இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 15 ஜனவரி, 2022

January 16th : Responsorial PsalmPsalm 95(96):1-3,7-10 Proclaim the wonders of the Lord among all the peoples.

January 16th : Responsorial Psalm

Psalm 95(96):1-3,7-10 

Proclaim the wonders of the Lord among all the peoples.
O sing a new song to the Lord,
  sing to the Lord all the earth.
  O sing to the Lord, bless his name.

Proclaim the wonders of the Lord among all the peoples.

Proclaim his help day by day,
  tell among the nations his glory
  and his wonders among all the peoples.

Proclaim the wonders of the Lord among all the peoples.

Give the Lord, you families of peoples,
  give the Lord glory and power;
  give the Lord the glory of his name.

Proclaim the wonders of the Lord among all the peoples.

Worship the Lord in his temple.
  O earth, tremble before him.
Proclaim to the nations: ‘God is king.’
  He will judge the peoples in fairness.

Proclaim the wonders of the Lord among all the peoples.

January 16th : First Reading The bridegroom rejoices in his bride.A Reading from the Book of Isaiah 62 : 1-5

January 16th :  First Reading 

The bridegroom rejoices in his bride.

A Reading from the Book of Isaiah 62 : 1-5 
About Zion I will not be silent,
about Jerusalem I will not grow weary,
until her integrity shines out like the dawn
and her salvation flames like a torch.
The nations then will see your integrity,
all the kings your glory,
and you will be called by a new name,
one which the mouth of the Lord will confer.
You are to be a crown of splendour in the hand of the Lord,
a princely diadem in the hand of your God;
no longer are you to be named ‘Forsaken’,
nor your land ‘Abandoned’,
but you shall be called ‘My Delight’
and your land ‘The Wedded’;
for the Lord takes delight in you
and your land will have its wedding.
Like a young man marrying a virgin,
so will the one who built you wed you,
and as the bridegroom rejoices in his bride,
so will your God rejoice in you.

The Word of the Lord.

வெள்ளி, 14 ஜனவரி, 2022

சனவரி 15 : நற்செய்தி வாசகம்நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்.✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-17

சனவரி  15 : நற்செய்தி வாசகம்

நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-17
இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார். பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.

பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள். அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், “இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?” என்று கேட்டனர்.

இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, “நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 15 : பதிலுரைப் பாடல்திபா 21: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 1a)பல்லவி: உமது வல்லமையில் ஆண்டவரே, அரசர் பூரிப்படைகின்றார்.

சனவரி  15 :  பதிலுரைப் பாடல்

திபா 21: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 1a)

பல்லவி: உமது வல்லமையில் ஆண்டவரே, அரசர் பூரிப்படைகின்றார்.
1
ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்; நீர் அளித்த வெற்றியில் எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்!
2
அவர் உள்ளம் விரும்பியதை நீர் அவருக்குத் தந்தருளினீர்; அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை. - பல்லவி

3
உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி நீர் அவரை எதிர்கொண்டீர்; அவர் தலையில் பசும்பொன்முடி சூட்டினீர்.
4
அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி நின்றார்; நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை அவருக்கு அளித்தீர். - பல்லவி

5
நீர்அவருக்கு வெற்றியளித்ததால் அவரது மாட்சிமை பெரிதாயிற்று. மேன்மையையும் மாண்பையும் அவருக்கு அருளினீர்.
6
உண்மையாகவே, எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை அவர் பெற்றுள்ளார்; உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 4: 18-19

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

சனவரி 15 : முதல் வாசகம்இதோ நான் உனக்குச் சொன்ன மனிதன் சவுல்! இவனே என் மக்கள்மீது ஆட்சிபுரிவான்.சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 9: 1-4, 17-19; 10: 1a

சனவரி  15 :  முதல் வாசகம்

இதோ நான் உனக்குச் சொன்ன மனிதன் சவுல்! இவனே என் மக்கள்மீது ஆட்சிபுரிவான்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 9: 1-4, 17-19; 10: 1a
அந்நாள்களில்

பென்யமின் குலத்தில் கீசு என்ற ஆற்றல்மிகு வீரர் ஒருவர் இருந்தார். அவர் பென்யமினியன் அபியாவுக்குப் பிறந்த பெக்கோராத்தின் மகனான செரோரின் மகன் அபியேலுக்குப் பிறந்தவர். அவருக்குச் சவுல் என்ற ஓர் இளமையும் அழகும் கொண்ட மகன் இருந்தார். இஸ்ரயேலின் புதல்வருள் அவரைவிட அழகு வாய்ந்தவர் எவரும் இலர். மற்ற அனைவரையும்விட அவர் உயரமானவர். மற்ற அனைவரும் அவர் தோள் உயரமே இருந்தனர்.

சவுலின் தந்தை கீசின் கழுதைகள் காணாமற் போயின. கீசு தம் மகன் சவுலை அழைத்து, “பணியாளன் ஒருவனை உன்னோடு கூட்டிக் கொண்டு, கழுதைகளைத் தேடிப் போ” என்றார். அவர் எப்ராயிம் மலைநாட்டையும் சாலிசா பகுதியையும் கடந்து சென்றார்; அவற்றைக் காணவில்லை; சாலிம் நாட்டு வழியே சென்றார், அங்கும் அவை இல்லை; பென்யமின் நாட்டைக் கடந்து சென்றார், அங்கும் அவை தென்படவில்லை.

சாமுவேல் சவுலைக் கண்டதும், ஆண்டவர் அவரிடம், “இதோ நான் உனக்குச் சொன்ன மனிதன்! இவனே என் மக்கள்மீது ஆட்சிபுரிவான்” என்றார்.

