இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 3 ஜூன், 2022

ஜூன் 4 : முதல் வாசகம்பவுல் உரோமையில் தங்கி, இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 28: 16-20, 30-31

ஜூன் 4  :  முதல் வாசகம்

பவுல் உரோமையில் தங்கி, இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 28: 16-20, 30-31
உரோமையில் தனி வீட்டில் தங்கியிருக்க பவுல் அனுமதி பெற்றுக்கொண்டார். ஆனால் படைவீரர் ஒருவர் அவரைக் காவல் காத்து வந்தார். மூன்று நாள்களுக்குப் பின்பு பவுல் யூத முதன்மைக் குடிமக்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்கள் வந்து கூடியபின் அவர்களை நோக்கி, “சகோதரரே, நான் நம்முடைய மக்களுக்கு எதிராகவோ, மூதாதையரின் மரபுகளுக்கு எதிராகவோ எதுவும் செய்யவில்லை. எனினும் எருசலேமில் நான் கைதுசெய்யப்பட்டு உரோமையரிடம் ஒப்புவிக்கப்பட்டேன். அவர்கள் என்னை விசாரித்தபோது மரண தண்டனைக்குரிய குற்றம் எதுவும் என்னிடம் காணாததால் என்னை விடுதலை செய்ய விரும்பினார்கள்.

யூதர்கள் அதனை எதிர்த்துப் பேசியபோது நான், “சீசரே என்னை விசாரிக்கவேண்டும்” என்று கேட்கவேண்டிய கட்டாயத்துக்குள்ளானேன். ஆனால் என் இனத்தவர்க்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் என்னிடமில்லை. இதனால்தான் நான் உங்களைக் கண்டு பேசுவதற்காக அழைத்தேன். இஸ்ரயேல் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பொருட்டு நான் விலங்கிடப்பட்டுள்ளேன்” என்றார்.

பவுல் அங்கு இரண்டு ஆண்டுகள் முழுவதும் தாம் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்தார். தம்மிடம் வந்த அனைவரையும் வரவேற்று இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப்பற்றி முழுத் துணிவோடு தடை ஏதுமின்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 4th : Gospel This disciple is the one who vouches for these things and we know that his testimony is trueA Reading from the Holy Gospel according to St.John 21: 20-25

June 4th :  Gospel 

This disciple is the one who vouches for these things and we know that his testimony is true

A Reading from the Holy Gospel according to St.John 21: 20-25 
Peter turned and saw the disciple Jesus loved following them – the one who had leaned on his breast at the supper and had said to him, ‘Lord, who is it that will betray you?’ Seeing him, Peter said to Jesus, ‘What about him, Lord?’ Jesus answered, ‘If I want him to stay behind till I come, what does it matter to you? You are to follow me.’ The rumour then went out among the brothers that this disciple would not die. Yet Jesus had not said to Peter, ‘He will not die’, but, ‘If I want him to stay behind till I come.’
  This disciple is the one who vouches for these things and has written them down, and we know that his testimony is true.
  There were many other things that Jesus did; if all were written down, the world itself, I suppose, would not hold all the books that would have to be written.

The Word of the Lord.

June 4th : Responsorial PsalmPsalm 10(11):4-5,7 ©The upright shall see your face, O Lord.orAlleluia!

June 4th :  Responsorial Psalm

Psalm 10(11):4-5,7 ©

The upright shall see your face, O Lord.
or
Alleluia!
The Lord is in his holy temple,
  the Lord, whose throne is in heaven.
His eyes look down on the world;
  his gaze tests mortal men.

The upright shall see your face, O Lord.
or
Alleluia!

The Lord tests the just and the wicked;
  the lover of violence he hates.
The Lord is just and loves justice;
  the upright shall see his face.

The upright shall see your face, O Lord.
or
Alleluia!

Gospel Acclamation Col3:1

Alleluia, alleluia!

Since you have been brought back to true life with Christ,
you must look for the things that are in heaven, where Christ is,
sitting at God’s right hand.
Alleluia!

June 4th : First ReadingIn Rome, Paul proclaimed the kingdom of God without hindrance from anyone.A Reading from the Acts of Apostles 28: 16-20,30-31

June 4th :  First Reading

In Rome, Paul proclaimed the kingdom of God without hindrance from anyone.

