இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 25 நவம்பர், 2020

FIRST READING*_I saw another angel come down from heaven,_*A reading from the Book of Revelation 18:1-2, 21-23; 19:1-3, 9*

_🍁Daily Reading for Thursday November 26, 2020_

*FIRST READING*

_I saw another angel come down from heaven,_

*A reading from the Book of Revelation 18:1-2, 21-23; 19:1-3, 9*
After this, I saw another angel come down from heaven, with great authority given to him; the earth shone with his glory. At the top of his voice he shouted, 'Babylon has fallen, Babylon the Great has fallen, and has become the haunt of devils and a lodging for every foul spirit and dirty, loathsome bird. Then a powerful angel picked up a boulder like a great millstone, and as he hurled it into the sea, he said, 'That is how the great city of Babylon is going to be hurled down, never to be seen again. Never again in you will be heard the song of harpists and minstrels, the music of flute and trumpet; never again will craftsmen of every skill be found in you or the sound of the handmill be heard; 
never again will shine the light of the lamp in you, never again will be heard in you the voices of bridegroom and bride. Your traders were the princes of the earth, all the nations were led astray by your sorcery. After this I heard what seemed to be the great sound of a huge crowd in heaven, singing, "Alleluia! Salvation and glory and power to our God He judges fairly, he punishes justly, and he has condemned the great prostitute who corrupted the earth with her prostitution; he has avenged the blood of his servants which she shed.' And again they sang, 'Alleluia! The smoke of her will rise for ever and ever.' The angel said, 'Write this, "Blessed are those who are invited to the wedding feast of the Lamb," ' and he added, 'These words of God are true.'



*The Word of the Lord*

நற்செய்தி வாசகம்*_நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.''_*லூக்கா எழுதிய நற்செய்தி

*📖நற்செய்தி வாசகம்*

_நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.''_

*லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 20-28*
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு நெருங்கி வந்துவிட்டது என அறிந்து கொள்ளுங்கள். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்; நகரத்தின் நடுவில் உள்ளவர்கள் வெளியேறட்டும்; நாட்டுப் புறங்களில் இருப்பவர்கள் நகரத்துக்குள்ளே வரவேண்டாம். ஏனெனில் அவை பழிவாங்கும் நாள்கள். அப்போது மறைநூலில் எழுதியுள்ள யாவும் நிறைவேறும். அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்! ஏனெனில் மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள்மீது கடவுளின் சினமும் வரும். அவர்கள் கூரான வாளால் வீழ்த்தப்படுவார்கள்; எல்லா நாடுகளுக்கும் சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள்; பிற இனத்தார் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும். மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.'' 

*இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.*

பதிலுரைப் பாடல்**திபா 100: 1-2. 3. 4. 5*_பல்லவி: செம்மறியின் திருமண விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்._

*🌿பதிலுரைப் பாடல்*

*திபா 100: 1-2. 3. 4. 5*

_பல்லவி: செம்மறியின் திருமண விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்._
1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!
மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! -பல்லவி 

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!
அவரே நம்மைப் படைத்தவர்!
நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! -பல்லவி 

4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்!
புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்!
அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! -பல்லவி 

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;
என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;
தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். -பல்லவி 

______ 

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.
*லூக்கா  21:28*

_வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன்._*திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 18: 1-2, 21-23; 19: 1-3,9*

