இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

ஆகஸ்ட் 20 : முதல் வாசகம்ஆண்டவரின் மாட்சி கோவிலினுள் நுழைந்தது.இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 43: 1-7ab

ஆகஸ்ட் 20 :  முதல் வாசகம்

ஆண்டவரின் மாட்சி கோவிலினுள் நுழைந்தது.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 43: 1-7ab
அந்நாள்களில்

மனிதர் ஒருவர் கோவிலின் கிழக்கு நோக்கிய வாயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். இதோ ‘இஸ்ரயேலின் ஆண்டவரது மாட்சி’ கிழக்குப் பகுதியிலிருந்து வருவதைக் கண்டேன். அவரது குரல் பெருவெள்ளத்தின் இரைச்சல் போல் இருந்தது. நிலமோ அவரின் மாட்சியால் ஒளி வீசிற்று. நான் கண்ட காட்சி, அவர் நகரை அழிக்க வந்தபோது நான் கண்டது போன்றும், கேபார் ஆற்றோரம் நான் கண்டது போன்றும் இருந்தது. நான் முகங்குப்புற விழுந்தேன்.

ஆண்டவரின் மாட்சி கிழக்கு நோக்கிய வாயில் வழி கோவிலினுள் நுழைந்தது. பின்னர் ஆவி என்னைத் தூக்கி உள்முற்றத்திற்கு அழைத்துச் சென்றது. ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பிற்று.

அம்மனிதர் என்னருகில் நிற்கையில் கோவிலிலிருந்து வேறொருவர் என்னுடன் பேசுவதைக் கேட்டேன். அவர் உரைத்தது: “மானிடா! இது என் அரியணையின் இடம்; என் கால்மணைக்கான இடம். இங்குதான் நான் இஸ்ரயேலருடன் என்றென்றும் வாழ்வேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 20th : Gospel They do not practise what they preachA Reading from the Holy Gospel according to St.Matthew 23: 1-12

August 20th : Gospel 

They do not practise what they preach

A Reading from the Holy Gospel according to St.Matthew 23: 1-12 
Addressing the people and his disciples Jesus said, ‘The scribes and the Pharisees occupy the chair of Moses. You must therefore do what they tell you and listen to what they say; but do not be guided by what they do: since they do not practise what they preach. They tie up heavy burdens and lay them on men’s shoulders, but will they lift a finger to move them? Not they! Everything they do is done to attract attention, like wearing broader phylacteries and longer tassels, like wanting to take the place of honour at banquets and the front seats in the synagogues, being greeted obsequiously in the market squares and having people call them Rabbi.
  ‘You, however, must not allow yourselves to be called Rabbi, since you have only one master, and you are all brothers. You must call no one on earth your father, since you have only one Father, and he is in heaven. Nor must you allow yourselves to be called teachers, for you have only one Teacher, the Christ. The greatest among you must be your servant. Anyone who exalts himself will be humbled, and anyone who humbles himself will be exalted.’

The Word of the Lord.

August 20th : Responsorial PsalmPsalm 84(85):9-14 ©The glory of the Lord will dwell in our land.

August 20th :  Responsorial Psalm

Psalm 84(85):9-14 ©

The glory of the Lord will dwell in our land.
I will hear what the Lord God has to say,
  a voice that speaks of peace,
  peace for his people and his friends.
His help is near for those who fear him
  and his glory will dwell in our land.

The glory of the Lord will dwell in our land.

Mercy and faithfulness have met;
  justice and peace have embraced.
Faithfulness shall spring from the earth
  and justice look down from heaven.

The glory of the Lord will dwell in our land.

The Lord will make us prosper
  and our earth shall yield its fruit.
Justice shall march before him
  and peace shall follow his steps.

The glory of the Lord will dwell in our land.

Gospel Acclamation Ps118:36,29

Alleluia, alleluia!
Bend my heart to your will, O Lord,
and teach me your law.
Alleluia!

August 20th : First Reading The vision of the coming of the glory of the Lord to the TempleA Reading from the Book of Ezekiel 43: 1-7

August 20th : First Reading 

The vision of the coming of the glory of the Lord to the Temple

A Reading from the Book of Ezekiel 43: 1-7 
The angel took me to the gate, the one facing east. I saw the glory of the God of Israel approaching from the east. A sound came with it, like the sound of the ocean, and the earth shone with his glory. This vision was like the one I had seen when I had come for the destruction of the city, and like the one I had seen on the bank of the river Chebar. Then I prostrated myself.
  The glory of the Lord arrived at the Temple by the east gate. The spirit lifted me up and brought me into the inner court; I saw the glory of the Lord fill the Temple. And I heard someone speaking to me from the Temple while the man stood beside me. The voice said, ‘Son of man, this is the dais of my throne, the step on which I rest my feet. I shall live here among the sons of Israel for ever.’

