இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 17 ஆகஸ்ட், 2026

ஆகஸ்ட் 18 : நற்செய்தி வாசகம்செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 23-30

ஆகஸ்ட் 18 :  நற்செய்தி வாசகம்

செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 23-30
அக்காலத்தில்

இயேசு தம் சீடரிடம், “செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.

சீடர்கள் இதைக் கேட்டு, “அப்படியானால் யார்தாம் மீட்புப் பெற முடியும்?” என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.

அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார்.

அதற்கு இயேசு, “புதுப் படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நில புலங்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்.

ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்” என்று அவர்களிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 18 : பதிலுரைப் பாடல்இச 32: 26-27. 28,30. 35cd-36ab (பல்லவி: 39c)பல்லவி: கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே!

ஆகஸ்ட் 18 :  பதிலுரைப் பாடல்

இச 32: 26-27. 28,30. 35cd-36ab (பல்லவி: 39c)

பல்லவி: கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே!
26
நான் சொன்னேன்: அவர்களை எத்திக்கிலும் சிதறடிப்பேன்; அவர்களது நினைவு மனிதரிடமிருந்து அற்றுப் போகச் செய்வேன்.
27
ஆயினும், ‘எங்கள் கைகள் வலிமையானவை! இதையெல்லாம் ஆண்டவர் செய்யவில்லை!’ என்று அவர்களின் பகைவர் திரித்துப் பேசுவர் என்பதாலும் பகைவனின் பழிச் சொல்லுக்கு அஞ்சியும் வாளாவிருந்தேன். - பல்லவி

28
அவர்கள் புத்தி கெட்ட மக்கள்; அவர்களிடம் விவேகம் சிறிதும் இல்லை.
30
ஒரே ஆள் ஆயிரம் பேரைத் துரத்துவதும் இரண்டு பேர் பதினாயிரம் பேரை விரட்டுவதும் அவர்களது பாறை அவர்களை விற்றுவிட்டதாலன்றோ? அவர்களின் கடவுள் அவர்களைக் கைவிட்டதாலன்றோ? - பல்லவி

35cd
அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது; அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன.
36ab
அவர்கள் ஆற்றல் இழந்துவிட்டவர்கள் எனவும் அடிமையோ குடிமகனோ எவனுமில்லை எனவும் காணும்போது ஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 8: 9
அல்லேலூயா, அல்லேலூயா! 

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.

ஆகஸ்ட் 18 : முதல் வாசகம்நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே!இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 28: 1-10

ஆகஸ்ட் 18 :  முதல் வாசகம்

நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே!

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 28: 1-10
அந்நாள்களில்

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: மானிடா! தீர் நகரின் மன்னனுக்குச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இதயத்தின் செருக்கில், ‘நானே கடவுள்; நான் கடல் நடுவே கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறேன்’ என்று சொல்கின்றாய். ஆனால் நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே! தானியேலைவிட நீ அறிவாளிதான்! மறைபொருள் எதுவும் உனக்கு மறைவாயில்லை! உன் ஞானத்தாலும் அறிவாலும் உனக்குச் செல்வம் சேர்த்தாய்; உன் கருவூலத்தில் பொன்னையும் வெள்ளியையும் குவித்தாய். உன் வாணிபத் திறமையால் உன் செல்வத்தைப் பெருக்கினாய்; உன் செல்வத்தினாலோ உன் இதயம் செருக்குற்றது.

ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: கடவுளைப் போல் அறிவாளி என உன்னைக் கருதிக் கொள்வதால், மக்களினங்களில் மிகவும் கொடியோரான அன்னியரை உனக்கெதிராய் எழும்பச் செய்வேன்; அவர்கள் உன் அழகுக்கும் ஞானத்திற்கும் எதிராக உருவிய வாளுடன் வருவர்; உன் பெருமையைக் குலைப்பர். படுகுழியில் தள்ளுவர் உன்னை; கடல் நடுவே மூழ்கிச் சாவோரெனச் சாவாய் நீயே! அப்போது உன்னைக் கொல்வோரின் நடுவில் ‘நானே கடவுள்’ என்று சொல்வாயே? உன்னைக் குத்திக் கிழிப்போரின் கையில் நீ கடவுளாக அல்ல, மனிதனாகவே இருப்பாய். விருத்தசேதனம் செய்யப்படாதவனைப் போல் அன்னியர் கையால் நீ சாவாய். நானே உரைத்தேன் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 18th : GospelIt is easier for a camel to pass through the eye of a needle than for a rich man to enter the kingdom of heavenA Reading from the Holy Gospel according to St.Matthew 19: 23-30

