இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 4 ஏப்ரல், 2023

ஏப்ரல் 5 : பதிலுரைப் பாடல்திபா 69: 7-9. 20-21. 30,32-33 (பல்லவி: 13b)பல்லவி: கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்.

ஏப்ரல் 5 :  பதிலுரைப் பாடல்

திபா 69: 7-9. 20-21. 30,32-33 (பல்லவி: 13b)

பல்லவி: கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்.
7
ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது.
8
என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன்.
9
உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. - பல்லவி

20
பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்துவிட்டது; நான் மிகவும் வருந்துகின்றேன்; ஆறுதல் அளிப்பாருக்காகக் காத்திருந்தேன்; யாரும் வரவில்லை; தேற்றிடுவோருக்காகத் தேடிநின்றேன்; யாரையும் காணவில்லை.
21
அவர்கள் என் உணவில் நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்; என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள். - பல்லவி

30
கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன்.
32
எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.
33
ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

எங்கள் அரசரே போற்றப் பெறுக; எங்கள் குற்றம் கண்டு இரக்கம் கொண்டவர் நீர் ஒருவரே.

ஏப்ரல் 5 : நற்செய்தி வாசகம்மானிடமகன், தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு.✠மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 26: 14-25

ஏப்ரல் 5 :  நற்செய்தி வாசகம்

மானிடமகன், தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 26: 14-25
அக்காலத்தில்

பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, ‘‘இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, ‘‘நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்யவேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், ‘‘நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், ‘எனது நேரம் நெருங்கி வந்துவிட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப்போகிறேன்’ எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்” என்றார். இயேசு தங்களுக்குப் பணித்தபடியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர், ‘‘உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், ‘‘ஆண்டவரே, அது நானோ?” என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர், ‘‘என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மானிடமகன், தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்” என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் ‘‘ரபி, நானோ?” என அவரிடம் கேட்க, இயேசு, ‘‘நீயே சொல்லிவிட்டாய்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 5 : புனித வாரம் - புதன்முதல் வாசகம்நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-9a

ஏப்ரல் 5 :  புனித வாரம் - புதன்

முதல் வாசகம்

நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-9a
நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்.

நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன். நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்.

என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும். இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணை நிற்கின்றார்; நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்?

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 5th : Gospel'The Son of Man is going to his fate, as the scriptures say he will'A Reading from the Holy Gospel according to St.Matthew 26:14-25

April 5th :  Gospel

'The Son of Man is going to his fate, as the scriptures say he will'

A Reading from the Holy Gospel according to St.Matthew 26:14-25 
One of the Twelve, the man called Judas Iscariot, went to the chief priests and said, ‘What are you prepared to give me if I hand him over to you?’ They paid him thirty silver pieces, and from that moment he looked for an opportunity to betray him.
  Now on the first day of Unleavened Bread the disciples came to Jesus to say, ‘Where do you want us to make the preparations for you to eat the passover?’ ‘Go to so-and-so in the city’ he replied ‘and say to him, “The Master says: My time is near. It is at your house that I am keeping Passover with my disciples.”’ The disciples did what Jesus told them and prepared the Passover.
  When evening came he was at table with the twelve disciples. And while they were eating he said ‘I tell you solemnly, one of you is about to betray me.’ They were greatly distressed and started asking him in turn, ‘Not I, Lord, surely?’ He answered, ‘Someone who has dipped his hand into the dish with me, will betray me. The Son of Man is going to his fate, as the scriptures say he will, but alas for that man by whom the Son of Man is betrayed! Better for that man if he had never been born!’ Judas, who was to betray him; asked in his turn, ‘Not I, Rabbi, surely?’ ‘They are your own words’ answered Jesus.

The Word of the Lord.

April 5th : Responsorial PsalmPsalm 68(69):8-10,21-22,31,33-34 In your great love, O Lord, answer my prayers for your favour.

April 5th :  Responsorial Psalm

Psalm 68(69):8-10,21-22,31,33-34 

In your great love, O Lord, answer my prayers for your favour.
It is for you that I suffer taunts,
  that shame covers my face,
that I have become a stranger to my brothers,
  an alien to my own mother’s sons.
I burn with zeal for your house
  and taunts against you fall on me.

