இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 22 ஜனவரி, 2021

பதிலுரைப் பாடல் திபா 47: 1-2. 5-6. 7-8 (பல்லவி: 5b) பல்லவி: எக்காளம் முழங்கிடவே, உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.

23 சனவரி 2021, பொதுக்காலம் 2ஆம் வாரம் - சனி 

பதிலுரைப் பாடல் 

திபா 47: 1-2. 5-6. 7-8 (பல்லவி: 5b) 

பல்லவி: எக்காளம் முழங்கிடவே, உயரே ஏறுகின்றார் ஆண்டவர். 
1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. - பல்லவி 

5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். - பல்லவி 

7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள்.
8 கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். - பல்லவி 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தை திறந்தருளும். அல்லேலூயா. 

________

முதல் வாசகம் இயேசு, தம் சொந்த இரத்தத்தைக் கொண்டு, எக்காலத்திற்குமே ஒரே முறையில் தூயகத்திற்குள் நுழைந்தார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 2-3, 11-14

23 சனவரி 2021, பொதுக்காலம் 2ஆம் வாரம் - சனி 

முதல் வாசகம் 

இயேசு, தம் சொந்த இரத்தத்தைக் கொண்டு, எக்காலத்திற்குமே ஒரே முறையில் தூயகத்திற்குள் நுழைந்தார். 

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 2-3, 11-14 

சகோதரர் சகோதரிகளே, 
திரு உறைவிடத்தில் முன்கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அங்கே ஒரு விளக்குத் தண்டும் ஒரு மேசையும் படையல் அப்பங்களும் இருந்தன. இவ்விடத்திற்குத் ‘தூயகம்’ என்பது பெயர். இரண்டாம் திரைக்குப் பின், “திருத்தூயகம்” என்னும் கூடாரம் இருந்தது. 

ஆனால், இப்போது கிறிஸ்து தலைமைக் குருவாக வந்துள்ளார். அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதைவிட மேலானது, நிறைவு மிக்கது. அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல; அதாவது, படைக்கப்பட்ட இவ்வுலகைச் சார்ந்தது அல்ல. அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒரு முறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்புக் கிடைக்கும்படி செய்தார். 

வெள்ளாட்டுக்கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள்மீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது! ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே. 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

GOSPEL "The people of his home said: He lost his mind" A Reading from the Holy Gospel according to Mark (3, 20-21)

Daily Reading for Saturday January 23, 2021 

📖GOSPEL 

"The people of his home said: He lost his mind" 

A Reading from the Holy Gospel according to Mark (3, 20-21) 
At that time, Jesus came home, where the crowd gathered again, so that it was not even possible to eat. The people of his house, hearing him, came to seize him, for they said, “He has lost his mind. " 

The Gospel of the Lord 

I believe in God, /....

RESPONSORIAL Respons : God rises among the ovations, the Lord, to the bursting of the horn. Psalm 46 (47)

Daily Reading for Saturday January 23, 2021 

RESPONSORIAL 

Respons : God rises among the ovations, the Lord, to the bursting of the horn. 

Psalm 46 (47) 
All peoples, clap your hands,
acclaim God with your cries of joy!
For the Lord is the Most High, the dreadful,
the great King over all the earth. R 

God rises up amidst ovations,
the Lord, with the sound of the horn.
Ring for our God, ring,
ring for our king, ring! R 

For God is the king of the earth:
let your music announce it!
He reigns, God, over the heathen,
God sits on his sacred throne. R 