August 18th : Gospel

It is easier for a camel to pass through the eye of a needle than for a rich man to enter the kingdom of heaven

A Reading from the Holy Gospel according to St.Matthew 19: 23-30 

At that time: Jesus said to his disciples, “Truly, I say to you, only with difficulty will a rich person enter the kingdom of heaven. Again I tell you, it is easier for a camel to go through the eye of a needle than for a rich person to enter the kingdom of God.” When the disciples heard this, they were greatly astonished, saying, “Who then can be saved?” But Jesus looked at them and said, “With man this is impossible, but with God all things are possible.” Then Peter said in reply, “See, we have left everything and followed you. What then will we have?” Jesus said to them, “Truly, I say to you, in the new world, when the Son of Man will sit on his glorious throne, you who have followed me will also sit on twelve thrones, judging the twelve tribes of Israel. And everyone who has left houses or brothers or sisters or father or mother or children or lands, for my name’s sake, will receive a hundredfold and will inherit eternal life. But many who are first will be last, and the last first.”

The Gospel of the Lord.

August 18th : Responsorial PsalmDeuteronomy 32:26–27ab, 27cd–28, 30, 35cd–36ab (R. 39c)

August 18th : Responsorial Psalm

Deuteronomy 32:26–27ab, 27cd–28, 30, 35cd–36ab (R. 39c)

Response : It is I who deal death and give life.

I would have said, “I will cut them to pieces; I will wipe them from human memory,” had I not feared provocation by the enemy, lest their adversaries should misunderstand. 

R.: It is I who deal death and give life.

“Lest they should say, ‘Our hand is triumphant, it was not the Lord who did all this.’ ” “For they are a nation void of counsel, and there is no understanding in them.” 

R.: It is I who deal death and give life.

How could one have chased a thousand, and two have put ten thousand to flight, unless their Rock had sold them, and the Lord had given them up? 

R.: It is I who deal death and give life.

For the day of their calamity is at hand, and their doom comes swiftly.’ For the Lord will vindicate his people and have compassion on his servants. 

R.: It is I who deal death and give life.

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. Though Jesus Christ was rich, yet for your sake he became poor, so that you by his poverty might become rich. 

R. Alleluia.

August 18th : First Reading Against the arrogance of the king of TyreA Reading from the Book of the Prophet Ezekiel 28: 1-10

August 18th : First Reading 

Against the arrogance of the king of Tyre

A Reading from the Book of the Prophet Ezekiel 28: 1-10 

The word of the Lord came to me: “Son of man, say to the prince of Tyre, Thus says the Lord God: “Because your heart is proud, and you have said, ‘I am a god, I sit in the seat of the gods, in the heart of the seas’, yet you are but a man, and no god, though you make your heart like the heart of a god— you are indeed wiser than Daniel; no secret is hidden from you; by your wisdom and your understanding you have made wealth for yourself, and have gathered gold and silver into your treasuries; by your great wisdom in your trade you have increased your wealth, and your heart has become proud in your wealth— therefore thus says the Lord God: Because you make your heart like the heart of a god, therefore, behold, I will bring foreigners upon you, the most ruthless of the nations; and they shall draw their swords against the beauty of your wisdom and defile your splendour. They shall thrust you down into the pit, and you shall die the death of the slain in the heart of the seas. Will you still say, ‘I am a god’, in the presence of those who kill you, though you are but a man, and no god, in the hands of those who slay you? You shall die the death of the uncircumcised by the hand of foreigners; for I have spoken, declares the Lord God.”

The Word of the Lord.