இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 10 அக்டோபர், 2020

October 11th : First Reading The Lord will prepare a banquet for every nation.A Reading from the Book of Isaiah 25:6-10.

October 11th :  First Reading 

The Lord will prepare a banquet for every nation.

A Reading from the Book of Isaiah 25:6-10.
On this mountain,
the Lord of hosts will prepare for all peoples
a banquet of rich food, a banquet of fine wines,
of food rich and juicy, of fine strained wines.
On this mountain he will remove
the mourning veil covering all peoples,
and the shroud enwrapping all nations,
he will destroy Death for ever.
The Lord will wipe away
the tears from every cheek;
he will take away his people’s shame
everywhere on earth,
for the Lord has said so.
That day, it will be said: See, this is our God
in whom we hoped for salvation;
the Lord is the one in whom we hoped.
We exult and we rejoice
that he has saved us;
for the hand of the Lord
rests on this mountain.

The Word of the Lord.

அக்டோபர் 11 : நற்செய்தி வாசகம்நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்.மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 1-14

அக்டோபர் 11 :   நற்செய்தி வாசகம்

நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 1-14

அக்காலத்தில்
இயேசு மீண்டும் தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.

மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ‘நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராய் உள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்’ என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்.

அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.

பின்னர் தம் பணியாளர்களிடம், ‘திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது.

அரசர் விருந்தினரைப் பார்க்க வந்தபோது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார். அரசர் அவனைப் பார்த்து, ‘தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?’ என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ‘அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்றார். இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 11 : இரண்டாம் வாசகம்எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு, எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-14, 19-20

அக்டோபர் 11 :  இரண்டாம் வாசகம்

எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு, எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-14, 19-20
சகோதரர் சகோதரிகளே,

எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்.

எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு. ஆயினும் நான் பட்ட துன்பத்தில் நீங்கள் பங்கு கொண்டது உங்கள் நன்மனத்தைக் காட்டுகிறது.

என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார். நம் தந்தையாகிய கடவுளுக்கு என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபே 1: 18, 19

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா.

அக்டோபர் 11 : பதிலுரைப் பாடல்திபா 23: 1-3a. 3b-4. 5. 6 . (பல்லவி: 6cd)பல்லவி: நான் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

அக்டோபர் 11 :  பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3a. 3b-4. 5. 6 . (பல்லவி: 6cd)

பல்லவி: நான் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
1.ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2.பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3a.அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். - பல்லவி

3b.தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
4.மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி

5.என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி

6.உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி

அக்டோபர் 11 : முதல் வாசகம்ஆண்டவர் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 25: 6-10a

அக்டோபர் 11 :  முதல் வாசகம்

ஆண்டவர் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 25: 6-10a
படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும். மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார்.

என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்து விடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்; தம் மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார்.

அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்: “இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.” ஆண்டவரின் ஆற்றல் இம்மலையில் தங்கியிருக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பொதுக்காலம் இருபத்து எட்டாம் ஞாயிறு(அக்டோபர் 11)

வெள்ளி, 9 அக்டோபர், 2020

October 10th : Gospel 'Happy the womb that bore you and the breasts you sucked!'A Reading from the Holy Gospel according to St.Luke 11:27-28

October 10th : Gospel 

'Happy the womb that bore you and the breasts you sucked!'

A Reading from the Holy Gospel according to St.Luke 11:27-28 
As Jesus was speaking, a woman in the crowd raised her voice and said, ‘Happy the womb that bore you and the breasts you sucked!’ But he replied, ‘Still happier those who hear the word of God and keep it!’

The Gospel of the Lord.

October 10th : Responsorial PsalmPsalm 104(105):2-7 The Lord remembers his covenant for ever.or Alleluia!

October 10th : Responsorial Psalm

Psalm 104(105):2-7 

The Lord remembers his covenant for ever.
or Alleluia!
O sing to the Lord, sing his praise;
  tell all his wonderful works!
Be proud of his holy name,
  let the hearts that seek the Lord rejoice.

The Lord remembers his covenant for ever.
or Alleluia!

Consider the Lord and his strength;
  constantly seek his face.
Remember the wonders he has done,
  his miracles, the judgements he spoke.

The Lord remembers his covenant for ever.
or Alleluia!

O children of Abraham, his servant,
  O sons of the Jacob he chose.
He, the Lord, is our God:
  his judgements prevail in all the earth.

The Lord remembers his covenant for ever.
or Alleluia!

Gospel Acclamation Jn14:23

Alleluia, alleluia!
If anyone loves me he will keep my word,
and my Father will love him,
and we shall come to him.
Alleluia!

October 10th : First ReadingThere are no more distinctions: all are one in Christ Jesus.A Reading from the Letter of St.Paul to the Galatians 3:22-29

October 10th : First Reading

There are no more distinctions: all are one in Christ Jesus.

A Reading from the Letter of St.Paul to the Galatians 3:22-29 
Scripture makes no exceptions when it says that sin is master everywhere. In this way the promise can only be given through faith in Jesus Christ and can only be given to those who have this faith.
  Before faith came, we were allowed no freedom by the Law; we were being looked after till faith was revealed. The Law was to be our guardian until the Christ came and we could be justified by faith. Now that that time has come we are no longer under that guardian, and you are, all of you, sons of God through faith in Christ Jesus. All baptised in Christ, you have all clothed yourselves in Christ, and there are no more distinctions between Jew and Greek, slave and free, male and female, but all of you are one in Christ Jesus. Merely by belonging to Christ you are the posterity of Abraham, the heirs he was promised.

The Word of the Lord.

அக்டோபர் 10 : நற்செய்தி வாசகம்இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் அதிகம் பேறுபெற்றோர்.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28

அக்டோபர் 10 :  நற்செய்தி வாசகம்

இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் அதிகம் பேறுபெற்றோர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28
அக்காலத்தில்

இயேசு மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று குரலெழுப்பிக் கூறினார்.

அவரோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.