_______ 

🌿Gospel Acclamation 

```Alleluia, alleluia! Lord, open our hearts to keep the words of your Son in our minds. Alleluia!```

Daily Reading for Saturday January 23, 2021 FIRST READING "He entered the sanctuary once and for all, shedding his own blood" of the letter to the Hebrews (9, 2-3.11-14)

Daily Reading for Saturday January 23, 2021 

FIRST READING 

"He entered the sanctuary once and for all, shedding his own blood" 

of the letter to the Hebrews (9, 2-3.11-14) 
Brethren, in the sanctuary of the Old Covenant, a tent was set up, the first, where were the seven-branched candlestick and the table with the loaves of the offering; this is what we call the Saint. Behind the second curtain was the tent called the Holy of Holies. Christ has come, high priest of good things to come. Through the larger and more perfect tent, the one which is not the work of human hands and does not belong to this creation, he entered the sanctuary once and for all, shedding not the blood of goats and goats. young bulls, but his own blood. In this way, he obtained a final release. If it is true that a simple sprinkling with the blood of goats and bulls, and the ashes of heifers, sanctifies those who are defiled, making them pure again, the blood of Christ does much more, for Christ, moved by the Eternal Spirit, offered himself to God as a faultless victim; his blood will therefore purify our conscience from acts that lead to death, so that we can worship the living God. 

The Word of the Lord

வியாழன், 21 ஜனவரி, 2021

நற்செய்தி வாசகம் தம்மிடம் இருக்கும்படி தாம் விரும்பியவர்களை அழைத்தார். மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-19

22 சனவரி 2021, பொதுக்காலம், வாரம் 2 வெள்ளி 

நற்செய்தி வாசகம் 

தம்மிடம் இருக்கும்படி தாம் விரும்பியவர்களை அழைத்தார். 

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-19 
இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.
அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் - இவ்விருவருக்கும் `இடியைப் போன்றோர்' எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார் - அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர். 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி. 

--------------------

பதிலுரைப் பாடல் பல்லவி: பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும். திபா 85: 7,9. 10-11. 12-13 (பல்லவி: 10ய)

22 சனவரி 2021, பொதுக்காலம், வாரம் 2 வெள்ளி 

பதிலுரைப் பாடல் 

பல்லவி: பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும். 

திபா 85: 7,9. 10-11. 12-13 (பல்லவி: 10ய) 
7 ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்;
உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி;
நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். -பல்லவி 

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்;
நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்;
விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். -பல்லவி 

12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்;
நல் விளைவை நம் நாடு நல்கும்.
13 நீதி அவர்முன் செல்லும்;
அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். -பல்லவி 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா. 

________

முதல் வாசகம் இயேசு கிறிஸ்துவை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிடச் சிறப்புமிக்கது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 8: 6-13

22 சனவரி 2021, பொதுக்காலம், வாரம் 2 வெள்ளி 

முதல் வாசகம் 

இயேசு கிறிஸ்துவை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிடச் சிறப்புமிக்கது. 

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 8: 6-13 
சகோதரர் சகோதரிகளே, சீரிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டு, இயேசு கிறிஸ்துவை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிடச் சிறப்புமிக்கது. முதல் உடன்படிக்கை குறையற்றதாய் இருந்திருப்பின், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடமே இருந்திருக்காது. ஆனால், கடவுள் அவர்களது குற்றத்தை எடுத்துக் கூறிச் சொன்னது இதுவே: ``இதோ, நாள்கள் வருகின்றன. அப்போது இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன்'' என்கிறார் ஆண்டவர். `எகிப்து நாட்டிலிருந்து அவர்களுடைய மூதாதையரைக் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது நான் அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. ஏனெனில், நான் அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள்; நானும் அவர்கள்மீது அக்கறை கொள்ளவில்லை' என்கிறார் ஆண்டவர். `அந்நாள்களுக்குப் பின் இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்ய இருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்' என்கிறார் ஆண்டவர். இனிமேல் எவரும் `ஆண்டவரை அறிந்துகொள்ளும்' எனத் தம் அடுத்தவருக்கோ, சகோதரர் சகோதரிகளுக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில், அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர். அவர்களது தீச்செயலை நான் இரக்கத்தோடு மன்னித்து விடுவேன். அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூர மாட்டேன்.' ``புதியதோர் உடன்படிக்கை'' என்பதால், முன்னையதை அவர் பழையதாக்கிவிட்டார். பழமையானதும் நாள்பட்டதும் விரைவில் மறைய வேண்டியதே. 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

GOSPEL "Jesus called those he wanted to be with him" A Reading from the Holy Gospel according to Mark (3, 13-19)

Daily Reading for Friday January 22, 2021 

📖GOSPEL 

"Jesus called those he wanted to be with him" 

A Reading from the Holy Gospel according to Mark (3, 13-19) 
At that time, Jesus climbed the mountain, and he called those he wanted. They came to him, and he appointed twelve of them to be with him and to send them to proclaim the Good News with the power to expel demons. So he established the Twelve: Peter - this is the name he gave to Simon -, James, son of Zebedee, and John, James' brother - he gave them the name of "Boanerguès", that is - that is to say: "Son of thunder" -, André, Philippe, Bartholomew, Matthew, Thomas, Jacques, son of Alphée, Thaddée, Simon the Zealot, and Judas Iscariot, the very one who delivered him. 

The Gospel of the Lord 

I believe in God, /....

RESPONSORIAL Respons : Love and truth meet. Psalm 84 (85)

Daily Reading for Friday January 22, 2021 

RESPONSORIAL 

Respons : Love and truth meet. 

Psalm 84 (85) 
Show us, Lord, your love,
and give us your salvation.
Your salvation is near to those who fear you,
and glory will dwell in our earth. R 

Love and truth meet,
justice and peace embrace;
truth will sprout from earth
and from heaven will lean justice. R 

The Lord will give his blessings,
and our land will yield its fruit.
Righteousness will walk before him,
and his steps will make the way. R 

_______ 

🌿Gospel Acclamation 

```Alleluia, alleluia! God reconciled them to himself through Christ, regardless of the sins of the world. He himself handed over the message of reconciliation to us. Alleluia!```