A Reading from the Acts of Apostles 28: 16-20,30-31 
On our arrival in Rome Paul was allowed to stay in lodgings of his own with the soldier who guarded him.
  After three days he called together the leading Jews. When they had assembled, he said to them, ‘Brothers, although I have done nothing against our people or the customs of our ancestors, I was arrested in Jerusalem and handed over to the Romans. They examined me and would have set me free, since they found me guilty of nothing involving the death penalty; but the Jews lodged an objection, and I was forced to appeal to Caesar, not that I had any accusation to make against my own nation. That is why I have asked to see you and talk to you, for it is on account of the hope of Israel that I wear this chain.’
  Paul spent the whole of the two years in his own rented lodging. He welcomed all who came to visit him, proclaiming the kingdom of God and teaching the truth about the Lord Jesus Christ with complete freedom and without hindrance from anyone.

The Word of the Lord.

வியாழன், 2 ஜூன், 2022

ஜூன் 3 : நற்செய்தி வாசகம்என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்; என் ஆடுகளை மேய்.✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 15-19

ஜூன் 3 :  நற்செய்தி வாசகம்

என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்; என் ஆடுகளை மேய்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 15-19
தம் சீடர்களுக்குத் தோன்றி, இயேசு சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்” என்றார். இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளை மேய்” என்றார்.

மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?” என்று கேட்டார். ‘உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’ என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளைப் பேணி வளர். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார்.

பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம், “என்னைப் பின் தொடர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 3 : பதிலுரைப் பாடல்திபா 103: 1-2. 11-12. 19-20 (பல்லவி: 19a)பல்லவி: ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலை நிறுத்தியுள்ளார்.

ஜூன் 3 : பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 11-12. 19-20 (பல்லவி: 19a)

பல்லவி: ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலை நிறுத்தியுள்ளார்.
அல்லது: அல்லேலூயா.

1
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! - பல்லவி

11
அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது.
12
மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். - பல்லவி

19
ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்; அவரது அரசு அனைத்தின்மீதும் பரவியுள்ளது.
20
அவர்தம் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்கோரே! ஆண்டவரின் தூதர்களே! அவரைப் போற்றுங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 26

அல்லேலூயா, அல்லேலூயா! 

தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். அல்லேலூயா.

ஜூன் 3 : முதல் வாசகம்இயேசு உயிரோடு இருப்பதாகப் பவுல் சாதித்தார்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 25: 13-21

ஜூன் 3 : முதல் வாசகம்

இயேசு உயிரோடு இருப்பதாகப் பவுல் சாதித்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 25: 13-21
அந்நாள்களில்

அகிரிப்பா அரசனும், பெர்னிக்கியுவும் பெஸ்தைச் சந்திக்கச் செசரியா வந்தனர். அவர்கள் பல நாள்கள் அங்குத் தங்கியிருந்தபோது பெஸ்து பவுலுக்கு எதிரான வழக்கை அரசனிடம் எடுத்துக் கூறினார்:

“பெலிக்சு கைதியாக விட்டுச்சென்ற ஒரு மனிதர் இங்கு இருக்கிறார். நான் எருசலேமிலிருந்தபோது தலைமைக் குருக்களும், யூதரின் மூப்பர்களும் அவரைப்பற்றிய வழக்கை என்னிடம் தெரிவித்து அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். நான் அவர்களைப் பார்த்து, ‘குற்றம் சாட்டப்பட்டவர் எவரும் குற்றம் சாட்டியவர்க்கு முன் நின்று தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தைப்பற்றி விளக்குவதற்கான வாய்ப்பைப் பெறவேண்டும். அதற்குமுன் அவருக்குத் தீர்ப்பு அளிப்பது உரோமையரின் வழக்கமல்ல’ என்று கூறினேன்.

எனவே அவர்கள் இங்கே வந்தபோது, சற்றும் காலம் தாழ்த்தாமல் மறு நாளிலேயே நான் நடுவர் இருக்கையில் அமர்ந்து அவரை என்னிடம் கூட்டிக்கொண்டு வருமாறு ஆணை பிறப்பித்தேன். குற்றம் சுமத்தியவர்கள் எழுந்து பேசியபோது நான் நினைத்திருந்த கொடிய குற்றம் எதுவும் அவர்மீது சுமத்தவில்லை. அவர்கள் அவருக்கு எதிராகச் சொன்னதெல்லாம் தங்கள் சமயத்திலுள்ள சில கருத்து வேறுபாடுகளாகத்தான் இருந்தன. இறந்துபோன இயேசு என்னும் ஒருவரைப்பற்றியும் அவர்கள் பேசினார்கள். இந்த இயேசு உயிரோடு இருப்பதாகப் பவுல் சாதித்தார்.