_🍃ஆண்டின் 34ஆம் வாரம் வியாழன் 26/11/2020_

*முதல் வாசகம்*

_வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன்._

*திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 18: 1-2, 21-23; 19: 1-3,9*
சகோதரர் சகோதரிகளே, வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். மிகுந்த அதிகாரம் கொண்டிருந்த அவருடைய மாட்சியால் மண்ணகம் ஒளிர்ந்தது. அவர் வல்லமையோடு குரலெழுப்பிப் பின் வருமாறு கத்தினார்: ``வீழ்ந்தது! வீழ்ந்தது! பாபிலோன் மாநகர்! அவள் பேய்களின் உறைவிடமாக, அனைத்துத் தீய ஆவிகளின் பதுங்கிடமாக, தூய்மையற்ற பறவைகள் அனைத்தின் புகலிடமாக, தூய்மையற்ற வெறுக்கத்தக்க விலங்குகளின் இருப்பிடமாக மாறிவிட்டாள்.'' பின்னர் வலிமை வாய்ந்த ஒரு வானதூதர் பெரிய எந்திரக்கல் போன்ற ஒரு கல்லைத் தூக்கிக் கடலில் எறிந்து பின்வருமாறு கூறினார்: ``பாபிலோன் மாநகரே, நீ இவ்வாறு வீசி எறியப்படுவாய்; நீ இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடுவாய். யாழை மீட்டுவோர், பாடகர், குழல் ஊதுவோர், எக்காளம் முழக்குவோர் ஆகியோர் எழுப்பும் இசை இனி உன் நடுவே எழவே எழாது; தொழில் செய்யும் கைவினைஞர் அனைவரும் இனி உன் நடுவே குடியிருக்கவே மாட்டார்கள்; எந்திரக்கல் எழுப்பும் ஒலி இனி உன் நடுவே எழவே எழாது. விளக்கின் ஒளி இனி உன்னகத்தே ஒளிரவே ஒளிராது; மணமக்களின் மங்கல ஒலி இனி உன்னகத்தே எழவே எழாது; ஏனெனில் உன் வணிகர்கள் மண்ணுலகில் பெருங்குடி மக்களாய் விளங்கினார்கள்; உன் பில்லிசூனியம் எல்லா நாடுகளையும் ஏமாற்றி விட்டது.'' இதன்பின் பெருந்திரளான மக்களின் கூச்சல் போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன். அது பின்வருமாறு முழங்கியது: ``அல்லேலூயா! மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன. ஏனெனில் அவருடைய தீர்ப்புகள் உண்மை உள்ளவை, நீதியானவை. தன் பரத்தைமையால் மண்ணுலகை அழிவுக்குட்படுத்திய பேர்போன அந்த விலைமகளுக்கு அவர் தீர்ப்பு வழங்கினார்; தம் பணியாளர்களைக் கொன்றதற்காக அவளைப் பழிவாங்கினார்.'' மீண்டும் அந்த மக்கள், ``அல்லேலூயா! அந்த நகர் நடுவிலிருந்து புகை என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது'' என்றார்கள். அந்த வானதூதர் என்னிடம், `` `ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்' என எழுது'' என்று கூறினார். 

*இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.*

செவ்வாய், 24 நவம்பர், 2020

_You will be hated universally on account of my name, but not a hair of your head will be lost._*A reading from the Holy Gospel according to St Luke 21:12-19*

*GOSPEL*

_You will be hated universally on account of my name, but not a hair of your head will be lost._

*A reading from the Holy Gospel according to St Luke 21:12-19* 
'But before all this happens, you will be seized and persecuted; you will be handed over to the synagogues and to imprisonment, and brought before kings and governors for the sake of my name  and that will be your opportunity to bear witness. 
Make up your minds not to prepare your defence,  because I myself shall give you an eloquence and a wisdom that none of your opponents will be able to resist or contradict. You will be betrayed even by parents and brothers, relations and friends; and some of you will be put to death. You will be hated universally on account of my name, but not a hair of your head will be lost. Your perseverance will win you your lives.

*The Gospel of the Lord*

I believe in God, /...

_Response: Almighty, your deeds are wonderful_*Psalms 98:1, 2-3, 7-8, 9*

*𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*

_Response: Almighty, your deeds are wonderful_

*Psalms 98:1, 2-3, 7-8, 9*

1 [Psalm] Sing a new song to Yahweh, for he has performed wonders, his saving power is in his right hand and his holy arm. 
2 Yahweh has made known his saving power, revealed his saving justice for the nations to see, 

3 mindful of his faithful love and his constancy to the House of Israel. The whole wide world has seen the saving power of our God. 

7 Let the sea thunder, and all that it holds, the world and all who live in it. 

8 Let the rivers clap their hands, and the mountains shout for joy together, 

9 at Yahweh's approach, for he is coming to judge the earth; he will judge the world with saving justice and the nations with fairness.


