இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 9 டிசம்பர், 2022

டிசம்பர் 10 : பதிலுரைப் பாடல்திபா 80: 1,2b. 14-15. 17-18 (பல்லவி: 3)பல்லவி: கடவுளே, உமது முக ஒளியைக் காட்டி எம்மை மீட்டருளும்.

டிசம்பர் 10 :  பதிலுரைப் பாடல்

திபா 80: 1,2b. 14-15. 17-18 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளே, உமது முக ஒளியைக் காட்டி எம்மை மீட்டருளும்.
1
இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!
2b
உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! - பல்லவி

14
படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!
15
உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! - பல்லவி

17
உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக!
18
இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 3: 4, 6
அல்லேலூயா, அல்லேலூயா!

 ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.

டிசம்பர் 10 : முதல் வாசகம்எலியா மீண்டும் வருவார்.சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-4, 9-11

டிசம்பர் 10 :  முதல் வாசகம்

எலியா மீண்டும் வருவார்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-4, 9-11
இறைவாக்கினர் எலியா நெருப்புபோல் எழுந்தார்; தீவட்டிபோல் அவருடைய சொல் பற்றியெரிந்தது. மக்கள் மீது பஞ்சம் வரச் செய்தார்; தம் பற்றார்வத்தால் அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார். ஆண்டவருடைய சொல்லால் வானம் பொழிவதை நிறுத்தினார்; மும்முறை நெருப்பு விழச் செய்தார். எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை மாட்சிக்குரியவர்! உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்?

தீச்சூறாவளியில் நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் நீர் எடுத்துக்கொள்ளப்பட்டீர். ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும் தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும் யாக்கோபின் குலங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் குறித்த காலங்களில் நீர் கடிந்து கொள்வீர் என்று எழுதப்பட்டுள்ளது. உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில் துயில் கொண்டவர்களும் பேறுபெற்றோர். நாமும் வாழ்வது உறுதி.

ஆண்டவரின் அருள்வாக்கு.

GOSPEL"Elijah has already come and they did not recognize him" (Mt 17, 10-13)Gospel of Jesus Christ according to Saint Matthew

GOSPEL

"Elijah has already come and they did not recognize him" (Mt 17, 10-13)

Gospel of Jesus Christ according to Saint Matthew
Coming down from the mountain,
the disciples asked Jesus,
“Why then do the scribes say
that the prophet Elijah must come first?
Jesus answered them, “
Elijah is coming
to put everything in its place.
But I tell you,
Elijah has already come;
instead of acknowledging
him, they did whatever they wanted to him.
And likewise the Son of Man will suffer through them.
Then the disciples understood that he was speaking to them
of John the Baptist.

– Let us acclaim the Word of God.

December 10th : Responsorial PsalmPsalm 79(80):2-3,15-16,18-19 God of hosts, bring us back; let your face shine on us and we shall be saved.

December 10th :  Responsorial Psalm

Psalm 79(80):2-3,15-16,18-19 

God of hosts, bring us back; let your face shine
 on us and we shall be saved.
O shepherd of Israel, hear us,
  shine forth from your cherubim throne.
O Lord, rouse up your might,
  O Lord, come to our help.

God of hosts, bring us back; let your face shine on us and we shall be saved.

God of hosts, turn again, we implore,
  look down from heaven and see.
Visit this vine and protect it,
  the vine your right hand has planted.

God of hosts, bring us back; let your face shine on us and we shall be saved.

May your hand be on the man you have chosen,
  the man you have given your strength.
And we shall never forsake you again;
  give us life that we may call upon your name.

God of hosts, bring us back; let your face shine on us and we shall be saved.

Gospel Acclamation 

Alleluia, alleluia!
The day of the Lord is near;
Look, he comes to save us.
Alleluia!