சவுல் வாயிலின் நடுவே சாமுவேலை நெருங்கி, “திருக்காட்சியாளரின் வீடு எங்கே? தயைகூர்ந்து சொல்லும்” என்று கேட்டார். சாமுவேல் சவுலுக்குக் கூறியது: “நானே திருக்காட்சியாளன். எனக்கு முன்பாக தொழுகை மேட்டுக்குச் செல். இன்று நீ என்னோடு உண்ண வேண்டும். உன் உள்ளத்தில் இருப்பது அனைத்தையும் நாளைக் காலையில் நான் உனக்கு எடுத்துரைத்து உன்னை அனுப்பிவிடுகிறேன்.”

அப்போது சாமுவேல் தைலக் குப்பியை எடுத்து, அவர் தலைமீது வார்த்து, அவரை முத்தமிட்டுக் கூறியது: “ஆண்டவர் தம் உரிமைச் சொத்துக்குத் தலைவனாக இருக்கும்படி உன்னைத் திருப்பொழிவு செய்துள்ளார் அன்றோ?”

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 15th : Gospel Your light must shine in the sight of men.A Reading from the Holy Gospel according to St.Mark 2:13-17

January 15th :  Gospel 

Your light must shine in the sight of men.

A Reading from the Holy Gospel according to St.Mark 2:13-17 
Jesus went out to the shore of the lake; and all the people came to him, and he taught them. As he was walking on he saw Levi the son of Alphaeus, sitting by the customs house, and he said to him, ‘Follow me.’ And he got up and followed him.
  When Jesus was at dinner in his house, a number of tax collectors and sinners were also sitting at the table with Jesus and his disciples; for there were many of them among his followers. When the scribes of the Pharisee party saw him eating with sinners and tax collectors, they said to his disciples, ‘Why does he eat with tax collectors and sinners?’ When Jesus heard this he said to them, ‘It is not the healthy who need the doctor, but the sick. I did not come to call the virtuous, but sinners.’

The Word of the Lord.

January 15th : Responsorial PsalmPsalm 20(21):2-7 O Lord, your strength gives joy to the king.

January 15th :  Responsorial Psalm

Psalm 20(21):2-7 

O Lord, your strength gives joy to the king.
O Lord, your strength gives joy to the king;
  how your saving help makes him glad!
You have granted him his heart’s desire;
  you have not refused the prayer of his lips.

O Lord, your strength gives joy to the king.

You came to meet him with the blessings of success,
  you have set on his head a crown of pure gold.
He asked you for life and this you have given,
  days that will last from age to age.

O Lord, your strength gives joy to the king.

Your saving help has given him glory.
  You have laid upon him majesty and splendour,
you have granted your blessings to him forever.
  You have made him rejoice with the joy of your presence.

O Lord, your strength gives joy to the king.

Gospel Acclamation Ps118:36,29

Alleluia, alleluia!
Bend my heart to your will, O Lord,
and teach me your law.
Alleluia!

January 15th : First ReadingThe Lord chooses Saul as king; Samuel anoints him.1 Samuel 9:1-4,17-19,10:1

January 15th :  First Reading

The Lord chooses Saul as king; Samuel anoints him.

1 Samuel 9:1-4,17-19,10:1 
Among the men of Benjamin there was a man named Kish son of Abiel, son of Zeror, son of Becorath, son of Aphiah; a Benjaminite and a man of rank. He had a son named Saul, a handsome man in the prime of life. Of all the Israelites there was no one more handsome than he; he stood head and shoulders taller than the rest of the people. Now some of the she-donkeys of Saul’s father Kish had strayed, so Kish said to Saul, ‘My son, take one of the servants with you and be off; go and look for the she-donkeys.’ They passed through the highlands of Ephraim and passed through the land of Shalishah, but did not find them; they passed through the land of Shaalim, they were not there; they passed through the land of Benjamin, but did not find them.
  When Samuel saw Saul, the Lord told him, ‘That is the man of whom I told you; he shall rule my people.’ Saul accosted Samuel in the gateway and said, ‘Tell me, please, where the seer’s house is?’ Samuel replied to Saul, ‘I am the seer. Go up ahead of me to the high place. You are to eat with me today. In the morning I shall take leave of you and tell you all that is in your heart.’
  Samuel took a phial of oil and poured it on Saul’s head; then he kissed him, saying, ‘Has not the Lord anointed you prince over his people Israel? You are the man who must rule the Lord’s people, and who must save them from the power of the enemies surrounding them.’

The Word of the Lord.

வியாழன், 13 ஜனவரி, 2022

சனவரி 14 : நற்செய்தி வாசகம்மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க, மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு.✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

சனவரி  14  :  நற்செய்தி வாசகம்

மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க, மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12
இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், “இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?” என உள்ளத்தில் எண்ணிக்கொண்டிருந்தனர்.

உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, “உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்? முடக்குவாதமுற்ற இவனிடம் ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்பதா? ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்பதா? எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ” என்றார்.

அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், “இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே” என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 14 : பதிலுரைப் பாடல்திபா 89: 15-16. 17-18 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன்.

சனவரி  14  :  பதிலுரைப் பாடல்

திபா 89: 15-16. 17-18 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன்.
15
விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள்.
16
அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். - பல்லவி

17
ஏனெனில், நீரே அவர்களது ஆற்றலின் மேன்மை; உமது தயவால் எங்கள் வலிமை உயர்த்தப்பட்டுள்ளது.
18
நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது; நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு உரியவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா!

 நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.