In your great love, O Lord, answer my prayers for your favour.

Taunts have broken my heart;
  I have reached the end of my strength.
I looked in vain for compassion,
  for consolers; not one could I find.
For food they gave me poison;
  in my thirst they gave me vinegar to drink.

In your great love, O Lord, answer my prayers for your favour.

I will praise God’s name with a song;
  I will glorify him with thanksgiving.
The poor when they see it will be glad
  and God-seeking hearts will revive;
for the Lord listens to the needy
  and does not spurn his servants in their chains.

In your great love, O Lord, answer my prayers for your favour.

Gospel Acclamation 

Glory to you, O Christ, you are the Word of God!
Hail to you, our King!
Obedient to the Father, you were led to your crucifixion
as a meek lamb is led to the slaughter.
Glory to you, O Christ, you are the Word of God!
Or:

April 5th : First Reading Who thinks he has a case against me? Let him approach me.A Reading from the Book of Isaiah 50:4-9

April 5th :   First Reading 

Who thinks he has a case against me? Let him approach me.

A Reading from the Book of Isaiah 50:4-9 
The Lord has given me
a disciple’s tongue.
So that I may know how to reply to the wearied
he provides me with speech.
Each morning he wakes me to hear,
to listen like a disciple.
The Lord has opened my ear.
For my part, I made no resistance,
neither did I turn away.
I offered my back to those who struck me,
my cheeks to those who tore at my beard;
I did not cover my face
against insult and spittle.
The Lord comes to my help,
so that I am untouched by the insults.
So, too, I set my face like flint;
I know I shall not be shamed.
My vindicator is here at hand. Does anyone start proceedings against me?
Then let us go to court together.
Who thinks he has a case against me?
Let him approach me.
The Lord is coming to my help,
who will dare to condemn me?

The Word of the Lord.

திங்கள், 3 ஏப்ரல், 2023

April 4th : Gospel'What you are going to do, do quickly'A Reading from the Holy Gospel according to St.John 13:21-33,36-38

April 4th :  Gospel

'What you are going to do, do quickly'

A Reading from the Holy Gospel according to St.John 13:21-33,36-38 
While at supper with his disciples, Jesus was troubled in spirit and declared, ‘I tell you most solemnly, one of you will betray me.’ The disciples looked at one another, wondering which he meant. The disciple Jesus loved was reclining next to Jesus; Simon Peter signed to him and said, ‘Ask who it is he means’, so leaning back on Jesus’ breast he said, ‘Who is it, Lord?’ ‘It is the one’ replied Jesus ‘to whom I give the piece of bread that I shall dip in the dish.’ He dipped the piece of bread and gave it to Judas son of Simon Iscariot. At that instant, after Judas had taken the bread, Satan entered him. Jesus then said, ‘What you are going to do, do quickly.’ None of the others at table understood the reason he said this. Since Judas had charge of the common fund, some of them thought Jesus was telling him, ‘Buy what we need for the festival’, or telling him to give something to the poor. As soon as Judas had taken the piece of bread he went out. Night had fallen.
  When he had gone Jesus said:
‘Now has the Son of Man been glorified,
and in him God has been glorified.
If God has been glorified in him,
God will in turn glorify him in himself,
and will glorify him very soon.
‘My little children,
I shall not be with you much longer.
You will look for me,
And, as I told the Jews,
where I am going, you cannot come.’
Simon Peter said, ‘Lord, where are you going?’ Jesus replied, ‘Where I am going you cannot follow me now; you will follow me later.’ Peter said to him, ‘Why can’t I follow you now? I will lay down my life for you.’ ‘Lay down your life for me?’ answered Jesus. ‘I tell you most solemnly, before the cock crows you will have disowned me three times.’

The Word of the Lord.

April 4th : Responsorial PsalmPsalm 70(71):1-6,15,17 My lips will tell of your help.

April 4th :  Responsorial Psalm

Psalm 70(71):1-6,15,17 

My lips will tell of your help.

In you, O Lord, I take refuge;
  let me never be put to shame.
In your justice rescue me, free me:
  pay heed to me and save me.
My lips will tell of your help.