December 10th : First ReadingThe prophet Elijah will come againEcclesiasticus 48:1-4,9-12

December 10th :  First Reading

The prophet Elijah will come again

Ecclesiasticus 48:1-4,9-12 
The prophet Elijah arose like a fire,
  his word flaring like a torch.
It was he who brought famine on the people,
  and who decimated them in his zeal.
By the word of the Lord, he shut up the heavens,
  he also, three times, brought down fire.
How glorious you were in your miracles, Elijah!
  Has anyone reason to boast as you have?
Taken up in the whirlwind of fire,
  in a chariot with fiery horses;
designated in the prophecies of doom
  to allay God’s wrath before the fury breaks,
to turn the hearts of fathers towards their children,
  and to restore the tribes of Jacob,
Happy shall they be who see you,
  and those who have fallen asleep in love.

The Word of the Lord.

வியாழன், 8 டிசம்பர், 2022

டிசம்பர் 9 : நற்செய்தி வாசகம்மக்கள் திருமுழுக்கு யோவானுக்கும் செவிசாய்க்கவில்லை, மானிடமகனுக்கும் செவிசாய்க்கவில்லை.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 16-19

டிசம்பர் 9 :  நற்செய்தி வாசகம்

மக்கள் திருமுழுக்கு யோவானுக்கும் செவிசாய்க்கவில்லை, மானிடமகனுக்கும் செவிசாய்க்கவில்லை.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 16-19
அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: “இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, ‘நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை’ என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ ‘அவன் பேய்பிடித்தவன்’ என்கிறார்கள். மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ‘இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 9 : பதிலுரைப் பாடல்திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி: யோவா 8: 12)பல்லவி: ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.

டிசம்பர் 9 : பதிலுரைப் பாடல்

திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி: யோவா 8: 12)

பல்லவி: ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.
1
நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
2
ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். - பல்லவி

3
அவர் நீரோடை ஓரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். - பல்லவி

4
பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர்.
6
நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் வரவிருக்கிறார். அவரை எதிர்கொள்ளுங்கள்; ஏனெனில், அமைதியின் அரசர் அவரே. அல்லேலூயா.

டிசம்பர் 9 : முதல் வாசகம்என் கட்டளைகளுக்குச் செவிசாய்த்திரு.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 48: 17-19

டிசம்பர் 9 :  முதல் வாசகம்

என் கட்டளைகளுக்குச் செவிசாய்த்திரு.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 48: 17-19
இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே! என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப் போலும், உன் வெற்றி கடல் அலை போலும், பாய்ந்து வந்திருக்கும். உன் வழிமரபினர் மணல் அளவாயும், உன் வழித்தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்; அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்; அவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப்பட்டிராது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 9th : GospelThey heed neither John nor the Son of ManA Reading from the Holy Gospel according to St.Matthew 11:16-19

December 9th :  Gospel

They heed neither John nor the Son of Man

A Reading from the Holy Gospel according to St.Matthew 11:16-19 
Jesus spoke to the crowds: ‘What description can I find for this generation? It is like children shouting to each other as they sit in the market place:
“We played the pipes for you,
and you wouldn’t dance;
we sang dirges,
and you wouldn’t be mourners.”
‘For John came, neither eating nor drinking, and they say, “He is possessed.” The Son of Man came, eating and drinking, and they say, “Look, a glutton and a drunkard, a friend of tax collectors and sinners.” Yet wisdom has been proved right by her actions.’

The Word of the Lord.

December 9th : Responsorial Psalm Psalm 1:1-4,6 Anyone who follows you, O Lord, will have the light of life.

December 9th :  Responsorial Psalm 

Psalm 1:1-4,6 

Anyone who follows you, O Lord, will have the light of life.
Happy indeed is the man
  who follows not the counsel of the wicked;
nor lingers in the way of sinners
  nor sits in the company of scorners,
but whose delight is the law of the Lord
  and who ponders his law day and night.

Anyone who follows you, O Lord, will have the light of life.

He is like a tree that is planted
  beside the flowing waters,
that yields its fruit in due season
  and whose leaves shall never fade;
  and all that he does shall prosper.

Anyone who follows you, O Lord, will have the light of life.

Not so are the wicked, not so!
For they like winnowed chaff
  shall be driven away by the wind:
for the Lord guards the way of the just
  but the way of the wicked leads to doom.

Anyone who follows you, O Lord, will have the light of life.

Gospel Acclamation 

Alleluia, alleluia!
See, the king, the Lord of the world, will come.
He will free us from the yoke of our bondage.
Alleluia!