுக்க முடியும்?” என்று கூறி, இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கப் பணித்தார். பின்பு அவர்கள் சில நாள் தங்களுடன் தங்கியிருக்குமாறு அவரிடம் வேண்டினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

No comments:

Post a Comment