The Word of the Lord.

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

ஆகஸ்ட் 19 : நற்செய்தி வாசகம்உன் கடவுள் மீது அன்பு செலுத்து. உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40

ஆகஸ்ட் 19 :  நற்செய்தி வாசகம்

உன் கடவுள் மீது அன்பு செலுத்து. உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40
அக்காலத்தில்

இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார்.

அவர், “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன” என்று பதிலளித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 19 : பதிலுரைப் பாடல்திபா 107: 2-3. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1)பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

ஆகஸ்ட் 19 : பதிலுரைப் பாடல்

திபா 107: 2-3. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
2
ஆண்டவரால் மீட்படைந்தோர், எதிரியின் கையினின்று அவரால் மீட்கப்பட்டோர்,
3
கிழக்கினின்றும், மேற்கினின்றும் வடக்கினின்றும் தெற்கினின்றும், பல நாடுகளினின்றும் ஒன்று சேர்க்கப்பட்டோர் சொல்வார்களாக. - பல்லவி

4
பாலைநிலத்தில் பாழ்வெளியில் சிலர் அலைந்து திரிந்தனர்; குடியிருக்குமாறு ஒரு நகருக்குச் செல்ல அவர்கள் வழி காணவில்லை;
5
பசியுற்றனர்; தாகமுற்றனர்; மனச்சோர்வுற்றுக் களைத்துப் போயினர். - பல்லவி

6
தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர்களை அவர் விடுவித்தார்.
7
நேரிய பாதையில் அவர்களை வழி நடத்தினார்; குடியிருக்கும் நகரை அவர்கள் அடையச் செய்தார். - பல்லவி

8
ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடர்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக!
9
ஏனெனில், தாகமுற்றோர்க்கு அவர் நிறைவளித்தார்; பசியுற்றோரை நன்மையால் நிரப்பினார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 25: 4c, 5a
அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.

ஆகஸ்ட் 19 : முதல் வாசகம்உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். என் மக்களே! உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன்.இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 1-14

ஆகஸ்ட் 19 : முதல் வாசகம்

உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். என் மக்களே! உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 1-14
அந்நாள்களில்

ஆண்டவரின் ஆற்றல் என் மீது இறங்கியது. அவர் என்னைத் தம் ஆவியால் தூக்கிக் கொண்டு போய்ப் பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார். அங்கே எலும்புகள் மிகுதியாய்க் கிடந்தன. அவர் அவற்றைச் சுற்றி என்னை நடத்திச் சென்றார். அங்கே பள்ளத்தாக்கின் அடியில் மிகப் பல எலும்புகள் கிடந்தன. அவை மிகவும் உலர்ந்தவையாய் இருந்தன.

அவர் என்னிடம், ‘மானிடா! இந்த எலும்புகள் உயிர் பெறமுடியுமா?’ என்று கேட்டார். நான், ‘தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே’ என்று மறுமொழி அளித்தேன்.

அவர் என்னிடம் உரைத்தது: நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்கு உரை. ‘உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்’ என்று சொல். தலைவராகிய ஆண்டவர் இந்த எலும்புகளுக்கு இவ்வாறு கூறுகிறார்: நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நான் உங்களை நரம்புகளால் தொடுப்பேன்; உங்கள்மேல் சதையைப் பரப்புவேன். உங்களைத் தோலால் மூடுவேன். பின் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். அப்போது நானே ஆண்டவர் என அறிந்துகொள்வீர்கள்.

எனவே, எனக்குக் கட்டளையிடப்பட்டபடி இறைவாக்கு உரைத்தேன். நான் இறைவாக்கு உரைக்கையில், உராயும் ஓசை கேட்டது. ஒவ்வொரு எலும்பும் தனக்குரிய எலும்புடன் சேர்ந்துகொண்டது. நான் பார்க்கையிலேயே அவற்றில் நரம்புகள் ஏற்பட்டு, சதை தோன்றித் தோல் அவற்றின்மேல் மூடியது. ஆனால் அவற்றில் உயிர் இன்னும் வரவில்லை.

பின்னர் அவர் என்னிடம், உயிர்மூச்சுக்கு இறைவாக்கு உரை: மானிடா! இறைவாக்கு உரைத்து, உயிர்மூச்சிடம் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான்கு காற்றுகளிலிருந்தும் ‘உயிர்மூச்சே வா, நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள் புகு. அப்பொழுது இவர்கள் உயிர் பெறுவர்.'

