இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 17 ஜூன், 2022

ஜூன் 18 : முதல் வாசகம்அரசர் யோவாசு செக்கரியாவைக் கொல்லச் செய்தார்.குறிப்பேடு இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 24: 17-25

ஜூன் 18 :  முதல் வாசகம்

அரசர் யோவாசு செக்கரியாவைக் கொல்லச் செய்தார்.

குறிப்பேடு இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 24: 17-25
யோயாதா இறந்தபின், அரசர் தம்மைப் பணிந்து நின்ற தலைவர்களின் சொற்களுக்கு இணங்கினார். அதனால் அவர்கள் தங்கள் முன்னோர்களின் கடவுளான ஆண்டவரின் இல்லத்தைப் புறக்கணித்து, அசேராக் கம்பங்களையும் சிலைகளையும் வழிபட்டனர். அவர்கள் செய்த இப்பாவத்தின் பொருட்டு யூதாவின் மேலும் எருசலேமின் மேலும் இறைவன் கடுங்கோபம் கொண்டார். அவர்கள் தம்மிடம் மீண்டும் வருவதற்கு ஆண்டவர் அவர்களிடம் இறைவாக்கினர்களை அனுப்பினார். அவர்களும் மக்களைக் கண்டித்தனர். ஆனால் அவர்கள் செவி கொடுக்கவில்லை.

அப்போது கடவுளின் ஆவி குரு யோயாதாவின் மகன் செக்கரியாவின் மேல் இறங்கியது; அவர் மக்கள் முன் நின்று அவர்களை நோக்கி: “இதோ, கடவுள் கூறுகிறார்: ஆண்டவரின் கட்டளைகளை மீறுவதேன்? அதனால் நீங்கள் வாழ்வில் முன்னேற மாட்டீர்களே! ஆண்டவரை நீங்கள் புறக்கணித்ததால், அவரும் உங்களைப் புறக்கணித்துள்ளார்” என்று கூறினார்.

அவர்கள் அவருக்கு எதிராகச் சதி செய்து, அரசரின் ஆணைக்கேற்ப ஆண்டவரின் இல்லத்து மண்டபத்தில் அவரைக் கல்லால் எறிந்து கொன்றனர். அவர் தந்தை யோயாதா காட்டிய பேரன்பை மறந்து, அரசர் யோவாசு செக்கரியாவைக் கொல்லச் செய்தார். அவர் இறக்கும்போது, “ஆண்டவர் இதைக் கண்டு பழிவாங்குவாராக!” என்றார்.

அடுத்த ஆண்டு, சிரியாப் படையினர் அவருக்கு எதிராக வந்து, யூதாவிலும் எருசலேமிலும் புகுந்து மக்களின் எல்லாத் தலைவர்களையும் கொன்று அழித்தனர். கொள்ளைப் பொருள்கள் அனைத்தையும் தமஸ்கு மன்னனிடம் அனுப்பி வைத்தனர்.

சிரியர் மிகச் சிறு படையுடன்தான் வந்தனர்; இருப்பினும், தங்கள் முன்னோரின் கடவுளான ஆண்டவரை இஸ்ரயேலர் புறக்கணித்ததால், ஆண்டவர் அவர்களது பெரும் படையைச் சிரியரின் கையில் ஒப்புவித்தார். அவர்கள் யோவாசைத் தண்டித்தனர். கடும் காயமுற்ற நிலையில் யோவாசைச் சிரியர் விட்டுச் சென்றனர்.

அவருடைய அலுவலர்களோ அவருக்கு எதிராகச் சதி செய்து, குரு யோயாதாவின் மகனின் இரத்தப் பழியின் பொருட்டு அவரது படுக்கையிலேயே அவரைக் கொன்றனர். தாவீதின் நகரத்தில் அவர் சடலத்தை அடக்கம் செய்தனர்; ஆனால் அரசர்களின் கல்லறைகளில் அவரை அடக்கம் செய்யவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 18th : Gospel Do not worry about tomorrow: your holy Father knows your needsA Reading from the Holy Gospel according to St.Matthew 6: 24-34