____ 

🌿Before the gospel
  
𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔, 𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔!  Be confident until you die.  Then I will make life as good as yours, says the Lord.
𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔. 

FIRST READING*_and they were singing the hymn of Moses, the servant of God, and the hymn of the Lamb:_*A reading from the Book of Revelation 15:1-4*

_🍁Daily Reading for Wednesday November 25, 2020_

*FIRST READING*

_and they were singing the hymn of Moses, the servant of God, and the hymn of the Lamb:_

*A reading from the Book of Revelation 15:1-4*
And I saw in heaven another sign, great and wonderful: seven angels were bringing the seven plagues that are the last of all, because they exhaust the anger of God. 
I seemed to be looking at a sea of crystal suffused with fire, and standing by the lake of glass, those who had fought against the beast and won, and against his statue and the number which is his name. They all had harps from God, 
 and they were singing the hymn of Moses, the servant of God, and the hymn of the Lamb: How great and wonderful are all your works, Lord God Almighty; upright and true are all your ways, King of nations. 
Who does not revere and glorify your name, O Lord? For you alone are holy, and all nations will come and adore you for the many acts of saving justice you have shown. 

*The Word of the Lord*

நற்செய்தி வாசகம்* _என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது._ *✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19*

*நற்செய்தி வாசகம்* 

_என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது._ 

*✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19* 

அக்காலத்தில் 
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக் கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரிகள் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. 

ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.” 

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்* *திபா 98: 1. 2-3ab. 7-8. 9 . (பல்லவி: திவெ 15: 3b)* _பல்லவி: எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் வியப்புக்குரியன._

*பதிலுரைப் பாடல்* 

*திபா 98: 1. 2-3ab. 7-8. 9 . (பல்லவி: திவெ 15: 3b)* 

_பல்லவி: எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் வியப்புக்குரியன._ 
1 ஆண்டவருக்கு புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி 

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3ab இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். - பல்லவி 

7 கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! 8 ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். - பல்லவி 

9 ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். - பல்லவி 

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி* 

*திவெ 2: 10* 

_அல்லேலூயா, அல்லேலூயா! இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா._

பொதுக்காலம் 34ஆம் வாரம் – புதன் 25/11/2020* *முதல் வாசகம்* _கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக்கொண்டிருந்தார்கள்._ *திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 15: 1-4*

*பொதுக்காலம் 34ஆம் வாரம் – புதன் 25/11/2020* 

*முதல் வாசகம்* 

_கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக்கொண்டிருந்தார்கள்._ 

*திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 15: 1-4* 

சகோதரர் சகோதரிகளே, 
யோவான் என்னும் நான் பெரியதும் வியப்புக்குரியதுமான மற்றோர் அடையாளத்தை விண்ணகத்தில் கண்டேன்: ஏழு வானதூதர்கள் ஏழு வாதைகளைக் கொண்டிருந்தார்கள். இறுதியான அந்த வாதைகளோடு கடவுளின் சீற்றம் முற்றிலும் தணியும். 

நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றையும் கண்டேன். தொடர்ந்து, விலங்கின் மீதும் அதன் சிலை மீதும் எண்ணால் குறிக்கப்பெற்ற அந்த ஆள் மீதும் வெற்றி பெற்றவர்கள், கடவுள் கொடுத்திருந்த யாழ்களை ஏந்திய வண்ணம் கண்ணாடிக் கடல் அருகே நின்றுகொண்டிருக்கக் கண்டேன். அவர்கள் கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக் கொண்டிருந்தார்கள்: 

“கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் பெரியன, வியப்புக்குரியன. மக்களினங்களின் மன்னரே, உம் வழிகள் நேரியவை, உண்மையுள்ளவை. ஆண்டவரே, உமக்கு அஞ்சாதவர் யார்? உமது பெயரைப் போற்றிப் புகழாதார் யார்? நீர் ஒருவரே தூயவர், எல்லா மக்களினங்களும் உம் திருமுன் வந்து வணங்கும். ஏனெனில் உம் நீதிச் செயல்கள் வெளிப்படையாயின.” 

ஆண்டவரின் அருள்வாக்கு.