இக்கருத்துச்சிக்கல்களைப்பற்றிக் கேட்டதும் நான் குழம்பிப் போய், “நீர் எருசலேமுக்கு வருகிறீரா? அங்கு இவைபற்றி விசாரிக்கப்பட விரும்புகிறீரா?” எனக் கேட்டேன். பவுல், பேரரசரே விசாரித்துத் தீர்ப்பு அளிக்கும்வரை தம்மைக் காவலில் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆதலால் இவரைச் சீசரிடம் அனுப்பும்வரை காவலில் வைக்குமாறு ஆணை பிறப்பித்தேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 3rd : Gospel Feed my lambs, feed my sheepA Reading from the Holy Gospel according to St.John 21:15-19

June 3rd : Gospel 

Feed my lambs, feed my sheep

A Reading from the Holy Gospel according to St.John 21:15-19 
Jesus showed himself to his disciples, and after they had eaten he said to Simon Peter, ‘Simon son of John, do you love me more than these others do?’ He answered, ‘Yes Lord, you know I love you.’ Jesus said to him, ‘Feed my lambs.’ A second time he said to him, ‘Simon son of John, do you love me?’ He replied, ‘Yes, Lord, you know I love you.’ Jesus said to him, ‘Look after my sheep.’ Then he said to him a third time, ‘Simon son of John, do you love me?’ Peter was upset that he asked him the third time, ‘Do you love me?’ and said, ‘Lord, you know everything; you know I love you.’ Jesus said to him, ‘Feed my sheep.
‘I tell you most solemnly,
when you were young
you put on your own belt
and walked where you liked;
but when you grow old
you will stretch out your hands,
and somebody else will put a belt round you
and take you where you would rather not go.’
In these words he indicated the kind of death by which Peter would give glory to God. After this he said, ‘Follow me.’

The Word of the Lord.

June 3rd : Responsorial PsalmPsalm 102(103):1-2,11-12,19-20 ©The Lord has set his sway in heaven.orAlleluia!

June 3rd :  Responsorial Psalm

Psalm 102(103):1-2,11-12,19-20 ©

The Lord has set his sway in heaven.
or
Alleluia!
My soul, give thanks to the Lord
  all my being, bless his holy name.
My soul, give thanks to the Lord
  and never forget all his blessings.

The Lord has set his sway in heaven.
or
Alleluia!

For as the heavens are high above the earth
  so strong is his love for those who fear him.
As far as the east is from the west
  so far does he remove our sins.

The Lord has set his sway in heaven.
or
Alleluia!

The Lord has set his sway in heaven
  and his kingdom is ruling over all.
Give thanks to the Lord, all his angels,
  mighty in power, fulfilling his word.

The Lord has set his sway in heaven.
or
Alleluia!

Gospel Acclamation Jn14:26

Alleluia, alleluia!

The Holy Spirit will teach you everything
and remind you of all I have said to you.
Alleluia!

June 3rd : First Reading 'I ordered Paul to be remanded until I could send him to Caesar'A Reading from the Acts of Apostles 25: 13-21

June 3rd :  First Reading 

'I ordered Paul to be remanded until I could send him to Caesar'

A Reading from the Acts of Apostles 25: 13-21 
King Agrippa and Bernice arrived in Caesarea and paid their respects to Festus. Their visit lasted several days, and Festus put Paul’s case before the king. ‘There is a man here’ he said ‘whom Felix left behind in custody, and while I was in Jerusalem the chief priests and elders of the Jews laid information against him, demanding his condemnation. But I told them that Romans are not in the habit of surrendering any man, until the accused confronts his accusers and is given an opportunity to defend himself against the charge. So they came here with me, and I wasted no time but took my seat on the tribunal the very next day and had the man brought in. When confronted with him, his accusers did not charge him with any of the crimes I had expected; but they had some argument or other with him about their own religion and about a dead man called Jesus whom Paul alleged to be alive. Not feeling qualified to deal with questions of this sort, I asked him if he would be willing to go to Jerusalem to be tried there on this issue. But Paul put in an appeal for his case to be reserved for the judgement of the august emperor, so I ordered him to be remanded until I could send him to Caesar.’

The Word of the Lord.