June 18th :  Gospel 

Do not worry about tomorrow: your holy Father knows your needs

A Reading from the Holy Gospel according to St.Matthew 6: 24-34 
Jesus said to his disciples: ‘No one can be the slave of two masters: he will either hate the first and love the second, or treat the first with respect and the second with scorn. You cannot be the slave both of God and of money.
  ‘That is why I am telling you not to worry about your life and what you are to eat, nor about your body and how you are to clothe it. Surely life means more than food, and the body more than clothing! Look at the birds in the sky. They do not sow or reap or gather into barns; yet your heavenly Father feeds them. Are you not worth much more than they are? Can any of you, for all his worrying, add one single cubit to his span of life? And why worry about clothing? Think of the flowers growing in the fields; they never have to work or spin; yet I assure you that not even Solomon in all his regalia was robed like one of these. Now if that is how God clothes the grass in the field which is there today and thrown into the furnace tomorrow, will he not much more look after you, you men of little faith? So do not worry; do not say, “What are we to eat? What are we to drink? How are we to be clothed?” It is the pagans who set their hearts on all these things. Your heavenly Father knows you need them all. Set your hearts on his kingdom first, and on his righteousness, and all these other things will be given you as well. So do not worry about tomorrow: tomorrow will take care of itself. Each day has enough trouble of its own.’

The Word of the Lord.

June 18th : Responsorial PsalmPsalm 88(89):4-5,29-34 I will keep my love for him always.

June 18th :  Responsorial Psalm

Psalm 88(89):4-5,29-34 ©

I will keep my love for him always.
‘With my chosen one I have made a covenant;
  I have sworn to David my servant:
I will establish your dynasty for ever
  and set up your throne through all ages.

I will keep my love for him always.

‘I will keep my love for him always;
  with him my covenant shall last.
I will establish his dynasty for ever,
  make his throne endure as the heavens.

I will keep my love for him always.

‘If his sons forsake my law
  and refuse to walk as I decree
and if ever they violate my statutes,
  refusing to keep my commands;
then I will punish their offences with the rod,
  then I will scourge them on account of their guilt.

I will keep my love for him always.

‘But I will never take back my love,
  my truth will never fail.’
I will keep my love for him always.

Gospel Acclamation Mt4:4

Alleluia, alleluia!

Man does not live on bread alone,
but on every word that comes from the mouth of God.
Alleluia!

June 18th : First Reading'You have deserted the Lord: now he deserts you'2 Chronicles 24: 17-25

June 18th :  First Reading

'You have deserted the Lord: now he deserts you'

2 Chronicles 24: 17-25 ©
After the death of Jehoiada, the officials of Judah came to pay court to the king, and the king now turned to them for advice. The Judaeans abandoned the Temple of the Lord, the God of their ancestors, for the worship of sacred poles and idols. Because of their guilt, God’s anger fell on Judah and Jerusalem. He sent them prophets to bring them back to the Lord, but when these gave their message, they would not listen. The spirit of God took possession of Zechariah son of Jehoiada the priest. He stood up before the people and said, ‘God says this, “Why do you transgress the commandments of the Lord to no good purpose? You have deserted the Lord, now he deserts you.”’ They then plotted against him and by order of the king stoned him in the court of the Temple of the Lord. King Joash, forgetful of the kindness that Jehoiada, the father of Zechariah, had shown him, killed Jehoiada’s son who cried out as he died, ‘The Lord sees and he will avenge!’
  When a year had gone by, the Aramaean army made war on Joash. They reached Judah and Jerusalem, and executed all the officials among the people, sending back to the king at Damascus all that they had plundered from them. Though the Aramaean army had by no means come in force, the Lord delivered into its power an army of great size for having deserted him, the God of their ancestors.
  The Aramaeans treated Joash as he had deserved, and when they retired they left him a very sick man; and his officers, plotting against him to avenge the death of the son of Jehoiada the priest, murdered him in his bed. So he died, and they buried him in the Citadel of David, though not in the tombs of the kings.

The Word of the Lord.

