இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

ஆகஸ்ட் 17 : நற்செய்தி வாசகம்நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 16-22

ஆகஸ்ட் 17 :  நற்செய்தி வாசகம்

நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 16-22
அக்காலத்தில்

செல்வரான இளைஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “போதகரே, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?” என்று கேட்டார். இயேசு அவரிடம், “நன்மையைப் பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நல்லவர் ஒருவரே. நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்” என்றார்.

அவர், “எவற்றை?” என்று கேட்டார். இயேசு, “கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச் சான்று சொல்லாதே; தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்று கூறினார்.

அந்த இளைஞர் அவரிடம், “இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்து வந்துள்ளேன். இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர் வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 17 : பதிலுரைப் பாடல்இச 32: 18-19. 20. 21 (பல்லவி: 18a)பல்லவி: நீ உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்.

ஆகஸ்ட் 17 :  பதிலுரைப் பாடல்

இச 32: 18-19. 20. 21 (பல்லவி: 18a)

பல்லவி: நீ உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்.
18
உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்; உன்னை உருவாக்கிய கடவுளை மறந்துவிட்டாய்.
19
தம் மைந்தரும் தம் மகளிரும் தமக்குச் சினமூட்டியதை, ஆண்டவர் கண்டு அவர்களை இகழ்ந்து ஒதுக்கினார். - பல்லவி

20
அவர் உரைத்தார்: எனது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வேன்; அவர்களது முடிவு என்னவென்று நான் கவனித்துக் கொள்வேன்; ஏனெனில், அவர்கள் கேடுகெட்ட தலைமுறையினர்; நேர்மை அறவே அற்ற பிள்ளைகள். - பல்லவி

21
இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்; அவர்களின் சிலைகளால் எனக்குச் சினமூட்டினர்; ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்; மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 3
அல்லேலூயா, அல்லேலூயா! 

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

ஆகஸ்ட் 17 : முதல் வாசகம்எசேக்கியேல் உங்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பான்.இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 24: 15-24

ஆகஸ்ட் 17 :  முதல் வாசகம்

எசேக்கியேல் உங்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பான்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 24: 15-24
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: “மானிடா! உன் கண்களுக்கு இன்பம் தருவதை உன்னிடமிருந்து ஒரே நொடியில் எடுத்துவிடப் போகிறேன். ஆனால் நீ புலம்பவோ, அழவோ, கண்ணீர் சிந்தவோ கூடாது. மெதுவாய்ப் பெருமூச்சு விடு! இறந்தோர்க்காய்ப் புலம்பாதே! உன் தலைப்பாகையைக் கட்டிக்கொள்! காலில் மிதியடியை அணிந்துகொள்! உன் வாயை மூடிக்கொள்ளாதே! இழவு கொண்டாடு வோரின் உணவை உண்ணாதே!"

நான் மக்களிடம் காலையில் உரையாடினேன். மாலையில் என் மனைவி இறந்துவிட்டாள். மறுநாள் காலையில் ஆண்டவர் கட்டளையிட்டதைச் செய்தேன். அப்போது மக்கள் என்னிடம், ‘நீர் செய்வதன் பொருள் என்னவென்று எங்களுக்குச் சொல்ல மாட்டீரோ?’ என்று கேட்டனர்.