Be a rock where I can take refuge,
  a mighty stronghold to save me;
  for you are my rock, my stronghold.
Free me from the hand of the wicked.

My lips will tell of your help.

It is you, O Lord, who are my hope,
  my trust, O Lord, since my youth.
On you I have leaned from my birth,
  from my mother’s womb you have been my help.

My lips will tell of your help.

My lips will tell of your justice
  and day by day of your help.
O God, you have taught me from my youth
  and I proclaim your wonders still.

My lips will tell of your help.

Gospel Acclamation 

Glory and praise to you, O Christ!
Hail to you, our King!
Obedient to the Father, you were led to your crucifixion
as a meek lamb is led to the slaughter.
Glory and praise to you, O Christ!
My lips will tell of your help.
In you, O Lord, I take refuge;
  let me never be put to shame.
In your justice rescue me, free me:
  pay heed to me and save me.

My lips will tell of your help.

Be a rock where I can take refuge,
  a mighty stronghold to save me;
  for you are my rock, my stronghold.
Free me from the hand of the wicked.

My lips will tell of your help.

It is you, O Lord, who are my hope,
  my trust, O Lord, since my youth.
On you I have leaned from my birth,
  from my mother’s womb you have been my help.

My lips will tell of your help.

My lips will tell of your justice
  and day by day of your help.
O God, you have taught me from my youth
  and I proclaim your wonders still.

My lips will tell of your help.

Gospel Acclamation 

Glory and praise to you, O Christ!
Hail to you, our King!
Obedient to the Father, you were led to your crucifixion
as a meek lamb is led to the slaughter.
Glory and praise to you, O Christ!

April 4th : First Reading I will make you the light of the nations so that my salvation may reach to the ends of the earthA Reading from the Book of Isaiah 49:1-6

April 4th :  First Reading 

I will make you the light of the nations so that my salvation may reach to the ends of the earth

A Reading from the Book of Isaiah 49:1-6 
Islands, listen to me,
pay attention, remotest peoples.
The Lord called me before I was born,
from my mother’s womb he pronounced my name.
He made my mouth a sharp sword,
and hid me in the shadow of his hand.
He made me into a sharpened arrow,
and concealed me in his quiver.
He said to me, ‘You are my servant (Israel)
in whom I shall be glorified’;
while I was thinking, ‘I have toiled in vain,
I have exhausted myself for nothing’;
and all the while my cause was with the Lord,
my reward with my God.
I was honoured in the eyes of the Lord,
my God was my strength.
And now the Lord has spoken,
he who formed me in the womb to be his servant,
to bring Jacob back to him,
to gather Israel to him:
‘It is not enough for you to be my servant,
to restore the tribes of Jacob and bring back the survivors of Israel;
I will make you the light of the nations
so that my salvation may reach to the ends of the earth.’

The Word of the Lord.

ஏப்ரல் 4 : நற்செய்தி வாசகம்உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்... நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 21-33, 36-38

ஏப்ரல் 4 :  நற்செய்தி வாசகம்

உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்... நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 21-33, 36-38
அக்காலத்தில்

தம் சீடர்களுடன் பந்தியமர்ந்த இயேசு உள்ளம் கலங்கியவராய், “உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று திட்டவட்டமாகக் கூறினார். யாரைப்பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள்.

இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர்மேல் இயேசு அன்புகொண்டிருந்தார். சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி, “யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக் கேள்” என்றார். இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த அவர், “ஆண்டவரே அவன் யார்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, “நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்” எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார். அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்.

இயேசு அவனிடம், “நீ செய்ய இருப்பதை விரைவில் செய்” என்றார். இயேசு ஏன் அவனிடம் இப்படிக் கூறினார் என்பதைப் பந்தியில் அமர்ந்திருந்தோர் யாரும் புரிந்துகொள்ளவில்லை. பணப்பை யூதாசிடம் இருந்ததால், திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக்கொண்டனர். யூதாசு அப்பத் துண்டைப் பெற்றுக் கொண்டவுடன் வெளியே போனான். அது இரவு நேரம்.

அவன் வெளியே போனபின் இயேசு, “இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்” என்றார்.

சீமோன் பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, “நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் இயலாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய்” என்றார். பேதுரு அவரிடம், “ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.