வியாழன், 16 ஜூன், 2022

ஜூன் 17 : நற்செய்தி வாசகம்உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 19-23

ஜூன் 17 :  நற்செய்தி வாசகம்

உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 19-23
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும். ஆக, உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாய் இருந்தால் இருள் எப்படியிருக்கும்!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 17 : பதிலுரைப் பாடல்திபா 132: 11. 12. 13-14. 17-18 (பல்லவி: 13)பல்லவி: ஆண்டவர் சீயோனைத் தம் உறைவிடமாக்க விரும்பினார்.

ஜூன் 17 :  பதிலுரைப் பாடல்

திபா 132: 11. 12. 13-14. 17-18 (பல்லவி: 13)

பல்லவி: ஆண்டவர் சீயோனைத் தம் உறைவிடமாக்க விரும்பினார்.
11
ஆண்டவர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்; அவர்தம் வாக்குறுதியினின்று பின்வாங்க மாட்டார்: “உனக்குப் பிறந்த ஒருவனை அரசனாக ஏற்படுத்தி உன் அரியணையில் வீற்றிருக்கச் செய்வேன். - பல்லவி

12
உன் மைந்தர் என் உடன்படிக்கையையும் நான் அவர்களுக்குக் கற்பிக்கும் என் நியமங்களையும் கடைப்பிடித்தால், அவர்களுடைய மைந்தரும் என்றென்றும் உன் அரியணையில் வீற்றிருப்பர்.” - பல்லவி

13
ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார்.
14
“இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன். - பல்லவி

17
இங்கே தாவீதின் மரபிலிருந்து ஒரு வல்லவனை எழச் செய்வேன்; நான் திருப்பொழிவு செய்தவனுக்காக ஓர் ஒளிவிளக்கை ஏற்பாடு செய்துள்ளேன்.
18
அவனுடைய எதிரிகளுக்கு இகழ்ச்சியெனும் உடையை உடுத்துவேன்; அவன்மீதோ அவனது மணிமுடி ஒளிவீசும்.” - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 3
அல்லேலூயா, அல்லேலூயா! 

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

ஜூன் 17 : முதல் வாசகம்அனைவரும் கைதட்டி, “அரசர் நீடுழி வாழ்க!” என்று முழங்கினர்.அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 11: 1-4, 9-18, 20

ஜூன் 17 :  முதல் வாசகம்

அனைவரும் கைதட்டி, “அரசர் நீடுழி வாழ்க!” என்று முழங்கினர்.

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 11: 1-4, 9-18, 20
அந்நாள்களில்

அகசியாவின் தாய் அத்தலியா தன் மகன் இறந்துவிட்டதைக் கண்டு கிளர்ந்தெழுந்து அரச குடும்பத்தார் அனைவரையும் கொன்றாள். அரசன் யோராமின் மகளும், அகசியாவின் சகோதரியுமான யோசேபா அகசியாவின் மகன் யோவாசைத் தூக்கிக் கொண்டு போய் ஒளித்து வைத்தாள். அவன் கொல்லப்படவிருந்த அரசிளம் புதல்வர்களில் ஒருவன். அவனையும் அவன் செவிலித் தாயையும், தனது பள்ளியறையினுள் அத்தலியாவின் பார்வையிலிருந்து யோசேபா மறைத்து வைத்தாள். எனவே அவன் உயிர் தப்பினான். அவன் ஆறு ஆண்டுகள் அவளோடு ஆண்டவரின் இல்லத்தில் தலை மறைவாய் இருந்தான். அந்நாள்களில் அத்தலியாவே நாட்டை ஆண்டு வந்தாள்.

ஏழாம் ஆண்டில், அரச மெய்க்காப்பாளர், அரண்மனைக் காவலர் ஆகியோரின் நூற்றுவர் தலைவர்களை குரு யோயாதா வரவழைத்து ஆண்டவரின் இல்லத்திற்குள் கூட்டிச் சென்றார். அங்கு அவர் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். அக்கோவிலில் அவர்களை ஆணையிடச் செய்து அரசனின் மகனை அவர்களுக்குக் காட்டினார். குரு யோயாதா கட்டளையிட்டுக் கூறிய அனைத்தையும் நூற்றுவர் தலைவர்கள் செய்தனர்.