எனவே அவர் எனக்குக் கட்டளையிட்டவாறு இறைவாக்கு உரைத்தேன். உடனே அவர்களுக்குள் உயிர்மூச்சு புகுந்தது. அவர்கள் உயிர்பெற்று, காலூன்றி, மாபெரும் படைத்திரள் போல் நின்றனர். அவர் மேலும் என்னிடம் கூறியது: மானிடா! இந்த எலும்புகள் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறிக்கும். அவர்களோ ‘எங்கள் எலும்புகள் உலர்ந்து போயின. எங்கள் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. நாங்கள் துண்டிக்கப்பட்டு விட்டோம்’ எனச் சொல்கிறார்கள்.

எனவே, இறைவாக்கு உரைத்து அவர்களிடம் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக் கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். என் ஆவியை உங்கள் மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். ‘ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்’ என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 19th : GospelThe commandments of loveA Reading from the Holy Gospel according to St.Matthew 22: 34-40

August 19th : Gospel

The commandments of love

A Reading from the Holy Gospel according to St.Matthew 22: 34-40 
When the Pharisees heard that Jesus had silenced the Sadducees they got together and, to disconcert him, one of them put a question, ‘Master, which is the greatest commandment of the Law?’ Jesus said, ‘You must love the Lord your God with all your heart, with all your soul, and with all your mind. This is the greatest and the first commandment. The second resembles it: You must love your neighbour as yourself. On these two commandments hang the whole Law, and the Prophets also.’

The Word of the Lord.

August 19th : Responsorial PsalmPsalm 106(107): 2-9 O give thanks to the Lord for he is good, for his love has no end.or Alleluia!

August 19th : Responsorial Psalm

Psalm 106(107): 2-9 

O give thanks to the Lord for he is good, for his love has no end.
or Alleluia!
Let them say this, the Lord’s redeemed,
  whom he redeemed from the hand of the foe
and gathered from far-off lands,
  from east and west, north and south.

O give thanks to the Lord for he is good, for his love has no end.
or Alleluia!

Some wandered in the desert, in the wilderness,
  finding no way to a city they could dwell in.
Hungry they were and thirsty;
  their soul was fainting within them.

O give thanks to the Lord for he is good, for his love has no end.
or Alleluia!

Then they cried to the Lord in their need
  and he rescued them from their distress
and he led them along the right way,
  to reach a city they could dwell in.

O give thanks to the Lord for he is good, for his love has no end.
or Alleluia!

Let them thank the Lord for his love,
  for the wonders he does for men:
for he satisfies the thirsty soul;
  he fills the hungry with good things.

O give thanks to the Lord for he is good, for his love has no end.
or Alleluia!

Gospel Acclamation Ps118:18

Alleluia, alleluia!

Open my eyes, O Lord, that I may consider
the wonders of your law.
Alleluia!

August 19th : First Reading A vision of Israel's death and resurrectionA Reading from the Book of Ezekiel 37: 1-14

August 19th : First Reading 

A vision of Israel's death and resurrection

A Reading from the Book of Ezekiel 37: 1-14 
The hand of the Lord was laid on me, and he carried me away by the spirit of the Lord and set me down in the middle of a valley, a valley full of bones. He made me walk up and down among them. There were vast quantities of these bones on the ground the whole length of the valley; and they were quite dried up. He said to me, ‘Son of man, can these bones live?’ I said, ‘You know, Lord.’ He said, ‘Prophesy over these bones. Say, “Dry bones, hear the word of the Lord. The Lord says this to these bones: I am now going to make the breath enter you, and you will live. I shall put sinews on you, I shall make flesh grow on you, I shall cover you with skin and give you breath, and you will live; and you will learn that I am the Lord.”’ I prophesied as I had been ordered. While I was prophesying, there was a noise, a sound of clattering; and the bones joined together. I looked, and saw that they were covered with sinews; flesh was growing on them and skin was covering them, but there was no breath in them. He said to me, ‘Prophesy to the breath; prophesy, son of man. Say to the breath, “The Lord says this: Come from the four winds, breath; breathe on these dead; let them live!”’ I prophesied as he had ordered me, and the breath entered them; they came to life again and stood up on their feet, a great, an immense army.
  Then he said, ‘Son of man, these bones are the whole House of Israel. They keep saying, “Our bones are dried up, our hope has gone; we are as good as dead.” So prophesy. Say to them, “The Lord says this: I am now going to open your graves; I mean to raise you from your graves, my people, and lead you back to the soil of Israel. And you will know that I am the Lord, when I open your graves and raise you from your graves, my people. And I shall put my spirit in you, and you will live, and I shall resettle you on your own soil; and you will know that I, the Lord, have said and done this – it is the Lord who speaks.”’

The Word of the Lord.