எனவே, நான் அவர்களுக்குச் சொன்னது: ‘ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உங்கள் வலிமையின் பெருமையும், கண்களின் இன்பமும், இதயத்தின் விருப்பமுமாகிய என் தூயகத்தை நான் தீட்டுப்படுத்துவேன்; நீங்கள் விட்டுச் சென்ற ஆண் மக்களும் பெண் மக்களும் வாளால் மடிவர். நான் செய்ததுபோல் நீங்களும் செய்வீர்கள்; நீங்களும் உங்கள் வாயை மூடிக்கொள்ள மாட்டீர்கள்; இழவு கொண்டாடுவோரின் உணவை உண்ணவும் மாட்டீர்கள். தலைப்பாகையை உங்கள் தலையில் வைத்திருப்பீர்கள். கால்களில் மிதியடிகள் இருக்கும். நீங்கள் புலம்பவோ அழவோ மாட்டீர்கள். ஆனால் உங்கள் குற்றப்பழி குறித்துத் தளர்வுற்று உங்களிடையே புலம்பிக் கொள்வீர்கள். இவ்வாறு எசேக்கியேல் உங்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பான். அவன் செய்ததுபோல் நீங்களும் செய்வீர்கள். இவை நடக்கையில் நானே தலைவராகிய ஆண்டவர் என அறிந்துகொள்வீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 17th : GospelIf you wish to be perfect, go and sell what you own.A Reading from the Holy Gospel according to St.Matthew 19: 16-22

August 17th :  Gospel

If you wish to be perfect, go and sell what you own.

A Reading from the Holy Gospel according to St.Matthew 19: 16-22 

At that time: A man came up to Jesus, saying, “Teacher, what good deed must I do to have eternal life?” And he said to him, “Why do you ask me about what is good? There is only one who is good. If you would enter life, keep the commandments.” He said to him, “Which ones?” And Jesus said, “You shall not murder, You shall not commit adultery, You shall not steal, You shall not bear false witness, Honour your father and mother, and, You shall love your neighbour as yourself.” The young man said to him, “All these I have kept. What do I still lack?” Jesus said to him, “If you would be perfect, go, sell what you possess and give to the poor, and you will have treasure in heaven; and come, follow me.” When the young man heard this he went away sorrowful, for he had great possessions.

The Gospel of the Lord.

August 17th : Responsorial PsalmDeuteronomy 32:18–19, 20, 21 (R. see 18b)Response : You forgot the God who gave you birth.

August 17th : Responsorial Psalm

Deuteronomy 32:18–19, 20, 21 (R. see 18b)

Response : You forgot the God who gave you birth.

You were unmindful of the Rock that bore you, and you forgot the God who gave you birth. “The Lord saw it and spurned them, because of the provocation of his sons and his daughters. 

R.: You forgot the God who gave you birth.

And he said, ‘I will hide my face from them; I will see what their end will be, for they are a perverse generation, children in whom is no faithfulness. 

R.: You forgot the God who gave you birth.

They have made me jealous with what is no god; they have provoked me to anger with their idols. So I will make them jealous with those who are no people;  I will provoke them to anger with a foolish nation. 

R.: You forgot the God who gave you birth.

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. Blessed are the poor in spirit, for theirs is the kingdom of heaven. 

R. Alleluia.

August 17th : First ReadingThe Lord will profane his sanctuary.A Reading from the Book of the Prophet Ezekiel 24: 15-24.

August 17th :  First Reading

The Lord will profane his sanctuary.

A Reading from the Book of the Prophet Ezekiel 24: 15-24.

The word of the Lord came to me: “Son of man, behold, I am about to take the delight of your eyes away from you at a stroke; yet you shall not mourn or weep, nor shall your tears run down. Sigh, but not aloud; make no mourning for the dead. Bind on your turban, and put your shoes on your feet; do not cover your lips, nor eat the bread of men.” So I spoke to the people in the morning, and at evening my wife died. And on the next morning I did as I was commanded. And the people said to me, “Will you not tell us what these things mean for us, that you are acting thus?” Then I said to them, “The word of the Lord came to me: ‘Say to the house of Israel, Thus says the Lord God: Behold, I will profane my sanctuary, the pride of your power, the delight of your eyes, and the yearning of your soul, and your sons and your daughters whom you left behind shall fall by the sword. And you shall do as I have done; you shall not cover your lips, nor eat the bread of men. Your turbans shall be on your heads and your shoes on your feet; you shall not mourn or weep, but you shall rot away in your iniquities and groan to one another. Thus shall Ezekiel be to you a sign; according to all that he has done you shall do. When this comes, then you will know that I am the Lord God.’”

The Word of the Lord.