ஓய்வு நாளில் விடுப்பில் செல்வோர், பணியேற்போர் ஆகிய தங்கள் வீரர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு குரு யோயாதாவிடம் வந்தனர். அவர் ஆண்டவரின் இல்லத்தில் இருந்த தாவீது அரசரின் ஈட்டிகளையும் கேடயங்களையும் நூற்றுவர் தலைவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார். காவலர், கையில் படைக்கலன் தாங்கி, திருக்கோவிலின் தென்புறம் தொடங்கி வடபுறம் வரை, பலிபீடத்தையும் திருக்கோவிலையும் அரசனையும் சூழ்ந்து நின்று கொண்டனர். பின்பு அவர் இளவரசனை வெளியே கூட்டி வந்து, அவனுக்கு முடி சூட்டி, உடன்படிக்கைச் சுருளை அளித்தார். இவ்வாறு அவன் திருப்பொழிவு பெற்று அரசனானான். அனைவரும் கைதட்டி “அரசர் நீடூழி வாழ்க!” என்று முழங்கினர்.

மக்களும், காவலரும் எழுப்பிய ஒலியை அத்தலியா கேட்டு ஆண்டவரின் இல்லத்தில் கூடியிருந்த மக்களிடம் வந்தாள். மரபுக்கேற்ப, அரசன் தூணருகில் நிற்பதையும், படைத்தலைவர்களும் எக்காளம் ஊதுபவர்களும் அவனருகில் இருப்பதையும், நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடி எக்காளம் ஊதுவதையும் கண்டாள். உடனே அவள் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, “சதி! சதி!” என்று கூக்குரலிட்டாள். அப்பொழுது குரு யோயாதா படைகளுக்குப் பொறுப்பேற்றிருந்த நூற்றுவர் தலைவர்ளை நோக்கி, “படையணிகளுக்கு வெளியே அவளைக் கொண்டு செல்லுங்கள். அவளை எவனாவது பின்பற்றினால் அவனை வாளால் வெட்டி வீழ்த்துங்கள்” என்று கட்டளையிட்டார். “அவளை ஆண்டவரின் இல்லத்தினுள் கொல்லலாகாது” என்றும் கூறியிருந்தார். எனவே அவர்கள் அரண்மனையின் குதிரை நுழைவாயிலை அவள் அடைந்தபொழுது, அவளைப் பிடித்தனர். அங்கே அவள் கொல்லப்பட்டாள்.

பின்பு யோயாதா, ஆண்டவர் ஒரு பக்கமும், அரசன், மக்கள் மறுபக்கமுமாக அவர்களிடையே உடன்படிக்கை செய்து வைத்தார். இதன் மூலம் அரசனும் மக்களும் ஆண்டவரின் மக்களாய் இருப்பதாக ஏற்றுக் கொண்டனர். அவ்வாறே அவர் அரசனுக்கும் மக்களுக்கும் இடையே உடன்படிக்கை செய்து வைத்தார். பிறகு நாட்டிலுள்ள மக்கள் எல்லாரும் பாகாலின் கோவிலுக்குச் சென்று பலிபீடங்களையும் சிலைகளையும் தகர்த்தெறிந்தனர்; பாகாலின் அர்ச்சகன் மத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொலை செய்தனர். பிறகு குரு ஆண்டவரின் இல்லத்தில் காவலரை நிறுத்தி வைத்தார்.

நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடினர். அத்தலியா வாளால் அரண்மனையில் கொல்லப்பட்டபின் நகரில் அமைதி நிலவியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 17th : Gospel Store up treasure for yourselves in heavenA Reading from the Holy Gospel according to St.Matthew 6: 19-23

June 17th :  Gospel 

Store up treasure for yourselves in heaven

A Reading from the Holy Gospel according to St.Matthew 6: 19-23 
Jesus said to his disciples: ‘Do not store up treasures for yourselves on earth, where moths and woodworms destroy them and thieves can break in and steal. But store up treasures for yourselves in heaven, where neither moth nor woodworms destroy them and thieves cannot break in and steal. For where your treasure is, there will your heart be also.
  ‘The lamp of the body is the eye. It follows that if your eye is sound, your whole body will be filled with light. But if your eye is diseased, your whole body will be all darkness. If then, the light inside you is darkness, what darkness that will be!’

The Word of the Lord.

June 17th : Responsorial PsalmPsalm 131(132):11-14,17-18 ©The Lord has chosen Zion; he has desired it for his dwelling.

June 17th :  Responsorial Psalm

Psalm 131(132):11-14,17-18 ©

The Lord has chosen Zion; he has desired it for his dwelling.
The Lord swore an oath to David;
  he will not go back on this word:
‘A son, the fruit of your body,
  will I set upon your throne.

The Lord has chosen Zion; he has desired it for his dwelling.

If they keep my covenant in truth
  and my laws that I have taught them,
their sons also shall rule
  on your throne from age to age.’

The Lord has chosen Zion; he has desired it for his dwelling.

For the Lord has chosen Zion;
  he has desired it for his dwelling:
‘This is my resting-place for ever;
  here have I chosen to live.

The Lord has chosen Zion; he has desired it for his dwelling.

There David’s stock will flower;
  I will prepare a lamp for my anointed.
I will cover his enemies with shame
  but on him my crown shall shine.’

The Lord has chosen Zion; he has desired it for his dwelling.

Gospel Acclamation Jn8:12

Alleluia, alleluia!
I am the light of the world, says the Lord;
anyone who follows me will have the light of life.
Alleluia!

June 17th : First ReadingSaved from the massacre, the true king is anointed by the high priest2 Kings 11: 1-4,9-18,20

June 17th :  First Reading

Saved from the massacre, the true king is anointed by the high priest

2 Kings 11: 1-4,9-18,20 
When Athaliah the mother of Ahaziah learned that her son was dead, she promptly did away with all those of royal stock. But Jehosheba, daughter of King Jehoram and sister of Ahaziah, secretly took away Jehoash, her brother’s son, from among the sons of the king who were being murdered, and put him with his nurse in the sleeping quarters; in this way she hid him from Athaliah, and he was not put to death. He stayed with her for six years, hidden in the Temple of the Lord, while Athaliah governed the country.
  In the seventh year, Jehoiada sent for the commanders of hundreds of the Carians and of the guards, and had them brought to him in the Temple of the Lord. He made a pact with them and, putting them under oath, showed them the king’s son.
  The commanders of hundreds did everything as Jehoiada the priest had ordered. They brought their men, those coming off duty on the sabbath together with those mounting guard on the sabbath, and came to Jehoiada the priest. The priest equipped the commanders of hundreds with King David’s spears and shields which were in the Temple of the Lord. The guards formed up, each man with his weapon in his hand, from the south corner to the north corner of the Temple, surrounding the altar and the Temple. Then Jehoiada brought out the king’s son, put the crown and armlets on him, and he anointed him king. They clapped their hands and shouted, ‘Long live the king!’
  Athaliah, on hearing the shouts of the people made for the Temple of the Lord where the people were. When she saw the king standing there beside the pillar, as the custom was, with the captains and trumpeters at the king’s side, and all the country people rejoicing and sounding trumpets, Athaliah tore her garments and shouted, ‘Treason, treason!’ Then Jehoiada the priest gave the order to the army officers: ‘Take her outside the precincts and put to death anyone who follows her.’ ‘For,’ the priest had reasoned, ‘she must not be put to death in the Temple of the Lord.’ They seized her, and when she had reached the palace through the Entry of the Horses, she was put to death there.
  Jehoiada made a covenant between the Lord and king and people, by which the latter undertook to be the people of the Lord; and also between king and people. All the country people then went to the temple of Baal and demolished it; they smashed his altars and his images and killed Mattan, priest of Baal, in front of the altars.
  The priest posted sentries to guard the Temple of the Lord. All the country people were delighted, and the city made no move. And they put Athaliah to death in the royal palace.

The Word of the Lord.